புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிணி தந்த பாடல்கள் Poll_c10பிணி தந்த பாடல்கள் Poll_m10பிணி தந்த பாடல்கள் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பிணி தந்த பாடல்கள் Poll_c10பிணி தந்த பாடல்கள் Poll_m10பிணி தந்த பாடல்கள் Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
பிணி தந்த பாடல்கள் Poll_c10பிணி தந்த பாடல்கள் Poll_m10பிணி தந்த பாடல்கள் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
பிணி தந்த பாடல்கள் Poll_c10பிணி தந்த பாடல்கள் Poll_m10பிணி தந்த பாடல்கள் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பிணி தந்த பாடல்கள் Poll_c10பிணி தந்த பாடல்கள் Poll_m10பிணி தந்த பாடல்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிணி தந்த பாடல்கள் Poll_c10பிணி தந்த பாடல்கள் Poll_m10பிணி தந்த பாடல்கள் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பிணி தந்த பாடல்கள் Poll_c10பிணி தந்த பாடல்கள் Poll_m10பிணி தந்த பாடல்கள் Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
பிணி தந்த பாடல்கள் Poll_c10பிணி தந்த பாடல்கள் Poll_m10பிணி தந்த பாடல்கள் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
பிணி தந்த பாடல்கள் Poll_c10பிணி தந்த பாடல்கள் Poll_m10பிணி தந்த பாடல்கள் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பிணி தந்த பாடல்கள் Poll_c10பிணி தந்த பாடல்கள் Poll_m10பிணி தந்த பாடல்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிணி தந்த பாடல்கள்


   
   
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Fri Jan 08, 2010 9:29 am

திருப்தியுடன் உண்ட சுகத்தில், கவிஞர்கள் எழுதிய பாடல்களைப் போலவே, பசிப்
பிணியாலும் இதர உடற்பிணியாலும் வருந்திய கவிஞர்களாலும் அருமையான பாடல்கள்
பாடப் பட்டுள்ளன.

அவ்வையார் பாடாத பொருள் இல்லை. பசிக்கு உணவளித்தவர்களைப் பாடியது போலவே,
பசிப்பிணியை உணர்த்தும், வயிற்றையும் நொந்து அதனுடன் பேசுவதாக ஒரு பாடல்
பாடி இருக்கிறார். "ஏ வயிறே! உன்னோடு வாழ்வது
அரிதான செயலாகிவிட்டது. ஒரு நாளைக்கு உணவில்லாமல் இருக்கக் கூடாதா என்றால்
கேட்க மறுக்கிறாய். எங்காவது விருந்துக்குப் போனால் இரண்டு நாட்களூக்கு
போதுமான அளவு உண்டுவிடு என்றாலூம் கேட்பதில்லை. என் வலி உனக்குத்
தெரியவில்லயே!" என்று பாடுகிறார்.

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளைக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்
என் நோவறியாய் இடும்பைகூர் என் வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது.

(இடும்பை - துன்பம்; வறுமை)

அவ்வையார் வயிற்றோடு பேசியது போல மதுரகவிராயர் என்ற புலவர் தன் வறுமையுடன் பேசுகிறார். வறுமை நோயால் மிகவும் வாடிய அவர் அக்காலத்தில்
இரப்போர்க்கு இல்லை என்னாது வாரி வழங்கிய காளத்தியப்பர் என்ற வள்ளலைப்
பார்த்துப் பாடல் பாடிப் பரிசில் பெறலாம் என்று கருதி வள்ளலின் ஊரான
திருநின்றை
யூர் நோக்கிச் செல்கிறார். இடைவழியில் இருட்டி விட்டது. எனவே அருகில்
இருந்த ஒரு மண்டபத்தில் இரவைக் கழிக்க எண்ணிப் படுத்தார். படுத்தபடியே
சிந்திக்கிறார்.
நாளை தன் வறுமை தன்னை விட்டு நீங்கிவிடும் என்ற நம்பிக்கை உண்டாகிறது.
பின் தன்னை வாட்டும் வறுமையிடம் பேசுகிறார்:

"ஏ வறுமையே! என்னை விட்டு நீங்காத என் நிழல்போல என்னைப் பின்பற்றி இவ்வளவு
நாளும் நீ திரிந்து வருந்தினாய். நாளைக்கு நான் திருநின்றையூர் சென்று
வள்ளல் காளத்தியப்பரைக் காணப்போகிறேன். தமிழ்ப் பாடல்களைப் பாடப் போகி
றேன். அவ் வள்ளல் அவற்றைக் கேட்டதும் பொன்னும் பொருளும் வாரி வழங்குவார்.
உன்னை ஓட்டி விடுவார். பாவம்! நாளைக்கு நீ எங்கேயோ நான் எங்கேயோ?
போகட்டும், இன்றைக்குச் சற்று என்னுடன் இருந்து விட்டுப் போ!"

நீளத் திரிந்துழன்றாய் நீங்கா நிழல்போல
நாளைக்(கு) இருப்பையோ நல்குரவே - காளத்தி
நின்றைக்கே சென்றக்கால் நீ எங்கே நான் எங்கே
இன்றைக்கே சற்றே இரு.

(உழன்றாய் - வருந்தினாய்; நல்குரவு - வறுமை; காளத்தி - வள்ளல் காளத்தியப்பர்; நின்றை - திருநின்றைவூர்.)

உள்ளப்பிணி மட்டுமல்ல உடற்பிணிகளும் பாடல் பெற்றிருக்கின்றன.

சமணத் தலைவர் தருமசேனராக நாவுக்கரசர் வாழ்ந்தபோது அவரைத் தடுத்தாட் கொள்ள சிவபெருமான் அவருக்குக் கடுமையான சூலை நோயைக் கொடுத்துச்
சோதிக்கிறார். சமண வைத்தியர்கள் தாம் அறிந்த வழியிலெல்லாம் அந்நோய்
தீர்க்க முயன்றும் தீர்க்கப்படாத நிலையில் அவரது தமக்கையான திலகவதியாரின்
அறிவுரைப் படி திருவதிகைக் கெடில வீராட்டானம் சென்று அங்கு உறையும்
வீரட்டானேஸ்வரரிடம் பாடி முறையிடுகிறார்.அற்புதமான அப்பாடல்களில் தன்னை
வருத்தும் சூலை நோயின் கடுமையைச் சொல்லி இறைஞ்சுகிறார்:

கூற்று ஆயினவாறு விலக்கலீர்;
கொடுமை பல செய்தன அறியேன்;
ஏற்றாய், அடிக்கே இரவும் பகலும்
பிரியாது வணங்குவன், எப்பொழுதும்;
தோற்றாது என் வயிற்றில் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன்; அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே.

- இன்னும், சூலை நோயின் கடுமை குறித்து,

'சுடுகின்றது சூலை' எனவும், 'வலிக்கின்றது சூலை' எனவும்,
'என் வயிற்றின் அகம்படியே கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்து தின்ன அலுத்திட்டேன்'
எனவும்,'வேர்த்தும் புரண்டும் விழுந்தும் ...என் வேதனை' என்றும் பாடுகிறார்.

நம் காலத்துக் கவிஞரான கவிமணியை சிரங்கு நோய் வருத்துகிறது. என்ன மருந்து
எடுத்துக் கொண்டும் சிரங்கு ஆறுவதாய் இல்லை. வேதனையான அவ்வனுபவத்தை
நகைச்சுவையுடன் பாடுகிறார்.

சிரங்கை தாஜா செய்ய 'சிரங்கப்பராயர்' என்று உயர்வு நவிற்சியில்
விளிக்கிறார். சிரங்கப்பராயர் தனக்குத் தந்த சீதனம் பற்றிப்
பட்டியலிடுகிறார்:

முத்து பவழம் முழுவயிரம் மாணிக்கம்
பத்தியொளி வீசும் பதக்கமெல்லாம் - சித்தன்
சிரங்கப்பராயன் சிறியேன் எனக்குத்
தரங்கண்டு தந்த தனம்.

சிரங்கு நீங்க மேற்கொண்ட மருந்துகளால் பயன் இல்லாததைச் சொல்லி முருகப் பெருமானிடம் வேண்டுகிறார்:

செந்தில்குமரா திருமால் மருகா என்
சிந்தை குடிகொண்ட தேசிகா - நொந்த இம்
மெய்யிற் சிரங்கை விடியுமட்டுஞ் சொரிய
கையிரண்டும் போதாது காண்.

வாரம் முடங்காமல் வைப்பெண்ணெய் தேய்த்திட்டேன்
சார மருந்தெல்லாம் சாப்பிட்டேன் - வீரம்
குறைந்திடக் காணேன் குமரா சிரங்கு
மறைந்திடத் தா நீ வரம்.

முருகனிடம் முறையிட்டும் பயனில்லை. எனவே 'சாட்சிக்காரன் காலில் விழுவ
திலும் சண்டைக்காரன் காலில் விழுவதே மேல்' என்று சிரங்கப்பராயரிடமே சரணடை கிறார்:

உண்ட மருந்தாலும் உடல் முழுவதும் பூசிக்
கொண்ட மருந்தாலும் குணமிலையே - மண்டு
சிரங்கப்பராயா சினம் மாறிக் கொஞ்சம்
இரங்கப்பா ஏழை எனக்கு.

'இடுக்கண் வருங்கால் நகுக' என்று சொன்னார் அல்லவா வள்ளுவர்? அதன்படி கவிஞரிடம் வேதனையிலும் வெண்பா கொஞ்சி விளையாடுகிறது.

இவரது அற்புதமான வெண்பாவில் உளம் பறிகொடுத்ததால் தான் ரசிகமணி, தன் ஒரே
மகனின் இழப்பையும் மறந்து அவர் அனுப்பிய இரங்கப்பாவைப் பாராட்டுகிறார்.

ரசிகமணி டி.கே.சி அவர்களின் ஒரேமகனும் சிறந்த கவிஞருமான செல்லையா என்று
செல்லமாய் அழைக்கப்பட்ட தீபன் என்கிற தீத்தாரப்பன்- இளம் வயதில் அகால
மரணம் அடைந்தபோது, கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்கள், மனம் உருக
கீழ்க்கண்டவாறு ஒரு இரங்கற்பாவினை அனுப்பி வைத்தார்.

எப்பாலும் போற்றும் இசைத்தமிழ்ச் செல்வா என்
அப்பா அழகிய செல்லையா நான் - இப்பாரில்
சிந்தை குளிரச் சிரித்தொளிரும் உன் முகத்தை
எந்தநாள் காண்பேன் இனி.

'அப்பா' என்ற அருமைச் சொல்லைப் படித்ததும் அழுது புலம்ப வேண்டாமா தந்தை?
ஆனால் ரசிகமணி எந்நிலையிலும் நல்ல கவிதையை ரசிப்பவர் அல்லவா? அதனால் அவர்
தன் இழப்பை மறந்து "இப்படி ஒரு பாடல் கிடைக்குமானால் எத்தனை பிள்ளை
களையும் இழக்கலாமே" என்றாராம்.
[You must be registered and logged in to see this link.]



[You must be registered and logged in to see this image.]
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Jan 08, 2010 10:47 am

திரு தண்டாயுத பாணி
நல்லதொரு தொகுப்பு. பயனுள்ள பாடல்கள். உளமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும்
அன்புடன்
நந்திதா
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் nandhtiha

kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Postkilaisyed Fri Jan 08, 2010 11:06 am

nalla thokuppu mikka nanri

kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Postkilaisyed Fri Jan 08, 2010 11:18 am

இகரை நன்பர்களூக்கு காலை வணக்கம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக