ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக மக்களை, 'மக்கு'கள் என நினைக்கிறாரா?: பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி, தடாலடி

2 posters

Go down

தமிழக மக்களை, 'மக்கு'கள் என நினைக்கிறாரா?: பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி, தடாலடி Empty தமிழக மக்களை, 'மக்கு'கள் என நினைக்கிறாரா?: பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி, தடாலடி

Post by ayyasamy ram Sun Mar 31, 2019 8:58 am

சோனியா, ராகுல், சிதம்பரம், அவரது மனைவி நளினி,
மகன் கார்த்தி, சசிதரூர் என ஊழல் குற்றச்சாட்டிற்கு
உள்ளானவர்களை, பா.ஜ., அரசு நீதிமன்றங்களில் ஏற,
இறங்க வைத்திருக்கிறது.

அகஸ்டா ஊழலில் சோனியா விரைவில் சிறைக்கு செல்வது
உறுதி.

கார்த்தி சிதம்பரம், எந்த தைரியத்தில், தேர்தலில்
போட்டியிடுகிறார் என தெரியவில்லை. தமிழ் மக்களை,
'மக்கு'கள் என நினைக்கிறாரா. 'பணம் கொடுத்தால் ஓட்டு
போட்டு விடுவர்' என நினைக்கிறாரா. கார்த்தி சிதம்பரம்

வெற்றி பெற்றால், தமிழகத்தின் மானம் போய் விடும்
எனகிறார் பா.ஜ.,மூத்த தலைவர், சுப்பிரமணியசாமி,

செயற்கைக் கோள்களை சுட்டு வீழ்த்தும் ஏவுகணை
சோதனையில், இந்தியா வெற்றி பெற்றிருக்கிறதே?

விண்வெளித் துறையில், இந்தியா, சிறப்பான முன்னேற்றத்தை
எட்டியிருக்கிறது. இத்தகைய சாமர்த்தியம், அமெரிக்கா, சீனா,
ரஷ்யாவிடம் தான் இருந்தது. இப்போது, இந்தியாவிடமும்
உள்ளது. இதனால், இந்தியாவை கண்டு, பாகிஸ்தான் நடுங்கி
கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை.

பிரதமர் மோடி, இத்தகைய விஷயங்களுக்கு முன்னுரிமை
அளிப்பது குறித்து...?

இந்திய விண்வெளித் துறை, 'இஸ்ரோ' வீரர்களை உற்சாக மூட்ட,
பிரதமர் மோடிக்கு தைரியம் இருந்தது. விண்வெளி வீரர்களை
மோடி உற்சாகப்படுத்தி, 'இத்தகைய காரியங்களில் ஈடுபடுங்கள்.
நான், உங்கள் பின் இருக்கிறேன்' என, ஊக்கமளித்தார்.

ஆனால், காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி
ஆட்சியில், இதுபோன்ற விஷயங்களில், அக்கறை காட்டவில்லை;
தைரியமும் இல்லை. போர் வந்து விடும் என பயந்து,
நம் வீரர்களை அமுக்கி வைத்தனர். ஆனால், பிரதமர் மோடி
உற்சாகம் கொடுத்தார்.

தேர்தல் நேரத்தில், பா.ஜ., இத்தகைய விஷயங்களை,
கையில் எடுப்பதாக குற்றம் சாட்டப்படுகிறதே?

தேர்தல் கமிஷன் கூறி, மத்திய அரசு, இதை செய்ததா?
30 சேட்டிலைட்களை ஒரே ராக்கெட்டில், இந்தியா அனுப்பிக்
காட்டியது. அதை மறந்து விட்டனரா?

அப்போது, தேர்தல் நேரம் இல்லையே? மோடி பிரதமரானதும்,
பல காரியங்களை செய்துள்ளார். ஆனால், எதிர்க்கட்சிகள்
அதை மூடி முறைத்து, துர்பிரசாரம் செய்கின்றன.

ரபேல் போர் விமானங்கள் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளதாக,
காங்., தலைவர் ராகுல் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறாரே?

'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை முறைகேடு தொடர்பாக,
காங்., தலைவர்கள் மீது குற்ற வழக்கு தொடர்ந்தேன்.
அந்த வழக்குகளில், காங்., தலைவர் சோனியா, ராகுலுக்கு
எதிராக, 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது. தற்போது அவர்கள்,
ஜாமினில் உள்ளனர்.

அதுபோல முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம்,
சசிதரூருக்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்துள்ளேன். அதுபோல,
ரபேல் விவகாரம் தொடர்பாக, ஆதாரங்கள் இருந்தால், ராகுலும்
வழக்கு தொடர வேண்டியது தானே!
அவரிடம் எந்த ஆதாரங்களும் இல்லை என்பது தான் உண்மை.

ஐந்தாண்டு கால மத்திய, பா.ஜ., ஆட்சி குறித்து?
-
பொருளாதாரத்தில், மத்திய அரசு தோல்வியுற்றுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை நீக்க வேண்டும்.
அவரை மீண்டும் நிதியமைச்சராக்க கூடாது.

வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் நாடு பின்தங்கியருப்பதை,
பிரதமர் மோடியிடம், நானே தெரிவித்திருக்கிறேன். அதே நேரம்,
பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்க, பிரதமர் மோடியால்
மட்டுமே முடியும்.

காங்., அரசால் பதிலடி கொடுக்க முடியாது. அவர்களுக்கும்,
பாகிஸ்தானுக்கும் ரகசிய ஒப்பந்தம் உள்ளது.

ஊழல் ஒழிப்பில், பா.ஜ., அரசு எப்படி செயல்பட்டு உள்ளது?
-
ஊழலை ஒழிப்பதில் பிரதமர் மோடி சிறப்பான நடவடிக்கைகளை
எடுத்திருக்கிறார். இதுவரை இருந்த சோனியா, ராகுல், சிதம்பரம்,
அவரது மனைவி நளினி, மகன் கார்த்தி, சசிதரூர் என ஊழல்
குற்றச்சாட்டிற்கு உள்ளானவர்களை, பா.ஜ., அரசு நீதிமன்றங்களில்
ஏற, இறங்க வைத்திருக்கிறது.

அகஸ்டா ஊழலில், சோனியா விரைவில் சிறைக்கு செல்வது
உறுதி.கார்த்தி சிதம்பரம், எந்த தைரியத்தில், தேர்தலில்
போட்டியிடுகிறார் என தெரியவில்லை. தமிழ் மக்களை, 'மக்கு'கள்
என நினைக்கிறாரா? 'பணம் கொடுத்தால் ஓட்டு போட்டு விடுவர்'
என நினைக்கிறாரா? கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றால்,
தமிழகத்தின் மானம் போய் விடும்.

அனில் அம்பானி போன்றோருக்கு ஆதரவாக, மோடி செயல்
படுகிறார் என ராகுல் குற்றம் சாட்டுகிறாரே?

முதலில் என் குற்றச்சாட்டுகளுக்கு ராகுல் பதில் கொடுப்பாரா?
கேம்பிரிட்ஜ் பல்கலையில், பொய் சான்றிதழ் கொடுத்து, பட்டம்
பெற்றது, என் முதல் குற்றச்சாட்டு.

நான்கு பாஸ்போர்ட்டுகள், ராகுலிடம் உள்ளன. இது, இரண்டாவது
குற்றச்சாட்டு. முதலில் இதற்கு, ராகுல் பதிலளிக்கட்டும்.

தமிழகத்தில், அ.தி.மு.க.,வுடன், பா.ஜ., கூட்டணி வைத்துள்ளதே?
-
தமிழகத்தில், பா.ஜ., தனித்து போட்டியிடாததில் எனக்கு
வருத்தம் உண்டு. ஆனால், மாநில தலைமைக்கு அந்த எண்ணம்
இல்லை. அவருக்கு மட்டும் சீட் பெற்று விட வேண்டும் என்ற
எண்ணமே உள்ளது.

இந்த தேர்தலில் நீங்கள் போட்டியிடவில்லையே?
-
தற்போது, ராஜ்யசபா நியமன, எம்.பி.,யாக உள்ளேன்.
பதவி முடிய, மூன்றாண்டுகள் உள்ளன. இருப்பினும் கூட,
டார்ஜிலிங் உட்பட, எட்டு லோக்சபா தொகுதிகளில், எனக்கு சீட்
கொடுக்க வேண்டும் என, அந்தந்த தொகுதி தொண்டர்கள்,
பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷாவிடம் வலியுறுத்தினர்.

என்னிடம் கடிதம் வாங்கி வரும்படி, அவர்களை அமித்ஷா
அனுப்பி விட்டார். நான் ஆறு முறை, வெற்றி பெற்று,
பார்லிமென்ட்டிற்கு சென்றிருக்கிறேன்.

தேர்தல் பிரசாரத்திற்கு செல்வீர்களா?
-
நான் நினைப்பவர்களுக்கு மட்டும், பிரசாரத்திற்கு செல்வேன்.
கட்சி தலைமை கூறினால் கூட, செல்ல மாட்டேன். எனக்கு உத்தரவிடும்
அதிகாரம், கட்சிக்கு இல்லை. ஏனெனில், என் சீனியாரிட்டி அப்படி!
-
-------------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழக மக்களை, 'மக்கு'கள் என நினைக்கிறாரா?: பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி, தடாலடி Empty Re: தமிழக மக்களை, 'மக்கு'கள் என நினைக்கிறாரா?: பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி, தடாலடி

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Mar 31, 2019 9:29 am

இவர் பேச்சு கோமாளித்தனம்
உள்ளது. தமிழர்களை இவர்
எப்போதும் முட்டாள்கள் என்று
கூறியுள்ளார். இவர் பெரிய
அறிவாளி என்ற மமதை.
இவர் கூற்றை யாரும் பெரிது
படுத்த வேண்டாம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum