ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏமாற்றியது ‘பானி’ புயல் திசை மாறி செல்வதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை

3 posters

Go down

ஏமாற்றியது ‘பானி’ புயல் திசை மாறி செல்வதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை Empty ஏமாற்றியது ‘பானி’ புயல் திசை மாறி செல்வதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை

Post by ayyasamy ram Mon Apr 29, 2019 7:00 am

ஏமாற்றியது ‘பானி’ புயல் திசை மாறி செல்வதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை 201904290033269319_Cheated-by-Bani-storm_SECVPF

சென்னை,

தமிழகத்தில் பருவமழை காலம் முடிந்த பிறகு, கடந்த பிப்ரவரி மாதத்தின் கடைசி வாரத்தில் இருந்தே வெயிலின் கோரத்தாண்டவம் தொடங்கியது. மார்ச் மாதத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. அதிலும் இந்த மாதத்தில் சில நாட்களில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகியது.

பருவமழை போதிய அளவு இல்லாததாலும், வெயிலின் தாக்கம் அதிகமானதாலும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்த காலகட்டத்தில் கோடை மழையாவது கைகொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில் அதற்கான வாய்ப்பும் பெருமளவில் இல்லாமலே போனது.

இந்த சூழ்நிலையில் வங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி தமிழகத்தின் கடற்கரை பகுதிகளில் கடக்கக்கூடும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

திசைமாறியது

புயல் என்றாலே மக்கள் அஞ்சும் அளவுக்கு கடந்த காலங்களில் தமிழகம் பெரும் பாதிப்பை சந்தித்து இருந்தாலும், தற்போது வறட்சி நிலவுவதால் பானி புயலால் போதிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

புயல் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழக அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அவசர ஆலோசனை கூட்டமும் நடத்தியது. இந்த நிலையில் தமிழக கடற்கரை பகுதிகளில் கடக்கும் என்று கூறப்பட்ட பானி புயல் தற்போது திசை மாறி சென்றுவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துவிட்டது. ‘புயலோடு மழை வரும்’ என்று எதிர்பார்த்து இருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது.

வடக்கு நோக்கி நகருகிறது

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று மதியம் நிருபர்களிடம் கூறியதாவது:-

‘பானி’ புயல் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 1,050 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டு இருக்கிறது. அது தீவிர புயலாக வலுப்பெறுகிறது. இந்த தீவிர புயல் 29-ந் தேதி (இன்று) அதி தீவிர புயலாகவும் வலுப்பெறக்கூடும்.

இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து 30-ந் தேதியும் (நாளை), 1-ந் தேதியும் (நாளை மறுதினம்) வட தமிழகம், தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதியையொட்டி 300 கிலோ மீட்டர் வரை வரக்கூடும். அதன்பிறகு திசைமாறி வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரும்.

மிதமான மழை

இதனால் பானி புயல் தமிழகத்தில் கரையை கடப்பதற்கான வாய்ப்பு இல்லை. தமிழகத்துக்கு இந்த புயலினால் நேரடியான பாதிப்பு எதுவும் இல்லை.

இந்த புயல் வட தமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளை நெருங்கி வரும்போது, வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் பெரிய அளவில் மழைக்கு வாய்ப்பு இல்லை.

வெப்பம் அதிகரிக்கலாம்

30-ந் தேதியும், 1-ந் தேதியும் மீனவர்கள் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். வடகிழக்கு திசையில் இந்த புயல் நகர்ந்து செல்லும்போது, 3-ந் தேதிக்கு பிறகு வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் இருந்து அதிகளவில் நிலக்காற்று வீசும்.

ஆகவே தமிழகத்தின் சில பகுதிகளில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கலாம். அப்போது சாதாரண நாட்களை விட 2 டிகிரி முதல் 3 டிகிரி வரை அந்த பகுதிகளில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கடல் சீற்றம்

பானி புயல் காரணமாக சென்னை மெரினா கடல் நேற்று சீற்றத்துடன் காணப்பட்டது.

புயல் உருவானது முதல் திசைமாறியது வரை...

* கடந்த 25-ந் தேதி வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

* 26-ந் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

* 27-ந் தேதி (நேற்று முன்தினம்) தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

* 27-ந் தேதி இரவு தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்தது. இதற்கு ‘பானி’ புயல் என்று பெயர் சூட்டப்பட்டது.

* இந்த புயல் 28-ந் தேதி (நேற்று) தீவிர புயலாக மாறியது.

* ‘பானி’ புயல் திசைமாறி வடக்கு நோக்கி நகர்ந்து செல்வதாக
வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன்
நேற்று தெரிவித்தார்.
-
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஏமாற்றியது ‘பானி’ புயல் திசை மாறி செல்வதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை Empty Re: ஏமாற்றியது ‘பானி’ புயல் திசை மாறி செல்வதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Apr 29, 2019 10:44 am

நல்லதொரு மழை இழந்தோம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஏமாற்றியது ‘பானி’ புயல் திசை மாறி செல்வதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை Empty Re: ஏமாற்றியது ‘பானி’ புயல் திசை மாறி செல்வதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை

Post by Dr.S.Soundarapandian Mon Apr 29, 2019 10:52 am

சோகம் சோகம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ஏமாற்றியது ‘பானி’ புயல் திசை மாறி செல்வதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை Empty Re: ஏமாற்றியது ‘பானி’ புயல் திசை மாறி செல்வதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum