Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
யார் தலைமை: அ.தி.மு.க.,வில் வெடித்தது மோதல்!
4 posters
Page 1 of 1
யார் தலைமை: அ.தி.மு.க.,வில் வெடித்தது மோதல்!
![யார் தலைமை: அ.தி.மு.க.,வில் வெடித்தது மோதல்! Tamil_News_large_2293999](https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2293999.jpg)
லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,விற்கு கிடைத்த படுதோல்வி,
கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் மற்றும்
துணை முதல்வர் இடையே, கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது.
அதன் எதிரொலியாக, 'கட்சிக்கு ஒற்றை தலைமை தான்
வேண்டும்' என, எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா போர்க்குரல்
எழுப்பியிருப்பது, மேலும், குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயலலிதா இருந்தவரை, அ.தி.மு.க., ராணுவ கட்டுக்கோப்போடு
இருந்தது. தமிழகத்தில், 1996ல் நடந்த, சட்டசபை பொதுத் தேர்தலில்,
அ.தி.மு.க., படுதோல்வி அடைந்தது.
91 - 96 வரை ஆட்சியிலிருந்தும், நான்கு இடங்களில் மட்டுமே,
அக்கட்சியால் வெற்றி பெற முடிந்தது. ஜெயலலிதாவே தோல்வியை
தழுவினார்.
அதைத் தொடர்ந்து, மாவட்ட வாரியாக, கிளை செயலர்கள்,
தொண்டர்கள் என, அனைவரையும் அழைத்து, கட்சி தோல்விக்கான
காரணத்தை, ஜெ., கேட்டறிந்தார். அதன் விளைவாக, 2001 தேர்தலில்,
அ.தி.மு.க., மீண்டும் வெற்றி பெற்றது.
அடுத்து, 2004 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து,
தோல்வியை சந்தித்தது.
மீண்டும், அனைத்து மட்ட நிர்வாகிகளையும் அழைத்து,
ஜெ., ஆலோசித்தார். அப்போது, அ.தி.மு.க., ஆட்சியில் இருந்ததால்,
40க்கும் மேற்பட்ட வாரியங்களுக்கு, கட்சியின் முன்னணி நிர்வாகிகளை
நியமித்தார். தலைமை நிர்வாகிகள் முதல், மாவட்ட நிர்வாகிகள் வரை
மாற்றங்கள் செய்தார்.இதன் காரணமாக, 2006 சட்டசபை தேர்தலில்,
அ.தி.மு.க., தோல்வி அடைந்தாலும், 68 இடங்களில் வெற்றி பெற்று,
பிரதான எதிர்க்கட்சியாக அமர்ந்தது.
இவ்வாறு, தேர்தலில் தோல்வி ஏற்பட்ட போதெல்லாம், கட்சி
நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, கட்சியை கட்டுக்கோப்பு
குலையாமல், ஜெ., நடத்தி சென்றார். தற்போது, ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்.,
என்ற, இரட்டை தலைமை காரணமாக, கட்சி கட்டுப்பாடின்றி உள்ளது.
கேப்டன் இல்லாத கப்பல் போல தத்தளித்து வருகிறது.
-
----------------------
Re: யார் தலைமை: அ.தி.மு.க.,வில் வெடித்தது மோதல்!
முதல்வர் மற்றும் அமைச்சர்கள், 2021 வரை, ஆட்சியை நடத்தி
செல்வதில் தான், கவனம் செலுத்துகின்றனர்; கட்சி நிலைக்க
வேண்டும் என்பதை பற்றி கவலைப்படவில்லை.
தோல்விக்கு காரணமானவர்கள் குறித்து, வேட்பாளர்கள் முறையிட்டும்,
தவறு செய்தவர்கள் மீது, தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தேர்தலுக்கு முன், முதல்வர், இ.பி.எஸ்., அமைச்சர்கள் தங்கமணி,
வேலுமணி ஆகியோர் கைகளே ஓங்கி இருந்தன.
அவர்களே முக்கிய முடிவுகளை எடுத்தனர். தேர்தல் முடிவுக்கு பின்,
இ.பி.எஸ்., மற்றும் அவரது ஆதரவு அமைச்சர்கள் செல்வாக்கு
குறைந்துள்ளது.ஏனெனில், இ.பி.எஸ்.,சின் சொந்த தொகுதியான,
எடப்பாடியில், தி.மு.க., கூடுதல் ஓட்டுகளை பெற்றுள்ளது. தேனியில்
, ஓ.பி.எஸ்., மகன் வெற்றி பெற்றுள்ளார்.
மற்ற தொகுதிகளில், அ.தி.மு.க., தோல்வியை தழுவியது.
ஓ.பி.எஸ்., சொந்த தொகுதியான, போடியில், தி.மு.க.,வை விட,
20 ஆயிரம் ஓட்டுகளுக்கு மேல், அ.தி.மு.க., கூடுதலாக பெற்றுள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஓ.பி.எஸ்., மற்றும் அவரது ஆதரவு
அமைச்சர்கள், கொங்கு அமைச்சர்களின் ஆதிக்கத்திற்கு
முற்றுப்புள்ளி வைக்க நினைக்கின்றனர்.
இதனால், அமைச்சர்கள் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. இதே நிலை
நீடித்தால், கட்சி உடையும் அபாயம் உள்ளது.
இதை பிரதிபலிக்கும் வகையில், மதுரை வடக்கு தொகுதி,
எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா, நேற்று, 'கட்சிக்கு ஒற்றை தலைமை
தேவை. பொதுக்குழுவை கூட்டி, கட்சியை வழிநடத்தும் திறமை
உடையவரை, தேர்வு செய்ய வேண்டும்' என, குரல் கொடுத்துள்ளார்.
இது, கட்சியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.கட்சியை
வளர்க்க, ஆட்சியை தக்க வைக்க, முதல்வரும், துணை முதல்வரும்,
முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு
தள்ளப்பட்டுள்ளனர்.
-
------------------------------
Re: யார் தலைமை: அ.தி.மு.க.,வில் வெடித்தது மோதல்!
இது குறித்து, கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
இரட்டை தலைமை என்பதால், யார் சொல்லுக்கு கட்டுப்படுவது
என தெரியாமல், நிர்வாகிகள் தவித்து வருகின்றனர். ஓ.பி.எஸ்., -
இ.பி.எஸ்., வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி என,
பல அதிகார மையங்கள் இருந்தபோதிலும், யாரும் யாரோடும்
எந்தவித ஆலோசனையும் நடத்துவதில்லை.
அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில், தனித்தே செயல்படுகின்றனர்
.தேர்தலில், மிகப்பெரிய தோல்வியை சந்தித்த பிறகும், அதற்கான
காரணம் குறித்து, ஆராயாமல் உள்ளனர். இதே நிலை நீடித்தால், கட்சி
மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும். எனவே, உடனடியாக தலைமை
நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்கள் என, அனைவரையும்
அழைத்து, தோல்விக்கான காரணங்கள் குறித்து, கேட்டறிய வேண்டும்
.தோல்வியடைந்த முக்கிய நிர்வாகிகளுக்கும், கட்சிக்காக
பாடுபடுவோருக்கும், ராஜ்யசபா எம்.பி., பதவி அல்லது வாரிய தலைவர்
பதவி வழங்க வேண்டும். கீழ்மட்ட நிர்வாகிகளின் கருத்து அறிந்து, அதற்கு
ஏற்ப, கட்சியை வழிநடத்த வேண்டும்.
ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., ஆகியோர், மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து,
கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி, அவர்களின் கருத்துக்களை அறிய
வேண்டும். ஒற்றை தலைமை இருந்தால் நல்லது என முடிவெடுத்தால்,
ஒருவர் விட்டுக் கொடுக்க வேண்டும்.இத்தகைய அணுகுமுறைகள்
வாயிலாக, கட்சியை பலப்படுத்தினால் தான், எதிர்வரும் உள்ளாட்சி
தேர்தலிலும், 2021 சட்டசபை பொதுத் தேர்தலிலும், கட்சி களமிறங்க முடியும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.*
நமது நிருபர் -தினமலர்
Re: யார் தலைமை: அ.தி.மு.க.,வில் வெடித்தது மோதல்!
OPS , EPS இருவருக்குமே பேச்சாற்றல் , மக்களைக் கவருகின்ற charisma , நிர்வாகத்திறன் எதுவுமே கிடையாது . வண்டி ஓடுகிற வரைக்கும் ஓடட்டும் என்ற மனநிலையில்தான் இருவரும் உள்ளனர் . கல்லா கட்டுவதில் உள்ள கவனம் , கட்ச்சியை வளர்ப்பதில் இல்லை . இவ்விருவரைத் தவிர்த்த ஆளுமைமிக்க ஒருவர் , வந்தால்தான் அதிமுகவைக் காப்பாற்ற முடியும் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: யார் தலைமை: அ.தி.மு.க.,வில் வெடித்தது மோதல்!
இப்போதைய (இளம் ?)தலைவர்களில் கூறவேண்டியதை கேட்கும் அளவிற்கு பேசுபவர்களில்
அன்புமணி ஒருவர் மட்டுமே திறன்பட கூறுகிறார். அவருக்கும் 60 %மார்க் தான் .
ரமணியன்
அன்புமணி ஒருவர் மட்டுமே திறன்பட கூறுகிறார். அவருக்கும் 60 %மார்க் தான் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: யார் தலைமை: அ.தி.மு.க.,வில் வெடித்தது மோதல்!
மேற்கோள் செய்த பதிவு: 1299131T.N.Balasubramanian wrote:இப்போதைய (இளம் ?)தலைவர்களில் கூறவேண்டியதை கேட்கும் அளவிற்கு பேசுபவர்களில்
அன்புமணி ஒருவர் மட்டுமே திறன்பட கூறுகிறார். அவருக்கும் 60 %மார்க் தான் .
ரமணியன்
அன்புமணி அவர்கள் திசைமாறிச் சென்ற காரணத்தினால் , தன்னுடைய மதிப்பை இழந்துவிட்டார் . இனி அவர் முதல்வர் ரேஸில் இல்லை . அரசியலில் கொள்கை முக்கியம் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: யார் தலைமை: அ.தி.மு.க.,வில் வெடித்தது மோதல்!
குடும்ப வாரிசை உள்நுழைய விடக்கூடாது. ஒருவர் யூ டியூப்பில் முன்னால் முதல்வர்கள் சேர்த்துள்ள சொத்து விவரப்பட்டியலை விலாவரியாக சொன்னபோது
அதிர்ந்துபோனேன் அடப்பாவிகளா இப்படி சொத்து சேர்க்கவா முதல்வர் பதவி ஒருபோதும் நீங்கள் கடவுளின் பிடியிலிருந்து தப்பிக்கவே முடியாது .மடியில் கனம் உள்ளது பயந்தே வாழனும் . ஒருநாள் மைய அரசு ரெய்டில் மாட்டிக்கொண்டே சாகனும் என்பதே உறுதியாகும்.
அதிர்ந்துபோனேன் அடப்பாவிகளா இப்படி சொத்து சேர்க்கவா முதல்வர் பதவி ஒருபோதும் நீங்கள் கடவுளின் பிடியிலிருந்து தப்பிக்கவே முடியாது .மடியில் கனம் உள்ளது பயந்தே வாழனும் . ஒருநாள் மைய அரசு ரெய்டில் மாட்டிக்கொண்டே சாகனும் என்பதே உறுதியாகும்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நாஞ்சில் சம்பத் தோடு வெளியேறப் போவது யார், யார்...! ம.தி.மு.க.,வில் பரபரப்பு
» தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?
» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
» ஏப்.23-ல் பாப்டே ஒய்வு: அடுத்த தலைமை நீதிபதி யார் ?
» ஐபிஎல் திருவிழா: யார், யாருடன் மோதல், முழு விவரம்!
» தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யார்?
» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
» ஏப்.23-ல் பாப்டே ஒய்வு: அடுத்த தலைமை நீதிபதி யார் ?
» ஐபிஎல் திருவிழா: யார், யாருடன் மோதல், முழு விவரம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|