ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது!

2 posters

Go down

அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது! Empty அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது!

Post by ayyasamy ram Thu Apr 25, 2019 7:31 pm

அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது! 155969_thumb
-
துப்பாக்கி’ திரைப்படத்தில் ஒரு காட்சியில், "அவன் செத்த 14-வது நாள் அவன் தம்பி வந்துட்டாண்டா மிலிட்டரிக்கு!' என ஒரு வசனம் வருமே. அதேபோல நிஜத்தில், மகாராஷ்ட்ராவில் தந்தைக்கு விபத்து நடந்த அடுத்த நாளே அவரது 12 வயதான மகள் விவசாயத்துக்கு வந்து, இப்போது விருது வாங்கிச் சாதித்திருக்கும் சம்பவம் நடந்திருக்கிறது.

மகாராஷ்ட்ரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள லோன்வாடி கிராமத்தைச் சேர்ந்த விஜய் தாவுந்த் ஒரு வழக்கறிஞராக விரும்பினார். ஆனால், குடும்பச்சூழல் காரணமாகத் தனது திராட்சைத் தோட்டத்தைக் கவனிக்கப் போய்விட்டார்.

அவரின் மனைவி லதாவும் மருத்துவராக ஆசைப்பட்டார். ஆனால், குடும்பச்சூழல் காரணமாக 12-ம் வகுப்புடன் நிறுத்திக்கொண்டார். இருவரும் சமாதானம் செய்துகொண்டாலும், தன் பிள்ளைகளைப் படிக்கவைத்து, வேலை வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என்ற முடிவோடு வாழ்ந்து வந்தனர்.

என்னதான் திட்டங்கள் தீட்டினாலும் வாழ்க்கை எப்போதுமே ஒரே நேர்கோட்டில் பயணிப்பதில்லை. ஆம், இவர்களின் மகளான ஜியோத்சனா (Jyotsna) இப்போது தந்தையின் விவசாயத்தைக் கவனித்துக்கொண்டிருக்கிறார்.
-
அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது! 20190414_140606_15056
-
விருது வாங்கிய விவசாய பெண்
-------------------------------------------------------
1998-ம் ஆண்டு ஜியோத்சனாவுக்கு 6 வயது, அவரது தம்பிக்கு ஒரு வயது. அப்போது அவரின் தந்தை ஒரு விபத்தில் சிக்கினார். அதனால் அவர் 7 மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். அவரின் மனைவி லதா குடும்பப் பொறுப்பையும் பண்ணைப் பொறுப்பையும் எடுத்துக்கொண்டார்.

அப்போது லதாவுடன் சேர்ந்து ஜியோத்சனாவும் பண்ணையைக் கவனிக்க ஆரம்பித்தார். 7 மாதங்களுக்குப் பின்னர் அவரின் தந்தை மெல்ல நடக்க ஆரம்பித்தார். அதன் பின்னர், விஜய் தாவுந்த் பண்ணை வேலையைக் கவனிக்க வரும்போது அதிக சிரமப்பட்டார்.

அதனால் அவரின் மனைவி லதாவும் மகள் ஜியோத்சனாவும் பண்ணை வேலைகளைத் தொடர்ச்சியாகக் கவனித்து வந்தனர். ஜியோத்சனாவுக்கு 12 வயதாகும்போதே விவசாயத்தைப் பற்றி பெரும்பாலானவற்றை அறிந்து வைத்திருந்தார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82709
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது! Empty Re: அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது!

Post by ayyasamy ram Thu Apr 25, 2019 7:32 pm

அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது! IMG-20190321-WA0033_15333
-
பள்ளிப்படிப்பின்போதே பண்ணையைக் கவனித்துக்கொண்டே படித்தார் ஜியோத்சனா. தேர்வு நேரங்களில்கூட பண்ணையில்தான் படிப்பார். தன் தாய் தனி ஆளாகக் கஷ்டப்படுவதைப் பார்க்க முடியாமல்தான் பல நேரங்களில் விவசாய வேலைகளைத் தொடர்ந்திருக்கிறார்.

2005-ம் ஆண்டு விஜய்யால் நடக்க முடிந்தது. இப்போது முழுமையாக மனைவி மற்றும் மகளுக்கு ஓய்வு கொடுத்து நிலத்தைப் பார்த்துக் கொண்டார். அதன் பின்னர், ஜியோத்சனா கல்லூரியில் இளங்கலை பொறியியல் படித்துவந்தார். அந்த நேரம், 2010-ம் ஆண்டு திராட்சை அறுவடை செய்ய தயாராக இருந்தது.

அப்போது லோன்வாடி பகுதியில் கனமழை வெளுத்து வாங்கியது. அதனால், விவசாயம் முற்றிலும் சேதத்தை மகசூலாகக் கொடுத்தது.

இந்த சமயத்தில் ஒருநாள் உரம் வாங்கச் சென்றார் விஜய். உரத்தை வாங்கிக்கொண்டு கடையின் மாடியில் இருந்து இறங்கினார். அப்போது கால்தடுக்கி மாடிப்படிக்கட்டிலிருந்து உருண்டு விழுந்துவிட்டார்.

இம்முறை அவரது கால் நிரந்தரமாக முடங்கிவிட்டது. இனி எழுந்து நடக்க முடியாத சூழல். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தன் மனைவியிடம் உரத்தைக் கொடுத்து தோட்டத்தில் தெளிக்கச் சொல்லியிருக்கிறார். அதன் பின்னர், மனைவி கணவரை கவனித்துக்கொள்ள நேர்கிறது.

அடுத்த நொடியே யோசிக்காமல் பண்ணையை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டார் ஜியோத்சனா. கணினிப் பொறியாளராக விரும்பிய அவரின் மகள், பி.எஸ்ஸி கணினி அறிவியல் படிப்பைத் தேர்வு செய்தார்.

அப்போதுதான் பண்ணைக்கு நேரம் ஒதுக்கி வேலை செய்ய முடியும்
என்பதுதான் அதற்குக் காரணம்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82709
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது! Empty Re: அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது!

Post by ayyasamy ram Thu Apr 25, 2019 7:36 pm

அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது! IMG-20190321-WA0028_15164
-
லோன்வாடி ஒரு சிறிய கிராமம். ஜியோத்சனா கல்லூரிக்குத் தினமும் 18 கி.மீ தொலைவில் இருக்கும் பிம்பல்கான் (Pimpalgaon) கல்லூரி சென்று படிக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுவார். பண்ணையில் வேலைகளை முடித்துவிட்டு, கல்லூரிக்குச் செல்வார். மாலையில் திரும்பியவுடன் மீண்டும் அவர் பண்ணைக்குச் செல்வார். விஜய் மருத்துவமனையில் இருந்துகொண்டே ஜியோத்சனாவுக்கு டிராக்டர் ஓட்டக் கற்றுக்கொடுத்தார். அதை முறையாகக் கேட்டு தனது பண்ணையில் இருந்த டிராக்டரை ஓட்டினார்.

முதுகலைப் படிப்பை முடித்த நிலையில் நாசிக் பகுதியில் இருக்கும் மென்பொருள் நிறுவனத்துக்கு வேலைக்குச் சேர்ந்தார். அதன் பின்னரும் அவருக்கு, யாரும் கவனிக்காமல் தனது பண்ணை எப்படி இருக்குமோ என்பது பற்றிய கவலை அதிகமாகத் தொடங்கியது.

இப்போது பண்ணையைக் கவனிக்க ஆள் இல்லை. தொடர்ந்து ஒரு வருடம் அந்த நிறுவனத்தில் வேலை செய்தவர், 2017-ம் ஆண்டு வேலையை உதறிவிட்டு, மீண்டும் தன் பண்ணைக்கு வந்துவிட்டார். அந்த ஒரு வருடத்தில் தனக்குத் தேவையான பணத்தைச் சேமித்த ஜியோத்சனா, தன் தம்பியின் படிப்பு செலவுக்கும் வீட்டுச் செலவுக்கும் வைத்துக்கொண்டார்.

அடுத்த 6 மாதம் தனது பண்ணைக்கு முக்கியத்துவம் கொடுத்து உழைத்தார். சில நாள்கள் இரவிலும் பண்ணையில் தங்கி வேலை பார்த்தார். அவரது பண்ணைக்கு மின்சாரம் எப்போது வரும், போகும் எனச் சொல்ல முடியாது. அதனால் பண்ணையில் மின்சாரம் இருக்கும் நேரங்களில் மட்டுமே தண்ணீர் பாய்ச்ச முடியும்.

இங்கே ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். அவரின் தந்தை நிரந்தரமாகக் கால்களை இழந்த பின்னர், அன்றிலிருந்து, இன்று வரைக்கும் இவர்தான் விவசாயத்தைக் கவனித்து, குடும்பப் பொறுப்புகளையும் எடுத்து நடத்தி வருகிறார்.

அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது! 4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_15445
விருது வாங்கும் பெண்

Images Courtesy - TheBetterindia.Com

ஜியோத்சனாவின் உழைப்புக்குப் பலனாக ஆறு மாதங்களில் திராட்சைக் கொடிகள் நன்றாக வளர்ந்திருந்தன. அப்போது வேலை அதிகமாக இல்லாமல் ஜியோத்சனாவுக்கு நேரமும் கூடுதலாகக் கிடைக்க ஆரம்பித்தது.

தனால் அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தார். அதன் பின்னரும் பண்ணையைக் கவனிக்கத் தொடங்கினார். அந்த நேரம் திராட்சை சீஸனில் விளைச்சல் அதிகமாகக் கொடுக்க ஆரம்பித்தது.

இதன் காரணமாக 2018-ம் ஆண்டின் கிருஷிதோன் அமைப்பின் சிறந்த பெண் விவசாயி விருது (Krishithon - Best Woman farmer award) ஜியோத்சனாவுக்குக் கிடைத்தது. இப்போது ஆசிரியை, விவசாயி என இரண்டு வேலைகளைக் கைவசம் வைத்துக் கொண்டு பயணித்துக்கொண்டிருக்கிறார் ஜியோத்சனா.
-

துரை நாகராஜன்
நன்றி-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82709
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது! Empty Re: அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Apr 26, 2019 9:43 am

வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது! Empty Re: அப்பாவுக்குக் கால்முறிந்த அடுத்தநாளே விவசாயத்தில் குதித்த மகள்... தேடி வந்த விருது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum