புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து!  I_vote_lcapமின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து!  I_voting_barமின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து!  I_vote_rcap 
11 Posts - 46%
ayyasamy ram
மின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து!  I_vote_lcapமின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து!  I_voting_barமின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து!  I_vote_rcap 
10 Posts - 42%
mohamed nizamudeen
மின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து!  I_vote_lcapமின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து!  I_voting_barமின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து!  I_vote_rcap 
2 Posts - 8%
VENKUSADAS
மின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து!  I_vote_lcapமின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து!  I_voting_barமின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து!  I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து!  I_vote_lcapமின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து!  I_voting_barமின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து!  I_vote_rcap 
11 Posts - 46%
ayyasamy ram
மின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து!  I_vote_lcapமின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து!  I_voting_barமின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து!  I_vote_rcap 
10 Posts - 42%
mohamed nizamudeen
மின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து!  I_vote_lcapமின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து!  I_voting_barமின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து!  I_vote_rcap 
2 Posts - 8%
VENKUSADAS
மின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து!  I_vote_lcapமின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து!  I_voting_barமின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து!  I_vote_rcap 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து!


   
   

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 29, 2019 5:19 pm

கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்திருக்கும் சமவெளி. ஆங்காங்கே திட்டுகளாகத் தனித்து நிற்கும் மணல் குன்றுகள். தொட்டுச் செல்லும் காற்று விட்டுச்சென்ற அடையாளங்களாய் மண்ணில் விழுந்த கீறல்கள். மஞ்சள் கற்களை அடுக்கித் தன் நிலத்தின் நிறத்திற்கேற்பக் கட்டிக்கொண்ட வீடுகள். தலைப்பாகையும் குல்லாவுமாக நீண்ட அங்கியணிந்து அலைந்துகொண்டிருந்த பாலை நிலவாசிகள். அவர்கள் ஓட்டிச்சென்ற கால்நடைகள். அந்தக் கால்நடைகளின் மேல் நின்று உன்னிப் பூச்சிகளைத் தின்றுகொண்டிருந்தன சில பறவைகள். மரணித்த மாடுகளின் சடலங்களைத் தின்று சுத்தம் செய்துகொண்டிருந்தன பாறுகளும் காகங்களும். பாலை நிலச் சூரியோதயம் எத்தனை அழகானது என்பதை அன்றுதான் அறிந்துகொண்டேன்.

நிலமெங்கும் பூசிய தங்க முலாமாய் மின்னிக்கொண்டிருந்த பரந்த மணல் பரப்புக்கு மத்தியில் எழுந்துவந்த சூரியனின் முழுச் சூட்டையும் உடல் உணர்ந்து அடங்கியது. ராஜஸ்தானின் மாநில மலரான ரொஹிடாவை ரசித்துக் கொண்டே திரும்புகையில் சற்றே தள்ளி வளர்ந்திருந்த எருக்கன் செடியின் பூவை ருசித்தபடி அதன்மேல் நின்றிருந்தது வெண்காது சின்னான்.

நன்றி
விகடன்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 29, 2019 5:20 pm

மஞ்சள் கற்களுக்கும் நீண்ட அங்கிக்கும் தலைப்பாகைகளுக்கும் இடையே ஓர் ஆழமான தொடர்புண்டு. அது அனைத்துமே அந்நிலத்தின் அமைப்பைத் தாக்குப்பிடித்து வாழ்வதற்கான ஓர் ஏற்பாடுதான். மஞ்சள் கற்கள். நம்மூர் செங்கற்களைப் போலத்தான். ஆனால், ஒரு வித்தியாசம். அவற்றால் கட்டப்பட்டும் கட்டடங்களைக் காலி செய்யும்போது அவற்றை வெறுமனே விட்டுவிட்டு வரமாட்டார்கள். கட்டடத்தை இடித்துத் தகர்த்துவிட்டுத்தான் கிளம்புவார்கள். அந்தக் கற்கள் முழுக்க முழுக்க அங்குக் கிடைக்கும் யெல்லோ சாண்ட் (Yellow sand) என்ற மண் வகையில் செய்யப்படுவது. அதை இடித்துவிட்டுச் சென்றபின் காற்று தன் வேலையைத் தொடங்கிவிடும். காற்றின் வேகத்தில் சிறிது சிறிதாக அரிக்கப்படும் கற்கள் மண்ணாகும், பிற்பாடு மணலாகும். தன் நிலத்திலிருந்து எடுத்ததை அதனிடமே திருப்பிக் கொடுக்கும் பக்குவமான கட்டமைப்பு.



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 29, 2019 5:22 pm

மின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து!  Ql6qnZtUTQOItTlWZDJt+Screenshot_20190329-154125

ஆண் கறுப்பு வெள்ளை புதர் சிட்டு (Pied Bush Chat-Male)





எந்த நிலப்பகுதியாக இருந்தாலும் புள்ளினங்களுக்கு மட்டும் பஞ்சமே இருப்பதில்லை. பாலைவனத்தில்கூட எத்தனை வகையான சிட்டுகள், சின்னான்கள். அது ராஜஸ்தானிய மொழியில் `கேர்' என்றழைக்கப்படும் தாவரம். அதில் கிடைக்கும் சின்னஞ்சிறு கனிகளைத் தின்னக் கூடியிருந்த புள்ளினங்களின் எண்ணிக்கை செடிக்குச் சுமார் ஐம்பது முதல் அறுபது வரை இருக்கலாம். அதிலும் செம்மீசைச் சின்னான்களும், வெண்காது சின்னான்களும் அதிகம். வெண்தொண்டைச் சின்னானை கேர் செடியில் பார்த்ததைவிட எருகஞ்செடியில்தான் அங்கு அதிகம் பார்க்கமுடிந்தது. பூஞ்சைப் பருந்து, நெடுங்கால் பருந்து என்று தார் நிலத்தில் வேட்டையாடிப் பறவைகளுக்கும் பஞ்சமில்லாமல் நிரம்பியிருந்தது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 29, 2019 5:23 pm

மின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து!  Ql6qnZtUTQOItTlWZDJt+Screenshot_20190329-154125

ஆண் கறுப்பு வெள்ளை புதர் சிட்டு (Pied Bush Chat-Male)





எந்த நிலப்பகுதியாக இருந்தாலும் புள்ளினங்களுக்கு மட்டும் பஞ்சமே இருப்பதில்லை. பாலைவனத்தில்கூட எத்தனை வகையான சிட்டுகள், சின்னான்கள். அது ராஜஸ்தானிய மொழியில் `கேர்' என்றழைக்கப்படும் தாவரம். அதில் கிடைக்கும் சின்னஞ்சிறு கனிகளைத் தின்னக் கூடியிருந்த புள்ளினங்களின் எண்ணிக்கை செடிக்குச் சுமார் ஐம்பது முதல் அறுபது வரை இருக்கலாம். அதிலும் செம்மீசைச் சின்னான்களும், வெண்காது சின்னான்களும் அதிகம். வெண்தொண்டைச் சின்னானை கேர் செடியில் பார்த்ததைவிட எருகஞ்செடியில்தான் அங்கு அதிகம் பார்க்கமுடிந்தது. பூஞ்சைப் பருந்து, நெடுங்கால் பருந்து என்று தார் நிலத்தில் வேட்டையாடிப் பறவைகளுக்கும் பஞ்சமில்லாமல் நிரம்பியிருந்தது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 29, 2019 5:25 pm

ராஜஸ்தானின் ஜெய்சல்மரில் அமைந்திருக்கும் சின்னஞ்சிறிய கிராமம்தான் `சம்'. அங்கு வாழும் மக்களைவிட அங்கு வருகைதரும் மக்கள் கூட்டம்தான் எண்ணிலடங்காது. அத்தனை மக்கள் அங்கு கூடுவதற்குக் காரணம் அங்கிருக்கும் பாலைவனத் தேசியப் பூங்கா (Desert National Park).

அங்கு வாழும் மக்களைவிட அவர்களின் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகம். பாலை நிலத்தில் கூட்டம் கூட்டமாகச் செல்லும் ஒட்டகங்களின் எண்ணிக்கையும் அவற்றை ஓட்டிச் செல்லும் மனிதர்களையும் பார்த்தால் நபருக்குச் சுமார் மூன்று முதல் நான்கு ஒட்டகங்கள் இருக்கும். இவைபோக யாராலும் வளர்க்கப்படாமல் வனத்துக்குள் சுயமாக வாழும் ஒட்டகங்களும் உண்டு. மாடுகளின் எண்ணிக்கைக்கும் சற்றும் குறைவில்லை

நபருக்குக் குறைந்தபட்சம் இரண்டு மாடுகள். கால்நடைகளின் அதீத எண்ணிக்கை பாலை நிலத்திலிருக்கும் மேய்ச்சல் நிலங்களை அதிகம் ஆக்கிரமித்துவிடுவதால், அப்பகுதி வன விலங்குகளின் மேய்ச்சல்களுக்குப் போதுமான அளவுக்குக் கிடைப்பதில்லை. புதர்க்காடுகள் இல்லையேல் பறவைகள் இரைதேடவும் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்யவும் இடமிருக்காது. வேட்டையாடிப் பறவைகள், புள்ளினங்கள், ஊனுண்ணிகள் என்று பாலையும் பறவைக்குப் பஞ்சமில்லாத சொர்க்கம்தான். அந்தச் சொர்க்கத்தின் உயிராதாரம் அங்கு வாழும் உயிரினங்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 29, 2019 5:27 pm

மின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து!  VUt2XWeNS220mJSsAADQ+Screenshot_20190329-154243


இத்தனை பறவைகளுக்கு வாழிடமாக விளங்கும் இந்த நிலப்பகுதி இன்னொன்றுக்கும் பெயர் போனது. கான மயில்கள். இந்தியாவிலேயே ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா போன்ற வெகுசில மாநிலங்களில் மட்டுமே அதுவும் மிகக் குறைவான எண்ணிக்கையில் வாழ்கின்றன. அதிலும் ராஜஸ்தானில் அமைந்துள்ள இந்தப் பாலைவனத் தேசியப் பூங்காவில்தான் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் கான மயில்கள் வாழ்கின்றன. பெரிதாக ஒன்றுமில்லை, அங்கு வாழும் கான மயில்களின் எண்ணிக்கை சுமார் அறுபது முதல் எழுபது வரை இருக்கலாம் என்று கணக்கிட்டுள்ளனர் ஆய்வாளர்கள். ஒருகாலத்தில் ஆயிரக்கணக்கில் வாழ்ந்த பறவைகள், இன்று இந்தியாவில் அவற்றின் மொத்த எண்ணிக்கையே அதிகபட்சம் முந்நூறுதான் இருக்கும். அழிவின் விளிம்பில் சிவப்புப் பட்டியலில் இருக்கும் இந்தப் பறவையைப் பாதுகாக்கச் செய்ய வேண்டிய முயற்சிகளைத் தங்கள் சக்திக்கு மீறிச் செய்து கொண்டிருக்கிறார்கள் அங்கிருக்கும் ஆய்வாளர்கள்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 29, 2019 5:49 pm

ஒருகாலத்தில் ஆயிரக்கணக்கில் வாழ்ந்த பறவைகள், இன்று இந்தியாவில் அவற்றின் மொத்த எண்ணிக்கையே அதிகபட்சம் முந்நூறுதான் இருக்கும். அழிவின் விளிம்பில் சிவப்புப் பட்டியலில் இருக்கும் இந்தப் பறவையைப் பாதுகாக்கச் செய்ய வேண்டிய முயற்சிகளைத் தங்கள் சக்திக்கு மீறிச் செய்து கொண்டிருக்கிறார்கள் அங்கிருக்கும் ஆய்வாளர்கள். இருந்தாலும் அவற்றின் அழிவுக்கு வித்திடும் மேலும் பல சிக்கல்கள் இன்னும் களையப்படாமலே இருப்பதும் வேதனைக்குரிய உண்மை. ஆய்வாளர்களால் தீர்வை மட்டுமே சொல்லமுடியும். அதைச் செயல்படுத்த வேண்டியது அரசு மற்றும் மக்களின் கடமை.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 29, 2019 5:51 pm

மின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து!  PT8BSXnQQsOoV8140dpd+Screenshot_20190329-171429


மனித வளர்ச்சி மற்ற உயிரினங்களின் அழிவுக்கு எத்தனை வேகமாக வழிசெய்கிறது என்பதற்குக் கான மயில் ஓர் உதாரணம். கான மயில்களின் அழிவுக்கு வித்திடுவதில் முக்கியமானது அவற்றின் வாழிடத்துக்குள் ஊடுருவிச் செல்லும் மின்கம்பங்கள். கான மயில்கள் மட்டுமன்றி அங்கு வாழும் பல்வகைப் பறவைகள் மின்கம்பிகளில் மோதி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன. சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் அதிகரிக்கும் மின்கம்பங்கள் அந்தப் பகுதியில் வாழும் பறவைகளின் வாழ்வுக்கு ஆபத்தாக நிற்கின்றன
தார்ப் பாலைவனப் பகுதி முழுவதுமே பல்வேறு வகையான பறவையினங்கள் வாழ்கின்றன. அதேசமயம், அவற்றின் வாழிடம் முழுவதும் மின்கம்பங்களும் அதிகமாகிக் கொண்டே போகின்றன. மின்சாரத்திற்கான தேவை அதிகமாகும்போது அங்கு மின்கம்பங்களுக்கான வேலையும் அதிகமாகின்றது. ஆனால், பாதுகாக்கப்பட்ட நிலப்பகுதியாக ஓர் இனமே இல்லாமல் போகும் நிலையில் நிற்கும் கான மயில்களின் பாதுகாப்பான வாழிடமாகப் பார்க்கப்படுகின்ற பாலைவனத் தேசியப் பூங்காவிலும் இதே பார்வையைக் கடைபிடிப்பதை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 29, 2019 5:55 pm

ஒரு பறவை இறந்தாலும் அது மிகப்பெரிய ஆபத்தாகவே பார்க்கவேண்டிய சூழலில்தான் அவற்றின் தற்போதைய எண்ணிக்கை உள்ளது. இந்நிலையில் மின்கம்பங்களால் ஆண்டுக்கு 18 கான மயில்கள் மரணித்துக் கொண்டிருக்கின்றன.

மின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து!  Ne00GegS4S6e1XUC3Hg9+Screenshot_20190329-171509

மின் கம்பிகளில் மோதி இறந்த வெண்தலைப் பாறு (Eurasian Griffon vulture) மற்றும் அன்றில் அல்லது கறுப்பு அரிவாள் மூக்கன் (Red Naped Ibis)

பாலைவனத் தேசியப் பூங்காவிலும் அதைச் சுற்றியும் வாழும் பறவைகளுக்கு இதனால் ஏற்படும் பாதிப்பைக் கணக்கிட கான மயில்களை ஆய்வு செய்துவரும் மோஹிப் உத்தீன் என்பவர் ஓர் ஆய்வு மேற்கொண்டார். சுமார் நூறு கிலோமீட்டர் பரப்பளவுக்குள் மின்கம்பிகள் அமைந்திருக்கும் இடங்களிலும், அவை இல்லாத இடங்களிலும் பறவைகளின் இறப்பு விகிதத்தையும் காரணத்தையும் ஆய்வுசெய்தார். அவரைச் சந்தித்தபோது, ``மின்கம்பங்கள் பறவைகளின் இறப்புக்கு முக்கியக் காரணியாக விளங்குகின்றது. அதை நிவர்த்தி செய்ய முதலில் ஏற்படும் பாதிப்பைக் கணக்கிட வேண்டும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 29, 2019 5:57 pm

எந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது என்பதைத் தெரிந்துகொண்டால்தான் அதற்கான தீர்வைக் கண்டுபிடிக்க முடியும். ஒவ்வொரு மாதமாக நூறு கிலோமீட்டர் பரப்பளவுக்குள் மின்கம்பங்களாலும் இயற்கையாகவும் நிகழும் இறப்பு விகிதத்தைக் கணக்கெடுத்தேன். பறவைகள் எங்கெல்லாம் அவற்றோடு எதிர்ப்படுகின்றன என்பதைப் பதிவு செய்தேன். மின்கம்பங்கள் இல்லாத இடங்களில் மிக அரிதாகவே பறவைகளின் சடலங்கள் கிடைத்தன. ஆனால், மின்கம்பிகள் பயணிக்கும் இடங்களில் சுமார் 98 பறவைகளின் சடலங்கள் கிடைத்தன. அதில் ஒன்று கான மயிலுடைய சடலம். குளிர்காலங்களில் இங்கிருந்து வலசைச் செல்லும் பறவைகள் அதிகமென்பதால் அந்தச் சமயத்தில் அதிகமான மரணங்கள் நிகழ்கின்றன.



இதைச் சரிசெய்ய பறவைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத அவற்றுக்கு உகந்த கட்டுமானத்தை நாம் தோற்றுவிக்க வேண்டும். வளர்ச்சி தவிர்க்கமுடியாதது. அந்த வளர்ச்சி யாருக்குமே ஆபத்தானதாக இல்லாத வகையில் அமைவதற்கான தீர்வுகளைக் கண்டடைய முயன்று வருகிறோம். விரைவில் விடையைக் கண்டுபிடிப்போம்" என்று கூறினார்.



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக