ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதி கனவை நனவாக்குவோம்

4 posters

Go down

பாரதி கனவை நனவாக்குவோம் Empty பாரதி கனவை நனவாக்குவோம்

Post by சிவா Fri Dec 25, 2009 12:33 pm

எட்டயபுரத்தில் பிறந்து பாட்டுப் திறந்தால் எட்டாத உயரம் சென்றவன் மகாகவி பாரதி. அவன் இன்று இருந்திருந்தால் நெஞ்சு பொறுக்குதில்லையே என மீண்டும் பாடி இருப்பான். ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று அடையும் முன்னே தீர்க்க தரிசனமாக பாடினோமே, இதுவா ஆனந்த சுதந்திரம்? என்று நொந்து இருப்பான். வெள்ளையனிடமிருந்து பெறப்பட்ட இந்த நாடு அரசியல் கொள்ளையர்களிடம் அல்லவா மாட்டிக் கொண்டது என வருந்தி இருப்பான்.

இன்றைக்கும் ஒரு வேளை சோற்றுக்கு வழியின்றி வறுமையில் வாடும் ஏழைகள் ஏராளம். குடியிருக்க வீடுகள் இன்றி நடைபாதையில் வாழும் மக்கள் ஏராளம். வறுமை இன்னும் ஒழிக்கப்படவில்லை. பாரதி அன்று பாடினான். " தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஐகத்தினை அழித்திடுவோம்" என்று. ஆனால் இன்று எத்தனையோ பேர் உண்ண உணவின்றி வாடி வதங்குகின்றனர். மக்களின் அடிப்படைத் தேவைகள் கூட இன்னும் பூர்த்தி செய்யப்பட வில்லை. வறுமையை ஒழிக்க வேண்டிய அரசியல்வாதிகளோ அவர்களது வறுமையை ஒழித்துக் கொண்டு கோடிகளை கொள்ளையடித்துச் சேர்த்து விடுகின்றனர். உலகமயம், தாராளமயம், புதிய பொருளாதாரம் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களை பல வழிகளில் இந்தியாவை சுரண்ட அனுமதித்து விட்டனர். உள்ளூர் தொழிற்சாலைகளை மூடி விட்டனர். பலர் வேலையையும், வாழ்க்கையையும் இழந்து விட்டனர். விளைநிலங்களை எல்லாம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டு விவசாயி வயிற்றில் அடித்து விட்டனர்.

அன்று காணி நிலம் வேண்டும் என்று பாடினான் பாரதி. இன்று காணி நிலங்களே காணாமல் போனது. "சாதிகள் இல்லையடி பாப்பா" எனப் பாடினான். இன்று சங்கம் இல்லாத சாதிகள் இல்லை என்ற அளவிற்கு சாதிச் சங்கங்கள் பெருகி சாதி மோதல்களும், வன்முறை வெறியாட்டங்களும் மண்ணில் நடந்து வருகின்றது. சாதிச்சங்கத் தலைவர்கள் எல்லாம் சகல வசதியுடன் டாடா சுமோவில் வலம் வந்து கொண்டு அப்பாவி மக்களை மோதவிட்டு வேடிக்கை பார்த்து அரசியல் நடத்துகின்றனர்.

ஊழலை ஒழிக்க என்ன வழி என்று உரக்கச் சிந்திப்போம். ஊழழை ஒழிப்போம். வறுமையை ஒழிப்போம். நாட்டின் வளம் காப்போம். கொள்ளையடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களை விரட்டி அடிப்போம். கொள்ளை போகும் நமது வளங்களையும், செல்வங்களையும் காப்போம். நதிகளை தேசியமயமாக்குவோம். சண்டைகளின்றி தண்ணீரைப் பகிர்ந்து கொள்வோம். விவசாயத்தையும் விவசாயியையும் பேணிக் காப்போம்.

சுனாமி பேரலையின் காரணமாக பல உயிர்களையும் உடமைகளையும் இழந்தோம். இதற்கு என்ன காரணம்? நிலத்தடி நீரை அளவிற்கு அதிகமாக உறிஞ்சவது. பாறைகளுக்கு வெடி வைத்து தகர்ப்பது. பாலீத்தீன் பைகளை அதிகம் பயன்படுத்துவது. தொழிற்சாலை கழிவுகளை ஆற்றில் கலப்பது. மரங்களை வெட்டி வீழ்த்துவது, இப்படி அடுக்கடுக்காக இயற்கையை அழிக்கும் பணியிணை மனிதன் செய்ததன் காரணமாக இயற்கைச் சீற்றம் வந்தது. சுனாமி வந்தது. நிலநடுக்கம் வந்தது.

மகாகவி பாரதி ஓர் இயற்கை நேசன். இயற்கையை ரசித்துப் பாடியவன். அவருக்காக விழா எடுக்கும் இந்த வேளையில் இயற்கையை நாமும் ரசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இயற்கையை அழிப்பது, சிதைப்பது முதலான இது போன்ற செயல்களை அறவே நிறுத்தி விட வேண்டும். வருங்கால சந்ததிகள் வளமாக வாழ தொடர்ந்து மழை கிடைக்க முடிந்த வரை இயற்கையை பேணிக் காப்போம். புதிய மரங்கள் நடுவோம், மழை பெறுவோம்!

மனிதரில் ஏற்றத் தாழ்வு இல்லை, உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று சொல்வது பாவம் என்று பாடியவன் பாரதி, எனவே பாரதியின் வரிகளுக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். சாதி, மத மோதல்களுக்கு முடிவு கட்டுவோம். சக மனிதனை மனிதனாக மதிப்போம். சமதர்ம, சமத்துவ சமுதாயம் சமைப்போம். உதிரத்தின் நிறம் சிறப்பு என்பதை மோதித் தான் உணர வேண்டுமோ? பகுத்தறிவை பயன்படுத்தாமல் சாதி, மத மோதல்களின் காரணமாக விலை மதிப்பற்ற மனித உயிர்கள் பலியாவதை தடுப்போம். கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் இழந்த உயிரை திரும்பத்தர இயலுமா? முடியாது. மனித உயிரின் மகத்துவத்தை உணர்ந்து எந்த நிலையிலும் வன்முறையின்றி பேச்சுவார்த்தையின் மூலமே சமரசம் காண்போம். காட்டுமிராண்டித்தனமான மோதல்களையும், தாக்குதல்களையும் வன்முறைகளையும் முடிவுக்கு கொண்டு வருவோம்.

கவிஞன் வாக்கு பொய்க்காது என்று பொன்மொழி உண்டு. அந்த பொன்மொழி பொய்க்காமல் காக்க வேண்டியது நமது கடமை. மகாகவி பாரதியின் கவிதை வரிகள் பொய்க்கவில்லை மெய் தான் என உலகிற்கு உணர்த்திட நாம் அனைவரும் ஓரணியில் சேருவோம். தேமதுரத் தமிழோசை உலகெல்லாம் பரவச் செய்வோம். தமிழின் பெருமையை உலகிற்கு பறை சாற்றிடுவோம். தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு மனித நேயம் காப்போம். சாதி,மத வெறி மாய்ப்போம்.

சோறு பொங்க செல்லம்மா வைத்திருந்த அரிசியை, சிட்டுக்குருவிகளுக்குப் போட்டு பசியாற வைத்து மனம் மகிழ்ந்தவன் பாரதி. இன்று தொழிற்சாலை பெருக்கத்தால் சுற்றுச்சூழல் மாசுபட்டதன் காரணமாக சிட்டுக்குருவி இனமே அழிந்து வருகின்றது. நவீன யுகம் விஞ்ஞான யுகம், இயந்திர மயம் என்ற பெயரில் பெருகி வரும் தொழிற்சாலைகள் கக்கம் நச்சுப் புகை மற்றும் வெளியேறும் கழிவுகளால் வரும் தீங்க இவற்றால் சுற்றுச்சூழல் பெருமளவில் மாசடைந்து ஓசோனில் ஓட்டை விழுந்தது. அந்த ஓட்டை பெரிதாக காரணமாக அமைகின்றது. அதிக வெப்பத்தின் காரணமாக மழை பொய்த்தது. மழை பொய்த்ததின் காரணமாக விவசாயம் பொய்த்தது. அண்டை மாநிலங்களுடன் தண்ணீர் பகிர்வில் சண்டை, தண்ணீரின் காரணமாக ஒரு உலகப் போர் வருமென்று ஆய்வுகள் சொல்கின்றன.


பாரதி கனவை நனவாக்குவோம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாரதி கனவை நனவாக்குவோம் Empty Re: பாரதி கனவை நனவாக்குவோம்

Post by சிவா Fri Dec 25, 2009 12:37 pm

இன்றைக்கு பாலின் விலையை விட தண்ணீரின் விலை அதிகம் என்ற அவல நிலை பன்னாட்டு நிறுவனங்கள் ஆற்று நீரை கொள்ளையடித்து பாட்டிலில் நிரப்பி விற்று கோடிகளை கொள்ளையடித்து செல்கின்றனர். குடிமக்களுக்கு சுத்தமான நீரை வழங்க வேண்டிய கடமை அரசிற்கு உண்டு. ஆனால் அவர்கள் செய்வதில்லை. அரசியல்வாதிகளுக்கு ஊழல் செய்வதற்கும் பிற கட்சியினரை வசை பாடுவதற்குமே சேரம் போதவில்லை பிறகு எப்படி மக்கள் குறைகளை தீர்ப்பார்கள். குளிர்பானம் என்ற பெயரில் பூச்சி மருந்துகளைக் கலந்து மக்களுக்கு புற்று நோயை பரப்பி வரும் பணியினையும் பன்னாட்டு நிறுவனங்கள் எந்த வித தடையுமின்றி அமோகமாக செய்து வருகிறார்கள். இவர்கள் தரும் பணத்திற்கு மயங்கி நடிகர், நடிகைகள், ஊடகங்கள் மக்கள் மத்தியில் தவறான பிரச்சாரம் செய்து மக்களை முட்டளாக்கி வருகின்றனர்.

தேச ஒற்றுமையை வலியுறுத்தினான் பாரதி. ஆனால் இன்று அண்டை மாநிலங்கள் தமிழகத்திற்கு தண்ணீர் தரவே மறுத்து வருகின்றனர். உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கினாலும் துச்சமாக மதித்து தான் தோன்றித்தனமாக நடந்து வருகின்றனர். இமயம் முதல் குமரி வரை இந்தியா என்பது குழந்தைகளின் பள்ளிப் பாடப்புத்தகத்தில் தான் உள்ளது. குழந்தைகளின் உள்ளத்தில் பதியுமளவிற்கு அண்டை மாநிலங்கள் நடந்து கொள்வதில்லை. இரண்டு நாடுகள் கூட சமரசமாக தண்ணீர் பகிர்ந்து கொள்ளும் போது இரண்டு மாநிலங்களிடையே தண்ணீர் பகிர்வில் தீராத சண்டை, ஏன் இந்த இழிநிலை?
எண்ணிப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் பொதுநலம் மறந்து சுயநலம் பிடித்து ஆடுவதேன். மனிதநேயம் என்பது மனித மனங்கள் மறந்து போனது ஏன்? பாரதியின் கவிதை வரிகளுக்கு செயல்வடிவம் தர வேண்டாமா? சிந்திக்க வேண்டும்.

என்ன வளம் இல்லை? நம் நாட்டில் வளங்களும் இருந்தும் இன்னும் நம்மால் ஏன்? வறுமையை ஒழிக்க முடியவில்லை. சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம் இது. மகாகவி பாரதியின் 125 வது ஆண்டு விழா நடக்க இருக்கும் இந்த காலத்திலாவது பாரதி கண்ட கனவை நனவாக்க நாம் முயற்சி செய்ய வேண்டாமா? சிந்திப்போம் செயல்படுவோம்.
எட்டயபுரத்தில் பிறந்து பாட்டுப் திறத்தால் எட்டாத உயரம் சென்றவன் மகாகவி பாரதி. அவன் இன்று இருந்திருந்தால் நெஞ்சு பொறுக்குதில்லையே என மீண்டும் பாடி இருப்பான். ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று அடையும் முன்னே தீர்க்க தரிசனமாக பாடினோமே, இதுவா ஆனந்த சுதந்திரம்? என்று நொந்து இருப்பான். வெள்ளையனிடமிருந்து பெறப்பட்ட இந்த நாடு அரசியல் கொள்ளையர்களிடம் அல்லவா மாட்டிக் கொண்டது என வருந்தி இருப்பான்.

இன்றைக்கும் ஒரு வேளை சோற்றுக்கு வழியின்றி வறுமையில் வாடும் ஏழைகள் ஏராளம். குடியிருக்க வீடுகள் இன்றி நடைபாதையில் வாழும் மக்கள் ஏராளம். வறுமை இன்னும் ஒழிக்கப்படவில்லை. பாரதி அன்று பாடினான். " தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஐகத்தினை அழித்திடுவோம்" என்று. ஆனால் இன்று எத்தனையோ பேர் உண்ண உணவின்றி வாடி வதங்குகின்றனர். மக்களின் அடிப்படைத் தேவைகள் கூட இன்னும் பூர்த்தி செய்யப்பட வில்லை. வறுமையை ஒழிக்க வேண்டிய அரசியல்வாதிகளோ அவர்களது வறுமையை ஒழித்துக் கொண்டு கோடிகளை கொள்ளையடித்துச் சேர்த்து விடுகின்றனர். உலகமயம், தாராளமயம், புதிய பொருளாதாரம் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களை பல வழிகளில் இந்தியாவை சுரண்ட அனுமதித்து விட்டனர். உள்ளூர் தொழிற்சாலைகளை மூடி விட்டனர். பலர் வேலையையும், வாழ்க்கையையும் இழந்து விட்டனர். விளைநிலங்களை எல்லாம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டு விவசாயி வயிற்றில் அடித்து விட்டனர்.

அன்று காணி நிலம் வேண்டும் என்று பாடினான் பாரதி. இன்று காணி நிலங்களே காணாமல் போனது. "சாதிகள் இல்லையடி பாப்பா" எனப் பாடினான். இன்று சங்கம் இல்லாத சாதிகள் இல்லை என்ற அளவிற்கு சாதிச் சங்கங்கள் பெருகி சாதி மோதல்களும், வன்முறை வெறியாட்டங்களும் மண்ணில் நடந்து வருகின்றது. சாதிச்சங்கத் தலைவர்கள் எல்லாம் சகல வசதியுடன் டாடா சுமோவில் வலம் வந்து கொண்டு அப்பாவி மக்களை மோதவிட்டு வேடிக்கை பார்த்து அரசியல் நடத்துகின்றனர்.


பாரதி கனவை நனவாக்குவோம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாரதி கனவை நனவாக்குவோம் Empty Re: பாரதி கனவை நனவாக்குவோம்

Post by சிவா Fri Dec 25, 2009 12:38 pm

ஊழலை ஒழிக்க என்ன வழி என்று உரக்கச் சிந்திப்போம். ஊழழை ஒழிப்போம். வறுமையை ஒழிப்போம். நாட்டின் வளம் காப்போம். கொள்ளையடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களை விரட்டி அடிப்போம். கொள்ளை போகும் நமது வளங்களையும், செல்வங்களையும் காப்போம். நதிகளை தேசியமயமாக்குவோம். சண்டைகளின்றி தண்ணீரைப் பகிர்ந்து கொள்வோம். விவசாயத்தையும் விவசாயியையும் பேணிக் காப்போம்.

சுனாமி பேரலையின் காரணமாக பல உயிர்களையும் உடமைகளையும் இழந்தோம். இதற்கு என்ன காரணம்? நிலத்தடி நீரை அளவிற்கு அதிகமாக உறிஞ்சவது. பாறைகளுக்கு வெடி வைத்து தகர்ப்பது. பாலீத்தீன் பைகளை அதிகம் பயன்படுத்துவது. தொழிற்சாலை கழிவுகளை ஆற்றில் கலப்பது. மரங்களை வெட்டி வீழ்த்துவது, இப்படி அடுக்கடுக்காக இயற்கையை அழிக்கும் பணியிணை மனிதன் செய்ததன் காரணமாக இயற்கைச் சீற்றம் வந்தது. சுனாமி வந்தது. நிலநடுக்கம் வந்தது.

மகாகவி பாரதி ஓர் இயற்கை நேசன். இயற்கையை ரசித்துப் பாடியவன். அவருக்காக விழா எடுக்கும் இந்த வேளையில் இயற்கையை நாமும் ரசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இயற்கையை அழிப்பது, சிதைப்பது முதலான இது போன்ற செயல்களை அறவே நிறுத்தி விட வேண்டும். வருங்கால சந்ததிகள் வளமாக வாழ தொடர்ந்து மழை கிடைக்க முடிந்த வரை இயற்கையை பேணிக் காப்போம். புதிய மரங்கள் நடுவோம், மழை பெறுவோம்!

மனிதரில் ஏற்றத் தாழ்வு இல்லை, உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று சொல்வது பாவம் என்று பாடியவன் பாரதி, எனவே பாரதியின் வரிகளுக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். சாதி, மத மோதல்களுக்கு முடிவு கட்டுவோம். சக மனிதனை மனிதனாக மதிப்போம். சமதர்ம, சமத்துவ சமுதாயம் சமைப்போம். உதிரத்தின் நிறம் சிறப்பு என்பதை மோதித் தான் உணர வேண்டுமோ? பகுத்தறிவை பயன்படுத்தாமல் சாதி, மத மோதல்களின் காரணமாக விலை மதிப்பற்ற மனித உயிர்கள் பலியாவதை தடுப்போம். கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் இழந்த உயிரை திரும்பத்தர இயலுமா? முடியாது. மனித உயிரின் மகத்துவத்தை உணர்ந்து எந்த நிலையிலும் வன்முறையின்றி பேச்சுவார்த்தையின் மூலமே சமரசம் காண்போம். காட்டுமிராண்டித்தனமான மோதல்களையும், தாக்குதல்களையும் வன்முறைகளையும் முடிவுக்கு கொண்டு வருவோம்.

கவிஞன் வாக்கு பொய்க்காது என்று பொன்மொழி உண்டு. அந்த பொன்மொழி பொய்க்காமல் காக்க வேண்டியது நமது கடமை. மகாகவி பாரதியின் கவிதை வரிகள் பொய்க்கவில்லை மெய் தான் என உலகிற்கு உணர்த்திட நாம் அனைவரும் ஓரணியில் சேருவோம். தேமதுரத் தமிழோசை உலகெல்லாம் பரவச் செய்வோம். தமிழின் பெருமையை உலகிற்கு பறை சாற்றிடுவோம். தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு மனித நேயம் காப்போம். சாதி,மத வெறி மாய்ப்போம்.

சோறு பொங்க செல்லம்மா வைத்திருந்த அரிசியை, சிட்டுக்குருவிகளுக்குப் போட்டு பசியாற வைத்து மனம் மகிழ்ந்தவன் பாரதி. இன்று தொழிற்சாலை பெருக்கத்தால் சுற்றுச்சூழல் மாசுபட்டதன் காரணமாக சிட்டுக்குருவி இனமே அழிந்து வருகின்றது. நவீன யுகம் விஞ்ஞான யுகம், இயந்திர மயம் என்ற பெயரில் பெருகி வரும் தொழிற்சாலைகள் கக்கம் நச்சுப் புகை மற்றும் வெளியேறும் கழிவுகளால் வரும் தீங்க இவற்றால் சுற்றுச்சூழல் பெருமளவில் மாசடைந்து ஓசோனில் ஓட்டை விழுந்தது. அந்த ஓட்டை பெரிதாக காரணமாக அமைகின்றது. அதிக வெப்பத்தின் காரணமாக மழை பொய்த்தது. மழை பொய்த்ததின் காரணமாக விவசாயம் பொய்த்தது. அண்டை மாநிலங்களுடன் தண்ணீர் பகிர்வில் சண்டை, தண்ணீரின் காரணமாக ஒரு உலகப் போர் வருமென்று ஆய்வுகள் சொல்கின்றன.

இன்றைக்கு பாலின் விலையை விட தண்ணீரின் விலை அதிகம் என்ற அவல நிலை பன்னாட்டு நிறுவனங்கள் ஆற்று நீரை கொள்ளையடித்து பாட்டிலில் நிரப்பி விற்று கோடிகளை கொள்ளையடித்து செல்கின்றனர். குடிமக்களுக்கு சுத்தமான நீரை வழங்க வேண்டிய கடமை அரசிற்கு உண்டு. ஆனால் அவர்கள் செய்வதில்லை. அரசியல்வாதிகளுக்கு ஊழல் செய்வதற்கும் பிற கட்சியினரை வசை பாடுவதற்குமே சேரம் போதவில்லை பிறகு எப்படி மக்கள் குறைகளை தீர்ப்பார்கள். குளிர்பானம் என்ற பெயரில் பூச்சி மருந்துகளைக் கலந்து மக்களுக்கு புற்று நோயை பரப்பி வரும் பணியினையும் பன்னாட்டு நிறுவனங்கள் எந்த வித தடையுமின்றி அமோகமாக செய்து வருகிறார்கள். இவர்கள் தரும் பணத்திற்கு மயங்கி நடிகர், நடிகைகள், ஊடகங்கள் மக்கள் மத்தியில் தவறான பிரச்சாரம் செய்து மக்களை முட்டளாக்கி வருகின்றனர்.

தேச ஒற்றுமையை வலியுறுத்தினான் பாரதி. ஆனால் இன்று அண்டை மாநிலங்கள் தமிழகத்திற்கு தண்ணீர் தரவே மறுத்து வருகின்றனர். உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கினாலும் துச்சமாக மதித்து தான் தோன்றித்தனமாக நடந்து வருகின்றனர். இமயம் முதல் குமரி வரை இந்தியா என்பது குழந்தைகளின் பள்ளிப் பாடப்புத்தகத்தில் தான் உள்ளது. குழந்தைகளின் உள்ளத்தில் பதியுமளவிற்கு அண்டை மாநிலங்கள் நடந்து கொள்வதில்லை. இரண்டு நாடுகள் கூட சமரசமாக தண்ணீர் பகிர்ந்து கொள்ளும் போது இரண்டு மாநிலங்களிடையே தண்ணீர் பகிர்வில் தீராத சண்டை, ஏன் இந்த இழிநிலை? எண்ணிப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் பொதுநலம் மறந்து சுயநலம் பிடித்து ஆடுவதேன். மனிதநேயம் என்பது மனித மனங்கள் மறந்து போனது ஏன்? பாரதியின் கவிதை வரிகளுக்கு செயல்வடிவம் தர வேண்டாமா? சிந்திக்க வேண்டும்.

என்ன வளம் இல்லை? நம் நாட்டில் வளங்களும் இருந்தும் இன்னும் நம்மால் ஏன்?வறுமையை ஒழிக்க முடியவில்லை. சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம் இது. மகாகவி பாரதியின் 125 வது ஆண்டு விழா நடக்க இருக்கும் இந்த காலத்திலாவது பாரதி கண்ட கனவை நனவாக்க நாம் முயற்சி செய்ய வேண்டாமா? சிந்திப்போம் செயல்படுவோம்.

கவிஞர் இரா.இரவி


பாரதி கனவை நனவாக்குவோம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாரதி கனவை நனவாக்குவோம் Empty Re: பாரதி கனவை நனவாக்குவோம்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Fri Dec 25, 2009 12:41 pm

நல்ல செய்திகளை - பாரதி சொன்ன கருத்துக்களை இந்த மானுடத்துக்கு புரியும்படி தெரிவித்தீர்கள் சிவா அவர்களே. நன்றி.
......கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

பாரதி கனவை நனவாக்குவோம் Empty Re: பாரதி கனவை நனவாக்குவோம்

Post by kavinele Fri Dec 25, 2009 10:28 pm

நன்றி.
kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Back to top Go down

பாரதி கனவை நனவாக்குவோம் Empty Re: பாரதி கனவை நனவாக்குவோம்

Post by nandhtiha Fri Dec 25, 2009 10:33 pm

வணக்கம் திரு சிவா
சொந்த சகோதரர்கள் சோகத்தில் ஆழ்தல் கண்டும்
சிந்தை இறங்காரடி கிளியே-
செத்த பிணங்களடி
என்று அன்றே பாடினான் இந்த எட்டய புரத்துக் கவிஞன். அதன் உண்மையை இன்று நாம் உணர்கிறோம்.
பாரதி பற்றிய கட்டுரை கொடுத்து மறந்து போன விடயங்களை நினைவுக்கு கொண்டு வந்த உங்களுக்கு மனமார நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளேன்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

பாரதி கனவை நனவாக்குவோம் Empty Re: பாரதி கனவை நனவாக்குவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum