புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_c10மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_m10மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_c10மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_m10மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_c10 
83 Posts - 44%
mohamed nizamudeen
மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_c10மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_m10மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_c10 
6 Posts - 3%
prajai
மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_c10மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_m10மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_c10 
6 Posts - 3%
Jenila
மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_c10மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_m10மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_c10 
2 Posts - 1%
jairam
மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_c10மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_m10மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_c10மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_m10மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_c10மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_m10மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_c10 
2 Posts - 1%
kargan86
மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_c10மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_m10மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_c10மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_m10மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_c10மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_m10மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_c10 
127 Posts - 52%
ayyasamy ram
மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_c10மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_m10மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_c10 
83 Posts - 34%
mohamed nizamudeen
மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_c10மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_m10மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_c10 
10 Posts - 4%
prajai
மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_c10மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_m10மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_c10 
8 Posts - 3%
Jenila
மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_c10மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_m10மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_c10மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_m10மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_c10மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_m10மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_c10மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_m10மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_c10மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_m10மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_c10மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_m10மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மண்ணிலேயே விண்ணைக் காண்போம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 25, 2019 4:35 am

மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Tamil_News_large_2261709
-
ஆத்திசூடி' -அகர வரிசையில் அவ்வையார் படைத்துள்ள ஓர் அற நூல். அறம், பொருள், இன்பம் என்னும் வாழ்வியல் அறத்தை 108 எளிய இரு சீர் ஓரடிச் சூத்திரங்களால் உணர்த்தும் உயரிய நுால் இது.

பாப்பா பாட்டுப் பாடிய பாரதியார் 'புதிய ஆத்திசூடி' எழுதினார். பாரதிதாசனார் ஆத்திசூடிகள் இரண்டு எழுதினார்.அவ்வையார் ஆத்திசூடியில் வலியுறுத்தியுள்ள இன்றியமையாத வாழ்வியல் அறங்களை காண்போம்.

1. அறச்செயல் செய்ய ஆசைப்படு!


எவ் வகையான அறத்தைச் செய்வதற்கும் முதலில் தேவைப்படுவது உள்ளார்ந்த விருப்பமே ஆகும். இதனைத் தெளிவுபடுத்தும் நோக்கிலேயே ஔவையார் “அறஞ்செய விரும்பு” எனத் தொடங்கியுள்ளார்.

'அறத்தைச் செய்' எனப் பொதுப்படக் கூறாமல், 'அறச்செயல் செய்ய ஆசைப்படு' என அவர் கூறியிருப்பது அடிக்கோடு இட வேண்டிய அடிப்படையான செய்தி ஆகும்.

2. செய்யும் செயல்களைச் செம்மையாகச் செய்!


அவசரப்படுவதாலோ பதறுவதாலோ ஒரு செயலில் நமக்கு வெற்றி வசப்பட்டு விடாது. செய்யும் செயல்களைச் செம்மையாக, எண்ணித் துணிந்து, திட்டமிட்டு தொலைநோக்குடன் செய்தல் வேண்டும்.

அப்போது தான் வாழ்வில் வெற்றி வாகை சூட முடியும். இதனை உணர்த்தும் 'செய்வன திருந்தச் செய்' என்னும் ஆத்திசூடி, இன்றைய மேலாண்மை இயலில் வலியுறுத்தப் பெறும் பால பாடம் ஆகும்.

3. மன வலிமையைக் கைவிடாதே!


வாழ்வில் தடம் பதிக்க விரும்புவோர் தவறாமல் பின்பற்ற வேண்டிய பொன்னான விதி உண்டு. அது எந் நிலையிலும் ஊக்கத்தினை, மன வலிமையை கைவிட்டு விடாமை ஆகும்.

இக் கருத்தினை உணர்த்தும் ஆத்திசூடியே 'ஊக்கமது கைவிடேல்' என்பதாகும்.4. எதற்கும் கலக்கம் அடையாதே!

வாழ்வில் எதற்கும் கலக்கம் அடையக்கூடாது. 'உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா!' என்ற படி எதையும் எதிர்கொள்ளும் நெஞ்சுரத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்;

நம்மைத் தாக்க வரும் துன்பத்திற்கும் துன்பம் தரும் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். 'மனந் தடுமாறேல்' என்று அவ்வையார் கூறியுள்ளார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 25, 2019 4:35 am

5. துன்பத்திற்குச் சிறிதும் இடங்கொடாதே!

வாழ்வில் துன்பம் வரத்தான் செய்யும்; அதன் வருகையைத் தவிர்க்கவோ தடுக்கவோ முடியாது. ஆனால் துன்பம் நம்மைத் தாக்காமல், அதற்குச் சிறிதும் இடம் கொடுக்காமல் வாழக் கற்றுக் கொண்டால் போதும் துன்பத்தை வெற்றி கொண்டு விடலாம்.

இக் கருத்தினை உணர்த்துவதே “துன்பத்திற்கு இடங்கொடேல்” என்னும் ஆத்திசூடி. முயற்சி செய்யும் பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி நாம் அதனை விட்டுவிடல் ஆகாது. 'முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்' என்று தானே வள்ளுவரும் வலியுறுத்தியுள்ளார்.

6. 'ங' எழுத்துப் போல் நீயும் உன் சுற்றத்தைத் தழுவு!


'ஙப்போல் வளை' என்பது சுற்றம் தழுவி வாழ வேண்டியதன் சீர்மையை உணர்த்தும் ஓர் அரிய ஆத்திசூடி. “'ங' எழுத்துப் போல் நீயும் உன் சுற்றத்தைத் தழுவு. 'ங' என்னும் எழுத்தானது தான் பயனுடையதாய் இருந்து பயன் இல்லாத ஙா முதலிய தன் வர்க்க எழுத்துகளைத் தழுவிக் கொள்ளுதல் போல, நீ பயனுடையவனாய் இருந்து உன் இனத்தார் பயன் இல்லாதவர் ஆயினும் அவரைத் தழுவிக் கொள்” என்பது பொருள் ஆகும்.

“ஒரு மனிதன் உயர வேண்டும். உயர்ந்த அத்தனை பேரிடமும் பழகி அனுபவங்களைக் கற்றுக் கற்று ஆழமாகக் கீழே இறங்கி, பணிந்து, குனிந்து உனக்குக் கீழே உள்ளவர்களையும் சேர்த்து உயரக் கொண்டு வர வேண்டும். அது தான் 'ங'. அந்த 'ங'ப் போல வளர வேண்டும்” என பொருள் காண்போரும் உள்ளனர்.

7.பொருளைப் போற்றி வாழ்வாயாக!

பண்டைத் தமிழர் பொருளின் அருமையினையும் தேவையினையும் நன்கு உணர்ந்திருந்தனர். அறம் பொருள் இன்பம் என்னும் வரிசை முறையில் பொருளுக்குத் தரப் பெற்றிருக்கும் நடு இடமும் இதனை உறுதி செய்யும். பொருள் இருந்தால் தான் ஒருவர் அறச் செயல்களை ஆற்ற முடியும்;

இன்பம் நுகர்வதற்கும் பொருள் வேண்டும். ஆனால் ஒன்று: பொருள் வரும் வழி தீது இல்லாததாக இருத்தல் வேண்டும். 'பொருள் செயல் வகை' என்னும் தலைப்பில் ஓர் அதிகாரமே படைத்துள்ள வள்ளுவர்.“அறன்ஈனும் இன்பமும்ஈனும் திறன் அறிந்துதீதின்றி வந்த பொருள்” என்றார்.

வள்ளுவரை அடியொற்றி
அவ்வையாரும் “பொருள்தனைப் போற்றி வாழ்” என ஓர் ஆத்திசூடி
எழுதியுள்ளார். 'வீண் செலவு செய்யாமல் பொருளைக் காத்துப் பெருக்கி வாழ்வாயாக!” என்பது பொருள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 25, 2019 4:37 am

8. மென்துயில் புரிக!

'இலவம் பஞ்சின் துயில்' என்னும் ஆத்திசூடிக்கு 'இலவம் பஞ்சினால் செய்த மெத்தையிலே படுத்து உறங்கு' எனப் பொருள் காண்பதில் இருந்து வேறுபட்டு மகாவித்துவான் இரா.இராகவையங்கார் இச்சூடிக்கு வரைந்துள்ள பொருள் விளக்கம் மிகவும் நுட்பமானது. 'இலவம் பஞ்சு போல மெல்லத் தூங்குக' என்பதே அவ்வையார் இங்கே உணர்த்த விரும்பும் உண்மைப் பொருள்.

9. 'மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே!'


'தையல் சொல் கேளேல்' என்பது மிகுந்த கருத்து வேறுபாட்டிற்கு இடம் தரும் ஓர் ஆத்திசூடி. 'பெண்டாட்டி சொல்லைக் கேட்டு ஒழுகற்க' என்றோ 'தையல் உன் சொல்லைக் கேட்குமாறு செய்' என்றோ இச் சூடிக்குப் பொருள் கூறுவது பொருத்தமாக இருக்குமா?

இச் சூடியின் சரியான பொருள் இது தானா? ஒரு பெண்பாற் புலவராக இருந்து கொண்டு அவ்வையார் இப்படிப் பாடி இருப்பாரா?

'மனைவி சொல்வதை எல்லாம் அப்படியே கேட்டு நடவாதே; ஆராயாமல் நடவாதே' என்று ஆண்மகனுக்கு வாழ்வியல் அறத்தினை உணர்த்தும் நோக்கிலேயே 'தையல் சொல் கேளேல்' என்று பாடி இருப்பார்.10. எக்காலத்தும் படித்துக் கொண்டே இரு!

உலக வரலாற்றில் சாதனை படைத்த வெற்றியாளர்கள் யாவருமே புத்தகங்களைப் படிப்பதில் மிகுந்த ஆர்வமும் அக்கறையும் கொண்டவர்களாகவே இருந்து வந்துள்ளனர். 'ஓதுவது ஒழியேல்' என்னும் ஆத்திசூடியே அவர்கள் எந்நாளும், எப்போதும்,எந்நிலையிலும் தவறாமல் பின்பற்றி வந்துள்ள முதன்மையான தாரக மந்திரம் ஆகும்.

ஆத்திசூடியில் வலியுறுத்தியுள்ள இத்தகைய உயரிய அறங்களை மனம் கலந்து, கருத்துான்றிப் பயில்வோம்; அவற்றின் வழி வாழ்வில் நடப்போம்; இம் மண்ணிலேயே விண்ணைக் காண்போம்; பாரதி போற்றும் 'தெய்வ வாழ்க்கை'யை வாழ்வோம்.

-பேராசிரியர் இரா.மோகன்எழுத்தாளர், மதுரை

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Apr 25, 2019 11:00 am

:நல்வரவு:
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக