ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவர்களின் மாதிரி பாராளுமன்றம் இதுல இருக்கு...அடுத்த சாட்டை அதிரடி

Go down

மாணவர்களின் மாதிரி பாராளுமன்றம் இதுல இருக்கு...அடுத்த சாட்டை அதிரடி Empty மாணவர்களின் மாதிரி பாராளுமன்றம் இதுல இருக்கு...அடுத்த சாட்டை அதிரடி

Post by ayyasamy ram Wed May 15, 2019 11:54 am

மாணவர்களின் மாதிரி பாராளுமன்றம் இதுல இருக்கு...அடுத்த சாட்டை அதிரடி 23
-
ஒரு கதைக்காக சில ஆரம்பப்புள்ளிகள் கிடைக்கும்.
அது சினிமாவாக மாறுவதற்கு அதற்கான பின்னல்கள் சரிவர
அமைய வேண்டும்.

இப்படி இந்தக் கதைக்கான அடித்தளத்தைப் போட்டது
சமுத்திரக்கனி சார். இது அசலான மாணவர்களின் கதைதான்.
இதை முழுச் சுதந்திரத்தோட சினிமாவாக்க முதல் காரணம்
என் தயாரிப்பாளர்கள் டாக்டர் பிரபு திலக்கும்,
சமுத்திரக்கனியும்தான். அவர்களின்றி ஓர் அணுவும்
அசைந்திருக்காது...

’’ ஆர்வத்தைத் தூண்டுகிறார் இயக்குநர் எம்.அன்பழகன்.
‘சாட்டை’, ‘ரூபாய்’ என நிஜ சினிமாவில் கவனம் ஈர்த்தவர்.

‘சாட்டை’ மிகவும் பரவலாகப் பேசப்பட்டது...இப்போதான்
‘சாட்டை’யை இணையதளத்தில் ஏற்றினோம். கொஞ்ச
நாளிலேயே 1.5 மில்லியன் பேர் பார்த்திருக்காங்க.

அதில் பள்ளி மாணவர்களாக இருந்தவர்களை இதில் கல்லூரி
லெவலுக்கு கொண்டு வந்திருக்கோம். டவுன்ஷிப்பில் நடக்கிற
கதை.

இதில் தமிழ்ப் பேராசிரியராக சமுத்திரக்கனி பிரமோட் ஆகி
வந்திருக்கார். அதுல பார்த்த தயாளனை விட இன்னும் கனிஞ்சு
வந்துருக்கார். கல்லூரியை எப்படியாவது முதல் இடத்திற்குக்
கொண்டு வரத் துடிக்கிற எத்தனிப்பு அங்க நிறைய இருக்கு.

அதனால் நிர்வாகம் ஆசிரியர்களுக்கு கொடுக்கிற நெருக்கடி,
விளைவாக அவர்கள் மாணவர்கள் மீது திணிக்கிற பிரஷர்...
உடன் மாணவர்கள் படுகிற மனஅழுத்தம்... அதனால்
மாணவர்கள் வாழ்க்கையை அதன் போக்கில் எதிர்கொள்ளத்
தெரியாமல் ரோபோ மாதிரி ஆகிவிடக்கூடிய சூழல் எல்லாம்
இதில் மனதிற்கு நெருங்கியும், உள்ளபடியும் சுவாரஸ்யமாகவும்
வந்திருக்கு.
-
-------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மாணவர்களின் மாதிரி பாராளுமன்றம் இதுல இருக்கு...அடுத்த சாட்டை அதிரடி Empty Re: மாணவர்களின் மாதிரி பாராளுமன்றம் இதுல இருக்கு...அடுத்த சாட்டை அதிரடி

Post by ayyasamy ram Wed May 15, 2019 11:55 am

மாணவர்களின் மாதிரி பாராளுமன்றம் இதுல இருக்கு...அடுத்த சாட்டை அதிரடி 23a
-

மாணவர்கள் வயதின் இடையறாத வியப்புகள், தொடர்
ஆச்சர்யங்கள், புதிய புதிய புரிதல்கள் பதிவாகியிருக்கு.

முற்றிலும் புதிதான மாணவர்களின் மாதிரி பாராளுமன்றம்
இதில் இருக்கு. நிச்சயம் இந்த விஷயம் மிகப்பெரிய அளவில்
கவனத்திற்கு வரும்னு நினைக்கிறேன்.

மாணவர்கள், பேராசிரியர்களின் மனப்போக்கு,
கல்லூரிகளில் சூழ்ந்திருக்கிற லோக்கல் அரசியல், சாதிப்
பிரச்னைகள் எல்லாமும் அசலாக இருக்கு. வெறும் படிப்பு,
வகுப்பறை தாண்டி சந்திக்க வேண்டிய நிஜங்கள்
வெளியேதான் இருக்கு.

சுவர்கள் இல்லாத வகுப்பறைகளில் நாம் கற்க வேண்டியது
ஏராளம்னு எடுத்துக் காட்டியிருக்கிறோம். நாம் உலக
சினிமான்னு அவதானிக்கிற ஈரானிய சினிமாவெல்லாம்
அந்தந்த நாட்டில் உள்ளூர் சினிமாதான். இரண்டு கைதிகள்
சிறையில் இருந்தார்கள்.

ஒருநாள் சாளரத்தின் கதவு திறந்து வெளியே பார்க்க
அவர்களுக்கு வாய்ப்பு வந்தது. ஒருத்தன் சாக்கடையைப்
பார்த்தான்.

இன்னொருத்தன் வானத்தையும், நட்சத்திரங்களையும்,
மேகத்தையும் பார்த்தான். நாங்க இதில் பார்த்தது
மாணவர்களின் உலகம். அதில் இருக்கிற உண்மைகளை
சுவாரஸ்யத்ேதாடு படிப்பினை மாதிரி எடுத்தெடுத்து
வைக்காமல் இயல்பில் சொல்லியிருக்கோம்.

சமுத்திரக்கனி எப்படி..?‘சாட்டை’ வரும்போது கனி சார்
இந்த அளவுக்கு இல்லை.

ஆனால், இப்போ அவர் மக்களிடம் கனிவாக எது சொன்னாலும்
காது கொடுக்குறாங்க. நானே அதை இப்போ அனுபவத்தில்
உணர்ந்தேன். நல்லது சொல்றதும், அதை மனப்பூர்வமாகக்
கொண்டு போறதும் அவரது இயல்பாகவே ஆகிவிட்டது.

வியாபாரமாக இருந்தாலும், வேடிக்கைகளில் ஈடுபடும் எண்ணம்
அவரிடம் இல்லை. இங்கே சொல்ல வேண்டியதை, சொல்லாமல்
இருப்பதை நம் வரையிலாவது சொல்லலாம் என்பதே அவரது
எண்ணம்.

மாணவர்கள் அமைதியற்று வாழ வேண்டியதில்லை என்று அவரே
உணர்ந்திருக்கிறார்.

யுவன், அதுல்யா ரவி, தம்பி ராமையான்னு முக்கியமாக வர்றாங்க.
ராஜ் பொன்னப்பா கனிக்கு இணையாக வருகிறார். எங்கேயோ
ஓர் இடத்தில் அவர் உங்கள் வீட்டு மனுஷியை அடையாளம் காட்டி
விடுவார். அவரை உங்களுக்கு கண்டிப்பாக பிடித்துவிடும்.

தம்பி ராமையாவும், கனியும் படத்தை நடத்திச் சென்ற விதம்
யூனிட்டிற்கே உத்வேகமாக இருந்தது. சில காட்சிகளில்
3000 மாணவர்கள் வரைக்கும் திரையில் இருக்காங்க.

கும்பகோணத்தின் கல்லூரி நிறுவனர் ஹுமாயுன் தந்த பெரும்
ஆதரவும் முக்கியமானது. படப்பிடிப்பு முடிந்து திரும்பும்போது
பிரிய மனதில்லாமல் பிரிந்தோம்.

அன்பால் கட்டுண்ட இடங்கள் அவை. அங்கே சினிமா எடுக்கத்தான்
போனோம். ஆனால், தீராத அன்பைச் சுமந்து திரும்பினோம்.

பாடல்கள் ரொம்ப நல்லாயிருக்கு... எனக்கென
ஜஸ்டின் பிரபாகரன் விசேஷமான ட்யூன்கள் வைத்திருப்பார்.
எங்களுக்கான பாடல்களின் பக்குவத்தையும் அவர் அறிந்திருப்பார்.

‘எங்க கையில் நாட்டைக் கொடுங்க, எல்லாத்தையும் மாத்தறோம்,
ஓட்டை வாங்கி ஏமாத்தாமல் உங்களை மேலே ஏத்துறோம்’னு
யுகபாரதியின் பாட்டு இணையத்தில் வெளியிட்டு அதிரி புதிரியாய்
வெற்றியடைஞ்சிருக்கு.

கல்லூரி வாழ்க்கை இந்த மொத்த வாழ்க்கையின் ஒரு சின்ன
பகுதிதான். நிறைய விஷயங்கள் மீதி இருக்கு. எனக்காகவும்,
உங்களுக்காகவும் முகம் தெரியாத யார் யாரோ அவங்களால
முடிஞ்சதை செய்யிறதாலதான் இந்த உலகம் இன்னும்
உயிர்த்திருக்கு.

நாமளும் அப்படி ஏதாவது செய்யுறதுதான் முதல் வேலை!
மத்ததெல்லாம் அப்புறம்தான்!
-
--------------------------------------------------

நா.கதிர்வேலன்
நன்றி-குங்குமம்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum