ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காட்சி மொழியால் கவர்ந்த ‘‘கல்லி பாய்’’

Go down

காட்சி மொழியால் கவர்ந்த ‘‘கல்லி பாய்’’ Empty காட்சி மொழியால் கவர்ந்த ‘‘கல்லி பாய்’’

Post by ayyasamy ram Sat Apr 27, 2019 12:36 pm

காட்சி மொழியால் கவர்ந்த ‘‘கல்லி பாய்’’ 201904270956298964_This-is-a-movie-that-has-been-embraced-by-the-true-story_SECVPF
-

உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இந்த படம்
-
2019-ம் ஆண்டின் முதல் காலாண்டை தாண்டி விட்டோம்.
இந்த வருடம் இதுவரை உண்மைச் சம்பவங்களைத் தழுவி
எடுக்கப்பட்ட யுரி, கேஸரி போன்ற பல படங்கள் வந்துள்ளன.
ஆனால் அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டது ‘கல்லி பாய்’.

உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இந்த
படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும்
வரவேற்பைப் பெற்றுள்ளது. அனைத்து தரப்பு மக்களையும்
கவர்ந்திருப்பது தான் இந்தப் படத்திற்கு கிைடத்த வெற்றி.

ரன்வீர் சிங்-ஆலியா பட் நடிப்பில் சோயா அக்தர் இயக்கத்தில்
வெளியாகி இருக்கும் படம் கல்லி பாய். இந்த படத்தில் ரன்வீர்
, ‘முராத்’ என்னும் கதாபாத்திரமாகவே மாறி இருந்தார் என்று
கூறுவதை விட அவர் ராப் பாடகராகவே மாறி விட்டார் என்று
கூறினால் சாலச் சிறந்ததாக இருக்கும்.

இசை சம்பந்தமான கதையமைப்பைக் கொண்ட இந்த படத்தில்
கிட்டத்தட்ட முக்கால் மணி நேரத்திற்கு பாடல்கள் உள்ளன.
இந்த படத்தில் ரன்வீர் ஏழு பாடல்கள் பாடியுள்ளார்.

இந்த படம் எமினமின் ‘8 மைல்’ படத்தின் காப்பி என்று ஆரம்பத்தில்
விமர்சனம் எழுந்தது. ஆனால் இது எமினமின் கதை இல்லை
சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு இளைஞனின் கதை.

இது ‘டிவைன், நாஸி’ என்னும் ராப் சிங்கர்களின் கதையை தழுவி
எடுக்கப்பட்டது. டிவைன்னின் கதாபாத்திரத்தில் தான் முராத்
ஆக ரன்வீர் நடித்திருக்கிறார்.
-
------------------------------------------------


Last edited by ayyasamy ram on Sat Apr 27, 2019 12:41 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காட்சி மொழியால் கவர்ந்த ‘‘கல்லி பாய்’’ Empty Re: காட்சி மொழியால் கவர்ந்த ‘‘கல்லி பாய்’’

Post by ayyasamy ram Sat Apr 27, 2019 12:38 pm


படத்தில் அனைவரையும் ஈர்த்த கதாபாத்திரம் எம் சி ஷேர்.
உண்மையான ராப் பாடகர் தான் படத்தில் நடித்திருக்கிறார்
என்று பக்கத்து சீட்டில் இருப்பவரின் காதுகளை பலர் கடிக்கும்
அளவிற்கு தனது பங்களிப்பை அளித்திருந்தார்
சித்தாந்த் சதுர்வேதி.

அவர் இதற்கு முன் இன்சைட் எட்ஜ் என்னும் ஆன்லைன் ஸ்டிரீமிங்
தொடரிலும், லைப் ஷாய் ஹாய் என்னும் டெலிவிஷன் தொடரிலும்
நடித்திருக்கிறார். அந்த வகையில் தனக்கு கிடைத்த முதல் பட
வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டார்.

இந்த படம் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி வெளியானது. படம்
வெளியாவதற்கு முன்பே சென்ற ஆண்டின் கடைசியில் இருந்து
வெளிநாடுகளில் பட விழாக்களில் திரையிடப்பட்டிருந்தது.

அப்பொழுதே இந்த படம் விருதுக்கான படம் என்று பலர்
வாழ்த்தியிருந்தனர்.

சோயா அக்தர் தனது பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்டு
இந்த படத்தை இயக்கி இருக்கிறார். சிறிது பிசகியிருந்தாலும்
ஒரு சாரருக்கான படமாக மாறிபோகியிருக்கக் கூடிய கதை
இது. படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அவ்வளவு கவனத்துடன்
செயல்பட்டிருக்கிறார் இயக்குநர் சோயா அக்தர்.

படத்திற்கு பாடல்களும் இசையும் பெரிய பலம். பல
இசையமைப்பாளர்கள் படத்திற்கும் பாடல்களுக்கும்
இசையமைத்திருக்கின்றனர். படம் முடிந்த பின்னர்
ஒவ்வொருவரின் காதுகளில் ஒலித்தும் வாய் முணு முணுத்தும்
கொண்டிருப்பது ‘‘அப்னா டைம் ஆயேகா (எங்களுக்கும் காலம்
வரும்)’’ பாடல். இந்த பாடலை எழுதிய ‘டிவைன்’ தனது வலிகளை
வரிகளாக்கி உள்ளார். ‘நிச்சயம் டிவைன் இது உங்களது காலம் தான்’

படத்தின் ஆரம்பத்தில் தனது நண்பன் கார் ஒன்றை திருடும்
போது அது தவறு என்று அறிவுறுத்துகிறார் முராத். தன் நண்பன்
செய்யும் ஒவ்வொரு தவறையும் குத்தி காட்டி தட்டியும் கேட்கிறார்.

இந்த இடத்தில் இருந்து இது தான் செய்ய முடியும் என்று நண்பேனா
தன் தரப்பை நியாயப் படுத்திக் கொள்கிறார்.

தான் செய்யும் தவறுகளுக்கு அந்த பகுதி சிறுவர்களை வைத்து
வேலை வாங்கிக் கொள்கிறார் முராத்தின் நண்பர். ஆனால்
முராத்தோ அவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறார்.

சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்வதை விட சூழ்நிலைக்கு
பயன்படுவதே சிறந்தது என்று முராத் கதாபாத்திரம் உணர்த்துகிறது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காட்சி மொழியால் கவர்ந்த ‘‘கல்லி பாய்’’ Empty Re: காட்சி மொழியால் கவர்ந்த ‘‘கல்லி பாய்’’

Post by ayyasamy ram Sat Apr 27, 2019 12:42 pm

மறுமணம் செய்து கொண்டு முதல் மனைவியையும்,
முதல்மனைவியின் பிள்ளைகளையும் அடிமைகள் போல்
நடத்தும் தந்தை; பின்பகுதியில் தன்மகனைக் கண்டு
கண்கலங்குவது என படத்தின் பல இடங்களில் காட்சிமொழி,
வசனங்களைத் தாண்டியும் சத்தமாக பேசுகிறது.

படத்தில் ஹீரோவிற்கு சண்டை கிடையாது. ஏனென்றால் அதை
ஆலியா பட் பார்த்துக் கொள்கிறார். துணிச்சலும், வேகமும்
புதுமையும் கலந்த ஸபினா கதாபாத்திரத்தில் ஆலியா பளிச்.
தன்னை பெண் பார்க்க வந்தவர் சமைக்க தெரியுமா என்று
கேட்பதற்கு ‘உங்களுக்கு எதிர்காலத்தில் லிவர் மாற்ற வேண்டியது
வந்தால் அதை செய்யத்தெரியும்’ என்று ஸபினா கூறும் இடம்
அல்டிமேட்.

இது போன்ற கதைகள் தமிழில் பல வந்துள்ளன.
இந்திய அளவிலும் பலமுறை பட்டி டிங்கரிங் பார்க்கப்பட்ட கதை
கருவை கொண்ட இந்த படம் இவ்வளவு பெரிய வெற்றியைப்
பெற்றிருப்பதற்கு கதையைத் தவிர்த்து காட்சிகளில் காரணம்
இருக்கின்றது.

தாராவி குடிசைப் பகுதியில் இருந்து ஒரு இளைஞன் கனவுகளுடன்
வாழ்வில் முன்னேற முயற்சிக்கும் கதைகளில் அரசியலை அள்ளி
தூவியிருப்பார்கள்; இந்த படம் அது போல் அல்லாதது தான்
இதன் தனித்துவ அடையாளம். இருளில் இருப்பது தவறு செய்வதற்கு
ஏதுவானது என்று அல்லாமல் வெளிச்சத்தை நோக்கி சென்று அடுத்த
சந்ததியினரை வழிநடத்திச் செல்ல வேண்டும் என்பதை
உணர்த்தியிருப்பது தான் படத்தின் உண்மையான வெற்றி.

2019 ஆண்டின் முதல் காலாண்டில் வெளியான பாலிவுட் படங்களில்
குறைந்த பட்ஜெட்டில் அதிக வசூல் குவித்தது கல்லி பாய் தான்.
அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலிலும் இது முன்னணியில்
உள்ளது. ரசிகர்கள் பெரிய ஸ்டார்களைத் தாண்டி நல்ல கதைகளை
ஆதரிக்கத் தவறுவதில்லை என்பதை கல்லி பாய் படம் மீண்டும்
நிரூபித்திருக்கிறது.
-
------------------------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காட்சி மொழியால் கவர்ந்த ‘‘கல்லி பாய்’’ Empty Re: காட்சி மொழியால் கவர்ந்த ‘‘கல்லி பாய்’’

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum