ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஞ்சம் பிழைக்கப் போனவர் இன்று தோசைக் கடை ஓனர்... நியூயார்க்கில் தமிழர் திருக்குமார் தோசைக்கு மவுசு!

2 posters

Go down

பஞ்சம் பிழைக்கப் போனவர் இன்று தோசைக் கடை ஓனர்... நியூயார்க்கில் தமிழர் திருக்குமார் தோசைக்கு மவுசு! Empty பஞ்சம் பிழைக்கப் போனவர் இன்று தோசைக் கடை ஓனர்... நியூயார்க்கில் தமிழர் திருக்குமார் தோசைக்கு மவுசு!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon May 06, 2019 6:51 pm

நியூயார்க் நகரம் என்றதும், மாடமாளிகைள்கூட கோபுரங்களாக நிரம்பி நிற்கும் மன்ஹட்டன் பகுதிதான் பலருக்கும் நினைவு வரும். இரட்டைக் கோபுரங்கள் இங்கேதான் இருந்தன. பரந்துவிரிந்த நியூயார்க் நகரின் பென் ரயில்வே ஸ்டேஷன் அருகே கிறிஸ்டோபர் தெருவில் உள்ள சாதாரண தோசை கடையில் எப்போதும் கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்கும். தமிழ் முகங்களுக்கு மத்தியில் வெள்ளையர்களின் முகங்களும் இங்கே தோசைகளுக்காகக் காத்துக் கிடப்பது வழக்கம். பர்கருக்காக 10 நிமிடம் காத்திருக்காத வெள்ளையர்கள், தமிழரின் கைப்பக்குவத்தில் தயாராகும் தோசைகளைச் சாப்பிட மணிக்கணக்கில் காத்திருப்பதைப் பார்க்கலாம். உலகின் பல நாட்டு மக்களும் வசிக்கும் நியூயார்க்கில் அமெரிக்கன், மெக்ஸிகன், ஐரோப்பியன், ஆப்கன் ஸ்ட்ரீட் ஃபுட்களுக்கு மத்தியில் நம் ஊர் தோசையையும் போட்டிபோடவைத்துள்ளார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பழனிச்சாமி திருக்குமார். நியூயார்க்கில் தோசை கடை வைத்த கதையை, திருக்குமாரே சொல்கிறார்...

நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பஞ்சம் பிழைக்கப் போனவர் இன்று தோசைக் கடை ஓனர்... நியூயார்க்கில் தமிழர் திருக்குமார் தோசைக்கு மவுசு! Empty Re: பஞ்சம் பிழைக்கப் போனவர் இன்று தோசைக் கடை ஓனர்... நியூயார்க்கில் தமிழர் திருக்குமார் தோசைக்கு மவுசு!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon May 06, 2019 6:52 pm

இலங்கையைச் சேர்ந்த எனக்கு, என் பாட்டிதான் விதவிதமான தோசை சுடும் வித்தையைக் கற்றுத்தந்தார். என் பாட்டியின் கைப்பக்குவத்தில் தயாராகும் தோசைகளை, இலங்கையில் மக்கள் விரும்பிச் சாப்பிடுவார்கள். இலங்கையில் பிரச்னை முற்றியபோது நியூயார்க் நகருக்கு வந்தேன். ஆரம்பத்தில் இங்கே பெட்ரோல் பங்க்கில், வாட்ச்மேன் வேலை பார்த்தேன். தோசை கடை வைக்க வேண்டும் என்பது என் ஆசை. கையில் கொஞ்சம் சேமிப்பு இருந்தது. தெருவோரக் கடை வைக்க லைசென்ஸ் கிடைத்ததும் 13,000 டாலர் முதலீட்டில் இந்தக் கடையைத் தொடங்கினேன். வங்கியிலிருந்து லோன் வாங்கினேன். என் வெற்றிக்கு, கடின உழைப்புதான் காரணம். நியூயார்க்கில் பனி பெய்தாலும் குளிரடித்தாலும் என் கடையில் சுடச்சுட தோசை கிடைக்கும். ஒருநாள்கூட விடுமுறையில்லை. அமெரிக்கா வந்து 25 ஆண்டுகளாகிவிட்டது. என் தோசை கடை, தற்போது 18-வது ஆண்டில் பெருமையுடன் இயங்கிவருகிறது'' என்கிறார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பஞ்சம் பிழைக்கப் போனவர் இன்று தோசைக் கடை ஓனர்... நியூயார்க்கில் தமிழர் திருக்குமார் தோசைக்கு மவுசு! Empty Re: பஞ்சம் பிழைக்கப் போனவர் இன்று தோசைக் கடை ஓனர்... நியூயார்க்கில் தமிழர் திருக்குமார் தோசைக்கு மவுசு!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon May 06, 2019 6:54 pm

பஞ்சம் பிழைக்கப் போனவர் இன்று தோசைக் கடை ஓனர்... நியூயார்க்கில் தமிழர் திருக்குமார் தோசைக்கு மவுசு! PBwFjRdURjXmLeuxXAfw+Screenshot_20190506-185232




மும்பையைவிட நியூயார்க் நகரில் மக்கள்தொகை குறைவுதான் என்றாலும், மும்பைவாசிகள்போலவே நியூயார்க்வாசிகளும் படு பிஸியானவர்களே. நியூயார்க் பென் ரயில்வே ஸ்டேஷன் அருகே, ஓய்வுக்காகக்கூட ஒரு நிமிடம் நின்றுவிட முடியாது. அலை அலையாய் வரும் மக்கள் கூட்டம், உங்களை அடித்துக்கொண்டு போய்விடும். இதுபோன்ற பிஸியான பகுதியை உலகில் பார்ப்பது அரிது. அலுவலகம் போகும்போதும் சரி... வரும்போதும் சரி, கடும் நெரிசல் காணப்படும். இவ்வளவு பிஸியான மக்கள் நிறைந்த நகரில் பல நாட்டு ஸ்ட்ரீட் ஃபுட் கடைகளும் வளர்வதற்குக் காரணம் அவர்களின் நேரமின்மைதான். அதில், தமிழர் திருக்குமாரின் கடையும் முக்கிய அடையாளத்தைப் பெற்றுள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பஞ்சம் பிழைக்கப் போனவர் இன்று தோசைக் கடை ஓனர்... நியூயார்க்கில் தமிழர் திருக்குமார் தோசைக்கு மவுசு! Empty Re: பஞ்சம் பிழைக்கப் போனவர் இன்று தோசைக் கடை ஓனர்... நியூயார்க்கில் தமிழர் திருக்குமார் தோசைக்கு மவுசு!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon May 06, 2019 6:56 pm

பஞ்சம் பிழைக்கப் போனவர் இன்று தோசைக் கடை ஓனர்... நியூயார்க்கில் தமிழர் திருக்குமார் தோசைக்கு மவுசு! RG9W1BXKTDGY500elKJU+Screenshot_20190506-185417


வெள்ளையர்கள், கறுப்பின மக்களும்கூட திருக்குமாரின் கடைக்கு வந்து மசாலா தோசையைச் சாப்பிட்டுவிட்டு `பேஷ் பேஷ்' என்று சொல்லிச் செல்வர். வெள்ளையர்கள், அதிகளவு பச்சைக் காய்கறிகளை விரும்பிச் சாப்பிடுவார்கள். அதனால், அவர்களுக்கு வழங்கும் தோசை மீது கூடுதலாக பச்சைக் காய்கறிகள் இருக்கும்.

ஒரு தோசை, 8 அமெரிக்க டாலர். அமெரிக்காவில் பர்கர் விலை இதைவிட அதிகம். நியூயார்க்கில் நீங்கள் நல்ல உணவு சாப்பிட நினைத்தால், கிட்டத்தட்ட 40 டாலர் செலவு செய்ய நேரிடும். இதனால், அக்கம்பக்கத்தில் வாழும் தமிழர்களுக்கும் கேரள மக்களுக்கும் திருக்குமாரின் கையேந்தி பவன் ஒரு வரப்பிரசாதம். ஊத்தப்பம், போண்டா, இட்லிகளும் இங்கே கிடைக்கும். நம்ம தமிழ் மக்களின் உணவுகளைப் பிரபலப்படுத்தும் வகையில் புதுச்சேரி ஸ்பெஷல், ஜாஃப்னா ஸ்பெஷல் போன்ற பெயரில் சிறப்பு உணவுகளையும் தயாரித்து விற்கிறார் திருக்குமார். இவரின் கைப்பக்குவத்தில் தயாராகும் சிங்கப்பூர் நூடுல்ஸும் நியூயார்க்வாசிகளை எச்சில் ஊறவைக்கும் ரகம். `நியூயார்க் சென்றால் எங்கே என்ன சாப்பிடுவது?' என்ற வழிகாட்டிப் புத்தகங்களில் 42 நாடுகளில் `தோசா மேன்' என் பெயரில் திருக்குமாரின் கடையும் பெயரும் இடம்பிடித்துள்ளன. நியூயார்க் வரும் ஜப்பானியர்கள் பலரும், இவரின் கடைக்கு தவறாமல் வந்து தோசையை ஒரு பிடி பிடித்துவிட்டுச் செல்வதோடு, வீட்டுக்கு பார்சலும் கட்டிச் செல்கிறார்கள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பஞ்சம் பிழைக்கப் போனவர் இன்று தோசைக் கடை ஓனர்... நியூயார்க்கில் தமிழர் திருக்குமார் தோசைக்கு மவுசு! Empty Re: பஞ்சம் பிழைக்கப் போனவர் இன்று தோசைக் கடை ஓனர்... நியூயார்க்கில் தமிழர் திருக்குமார் தோசைக்கு மவுசு!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon May 06, 2019 6:58 pm

பஞ்சம் பிழைக்கப் போனவர் இன்று தோசைக் கடை ஓனர்... நியூயார்க்கில் தமிழர் திருக்குமார் தோசைக்கு மவுசு! Uv0YpSCBTwWqVrD7yJOj+Screenshot_20190506-185633


பஞ்சம் பிழைக்கப் போய், இன்று நியூயார்க் நகரின் அன்னமிடும் கையாக மாறியுள்ள திருக்குமார், நாள் ஒன்றுக்கு 14 மணி நேரம் உழைப்பதாகச் சொல்கிறார். ``என்னோட இந்த உழைப்பால்தான் வெள்ளையர்களைக்கூட நான் நம்ம ஊரு தோசையைச் சாப்பிட வெச்சிருக்கேன். கடைக்கு வரும் வெள்ளையர்கள், நம்ம ஊர் தோசையை ஆசை ஆசையாய்ச் சாப்பிடுவதைப் பார்க்கும்போது எனக்குப் பெருமையாக இருக்கும். அப்போதெல்லாம் எனக்குள்ள `என்னோட பாட்டுக்கு இந்தப் பாண்டிய நாடே அடிமையப்பா! ' என்ற பாலையாவின் வசனம்தான் எனக்கு நினைவுக்கு வரும். இந்தத் தொழிலை விரும்பிச் செய்கிறேன். மக்கள் என்னோட கடையில் வயிறாரச் சாப்பிட வேண்டும் என்பதுதான் என் லட்சியம். நியூயார்க்கில் இருக்கும் தமிழ்நாட்டு ஹோட்டல்களைவிட, என் கடை தோசையில் அதிக ருசி இருக்கும். ஆனால், விலை அவற்றுடன் ஒப்பிடுகையில் வெகு குறைவு. ஏனென்றால், பணத்தைவிட வாடிக்கையாளர்களின் மனநிறைவுதான் எனக்கு முக்கியம்'' என்று கூறும் திருக்குமாரின்  கடைக்குப் போவது எப்படி?

நியூயார்க், பென் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து 15 நிமிடங்கள் நடந்தால், கிறிஸ்டோபர் தெரு வந்துவிடும். அங்கே போய் `நியூயார்க் தேசைக் கடை எங்கே?' எனக் கேட்டால், குழந்தைகூட காட்டிவிடும். ஆமாங்க... கடையின் பெயரே... N.Y.Dosas-தான்!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பஞ்சம் பிழைக்கப் போனவர் இன்று தோசைக் கடை ஓனர்... நியூயார்க்கில் தமிழர் திருக்குமார் தோசைக்கு மவுசு! Empty Re: பஞ்சம் பிழைக்கப் போனவர் இன்று தோசைக் கடை ஓனர்... நியூயார்க்கில் தமிழர் திருக்குமார் தோசைக்கு மவுசு!

Post by Dr.S.Soundarapandian Tue May 07, 2019 12:08 pm

சூப்பருங்க அருமையிருக்கு


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

பஞ்சம் பிழைக்கப் போனவர் இன்று தோசைக் கடை ஓனர்... நியூயார்க்கில் தமிழர் திருக்குமார் தோசைக்கு மவுசு! Empty Re: பஞ்சம் பிழைக்கப் போனவர் இன்று தோசைக் கடை ஓனர்... நியூயார்க்கில் தமிழர் திருக்குமார் தோசைக்கு மவுசு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum