புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டு மருத்துவக் குறிப்புகள்: Poll_c10வீட்டு மருத்துவக் குறிப்புகள்: Poll_m10வீட்டு மருத்துவக் குறிப்புகள்: Poll_c10 
81 Posts - 68%
heezulia
வீட்டு மருத்துவக் குறிப்புகள்: Poll_c10வீட்டு மருத்துவக் குறிப்புகள்: Poll_m10வீட்டு மருத்துவக் குறிப்புகள்: Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
வீட்டு மருத்துவக் குறிப்புகள்: Poll_c10வீட்டு மருத்துவக் குறிப்புகள்: Poll_m10வீட்டு மருத்துவக் குறிப்புகள்: Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
வீட்டு மருத்துவக் குறிப்புகள்: Poll_c10வீட்டு மருத்துவக் குறிப்புகள்: Poll_m10வீட்டு மருத்துவக் குறிப்புகள்: Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
வீட்டு மருத்துவக் குறிப்புகள்: Poll_c10வீட்டு மருத்துவக் குறிப்புகள்: Poll_m10வீட்டு மருத்துவக் குறிப்புகள்: Poll_c10 
1 Post - 1%
viyasan
வீட்டு மருத்துவக் குறிப்புகள்: Poll_c10வீட்டு மருத்துவக் குறிப்புகள்: Poll_m10வீட்டு மருத்துவக் குறிப்புகள்: Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டு மருத்துவக் குறிப்புகள்: Poll_c10வீட்டு மருத்துவக் குறிப்புகள்: Poll_m10வீட்டு மருத்துவக் குறிப்புகள்: Poll_c10 
273 Posts - 45%
heezulia
வீட்டு மருத்துவக் குறிப்புகள்: Poll_c10வீட்டு மருத்துவக் குறிப்புகள்: Poll_m10வீட்டு மருத்துவக் குறிப்புகள்: Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
வீட்டு மருத்துவக் குறிப்புகள்: Poll_c10வீட்டு மருத்துவக் குறிப்புகள்: Poll_m10வீட்டு மருத்துவக் குறிப்புகள்: Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
வீட்டு மருத்துவக் குறிப்புகள்: Poll_c10வீட்டு மருத்துவக் குறிப்புகள்: Poll_m10வீட்டு மருத்துவக் குறிப்புகள்: Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வீட்டு மருத்துவக் குறிப்புகள்: Poll_c10வீட்டு மருத்துவக் குறிப்புகள்: Poll_m10வீட்டு மருத்துவக் குறிப்புகள்: Poll_c10 
18 Posts - 3%
prajai
வீட்டு மருத்துவக் குறிப்புகள்: Poll_c10வீட்டு மருத்துவக் குறிப்புகள்: Poll_m10வீட்டு மருத்துவக் குறிப்புகள்: Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வீட்டு மருத்துவக் குறிப்புகள்: Poll_c10வீட்டு மருத்துவக் குறிப்புகள்: Poll_m10வீட்டு மருத்துவக் குறிப்புகள்: Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வீட்டு மருத்துவக் குறிப்புகள்: Poll_c10வீட்டு மருத்துவக் குறிப்புகள்: Poll_m10வீட்டு மருத்துவக் குறிப்புகள்: Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வீட்டு மருத்துவக் குறிப்புகள்: Poll_c10வீட்டு மருத்துவக் குறிப்புகள்: Poll_m10வீட்டு மருத்துவக் குறிப்புகள்: Poll_c10 
7 Posts - 1%
mruthun
வீட்டு மருத்துவக் குறிப்புகள்: Poll_c10வீட்டு மருத்துவக் குறிப்புகள்: Poll_m10வீட்டு மருத்துவக் குறிப்புகள்: Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டு மருத்துவக் குறிப்புகள்:


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 27, 2009 7:00 am

01:செருப்புக்கடி புண்ணுக்கு

தென்னை மரக் குருத்தோலையை அல்லது குருத்தோம்பை (தென்னம்பூவு தோன்றிய பின் உருவாகும் சிறு சிறு காய்) நெருப்பில் சுட்டுக் கரியாக்கி தேங்காய் எண்ணெயில் குழப்பி புண்ணில் தடவி வர குணமாகும்.



02:மூட்டுவலி, மூட்டு வீக்கம் குணமாக


கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கடுகு. இம்மூன்றையும் சரிபங்கு எடுத்து நீர்விட்டு அரைத்து, சுடவைத்து பொறுக்கும் பக்குவத்தில் சிறிது கற்பூரம் கலந்து வலி உள்ள இடங்களில் தடவ உடன் பலன் கிடைக்கும்.




03:புணகளுக்கும், சிரங்குக்கும் தைலம்

1. ஊமத்தை இலைச்சாறு (300 மிலி), தேங்காய் எண்ணெய் (100 மிலி), நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் மயில் துத்தம் (2 கிராம்) இலைச்சாற்றில் மயில் துத்தத்தைக் கரைத்து எண்ணெய் சேர்த்து அடுப்பிலேற்றி சாறு வற்றும் வரைக் காய்ச்சி வடிகட்டி, ஆறியவுடன் பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் தடவி வர எப்படிப்பட்ட நாட்பட்ட புண்ணானாலும் விரைவில் குணமாகும். அறுவை சிகிச்சை செய்தப் புண்களுக்குக் கூட இது மிகவும் சிறந்த பலன் தருகிறது. இத்தைலம் அடர் பச்சை நிறத்தில் இருக்கும்.


2. எருக்கிலைச் சாறு (100 மிலி), தேங்காய் எண்ணெய் (100 மிலி), மஞ்சள்பொடி (3 கிராம்). இம்மூன்றையும் ஒன்றாகக் கலந்து சாறு வற்றும் வரை அடுப்பிலேற்றி நன்கு காய்ச்சி, வடிகட்டி ஆறியவுடன் கரப்பான் புண், அடிபட்ட புண், சிரங்கு, பொடுகுப் புண் ஆகியவைகளுக்கு வெளியே தடவி வர மிகச் சிறந்த பலனைத் தரும்; விரைவில் குணமாகும்.




:பித்த தலைச்சுற்று, கண் எரிச்சல்

கொத்தமல்லி விதை (பத்து கிராம்), சீரகம் (பத்து கிராம்), நல்லெண்ணெய் (200 மிலி). அடுப்பில் சீரகம் நன்கு கருஞ்சிவந்த நிறத்தில் வரும் வரை காய்ச்சி (எண்ணெய் சூட்டிலேயே சீரகம் கருஞ்சிவப்பு நிறம் வரும்) பின் வடிகட்டி தலைக்குத் தேய்த்து நன்கு குளித்து வர உடன் தீரும். இரத்த அழுத்த நோயாளிகள் தொடர்ந்து மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளித்தல் மிகவும் நல்லது. தினசரி தலையிலும் சிறிது தடவி வர மிகவும் நல்லது.




05:காதில், ஈ, எறும்பு நுழைந்துவிட்டால்

1. வீட்டருகே தானாக முளைத்து கிடக்கும் குப்பைமேனி எனும் செடியின் இலைச் சாற்றினை இரண்டு அல்லது மூன்று துளிகள் காதில் விட ஈ அல்லது எறும்பு உடனே வெளிவரும் அல்லது இறந்து போகும்.

2. சுத்தமான நீரில் சிறிது உப்பு சேர்த்து உப்பு நீராக்கி அதை மூன்று அல்லது ஐந்து துளி காதில் விட உடன் பலன் கிடைக்கும்.



06:உடன் தீப்பட்ட புண்ணுக்கு...

1. தீப்பட்டவுடன் சோற்றுக்கற்றாழை என்னும் குமரியை அதன் உள்ளிருக்கும் குழகுழப்பான சோற்றினை எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்துக் கட்ட எரிச்சல், காந்தல் உடன் தீரும். இதேபோல செம்பருத்தி இலை, பூ எடுத்து அரைத்தும் தடவலாம்.

2. வெந்தயத்தை நீரில் ஊறவைத்து அரைத்து பற்று போட உடன் காந்தல், எரிச்சல் தீரும்.

3. ஊமத்தை இலையை வெண்ணெயில் அரைத்துப் போட எரிச்சல் தீருவதுடன் புண்ணும் எளிதில் ஆறும்.

4. கருவேலம் பிசின் (அ) வெண் குங்கிலியம் என்னும் மருந்துச் சரக்கை தேங்காய் எண்ணெயில் சூடுசெய்து, அதில் கரைந்தவுடன் ஆறிய பின்பு தடவ எரிச்சல் தீரும். (இது நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்).






07:கை-கால்களில் ஏற்படும் பித்தவெடிப்பு நீங்க

1. தேங்காய் எண்ணெய் (200 மிலி), விளக்கெண்ணெய் (200 மிலி), கடையில் கிடைக்கும் வெண் குங்கிலியம் (35 கிராம்), சாம்பிராணிப்பொடி (10 கிராம்). தேன்மெழுகு (60 கிராம்). எண்ணெயை சூடு செய்து அதில் குங்கிலியம், சாம்பிராணி ஆகியப் பொடிகளை கலந்து, நன்கு கரைந்தவுடன் தேன்மெழுகு சேர்த்து நன்கு கலக்கி ஆறவைக்க களிம்பாகி இருக்கும். இதை பாதிக்கப்பட்ட இடத்தில் இரவு படுக்கும் முன் தடவி வர பித்தவெடிப்பு உடன் தீரும்.

2. கிளிஞ்சில் சுண்ணாம்புப் பொடி, விளக்கெண்ணெய் இவை இரண்டும் தேவையான அளவு கல்லுரலில் இட்டு நன்கு அரைத்து பசையாக்கி பாதிக்கபட்ட இடத்தில் தடவிவர உடன் தீரும். விளக்கெண்ணெய் அதிகமாக சேர்க்காமல் பசையாகும் அளவு மட்டும் குறைவாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். காலை, மாலை இரு வேளை தடவிவர உடன் தீரும்.





08:தலைமுடி வளரவும், முடி உதிராமல் இருக்கவும்

1. நெல்லிக்காய்ச் (பெரிது) சாறு கால் லிட்டர், மஞ்சள் சரிசாலைச் சாறு கால் லிட்டர், வெந்தயம் ஐந்து கிராம், வெந்தயத்தை அரைத்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து அடுப்பிலேற்றி நன்கு காய்ச்சி தொடர்ந்து தலைக்குத் தேய்த்து வர தீரும்.

2. தேங்காய்ப் பால் ஒரு லிட்டர், சீரகம் இருபது கிராம், தேங்காய் எண்ணெய் நூறு மி.லி., நன்னாரி வேர்ப்பொடி பத்து கிராம், எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து அடுப்பிலேற்றி நன்கு காய்ச்சி, பின் வடிகட்டி தொடர்ந்து தலைக்குத் தேய்த்துவர நல்ல பலன் கிடைக்கும்.




09:உள்நாக்கு வளர்ச்சிக்கு

வெள்ளைப் பூண்டை நன்கு அரைத்து, வெள்‍ளைத் துணியில் தடவி சிறிது நேரம் துணியை விளக்கில் வாட்டி பிழியச் சாறு வரும். இச்சாற்றுடன் தேன் சரிபங்கு கலந்து கொண்டு உள்நாக்கில் தடவியும், நான்கு துளி வீதம் தொண்டையில் படும்படி விழுங்கியும் வர குணமாகும்.



10:உஷ்ண நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் உடன் தீர

1. நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் வெங்காரம் என்னும் மருந்தை சட்டியில் இட்டு பொரித்து, பொடித்துக் கொண்டு, அரைத் தேக்கரண்டி வீதம் இளநீரில் கலந்து பருகி வர உடன் தீரும்.

2. யானை நெருஞ்சில் (பெரும் நெருஞ்சில்) என்னும் செடியின் இலையைப் பறித்து அதை பாத்திரத்திலிட்டு அது மூழ்குமளவு நீர்விட்டு, 15 நிமிடங்கள் கழித்து வடிகட்ட நீர் ஜெல்லி போலாகும். இதை இரண்டு டம்ளர் வீதம் பருகி வர உடன் குணமாகும்.

3. மண்பாண்ட நீரில் இரண்டு டம்ளரில், தேன் ஒரு தேக்கரண்டி, ஒரு தேக்கரண்டி பனங்கற்கண்டு, ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாறு, அரைத் தேக்கரண்டி உப்பு ஆகியன கலந்து பருக உடன் தீரும்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 27, 2009 7:06 am

11:கக்கூஸ் படை, தேமல், சொறி ஆகியன குணமாக

1. சீமை அகத்தியிலை, கற்பூரம் சிறிதளவு இரண்டையும் எலுமிச்சைப் பழச்சாறு விட்டு அரைத்து தடவி வர குணமாகும்.

2. குப்பைமேனி இலையை உப்பு சேர்த்து நீர்விட்டு அரைத்து பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் தடவி வர குணமாகும்.

3.அவுரி இலை, அல்லது சென்னா இலையை எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்து தடவி வர குணமாகும்.

4. மிளகுப் பொடியை வெங்காயச் சாறு விட்டு அரைத்து தேமல் உள்ள இடத்தில் தடவி வர குணமாகும்.





12:பேன், பொடுகு, தலை ஊரல் தீர


1. பொரும் வெற்றிலை அல்லது மலையாள வெற்றிலைச் சாறு (300 மிலி). இம்மூன்றையும் ஒன்றாக கலந்து அதில் பேன் கொல்லி விதை, கோஷ்டம், அதிமதுரம், குன்றிமணி விதை எல்லாம் பத்து கிராம் வீதம் எடுத்து, இவை நான்கையும் பொடித்து சாறுவிட்டு அரைத்து மேற்கூறிய எண்ணெயில் கலந்து சாறு வற்றும் வரை நன்கு காய்ச்சி வடிகட்டி தலைக்குத் தேய்த்து வர வருடக்கணக்கிலுள்ள பேன் தொல்லைகளும் உடன் தீரும்.

2. மருதோன்றிச் சாறு (100 மிலி), படிகாரம் (அ) சீனாக்காரம் (5 கிராம்), மருதோன்றிச் சாற்றில் இதைக் கரைத்து தலைக்குத் தேய்த்து அரை மணி நேரம் கழித்துக் குளித்துவர பேன் தொல்லை தீரும்.


13:அரையிடுக்கிலுள்ள அரிப்புத் தேமல், கரும்படை குணமாக

மிளகு, நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் வெண்காரம் இரண்டையும் 25 கிராம் அளவில் எடுத்து, பசு நெய் விட்டு நன்கு மையாக அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்து தடவி வர குணமாகும்.






14: ஜலதோஷம், இருமல், தொண்டை வலி, சளி இவைகள் தீர


1. சிறு வெங்காயச் சாறு (20 மிலி), தேன் (20 மிலி), இஞ்சிச்சாறு (20 மிலி) இம்மூன்றையும் ஒன்றாக கலந்து ஒருவேளை வீதம் தொடர்ந்து இரு தினங்கள் உணவுக்கு முன் பருகி வர சிறந்த பலனைத் தரும்.

2. ஓமம் பொடி (10 கி.), மஞ்சள்பொடி (20 கி.), பனங்கற்கண்டு (40 கி.), மிளகு பொடி (10 கி.). சூடான பசும்பாலில் மேற்கூறிய நான்கையும் ஒன்றாக கலந்து அதில் 5-8 கிராம் வரை இருவேளை காலை, மாலை பருகி வர உடன் குணம் கிடைக்கும்

3. தும்பைச் செடியின் இலைச்சாறு (10 மிலி), சிறு வெங்காயச் சாறு (10 மிலி), தேன் (5 மிலி). இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து தினமும் மூன்று வேளை வீதம் உணவுக்கு முன் தொடர்ந்து பருகிவர சிறந்த குணம் கிடைக்கும்.





15:மூலிகை ஷாம்பு

செம்பருத்தி பூ, இலை (100 கி. அல்லது தேவையான அளவு), வெந்தயம் (10 கி.) இவ்விரண்டையும் சிறுது தேங்காய்ப்பால் விட்டு நன்கு அரைத்து, பசையாக்கி குளிப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன் தலையில் தேய்த்து பின் குளித்துவர தலைமுடி உதிரல், தலை ஊரல், கண் குளிர்ச்சி, மேகச்சூடு ஆகியன போகும். இதை இரு கினங்களுக்கு ஒரு முறை தேய்த்துக் குளித்துவர முடி அடர்த்தியாக வளரும். முடி மென்மை அடைந்து பளபளப்பாய்க் காட்சி தரும். சைனஸ் பிரச்சனையுள்ளவர்கள் வாரம் ஒருமுறை இதைப் பயன்படுத்தலாம்.




16:மரு, காலாணி குணமாக

கற்சுண்ணாம்பு (10 கி.), மஞசள்பொடி (5 கி.), நாட்டு நவச்சாரம் (5 கி.), மயில் துத்தம் (2 கி.). இவற்றை ஒன்றாகக் கலந்து நீர்விட்டு அரைத்து பசையாக்கி தேவைப்படும் போது காலாணி உள்ள இடத்தில் நன்கு தடவி அல்லது துணியினால் கட்ட காலாணித் தடிப்பு மாறி வலி மிகக் குறையும். இதையே மரு உள்ள இடத்திலும் வெளிப்புறமாக தடவி வர மரு குணமாகும். மரு என்பது பாலுண்ணி போல் உடல் எங்கும் வரக்கூடிய சிறு சிறு தடிப்பாகும்.






17:கண் பார்வையை மேம்படுத்தி கண்நோய் வராது காக்கும் 'மூலிகைக் கண்மை'

வயல் ஓரங்களில் கிடைக்கும் மஞ்சள் கரிசாலைச் சாற்றில் சுத்தமான சிறிய வெள்ளைத் துணியை நன்கு மூழ்கி காயவைக்க வேண்டும். இவ்வாறு காய்ந்த துணியை திரும்ப திரும்ப மூழ்கி குறைந்தது 8 அல்லது 10 முறை செய்ய வேண்டும். ஒரு சிறு நெய் விளக்கில் இத் துணியை எரித்து சாம்பலாக்க வேண்டும். இச்சாம்பலை எடுத்து போதிய அளவு சிறிது விளக்கெண்ணெய் விட்டு நன்கு அரைத்து பசையாக்கி ஒரு கண்ணாடி புட்டியில் பத்திரப்படுத்தவும் தேவைக்கேற்ப, தேவையான அளவு எடுத்து முறைப்படி கண்களுக்கு மைதீட்ட கண் எரிச்சல், இமை வீக்கம், இமை முடி உதிரல் உள்ளிட்ட நோய்கள் தீருவதுடன் கண் பார்வை கூர்மைப்படும். இதை ஆண், பெண் இரு பாலாரும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.






18:வெள்ளைபடுதல் நிற்க

1. இளவறுப்பாய் வறுத்த வெந்தயப் பொடி (100 கி.) கறி மஞ்சள் பொடி (20 கி.). பனங்கற்கண்டு பொடி (120 கி.) இம்மூன்றையும் ஒன்றாகக் கலந்து அதிகாலை உணவுக்கு முன்னும், இரவு படுக்கும் முன்னும் 10-15 கிராம் அளவு பாலில் உண்டு வர சிறந்த பலன் கிடைக்கும்.

2. பெரு நெல்லிக்காய்ப் பொடி (100 கி.), பனங்கற்கண்டு (100 கி.). இரண்டையும் ஒன்றாகக் கலந்து வைக்கவும். பின்பு ஒரு டம்ளர் பசும் பாலில் நாட்டுக் கோழிமுட்டை வெண்கருவை விட்டு நன்கு கலக்கிக் கொண்டு அதில் மேற்கண்ட கலவைப் பொடியை 10 கிராம் முதல் 15 கிராம் வரை கலந்து காலை, மாலை தொடர்ந்த உட்கொண்டு வர வெள்ளைப்படுதல் உடன் நிற்கும்.





19: உடல் பருமனைக் குறைக்க சில எளிய வழி முறைகள்

1. காலை மாலை நடைப் பயிற்சி

2. முறையான உணவு உண்ணல், இடை உணவை தவிர்த்தல்

3. பகல் தூங்காதிருத்தல்

4. வெங்காயம், பூண்டு, கொள்ளு, பயறு வகைகளை உணவில் அதிகம் சேர்த்தல்

5. இரவு வறண்ட உணவை (சப்பாத்தி, பரோட்டா, ரொட்டி) உண்ணல்

6. இரவு நீர் அதிகம் பருகாதிருத்தல்

7. புடலை, துவரை, முட்டைக்கோஸ் போன்ற உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுதல்; அசைவ உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்தல்

7. புளிப்பு, எரிப்பு உணவுகளை சற்று அதிகம் உண்ணல்

8. கோடம்புளி என்னும் பழம்புளியை உணவில் பயன்படுத்தல் அல்லது கஷாயமாக்கி உண்ணல்

9. அமுக்கிராச் சூரணம், நவகக்குக்குலு, பூண்டு லேகியம், கொள்ளுக்குடிநீர், மண்டூராதிக் குடிநீர் முதலிய மருந்துகளை மருத்துவர் ஆலோசனையுடன் உட்கொள்ளல்

10.பசி அதிகம் இருந்தால் அதைக் குறைக்கும் வகையில் திரிபலாச்சூரணம், மாசிக்காய்ச் சூரணம், அஸ்வகந்தாதி சூரணம் போன்றவற்றை முறைப்படி மருத்துவரின் ஆலோசனைப்படி உண் ணல்.






20:இளைத்த உடல் பருமனாக

1. நேரம் தவறாமல் உணவு உண்ணல்

2. மதிய உணவுக்குப்பின் சிறு தூக்கம்

3. இரவில் நீர்ச்சத்துள்ள உணவு உண்ணல்

4. உணவில் பூசணிக்காய், தடியங்காய் (வெண்பூசணி), வெண்ணெய் சேர்த்துக் கொள்ளல் 5. உடல் உஷ்ணம் குறையும் வகையில் எண்ணெய்க் குளியல் எடுத்தல். காய்கறி சூப், கஞ்சி வகைகளை உண்ணல், மலச்சிக்கல் இல்லாதிருத்தல், கடும் வெயிலில் அலையாதிருத்தல், இரவில் வெகு நேரம் விழிக்காதிருத்தல்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 27, 2009 7:07 am

21:பேதி நிற்க

1. வெந்தயத்தை இளவறுப்பாய் வறுத்த பொடி 50 கிராம், ஓமம் பொடி 10 கிராம் இரண்டையும் ஒன்றாக கலந்து ஒரு தேக்கரண்டி மோரில் உட்கொள்ள உடன் தீரும்.

2. மாசிக்காய் பொடி (100 கிராம்), காய்ச்சுக் கட்டி (100 கிராம்), இலவங்கப்பட்டை (25 கிராம்) மூன்றையும் பொடித்து ஒன்றாகக் கலந்து மேற்கூறியபடி உண்ணவும்.






22:தேமல் மறைய

தேங்காய் எண்ணெய் (200 மிலி), தேன் மெழுகு (15 கிராம்), தேன் (20 மிலி). எண்ணெயை சூடு செய்து மெழுகை இட்டு நன்கு உருகியவுடன், தேனையும் அதில் கலந்து ஆறவிடவேண்டும். ஆறியவுடன் பசை போலாகும். இப்பசையை பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வர குணமாகும்.






23:மலச்சிக்கல் தீர

1. கடுக்காயத் தோல் பொடி(100 கிராம்), ஓமம் பொடி (20 கிராம்) இரண்டையும் ஒன்றாகக் கலந்து இரவு படுக்கும் முன் இரண்டையும் ஒன்றாகக் கலந்து இரவு படுக்கும் முன் 1 1/2 - 2 தேக்கரண்டி (5-10 கிராம்) இள வெந்நீரால் பருக மலச்சிக்கல் தீரும். சிறியவர்களுக்கு அளவை குறைத்துக் கொடுக்க வேண்டும்.

2. குப்பைமேனிச் சாறு (100 மிலி), விளக்கெண்ணெய் (500 மிலி) - இரண் டையும் ஒன்றாகக் கலந்து அடுப்பிலேற்றி காய்ச்சிச் சாறு வற்றியவுடன் இறக்கி வடிகட்டி 1 1/2 - 2 கரண்டி (5-10 மிலி) வீதம் உட்கொள்ள நாட்பட்ட மலச்சிக்கல் தீரும்.

3. அகத்திக்கீரைச் சாற்றை இரவு படுக்கும் முன் சர்க்கரை கலந்து 50-60 மிலி வரை பருக வயிற்றுப்புழுவுடன் மலச்சிக்கல் தீரும்.






24:மூலிகை காஸ்
gauze

நாட்பட்டப் புண்களின் மீது துணியினால் ஆன காஸ் வைப்பதற்கு பதிலாக எருக்கிலை, ஊமத்தை இலை, வெற்றிலை, வேலிப்பருத்தியிலை போன்ற மூலிகைகளின் ஏதாவது ஒன்றின் இலையை புண்களின் மீது வைத்து அதன் மேல் துணி கொண்டு கட்டிவர புண்கள் விரைவில் ஆறி வரும். புண்களை முறைப்படி சுத்தம் செய்து மருந்து வைத்து அதன்மேல் இலையை ‍வைக்க வேண்டும்.




25:முகப்பரு

1. கறிவேப்பிலை, வெண்ணெய் அல்லது பசும்பால் (போதுமான அளவு). கறிவேப்பிலையை பால் அல்லது வெண்ணெயில் சங்கு கொண்டு அரைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து குளித்து வர முகப்பரு தீரும்.

2. நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் முல்தாணி முட்டி என்னும் சரக்கை பொடித்து அதை பசும்பாலில் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வர முகப்பரு குணமடையும்.

3. நல்லெண்ணெய் 100 மி.லி., மிளகு 10 எண்ணம் நன்கு ‍சூடு செய்து மிளகு கருகியவுடன் வடிகட்டி, சூடு ஆறியவுடன் முகத்தில் தேவையான அளவு எடுத்து குளிக்கும் முன் தடவி வர குணமாகும்.


ஆக்கம்: viggie -- நன்றி வீட்டு மருத்துவக் குறிப்புகள்: 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக