ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடரை வென்றது இந்தியா: காம்பிர், கோஹ்லி அபார சதம்

Go down

தொடரை வென்றது இந்தியா: காம்பிர், கோஹ்லி அபார சதம் Empty தொடரை வென்றது இந்தியா: காம்பிர், கோஹ்லி அபார சதம்

Post by கோவைசிவா Fri Dec 25, 2009 9:21 am

தொடரை வென்றது இந்தியா: காம்பிர், கோஹ்லி அபார சதம் Indian-playersதோனி இல்லை...யுவராஜ் இல்லை. ஆனாலும் சாதித்து காட்டியது இந்திய அணி. கோல்கட்டாவில் நடந்த நான்காவது ஒரு நாள் போட்டியில் காம்பிர், விராத் கோஹ்லி சதம் அடித்து அசத்த, இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் தொடரை 3-1 என்ற கணக்கில் சூப்பராக கைப்பற்றியது. இலங்கை தரப்பில் தரங்காவின் சதம் வீணானது.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி, 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்தது. நான்காவது போட்டி நேற்று கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. "டாஸ்' ஜெயித்த இலங்கை கேப்டன் சங்ககரா பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் காயமடைந்துள்ள யுவராஜ் சிங்கிற்குப் பதில் விராத் கோஹ்லி சேர்க்கப்பட்டார். தோனிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் கேப்டன் பொறுப்பை சேவக் ஏற்றார். இலங்கை அணியில் கபுகேதரா, வெலகேதரா, குலசேகரா ஆகியோர் நீக்கப்பட்டு, ஜெயசூர்யா, பெரேரா, சமரவீரா இடம் பெற்றனர்.
தில்ஷன் "அவுட்':
முதலில் பேட் செய்த இலங்கை அணிக்கு, ஜாகிரின் பந்து வீச்சு கடும் நெருக்கடியாக அமைந்தது. வழக்கத்துக்கு மாறாக நிதானமாக ஆடிய தில்ஷன் (9), நெஹ்ராவிடம் சரணடைந்தார். அடுத்து வந்த ஜெயசூர்யா (15), கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த தவறினார். முதல் 10 ஓவர்களில் இலங்கை அணி 45 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இஷாந்த் சொதப்பல்:
பின்னர் பந்து வீச வந்த இஷாந்த் சர்மா, இந்த முறையும் சொதப்பினார். இவர் வீசிய ஆட்டத்தின் 12 வது ஓவரில், 5 பவுண்டரிகளை விளாசினார் தரங்கா. இவருடன் இணைந்த கேப்டன் சங்ககரா பொறுப்புடன் ஆட, இலங்கை அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
தரங்கா சதம்:
இந்திய பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்த தரங்கா, ஒரு நாள் அரங்கில் 7 வது சதம் கடந்தார். மறுமுனையில் அரை சதம் கடந்த சங்ககரா (60), ஹர்பஜன் சுழலில் வெளியேறினார். 14 பவுண்டரி 2 சிக்சர் உட்பட 118 ரன்கள் குவித்து தரங்கா பெவிலியன் திரும்பினார். தரங்கா, சங்ககரா ஜோடி 3 வது விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்தது.
அறிமுக அதிரடி:
மிடில் ஆர்டரில் ஜெயவர்தனாவுடன் அறிமுக வீரர் பெரேரா இணைந்தார். "பேட்டிங் பவர் பிளே' ஓவர்களில் இவரது ரன் குவிப்பு இலங்கை அணிக்கு பக்கபலமாக அமைந்தது. இவர் 31 ரன்கள் (4 பவுண்டரி ஒரு சிக்சர்) சேர்த்தார். ஜெயவர்தனா (33) இந்த முறை ஆறுதல் அளித்தார். கடைசி கட்டத்தில் கண்டம்பி 23, சமரவீரா 13 ரன்கள் சேர்க்க, 50 ஓவரில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் குவித்தது.
துவக்கம் ஏமாற்றம்:
சவலான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு, துவக்கம் பெரும் ஏமாற்றமாக அமைந்தது. இலங்கை பவுலர் லக்மல் வேகத்தில், துவக்க வீரராகளான சேவக் (10), சச்சின் (8) அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.
முதல் சதம்:
பின்னர் 3 வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த காம்பிர், கோஹ்லி ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இலங்கை பந்து வீச்சை சமாளித்து ஆடிய இந்த ஜோடி விரைவாக ரன் குவித்தது. இலங்கை கேப்டன் சங்ககரா பல முறை பந்து வீச்சாளர்களை மாற்றியும், எந்தப் பலனும் கிடைக்க வில்லை. மிகவும் "ரிலாக்சாக' ஆடிய கோஹ்லி, ஒரு நாள் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் காம்பிரும், சதம் (7 வது) கடக்க இந்திய அணி வெற்றியை நோக்கி விரைவாக முன்னேறியது. கோஹ்லி 107 (11 பவுண்டரி ஒரு சிக்சர்) ரன்களுக்கு அவுட்டானார். 3 வது விக்கெட்டுக்கு காம்பிர், கோஹ்லி ஜோடி 224 ரன்கள் குவித்து அசத்தியது.
இந்தியா வெற்றி:
அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக், காம்பிருக்கு நல்ல ஒத்துழைப்புக் கொடுத்தார். மலிங்கா பந்து வீச்சில் ஒரு சூப்பர் பவுண்டரி அடித்த காம்பிர், 150 ரன்களை எட்டினார். தவிர, 48.1 ஓவரில் இந்திய அணி 317 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. காம்பிர் (150), தினேஷ் கார்த்திக் (19) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்டநாயகனாக கவுதம் காம்பிர் தேர்வு செய்யப்பட்டார்.
ஆட்டம் பாதிப்பு:
நேற்றைய போட்டியில் இலங்கை அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது(49.2 ஓவரில்) மின்பற்றாக்குறை காரணமாக மைதானத்தில் உள்ள 4 மின் கோபுரங்களில் ஒன்று பழுதானது. இதனால் ஆட்டம் சுமார் 30 நிமிடம் பாதிக்கப்பட்டது. ஈடன் கார்டன் மைதானத்துக்கு இது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன் கடந்த 2008 ம் ஆண்டு ஐ.பி.எல்., தொடரின் போது, கோல்கட்டா நைட் ரைடர்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதிய போட்டி இதே காரணத்தால் பாதிப்புக்கு உள்ளானது.
பீல்டிங் சொதப்பல்:
இந்திய வீரர்கள் மீண்டும் பீல்டிங்கில் சொதப்பினர். நேற்றைய போட்டியில் தரங்கா 7 ரன்கள் எடுத்திருந்த போது, நெஹ்ரா பந்து வீச்சில் அவரிடமே "கேட்ச்' கொடுத்தார். ஆனால் நெஹ்ரா இதை தவறவிட்டார். இதனை பயன்படுத்திக் கொண்ட தரங்கா சதம் கடந்து அசத்தினார். இலங்கை கேப்டன் சங்ககரா ரன் எதுவும் எடுக்காத நிலையில், கொடுத்த மற்றொரு "கேட்ச்' வாய்ப்பை, ஹர்பஜன் கோட்டை விட்டார். இதிலிருந்து தப்பித்த சங்ககரா 60 ரன்கள் அடித்தார்.
ரசிகர்கள் ஏமாற்றம்:
வரும் 2011 ல் நடக்க உள்ள உலககோப்பை போட்டிகளுக்காக ஈடன் கார்டன் மைதானத்தில் பராமரிப்பு வேலை நடைபெறுகிறது. 90 ஆயிரம் பேர் அமரும் வசதியுள்ள இம்மைதானத்தில், 42 ஆயிரம் பேர் மட்டுமே அமர தற்போது இடவசதி உள்ளது. இதனால் பெங்கால் கிரிக்கெட் சங்கம் டிக்கெட்டுகளை விற்பனை செய்ய வில்லை. 146 ஆண்டு கால இம்மைதான வரலாற்றில் முதல் முறையாக நேற்றைய போட்டியில் தான் டிக்கெட் விற்பனை செய்யப்பட வில்லை. பெங்கால் கிரிக்கெட் சங்கம் தனது உறுப்பினர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு மட்டும் டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கியது. இதனால் நுழைவாயிலில் டிக்கெட் வாங்கி போட்டியை காண விரும்பிய சாமான்ய ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
கவாஸ்கருக்கு "சோதனை':
ஈடன் கார்டன் மைதானத்தில் முன்னாள் இந்திய கேப்டன் கவாஸ்கர், பாதுகாவலர்களின் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கவாஸ்கர் மற்றும் இலங்கையின் அர்னால்டு இருவரும் போட்டியின் வர்ணணையாளர்களான உள்ளனர். நேற்று மைதானத்துக்குள் நுழைந்த கவாஸ்கரிடம் அடையாள அட்டை கேட்கப்பட்டது. தவிர, அவரது உடமைகளும் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சோதனைக்குப் பின் கவாஸ்கர் அனுமதிக்கப்பட்டாலும், அர்னால்டுக்கு சற்று தாமதமாகவே அனுமதி கிடைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் சோதனை செய்யப்பட்டதற்கு, மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சாதனை ஜோடி:
காம்பிர், விராத் கோஹ்லி ஜோடி நேற்றைய போட்டியில் 224 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இலங்கை அணிக்கு எதிராக 3 வது விக்கெட்டுக்கு அதிக ரன் சேர்த்த இந்திய ஜோடி என்ற சாதனை படைத்தது. தவிர, ஈடன் கார்டன் மைதானத்திலும் இதுவே அதிகம்.
கடும் பனிப்பொழிவு:
ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று கடுமையாக பனி பொழிந்தது. இதனால் பீல்டிங் செய்து கொண்டிருந்த இலங்கை வீரர்கள் சிரமத்துக்கு உள்ளாயினர். மைதானத்தில் ஈரப்பதம் அதிகம் இருந்த நிலையிலும், ஆடுகளம் பேட்டிங்கிற்கே ஒத்துழைத்தது.
ஹர்பஜன் ஆட்டம்:
நேற்றைய போட்டியில் காம்பிர், கோஹ்லி இருவரும் சதம் கடக்க, பெவிலியனிலிருந்து நடனமாடிய படி பாராட்டு தெரிவித்தார் சக வீரர் ஹர்பஜன். வீரர்களுக்கு அடிக்கடி உற்சாகம் அளித்துக் கொண்டிருந்த ஹர்பஜன், பார்வையாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்:
காம்பிர், விராத் கோஹ்லி ஜோடி நேற்றைய போட்டியில் 224 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இலங்கை அணிக்கு எதிராக 3 வது விக்கெட்டுக்கு அதிக ரன் சேர்த்த இந்திய ஜோடி என்ற சாதனை படைத்தது. தவிர, ஈடன் கார்டன் மைதானத்திலும் இதுவே அதிகம். முதல் சதம் கடந்த விராத் கோஹ்லி கூறுகையில்,"" இந்திய அணி மகத்தான வெற்றி மற்றும் கிறிஸ்துமஸ் ஆகிய இரண்டையும் சேர்த்து கொண்டாடப் போகிறோம்,''என்றார்.
ஒன்பதாவது முறை:
நேற்றைய போட்டியில் இலங்கை அணி நிர்ணயித்த 315 ரன்களை "சேஸ்' செய்து வெற்றி பெற்ற இந்திய அணி, கிரிக்கெட் அரங்கில் 9வது முறையாக 300 ரன்களுக்கு மேல் "சேஸ்' செய்து வெற்றி கண்டது. இது ஈடன் கார்டன் மைதானத்தில் "சேஸ்' செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர்.
300 ரன்களுக்கு மேல் இந்திய அணி "சேஸ்' விபரம்:
எதிரணி இலக்கு ஆண்டு இடம்
இங்கி., 326/8 2002 லார்ட்ஸ்
வெ. இண்டீஸ் 325/5 2002 ஆமதாபாத்
இலங்கை 317/3 2009 கோல்கட்டா
இங்கி., 317/8 2007 ஓவல்
பாக்., 316/7 1998 தாகா
இலங்கை 310/4 2008 கராச்சி
இலங்கை 303/4 2005 ஜெய்ப்பூர்
தெ.ஆ., 302/7 2000 கொச்சி
பாக்., 301/4 2008 கராச்சி
காம்பிர் "3000':
நேற்றைய போட்டியில் இந்திய வீரர் கவுதம் காம்பிர் தனது 140 வது ரன் எடுத்த போது, ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 3000 ரன் என்ற புதிய மைல்கல்லை எட்டினார். இதன்மூலம் இந்த இலக்கை எட்டிய 15வது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார்.
ஸ்கோர் போர்டு:
இலங்கை
தரங்கா (ப) ஜாகிர் 118 (128)
தில்ஷன் (கே) கோஹ்லி (ப) நெஹ்ரா 9 (19)
ஜெயசூர்யா (கே) சச்சின் (ப) ஜாகிர் 15 (15)
சங்ககரா (ஸ்டெ) கார்த்திக் (ப) ஹர்பஜன் 60 (72)
ஜெயவர்தனா -ரன் அவுட் (நெஹ்ரா)- 33 (30)
பெரேரா (கே) ரவிந்திர (ப) நெஹ்ரா 31 (14)
கண்டம்பி -அவுட் இல்லை- 23 (15)
சமரவீரா -அவுட் இல்லை- 13 (7)
உதிரிகள் 13
மொத்தம் (50 ஓவரில் 6 விக்கெட் இழப்பு) 315
விக்கெட் வீழ்ச்சி: 1-31 (தில்ஷன்), 2-72 (ஜெயசூர்யா), 3-198 (சங்ககரா), 4-234 (தரங்கா), 5-271 (பெரேரா), 6-287 (ஜெயவர்தனா).
பந்து வீச்சு: ஜாகிர் 10-0-49-2, நெஹ்ரா 9-1-68-2, இஷாந்த் 7-0-67-0, ஹர்பஜன் 10-0-53-1, ரவிந்திர ஜடேஜா 9-1-51-0, சேவக் 3-0-15-0, ரெய்னா 2-0-9-0.
இந்தியா
சேவக் (கே) தில்ஷன் (ப) லக்மல் 10 (10)
சச்சின் (கே) ரன்திவ் (ப) லக்மல் 8 (8)
காம்பிர் --அவுட் இல்லை- 150 (137)
கோஹ்லி (கே) புஷ்பகுமாரா (ப) ரன்திவ் 107 (114)
கார்த்திக்-அவுட் இல்லை- 19 (22)
உதிரிகள் 23
மொத்தம் (48.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பு) 317
விக்கெட் வீழ்ச்சி: 1-13 (சேவக்), 2-23 (சச்சின்), 3-247 (கோஹ்லி).
பந்து வீச்சு: பெரேரா 9-0-66-0, லக்மல் 10-0-55-2 மலிங்கா 9.1-0-75-0, ரன்திவ் 10-0-57-1, ஜெயசூர்யா 7-0-42-0, தில்ஷன் 3-0-17-0.


<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்
» கோஹ்லி, ரோகித் அதிரடி சதம்: இந்தியா அபார வெற்றி
» நியூசிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியிலும் இந்தியா அபார வெற்றி: டெஸ்ட் தொடரை வென்றது
»  14.5 ஓவரிலேயே 105 ரன்னை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி- தொடரை 3-1 என வென்றது
» ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum