புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் சினிமாவின் முதல் கவர்ச்சிக்கன்னி I_vote_lcapதமிழ் சினிமாவின் முதல் கவர்ச்சிக்கன்னி I_voting_barதமிழ் சினிமாவின் முதல் கவர்ச்சிக்கன்னி I_vote_rcap 
30 Posts - 88%
heezulia
தமிழ் சினிமாவின் முதல் கவர்ச்சிக்கன்னி I_vote_lcapதமிழ் சினிமாவின் முதல் கவர்ச்சிக்கன்னி I_voting_barதமிழ் சினிமாவின் முதல் கவர்ச்சிக்கன்னி I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
தமிழ் சினிமாவின் முதல் கவர்ச்சிக்கன்னி I_vote_lcapதமிழ் சினிமாவின் முதல் கவர்ச்சிக்கன்னி I_voting_barதமிழ் சினிமாவின் முதல் கவர்ச்சிக்கன்னி I_vote_rcap 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் சினிமாவின் முதல் கவர்ச்சிக்கன்னி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 09, 2019 3:04 pm

தமிழ் சினிமாவின் முதல் கவர்ச்சிக்கன்னி 2
-
மின்னுவதெல்லாம் பொன்தான்- 26
-
1937 ம் ஆண்டு மாடகன் டன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம்
சதி அகல்யா என்ற படத்தை தயாரிக்க, அதனை
எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்க இருந்தார். அப்போது ஹாலிவுட்டில்
இளம் ஹீரோயின்கள் கவர்ச்சியாக நடித்த படங்கள் தொடர்ச்சியாக
வந்து கொண்டிருந்த நேரம்.

அதுமாதிரி ஒரு படத்தை தமிழில் உருவாக்க விரும்பினார்கள்
இருவரும்.

ஆனால் அதற்கு ஏற்ற மாதிரியான ஹீரோயின்கள் தமிழில்
இல்லை. இங்குள்ளவர்கள் 40 வயதை கடந்து 18 முழம் சேலை
கட்டி நடித்துக் கொண்டிருந்தனர். ஹீரோக்களை தொடாமல்,
அவர்கள் தொட்டுவிடாமல் நடித்துக் கொண்டிருந்தார்கள்.
இந்தத் திட்டத்தை கைவிட்டு விடலாமா என்கிற நிலை.

அப்போது ஒரு வேலையாக இலங்கை சென்றிருந்த
எல்லிஸ் ஆர் டங்கனுக்கு அங்கு ஆடல், பாடலில் பிரபலமாகி
இருந்த தவமணி தேவி பற்றிய தகவல் கிடைத்தது.

அப்போது தவமணி தேவிக்கு 14 வயது. பள்ளியில் படித்துக்
கொண்டிருந் தார். நேராக பள்ளிக்கே சென்ற டங்கன்,
‘‘தமிழ் படத்தில் நடிக்கிறாயா? நடிக்க விருப்பம் இருந்தால்
உங்கள் வீட்டுக்கு வந்து பெற்றோருடன் பேசுகிறேன்”என்றார்.

தவமணிதேவி வெட்கத்துடன், “எதுவாக இருந்தாலும் வீட்டில்
பேசுங்கள்” என்று கூறிவிட்டார்.

மறுநாளே டங்கன் தவமணி தேவி வீட்டுக்குச் சென்று
பெற்றோர்களை கன்வின்ஸ் செய்து ஒப்புதல் வாங்கி சென்னை
திரும்பினார். படத்துக்கான முன் ஏற்பாடுகளைச் செய்து விட்டு
தவமணி தேவிக்கும் அவரது பெற்றோர்களுக்கு தயாரிப்பு
நிறுவனமே விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்து வரவழைத்தது.

முதன் முதலில் சினிமாவில் நடிக்க விமானத்தில் பறந்து வந்த
நடிகை தவமணி தேவி.

படத்தின் அறிமுகத்திற்காக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்
டி.ஆர்.சுந்தரம். பேட்டியின் முடிவில், வந்திருந்த
பத்திரிகையாளர்களிடம் ஒரு போட்டோவைக் கொடுத்து, இவர்தான்
படத்தின் நாயகி என்றார்.

படத்தைப் பார்த்த பத்திரிகையாளர்களுக்கு அதிர்ச்சி.
முகமெல்லாம் வியர்த்துக் கொட்டியது. அதற்கு முன் அவர்கள்
அப்படியொரு படத்தைப் பார்த் திருக்க மாட்டார்கள்.

ஆம்; அந்தப் படத்தில் தவமணி தேவி நீச்சல் உடையில்
இருந்தார். அந்தப் படத்தை சில பத்திரிகைகள் கொஞ்சம்
மறைத்தும், சில மறைக்காமல் அப்படியேவும் வெளியிட்டன.

பிரியா வாரியரின் கண் சிமிட்டல் மாதிரி அந்த ஒரு
புகைப்படம்தான் தவமணி தேவியை நட்சத்திரமாக்கியது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 09, 2019 3:04 pm



‘சதி அகல்யா’ வெளிவந்தது, தவமணி தேவி அரைக்கால் டவுசர்,
ஆண்களின் சட்டை என மேற்கத்திய பாணியில் உடை அணிந்து
நடித்திருந்தார். படம் 100 நாளைக் கடந்து ஹவுஸ்புல்லாக ஓடியது.

அதன் பிறகு வெளிவந்த ‘வனமோகினி’ படத்தில்
லேடி டார்ஜானாக புலித்தோல் உடை அணிந்து நடித்து
பரபரப்பாக்கினார். இந்தப் படமும் வெற்றி பெற்றது.

அது ‘ஹெர் ஜங்கிள் லவ்’ என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக்.
தவமணிதேவி தமிழ் சினிமாவில் முதல் கவர்ச்சிக் கன்னியாக
வலம் வந்தார்.

தவமணிதேவி சாதாரண பெண் அல்ல. லண்டன் கேம்பிரிட்ஜ்
பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். பரதநாட்டியத்திலிருந்து
துப்பாக்கி சுடுதல் வரை அனைத்தும் கற்றவர்.

அவரது தந்தை கதிரேச சுப்பிரமணியம் இலங்கை உயர்நீதி ம
ன்றத்தின் நீதிபதி. இதனால் இங்குள்ள நடிகர்கள் அவருடன்
நெருக்கமாக நடிக்கவே பயந்தார்கள். தியாகராஜ பாகவதர்தான்
அன்றைக்கு சூப்பர் ஸ்டார்.

அவர் ஒரு படத்துக்கு 5 ஆயிரம் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த
நேரத்தில் தவமணிதேவி 16 ஆயிரம் சம்பளம் வாங்கினார்.
இன்றைக்கு 16 கோடிக்கு சமம்.

இவ்வளவு செல்வாக்கோடு இருந்த தவமணிதேவி நடித்தது
பத்துக்கும் குறைவான படங்கள்தான். இதில் ‘சதி அகல்யா’,
‘வனமோகினி’, ‘ராஜகுமாரி’, ‘ஆரவல்லி சூரவல்லி’ ஆகியவை
பெரிய வெற்றிப் படங்கள்.

‘நாட்டிய ராணி’ மட்டும் சுமாரான வெற்றி பெற்ற படம்.
அதன்பிறகு அவர் ஏன் நடிக்கவில்லை என்று தெரியவில்லை.

தவமணிதேவி தன் உடல் கவர்ச்சியால் ரசிகர்களை ஈர்த்துக்
கொண்டிருந்த நேரத்தில் அறிமுகமான டி.ஆர்.ராஜகுமாரி
தன் கண் அசைவால் ரசிகர்களைத் தன் பக்கம் இழுத்தார்.

அவரின் இலைமறை காயான கவர்ச்சியை மக்கள் ரசிக்கத்
தொடங்கவே தவமணிதேவியை மறந்து விட்டார்கள் என்று
கூறப்படுவதுண்டு.

1956ம் ஆண்டு உறவினரை திருமணம் செய்து கொண்டு
செட்டிலான தவமணிதேவி தனது 76வது வயதில் 2001ம் ஆண்டு
காலமானார்.
-
-------------------------------------------
பைம்பொழில் மீரான்
நன்றி-வண்ணத்திரை



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக