புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளம்


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jun 17, 2019 7:24 pm

உள்ளம்
========
சில நாட்களுக்கு முன்பு , தொலைக்காட்சியில் , ஒரு சொற்பொழிவைக் கேட்க நேரிட்டது .
பேசியவர் நாடறிந்த பேச்சாளர் . பேச்சின் நடுவே , ஒரு திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசினார் .

வெள்ளத் தனைய  மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய உயர்வு . ( 595 )

என்பது அந்தக் குறள் .

இந்தக் குறளுக்குப் பொருள் கூறுங்கால் அவர் சொன்னதாவது .

" நீரிலே வளருகின்ற தாமரை , அல்லி போன்ற தாவரங்களின் தண்டானது , குளத்தினுடைய நீர்ப்பரப்பிற்குத் தக்கவாறு அமையும் . அதுபோல ஒருவன் வாழ்க்கையிலே பெறுகின்ற உயர்வானது , அவனது உள்ளத்திலே தோன்றுகின்ற எண்ணங்களுக்குத் தக்கவாறு அமையும் "   என்று சொன்னார் .

இந்தக் குறளிலே வருகின்ற " உள்ளம் " என்ற சொல்லுக்கு " மனம் " என்று பொருள் கொண்டார் . இந்தக் குறளைப் பொருத்த அளவில் , உள்ளம் என்ற சொல்லுக்கு ஊக்கம் , முயற்சி என்று பொருளாகும் . இந்தக் குறட்பா ஊக்கமுடைமை என்ற அதிகாரத்தின் கீழ் வருகிறது . இந்த அதிகாரத்தில் நான்கு குறட்பாக்களில் " உள்ளம் " என்ற சொல் வருகிறது . அங்கெல்லாம் ஊக்கம் என்றே பொருள் கொள்ளவேண்டும் .

உள்ளம் என்ற சொல்லுக்கு மனம் , கருத்து , ஊக்கம் , அகச்சான்று , ஆன்மா என்று பல பொருள் உண்டு .

உள்ளம் என்ற சொல்லின் வேர்ச்சொல் " உள் " என்பதாகும் . அது பெயராகவும் , வினையாகவும் வரும் . பெயராக வரும்போது உள்ளிடம் , மனம் , மனவெழுச்சி , மனவுறுதி , இடம் என்ற பொருளில் வரும் . வினையாக வருமிடத்து நினைத்தல் , ஆராய்தல் என்ற பொருளில் வரும் .

உள்ளம் பெயராக நின்று பயிற்சி காட்டுவது பொருட்பாலில் என்றால் , உள்ளுதல் என்னும் வினைநிலையில் பயிற்சி கொள்வது காமத்துப் பாலிலாகும் .

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன் . ( 294 )

இக்குறளில் உள்ளம் என்ற சொல் பெயர்ச்சொல்லாக மனம் என்னும் பொருளில் வந்தது .

உள்ளக் களித்தலும்  காண மகிழ்தலும்  
கள்ளுக்கில் காமத்திற் குண்டு . ( 1291 )

இங்கு " உள்ள " என்னும் சொல் ," நினைக்க " என்ற பொருளில் வினையாக வந்தது .

வள்ளுவர் , " மனம் " என்ற சொல்லை காமத்துப்பாலில்  கையாளவில்லை . உள்ளம் , நெஞ்சு என்ற சொற்களைத்தான் அதிகம் கையாளுகிறார் . காதலின் பிறப்பிடம் , இருப்பிடம் நெஞ்சம் ஆதலால் , காமத்துப்பாலில் நெஞ்சு , நெஞ்சம் என்னும் சொற்கள் 36 இடங்களில் வந்துள்ளன . இதுதவிர " நெஞ்சோடு கிளத்தல் " ,  " நெஞ்சோடு புலத்தல் " என்ற இரண்டு அதிகாரப் பெயர்களும் நெஞ்சோடு தொடர்புடையன .

மனம் , உள்ளம் , நெஞ்சு , அகம் , சிந்தை போன்றவை ஒருபொருட் பன்மொழியாகும் .
மனமே எல்லாவற்றிற்கும் அடிப்படை . மனத்தை , ஒரு மரத்தின் வேருக்கு ஒப்பிட்டால் , உள்ளமும் , நெஞ்சமும் அம்மரத்தின் கிளைகள் போல்வன . மனம் , உள்ளம் , நெஞ்சு , ஆகிய மூன்று சொற்களை வெவ்வேறு பொருளில் வள்ளுவர் கையாண்ட விதம் எண்ணி இன்புறத்தக்கது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 17, 2019 9:22 pm

அருமையான விளக்கம் M Jagadeesan அவர்களே.

அருமை 
ரசித்தேன்.

ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Jun 18, 2019 4:44 am

குலத்தளவே ஆகுமாம் குணம்  என்றும்கூட சொல்லி உள்ளாரே....அதானால் தான்  கடவுள்  குலத்தினை  வர்ணாசிரமித்தனை  படைத்து  தொழிலினை  மேற்கொள்ளவைத்தார் .இதை தெரியாமல்  மயிலை பார்த்து வான் கோழி  ஆட நினைப்பது போன்று நினைத்து  இறைவன் படைப்பினை  மாற்ற நினைப்பது அபத்தமான செயலாகும்.  மரபணு  தாவரங்களை உண்டாக்கி இயற்கை  சக்கதிகளை சத்துக்களை  பாழாக்கினதுபோல்  மனித இனத்தினையும் பாழாக்கி விட்டார்கள்,,,,  ................................

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 18, 2019 11:44 am

பிறப்பால் அனைவரும் சமம் . மனிதரில் பிறப்பால் உயர்வு , தாழ்வு கற்பித்தல் மடமை .

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் .

என்பது ஐயன் வள்ளுவனின் கொள்கை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 18, 2019 11:45 am

பிறப்பால் அனைவரும் சமம் . மனிதரில் பிறப்பால் உயர்வு , தாழ்வு கற்பித்தல் மடமை .

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் .

என்பது ஐயன் வள்ளுவனின் கொள்கை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Sudharani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 11/06/2019

PostSudharani Tue Jun 18, 2019 4:42 pm

சொற்சுவையுடன் அருமையாக பதிவிட்டுள்ளீர்கள்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 18, 2019 5:34 pm

Sudharani wrote:சொற்சுவையுடன் அருமையாக பதிவிட்டுள்ளீர்கள்
[You must be registered and logged in to see this link.]


அவரின் சிறப்பே அதுதான்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக