புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரியவா திருவடியே சரணம். !  I_vote_lcapபெரியவா திருவடியே சரணம். !  I_voting_barபெரியவா திருவடியே சரணம். !  I_vote_rcap 
14 Posts - 70%
heezulia
பெரியவா திருவடியே சரணம். !  I_vote_lcapபெரியவா திருவடியே சரணம். !  I_voting_barபெரியவா திருவடியே சரணம். !  I_vote_rcap 
3 Posts - 15%
mohamed nizamudeen
பெரியவா திருவடியே சரணம். !  I_vote_lcapபெரியவா திருவடியே சரணம். !  I_voting_barபெரியவா திருவடியே சரணம். !  I_vote_rcap 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
பெரியவா திருவடியே சரணம். !  I_vote_lcapபெரியவா திருவடியே சரணம். !  I_voting_barபெரியவா திருவடியே சரணம். !  I_vote_rcap 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெரியவா திருவடியே சரணம். !  I_vote_lcapபெரியவா திருவடியே சரணம். !  I_voting_barபெரியவா திருவடியே சரணம். !  I_vote_rcap 
139 Posts - 41%
ayyasamy ram
பெரியவா திருவடியே சரணம். !  I_vote_lcapபெரியவா திருவடியே சரணம். !  I_voting_barபெரியவா திருவடியே சரணம். !  I_vote_rcap 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
பெரியவா திருவடியே சரணம். !  I_vote_lcapபெரியவா திருவடியே சரணம். !  I_voting_barபெரியவா திருவடியே சரணம். !  I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
பெரியவா திருவடியே சரணம். !  I_vote_lcapபெரியவா திருவடியே சரணம். !  I_voting_barபெரியவா திருவடியே சரணம். !  I_vote_rcap 
17 Posts - 5%
Rathinavelu
பெரியவா திருவடியே சரணம். !  I_vote_lcapபெரியவா திருவடியே சரணம். !  I_voting_barபெரியவா திருவடியே சரணம். !  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
பெரியவா திருவடியே சரணம். !  I_vote_lcapபெரியவா திருவடியே சரணம். !  I_voting_barபெரியவா திருவடியே சரணம். !  I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பெரியவா திருவடியே சரணம். !  I_vote_lcapபெரியவா திருவடியே சரணம். !  I_voting_barபெரியவா திருவடியே சரணம். !  I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
பெரியவா திருவடியே சரணம். !  I_vote_lcapபெரியவா திருவடியே சரணம். !  I_voting_barபெரியவா திருவடியே சரணம். !  I_vote_rcap 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
பெரியவா திருவடியே சரணம். !  I_vote_lcapபெரியவா திருவடியே சரணம். !  I_voting_barபெரியவா திருவடியே சரணம். !  I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
பெரியவா திருவடியே சரணம். !  I_vote_lcapபெரியவா திருவடியே சரணம். !  I_voting_barபெரியவா திருவடியே சரணம். !  I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியவா திருவடியே சரணம். !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 10, 2019 10:21 pm

பெரியவா திருவடியே சரணம். ! 

காஞ்சி மகாபெரியவரின் அருளாசி வாங்க எத்தனை எத்தனையோ பேர், பல இடங்களிலும் இருந்து வருவார்கள்.

அதேசமயம், அவருடனேயே இருந்து அவரை எப்போதும் தரிசிக்கும் பாக்யம் பெற்றவர்கள் பெரும்பாலும் அவரிடம் எதுவும் வேண்டிக்கொள்வதே  கிடையாது. காரணம், அந்த மகானுடைய பார்வை பட்டாலே தங்களுடைய எல்லா பிரச்னைகளும் தீர்ந்துவிடும்.  தேவைகள் எல்லாம் ஈடேறிவிடும் என்ற நம்பிக்கைதான்.

இந்த நம்பிக்கை, மடத்தின் தொண்டர்கள் மட்டுமின்றி, சாதாரணப் பணியாளர்களுக்கும் இருந்தது.  தன்மேல் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை தயாபரனான மகாபெரியவாளுக்கும் தெரிந்திருந்தது என்பதை உணர்த்துவது மாதிரியான ஒரு சம்பவம் இது.

ஒரு நாள், அதிகாலை வேளை, காஞ்சி மடத்தில் அவ்வப்போது சொல்லப்படும் கூலி வேலைகளைச் செய்யும் பெண்மணி ஒருவர், தன் கர்ப்பிணி மகளுடன் மடத்துக்கு வந்திருந்தார். பார்த்துக்கொள்ள வீட்டில் யாரும் இல்லாததால், அவளை விட்டுவிட்டு வரமுடியாத சூழலில், தான் வேலைபார்க்கும் இடத்துக்கே அழைத்து வந்திருந்தார்.மகளை ஒரு ஓரமாக உட்காரச் சொல்லிவிட்டு, தனக்குத் தரப்பட்ட வேலையைச் செய்து கொண்டிருந்தார், அந்தப் பெண்மணி.

வழக்கமான இடத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு தரிசனம் தந்து கொண்டிருந்த மகாபெரியவா, திடீரென்று தன் அணுக்கத் தொண்டர் ஒருவரை அழைத்தார். "மடத்துல அந்த மூலையில ஒரு கர்ப்பிணி உட்கார்ந்துண்டு இருக்காளான்னு பாரு.  இருந்தா, அவளை அழைச்சுண்டு வா!" சொன்னார்.

மகாபெரியவா சொன்ன இடத்துக்குச் சென்ற தொண்டர் அங்கே அமர்ந்திருந்த கர்ப்பிணிப் பெண்ணை ஆசார்யா அழைப்பதாகச் சொல்ல, அந்தப் பெண், தன் தாயாரை அழைக்க, உடனே அங்கே வந்து அவளை அழைத்துக் கொண்டு பெரியவா முன் வந்து நின்றார், அந்தப் பணிப்பெண்.

பெரியவாள் அவர்களிடம் ஜாடை காட்டி, என்ன விஷயம்? என்று விசாரித்தார்.

தொடரும்....




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 10, 2019 10:22 pm

அதைப்  புரிந்து கொண்ட அந்தப் பணிப்பெண், "சாமி, இவை என் மக: குழந்தை உண்டாகி இருக்கா.  அவளைப் பார்த்துக்க யாரும் இல்லாததால நான்தான் கூட்டிட்டு வந்து அங்கே உட்காரச் சொன்னேன். சாமிக்கு இஷ்டம் இல்லைன்னா போகச் சொல்லிடறேங்க....!" என்று தயங்கித் தயங்கிச் சொன்னாள்.


"வேண்டாம் அவ அங்கே உட்கார வேண்டாம். அதோ அங்கே உட்காரச் சொல்லு!" நேராக இருந்த ஓர் இடத்தைக் காட்டினார், ஆசார்யா.


அந்தப் பெண்மணியும் மகாபெரியவாளை வணங்கிவிட்டு, மகளை அங்கே உட்கார வைத்துவிட்டு தன் வேலையைப் பார்க்க போய்விட்டார்.


கொஞ்ச நேரம் கழித்து அங்கே வந்தார் ஒரு பக்தர். மகாபெரியவாளை நமஸ்கரித்தார். அவர் கையில் ஒரு தூக்கு இருந்தது. "பெரியவா நமஸ்காரம். ஆத்துலேர்ந்து நானே கைப்பட பலகாரம் செஞ்சு கொண்டு வந்திருக்கேன்.  மடத்துல வேதம் படிக்கறவாளுக்குத் தரலாம்னு எண்ணம். நீங்க அனுமதிச்சா.....!" அவர் வார்த்தைகளை முடிக்கும் முன்பே, கையைத் தூக்கி ஓர் இடத்தை சுட்டிக்காட்டினார், மகாபெரியவா.


"அதோ உக்கார்ந்திருக்காளே அவகிட்டே குடுத்துட்டு!" பெரியவா கட்டளைப்படி பலகாரத் தூக்கு கர்ப்பிணிப்பெண் கைக்கு வந்தது.


மேலும் கொஞ்ச நேரம் கழித்து ஒரு பக்தர் கொண்டு வந்த பழக்கூடையும் அப்படியே அந்தப் பெண்ணிடம் வந்து சேர்ந்தது.  மேலும் கொஞ்ச நேரத்திற்குப் பிறகு மடத்துக்கு வழக்கமாக வரும் நடுத்தர வர்க்கத்து பக்தர் ஒருவர் வந்தார்.


அவரை ஆசிர்வதித்த மகாபெரியவர், "மடத்துக்கு கைங்கர்யம் பண்ணனும்னு ஏதோ ரொக்கத்தொகை கொண்டுவந்திருக்கே போல இருக்கே!" என்றார்.


தொடரும்.....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 10, 2019 10:22 pm

அந்த பக்தருக்கு ஆச்சர்யம்! "ஆமாம் பெரியவா,  மாசாமாசம் செலவு போக மீதமாகற காசுல கொஞ்சத்தை ஸ்ரீமடத்துல சேர்ப்பிக்க வேண்டும் என்று எடுத்துவைத்துக் கொண்டிருந்தேன்.  கிட்டத்தட்ட ஒரு வருஷம் சேர்த்த பணம். அதைத்தான் கொண்டு வந்திருக்கேன்!" சொன்னார், அவர்.


"அந்தத் தொகையை அதோ அந்தப் பொண்ணுகிட்டே குடுத்துட்டு!" ஆசார்யாளின் ஆணை நிறைவேற்றப்பட்டது.


இதெல்லாம் ஏன் எல்லோரும் என்னிடம் தருகிறார்கள் என்றெல்லாம் புரியாமல் அந்த கர்ப்பிணிப் பெண் திகைத்துக் கொண்டிருக்க, சரியாக அதே நேரத்தில் வேலையை முடித்துவிட்டு மகளை அழைத்துக் கொண்டுபோக வந்த அவளது அம்மா, ஆச்சர்யத்தில் திகைத்துப் போனார்.  நேராக மகாபெரியவா முன் வந்தார்.


"சாமீ...முழுகாம இருக்கிற என் பொண்ணுக்கு வாய்க்கு ருசியாக பலகாரம் செஞ்சுதரணம்னு   ஆசை இருந்தாலும், நாம இருக்கிற நிலையில பிரசவச் செலவுக்கே காசு தேடணும். இதுல பலகாரமெல்லாம் எப்படி செஞ்சு குடுக்கறதுன்னு மனசுக்குள்ள குமைஞ்சுகிட்டு இருந்தேன்க.  என் மகளும் கஷ்டம் தெரிஞ்சு மனசுல ஆசை இருந்தும் வாய்விட்டு எதையும் கேட்கலீங்க.  இங்கே வந்து உங்களை தரிசிச்சதும் எப்படியோ எங்க மனசுல இருந்ததெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு அவ வாய்க்கு ருசியா சாப்பிட பலகாரம், பழம் எல்லாம் கிடைக்கச் செஞ்சுட்டீங்க.  அதோட பிரசவச் செலவுக்கும் காசு கிடைக்க வைச்சுட்டீங்க சாமீ...எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலீங்க!" தழுதழுக்க சொல்லி அவர் திருவடி முன் விழுந்தார்.


"குழந்தை க்ஷேமமா பிறக்கும். தாயும் சேயும் நன்னா இருப்பா!" ஆசிர்வதித்த மகாபெரியவாளின் குரல் அந்தக் கடவுளின் குரலாகவே ஒலித்தது.


ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக