புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_m10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_m10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram
திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_m10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_m10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10 
285 Posts - 45%
heezulia
திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_m10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_m10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_m10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_m10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10 
20 Posts - 3%
prajai
திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_m10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_m10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_m10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_m10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_m10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat May 18, 2019 4:48 pm

திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! 0XCq2HuSNWZ9Glz0fEk1+thiruparangundram

வணக்கம்! சென்ற வாரம் முருகப்பெருமானின் படைவீடான, மதுரை திருப்பரங்குன்றம் கோவிலுக்குச் சென்றிருந்தேன். வழக்கமாக எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் அந்தந்தக் கோவில் சிற்பங்களைக்கண்டு இலயிப்பது உண்டு. அந்தச் சிற்பங்களை வடித்தவர்கள் என்ன சொல்ல முயன்றார்கள் என தீர்க்கமாக சிந்துப்பதும் உண்டு. மனதுக்கு மிகவும் பிடித்திருந்தால் அடுத்த முறை மீண்டும் கோவிலுக்குச் செல்லும் போது குறிப்பாக அந்தச் சிற்பங்களை கண்டு களிப்பது பழக்கம்.

அப்படியோர் அருமையான சிற்பம் ஒன்றை திருப்பரங்குன்றத்திலே கண்டேன். தூணிலே வடிக்கப்பட்ட சிற்பம் அது. இம்முறையும் அதன் அழகைத் தரிசிக்கலாம் எனப் பார்த்தால் எனக்கு முன்னே பலபேர் அதனைத் தரிசித்துக் கொண்டிருந்தார்கள். ஆச்சரியமாகப் போய்விட்டது எனக்கு! இன்னும் நெருங்கிப்போய் பார்த்தால் பலமான அலங்காரங்களும் செய்து வைத்திருத்தார்கள் அந்தச் சிலைக்கு! மஞ்சள் குங்குமம் என அலங்காரம் தூள்கிளப்பியது. பெண்பால் சிற்பம் என்பதால் பாவாடையும் சுற்றியிருந்தார்கள். வருகிறவர்கள் முருகனைப் பார்க்கிறார்களோ இல்லையோ இந்தத் தூண் சிற்பத்தை வணங்கத் தவறுவதில்லை. பரவாயில்லையே விழிப்புணர்வு அதிகமாகிவிட்டதே என மகிழ்ச்சிப் பொங்கியது எனக்கு!

மிகஅருகில் சென்று அவர்களிடம் அளவளாவிப் பார்க்கலாம் என நினைத்து, அங்கு சின்சியராக வணங்கும் பெண்மணி ஒருவரைப் பார்த்துக் கேட்டேன்.

“இது என்ன சாமி அம்மா?”

“பார்த்தாலே தெரியலயா? இது வாராகி அம்மன்!” என்றார்.

“என்னது வாராகி அம்மனா?” எனக்குத்தூக்கி வாரிப் போட்டது. “… இது வாராகி அம்மன் போல இல்லையே!” என்றேன்.

“நாங்க எத்தனை வருசமா வந்து கும்புட்டுகிட்டு இருக்கோம். விளக்கு ஏத்திகிட்டு இருக்கோம்! நீங்க என்ன புதுசா சொல்றீங்களே” என்று சொன்னவர் சப்போர்ட்டுக்காக பக்கத்தில் இருந்த பெண்மணியை துணைக்கு அழைத்தார்.

அந்த அம்மாள் இன்னும் ஸ்ட்ராங்காக, “வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை இங்கு வந்து விளக்கேத்தி வெச்சு கும்பிட்டோம்னா, படிப்பு நல்லா வரும், அதனாலதான் என் பொண்ணை கூட்டிட்டு வந்திருக்கேன் பாருங்க!” என்று 10ஆவது படிக்கும் அவருடைய மகளையும் காட்டினார்.

இதோடு மட்டுமல்லாமல், அங்கு வேலை பார்க்கும் பணிப்பெண்ணையும் அழைத்தார். அந்தப் பெண்மணியும், “இது வாராகி அம்மன்தான். கொஞ்ச நேரத்துல உள்ளேயிருந்து ஐயர் பூஜை பண்ண வருவார். அவர்கூட வர்றவங்க எல்லார்கிட்டயும் இப்படித்தான் சொல்வார்” என்றார்.

இப்படியாக அங்கு ஒரு பத்துபேர் கூடிவிட்டனர். நான் தனிமரமாக நின்றேன். வேறு வழியில்லை. லெக்ச்சர் அடித்துவிட வேண்டியதுதான். முதலில் பேசிய பெண்மணியிடம், “அம்மா, சிலைமேல் போர்த்தி உள்ள அந்த ஆடையை கொஞ்சம் விலக்குங்கள்” என்றேன்.

அந்த அம்மாள் என்னை ஒருமாதிரி பார்த்துக்கொண்டே அந்த ஆடையை சற்று விலக்கிக் காண்பித்தார்.

அங்கே பல பன்றிக்குட்டிகள், மன்னிக்கவும் பன்றிக் குருளைகள் காணப்பட்டன. “அடி ஆத்தி! இங்க பாரு அக்கா… வாராகி அம்மனுக்குக் கீழே நிறைய பன்னிக்குட்டிகள் திரியுது” என்றார்.

“கொஞ்சம் கவனியுங்கம்மா! சில பன்றிக்குருளைகள் பால் குடிக்குது பாருங்க. அது வாராகி இல்லை. சிவபெருமான்! தாயை இழந்த பன்றிக்குட்டிகளுக்கு தாய்ப்பன்றியாக மாறி பாலூட்டிய திருவிளையாடல் அது! இந்த மதுரையிலே சிவபெருமான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களில் இதுவும் ஒண்ணு” என்று ஒட்டுமொத்தக் கதையையும் சொன்னேன்.

ஆச்சரியத்துடன் கேட்டவர்கள், “இவ்வளவு நாளா இது வாரகின்னு தப்பா கும்புட்டுக்கிட்டு இருந்தோமே”ன்னு வெட்கப்பட்டார்கள். உங்களால இன்னைக்கு நாங்க தெரிஞ்சிக்க வேண்டும்னு இருக்கு!” என்று நன்றி தெரிவித்தார்கள்.

நீங்க கும்புடறது சரி! ஆனா எளியவர்களுக்கு ஓடோடி வந்து அருளும் சிவபெருமான்னு நினைச்சு கும்பிடுங்கள் என்று சொல்லிவிட்டு வந்தேன்!

ஏற்கனவே உள்ளே முருகப்பெருமான் கூட இருக்கும் நக்கீரரை, நாரதர் என ஆள்மாறாட்டாம் செய்து கொண்டிருக்கிறார்கள், இப்போது தூணில் இருப்பவர்களை கூட விட்டுவைக்க முடியவில்லையா! கொடுமை! கொடுமை!!

ஏனக்குருளைக்கு அருளினை போற்றி!
(அறியாமை அகல) அருளிட வேண்டும் அம்மான் போற்றி!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக