ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:18 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Aug 18, 2024 11:34 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:20 pm

Top posting users this week
heezulia
கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 3 Poll_c10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 3 Poll_m10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 3 Poll_c10 
ayyasamy ram
கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 3 Poll_c10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 3 Poll_m10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 3 Poll_c10 
mini
கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 3 Poll_c10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 3 Poll_m10கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு

2 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 3 Empty கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு

Post by சிவா Thu Dec 24, 2009 2:04 pm

First topic message reminder :

ஒரு நாள் காலையில் ஒரு குருவானவர் பாவத்தின் பயங்கரத்தைக் குறித்து சபையாரைக் கடுமையாய்க் கண்டித்துணர்த்திப் பேசினார். அதைக் கேட்டுக்கொண்டிருந்த ஓர் அங்கத்தினர் ஆராதனையின் முடிவில் அக்குருவானவரிடம் சென்று, ஐயா, நீங்கள் இவ்வளவு காரசாரமாகவும், வெளிப்படையாகவும் பாவத்தைக் குறித்துப் பகிரங்கமாய்ப் பேசவேண்டியதில்லை. காரணம் எங்களுடைய வாலிபப் பையன்களும் பெண்களும் பாவங்களைக் குறித்து வெளிப்படையாய் அறிந்துகொண்டால் அவர்கள் வெகு எளிதில் பாவிகளாகிவிடுவார்கள். வேண்டுமானால் பாவத்தைப் பாவம் என்று சொல்லாது, அதனை ஒரு குற்றம் என்று சொல்வீராக. ஆனால் பாவத்தைக் குறித்து இவ்வளவு பகிரங்கமாய்ப் பச்சையாகப் பேசவேண்டாம் என்றார்.

உடனே அக்குருவானவர் தன்னுடைய மருந்துப் பெட்டியில் நஞ்சு என்று தீட்டப்பட்டிருந்த ஒரு விஷ மருந்தை எடுத்து வந்து, அந்த அங்கத்தினரிடம் காட்டி, ஐயா, நான் என்ன செய்யவேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை அறிகிறேன். நஞ்சு என்று தீட்டப்பட்ட சீட்டை இந்த மருந்துப் புட்டியிலிருந்து எடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக தேன் என்ற பெயரை அல்லது யாவரும் விரும்பும் இன்னொரு இனிய பெயரை, அதே நஞ்சு நிறைந்த புட்டியின்மேல் எழுதச் சொல்லுகிறீர். அதே நஞ்சை எவ்வளவு தூரம் இனிப்பான மருந்து என்று எழுதுகிறேனோ அவ்வளவு தூரம் ஆபத்தாக முடியும். நஞ்சு நஞ்சுதான். நஞ்சுதனை நஞ்சு என்று வெளியரங்கமாய், தெளிவாக வெகு திட்டவட்டமாய்க் கூறாவிட்டால் ஆபத்து நேரிடும். அது வஞ்சகமாகும். உள்ளதை உள்ளதென்று சொல்லவேண்டும். இல்லாததை இல்லாததென்று சொல்லவேண்டும். பாவத்தைப் பாவம் என்று சொல்லிப் பகிரங்கமாய்க் கண்டித்துணர்த்த வேண்டும். பாவத்தைக் குறித்து ஏனோதானோவென்று அசட்டையாயிருக்கிறவர்கள் மோசம் போவது திண்ணம்.

தற்காலத்தில் பாவத்தின் பயங்கரத்தையும் ஆபத்தையும் நாம் சரியாய் உணருகிறதில்லை. பாவம் மனிதனைக் கொல்லும் தன்மையுடையது. இக்கொடிய பாவத்தைப் பாவம் என்று வெளிப்படையாய்க் கூறாது, தற்காலத்தில் அதனை இலேசாக மதித்து, அப்பாவத்தோடு விளையாடி, அப்பாவத்தை இயற்கையான குற்றமென்றும், மனித பலவீனமென்றும், ஏதோ தவறுதல் என்றும் இலேசாக அதனைச் சாக்குப்போக்குச் சொல்லி நிர்விசாரமாக இருந்துவிடப் பார்க்கிறோம். ஆனால் சத்திய வேதாகமம் பாவத்தின் பயங்கரத்தையும், பாவம் விளைவிக்கும் மரணத்தையும் வெகு திட்டவட்டமாய் வெளிப்படுத்தியிருப்பதுபோல, நாமும் பாவத்தைப் பாவம் என்று கூறிப் பகிரங்கமாய் முகதாட்சண்யமின்றி கண்டித்துணர்த்த வேண்டும்.

மாபெரும் போப் கிரகோரி என்னும் புகழ்பெற்ற போப்புவானவர் ஆறாம் நூற்றாண்டு இறுதியில் வாழ்ந்தார். அவர் பாவங்களையெல்லாம் ஏழு பிரிவுகளாகப் பிரித்துள்ளார். அவையாவன: ஆணவம், சினம், பொறாமை, காமம், பெருந்தீனி, சோம்பல், பேராசை, இவை கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு என இத்தனை நூற்றாண்டுகளிலும் பெயர்பெற்று வந்திருக்கின்றன. பரிசுத்த வேதாகமத்தில் இந்தக் கொடிய பாவங்கள் ஏழும் மொத்தமாக ஒரே வசனத்தில் தொடர்ந்து கூறப்படாவிட்டாலும், வேவ்வெறு இடங்களில் பரிசுத்த வேதாகமத்தில் மனிதனைக் கொல்லக்கூடிய பாவங்களைப்பற்றி வாசித்தறிகிறோம். தாமஸ் அக்குவினாஸ் போன்ற பிரபல திருமறைப் பண்டிதரெல்லாம் போப் கிரகோரி என்பவர் பாவங்களையெல்லாம் இவ்வாறு ஏழு வகையாகப் பிரித்திருப்பதை அங்கீகரித்துள்ளார்கள். எனவே, நீதி நெறிப்படி பாவங்களை ஏழு வகைப்படுத்துவது எல்லாராலும் ஒத்துக்கொள்ளப்பட்டுள்ளது.


கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 3 Empty Re: கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு

Post by சிவா Thu Dec 24, 2009 3:57 pm

7.பேராசை

பேராசை பெருநஷ்டம். போதும் என்கிற மனமே பொன் செய்யும் மருந்து. போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். உலகத்தில் நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டு போவதுமில்லை என்பது நிச்சயம். உண்ணவும், உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக் கடவோம். ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும், கண்ணியிலும் மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது. சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தை விட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். நீயோ தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, நீதியையும், தேவபக்தியையும், விசுவாசத்தையும், அன்பையும் , பொறுமையையும், சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு. விசுவாசத்தில் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்திய ஜீவனைப்பற்றிக்கொள். அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய் (1.தீமோ.6:6-12).

மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கொண்டு உயிர் இழந்தோர் பலர் பலர். பிறர் பொருள்கள்மீது ஆசைகொண்டு அவமானம் அடைந்தோர் பலர் பலர். தகாத இன்பங்களில் ஆசை கொண்டு வாழ்வு இழந்தோர் பலர் பலர். கண்களின் இச்சைகளால் இழுப்புண்டு, நல்வாழ்வை நழுவ விட்டோர் பலர் பலர். நமது ஆதி பெற்றோர் கண்களின் ஆசை இச்சைகளால் கவரப்பட்டு தங்கள் பேரின்ப வாழ்வை இழந்தார்கள். ஆசைக்கு அடிமைப்பட்டதால் பரதீசு வாழ்வையே பறிகொடுத்து விட்டார்கள். அப்பொழுது ஏவாள் அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பாhவைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு அதின் கனியைப் பறித்து, புசித்து தன் புருஷனுக்கும் கொடுத்தாள். அவனும் புசித்தான் (ஆதி.3:6). நமக்கு எது வேண்டும் எது வேண்டாம் என்று ஆண்டவருக்குத்தான் சரியாய்த் தெரியும். அவர் வேண்டாம் என்று தடுத்துள்ள பொருள்மீது, அல்லது இன்பத்தின் மீது அல்லது வேறெந்த காரியத்தின்மீதும் நாம் ஆசை கொண்டால் அவதியுறுவது நிச்சயம்.

பிறர் பொருளுக்கு ஆசைப்படுவது பெரும் பாவமாகும். பிறர் பொருளை இச்சியாதிருப்பாயாக. பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரிகளையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், இன்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்பது ஆண்டவர் விடுத்துள்ள கற்பனையாகும். ஆண்டவர் இட்ட இந்தக் கட்டளையை மீறுவது பெரும் பாவமாகும். ஆண்டவருடைய ஆணையை மீறி, பிறர் பொருளுக்கு ஆசைப்படுகிறவர்களை அந்த ஆசையே கொன்றுவிடும். ஆகாப் அரசன் பிறா பொருளுக்கு ஆசைப்பட்டான். அந்த ஆசை அவன் உயிருக்கே உலை வைத்துவிட்டது. ஆகாப் அரசன் நாபோத்தின் திராட்சைத் தோட்டத்திற்கு ஆசைப்பட்டான். அந்த ஆசை நாபோத் கொலைசெய்யப்படுவதற்குக் காரணமானது. நாபோத்தைக் கொன்று அவனுடைய திராட்சைத் தோட்டத்தைத் தனக்குச் சொந்தமாய் எடுத்துக்கொள்ளும்படி, ஆகாப் எழுந்துபோனபோது கர்த்தர் எலியா தீர்க்கதரிசியை அவனிடம் அனுப்பி பின்வருமாறு கூறச் சொன்னார். ஆகாபே, நீ (நாபோத்தைக்) கொலைசெய்ததும் அவனுடைய திராட்சைத்தோட்டத்தை எடுத்துக்கொண்டதும் இல்லையோ. நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கின ஸ்தலத்திலே உன்னுடைய இரத்தத்தையும் நக்கும், ஆண்டவர் உன்மேல் பொல்லாப்பு வரப் பண்ணி, உன் சந்ததியை அழித்துப்போட்டு, ஆகாப்புக்குச் சுவரில் நீர்விடும் ஒரு நாயாகிலும் இராதபடிக்குச் செய்வார் (1.இராஜா.21:19).

இயேசு அவர்களை நோக்கி: பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார். அல்லாமலும், ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார். ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே. நான் ஒன்று செய்வேன். என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையும் என் பொருள்களையும் அங்கே சேர்த்துவைத்து பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருடங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது. நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, ப+ரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான். தேவனோ அவனை நோக்கி, மதிகேடனே! உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்தக்கொள்ளப்படும், நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார். தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல் தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார். பின்னும் அவர் தம்முடைய சீஷரை நோக்கி: இப்படியிருக்கிறபடியினால், என்னத்தை உண்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப் பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகளாயிருக்கிறது. காகங்களைக் கவனித்துப் பாருங்கள். அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை. அவைகளுக்குப் பண்டசாலையுமில்லை, களஞ்சியமுமில்லை. இல்லாவிட்டாலும் அவைகளையும் தேவன் பிழைப்ப+ட்டுகிறார். பறவைகளைப் பார்க்கிலும் நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள். கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒர முழத்தைக் கூட்டுவான்? மிகவும் அற்பமான காரிய முதலாய் உங்களால் செய்யக்கூடாதிருக்க மற்றவைகளுக்காக நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப் புஷ்பங்களைக் கவனித்துப் பாருங்கள். அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை, என்றாலும் சாலோமோன் முதலாய் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப் போலாகிலும் உடுத்தியிருந்ததில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். இப்படியிருக்க, அற்ப விசுவாசிகளே, இன்றைக்கு காட்டிலிருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படுகிற புல்லுக்குத் தேவன் இவ்விதமாய் உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று நீங்கள் கேளாமலும் சந்தேகப்படாமலும் இருங்கள். இவைகளையெல்லாம் உலகத்தார் நாடித் தேடுகிறார்கள். இவைகள் உங்களுக்கு வேண்டியவைகளென்று உங்கள் பிதாவானவர் அறிந்திருக்கிறார். தேவனுடைய இராஜ்யத்தையே தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும் (லூக்.12:15-31).


கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 3 Empty Re: கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு

Post by சிவா Thu Dec 24, 2009 3:57 pm

பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது. சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தை விட்டு வழி விலகிப்போயுள்ளார்கள். யதாஸ் காரியோத் பண ஆசைகொண்டான். பணத்தை இச்சித்தான். அப்பண ஆசை அவனை ஆண்டவரிடமிருந்து வழிவிலகிப் போகப் பண்ணியது. அவனுடைய சரீரம் சாகுமுன்னரே, அவனுடைய ஆத்துமா செத்துவிட்டது. அப்பொழுது பண ஆசையால் இயேசுவை விட்டுப் பிரிந்தானோ, அப்பொழுதே இவன் ஆத்துமா செத்துவிட்டது. ஆகாப் போன்றவர்களுக்கும், ய+தாஸ் போன்றவர்களுக்கும், பேராசை மதிகேடன் போன்றவர்களுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து விடுத்துள்ள எச்சரிப்பு இதுதான். தேவனிடத்தில் ஐசுவரியவனாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கிறவன் இப்படியே இருக்கிறான் (லூக்.12:21).

நாம் பிறவியிலேயே பொருளாசைக்காரராகப் பிறந்துள்ளோம். நம்மில் சிறியோர் முதல் பெரியோர் வரை யாவரும் பொருளாசைக்காரராக இருக்கிறோம். சத்திய வேதாகமம் இவ்வுண்மையை வெகு தெளிவாய் எடுத்துக் காட்டியுள்ளது. அவர்களில் சிறியோர் முதல் பெரியோர் மட்டும், ஒவ்வொருவரும் பொருளாசைக்காரர் (எரேமி.6:13). மற்றக் கொடிய பாவங்களைப்போல் பேராசையும் நம்மைக் கொன்று நரகத்தில் தள்ள வல்லதொரு கொடிய பாவமாகும். அவர்கள் சகலவித அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்தினாலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு, பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும், நிறைந்தவர்களுமாய், புறங்கூறுகிறவர்களுமாய், அவதூறு பண்ணுகிறவர்களுமாய், தேவபகைஙருமாய், துராகிருதம் பண்ணுகிறவர்களுமாய், அகந்தையுள்ளவர்களுமாய், வீம்புக்காரருமாய், பொல்லாதவைகளை யோசித்துப் பிணைக்கிறவர்களுமாய், பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாய், உணர்ச்சியில்லாதவர்களுமாய், உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய், சுபாவ அன்பில்லாதவர்களுமாய், இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதிபதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள் (ரோ.1:29-32).

நாம் மனந்திரும்பி விபசாரம், கொலை, களவு பொய் போன்ற மாபெரும் கொடிய பாவங்களை விட்டு விலகுவதுபோல், பிறர் பொருளை இச்சித்தலையும் விட்டு விலகவேண்டும். கடவுள் தந்துள்ள கற்பனையை நோக்குங்கள். விபசாரம் செய்யாதிருப்பாயாக... களவு செய்யாதிருப்பாயாக, பொய் சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சியாதிருப்பாயாக (ரோ.13:9).

மற்றப் பாவங்கள் செய்கிறவர்களைப்போல், பொருளாசைக்காரரும், தேவனுடைய இராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை என்று பரிசுத்த வேதாகமம் பறைசாற்றியுள்ளது. அநியாயக்காரார் தேவனுடைய இராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள். வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், திருடரும், பொருளாசைக்காரரும், தேவனுடைய இராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள். ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள். பரிசுத்தமாக்கப்பட்டீர்கள். நீதிமான்களாக்கப்பட்டீர்கள். எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது. எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆயினும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன். வயிற்றுக்குப் போஜனமும், போஜனத்திற்கு வயிறும் ஏற்கும். ஆனாலும் தேவன் இதையும் அதையும் அழியப்பண்ணுவார் (1.கொரி.6:9-13).

சிலருக்கு வயிறுதான் சுவாமியாகிவிடுகிறது. சிலருக்கு சிற்றின்பம்தான் சுவாமியாகிவிடுகிறது. சிலருக்குப் பணம்தான் சுவாமியாகிவிடுகிறது. அவர்கள் அல்லும் பகலும் ஓயாது, ஒழியாது முழு மூச்சுடன் பணத்தையே தேடுகிறார்கள், பணத்தையே எப்பொழுதும் நாடுகிறார்கள், பணத்தையே எப்பொழுதும் கும்பிடுகிறார்கள். பண ஆசை அவர்கள் கண்களையெல்லாம் மூடிவிடுகிறது. ஒரு வெள்ளிக் காசுதனை நம் கண்ணருகேகொணர்ந்து அதை நாம் சூரியனைக்கூட பார்க்கமுடியாதபடி, அவ்வெள்ளிக்காசு நம் கண் பார்வையை மறைத்துவிடும். அதுபோல இருதயத்தில் ஒட்டிக்கொண்டு அதனை அடிமைப்படுத்திக் கொண்டிருக்கும் பண ஆசை, நாம் கிறிஸ்துவை காணமுடியாதபடி நம்மைத் தடுத்துவிடுகிறது. அப்பண ஆசையே நமக்கு ஒரு விக்கிரகாராதனைப்போல் ஆகிவிடுகிறது. பொருளாசை ஒருவகை விக்கிரகாராதனையே என்று பரிசுத்தவேதாகமம் எச்சரித்துள்ளது. பணப்பித்து, பொருளாசை வெறி, பேராசை கொண்டலையும் தற்கால மாந்தர், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மாற்கு 8:36ல் இயம்பியுள்ளதை மறந்துவிட்டார்கள்போலும். மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும் தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?

அடிமை வியாபாரத்திற்கு அடிப்படைக் காரணமாயிருந்தது பொருளாசைதான். யுத்தங்களுக்கும், படையெடுப்புகளுக்கும், கொள்ளைகளுக்கும், கொலைகளுக்கும் காரணம் பொருளாசைதான். பொய்க்கும், புரட்டுக்கும் காரணம் பொருளாசைதான். சண்டைக்கும், சச்சரவுகளுக்கும் காரணம் பொருளாசைதான். பாலில் நீர் ஊற்றுவதற்கும், தானியத்தில் கல்லும் மண்ணும் போடுவதற்கும் காரணம் பொருளாசைதான். சூதாட்டத்திற்கும், குதிரைப்பந்தயத்திற்கும் காரணம் பொருளாசைதான். இப்பொருளாசை எத்தனை இதயங்களைப் பிழிந்து திக்குமுக்காடச் செய்து கொன்றிருக்கிறது தெரியுமா? எத்தனை குடும்பங்களை நாசமாக்கியிருக்கிறது தெரியுமா? பொருளாசை, பேராசை மனிதனைக் கொல்லும் ஒரு கொடிய பாவம்.


கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 3 Empty Re: கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு

Post by சிவா Thu Dec 24, 2009 3:58 pm

கலிபோர்னியா வனாந்தரத்திலே சில ஆண்டுகட்குமுன் ஒரு பிணம், கையிலே காக்கைப் பொன்னை இறுகப்பிடித்துக்கொண்டு சுருண்டு கிடப்பதைச் சில பிரயாணிகள் கண்டார்கள். அப்பாலைவனத்து மணற் கன்றிலே தகதகவென்று தங்கம்போல் மிளினி மினிர்ந்து பளிச்சிட்ட காக்கைப் பொன்னை, உண்மையான தங்கம் என்று தவறாக கருதியதொரு மனிதன் அதனைக் கைப்பற்றுவான் வேண்டி மணற்குன்று மீதில் எறியபொழுது, மணல் சரிந்து அவன் தவறி விழுந்து பிணம் ஆனான். பொன்னாசை அவன் வாழ்வை மண்ணாக்கிவிட்டது. அவன் உடலைப் பிணமாக்கிவிட்டது. ஆத்துமாவையும் அழிக்க வல்ல பொருளாசையைக் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

ஐசுவரியமுள்ள வாலிபன் ஒருவன் இயேசு சுவாமியை அண்டியபொழுது, இயேசு அவனைப் பார்த்து அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறையுண்டு. நீ போய் உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு. அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும். பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றி வா என்றார். அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டு, மனமடிந்து, துக்கத்தோடே போய்விட்டான். அப்பொழுது இயேசு சுற்றிப் பார்த்து, தம்முடைய சீஷரை நோக்கி ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது என்றார். சீஷர்கள் அவருடைய வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இயேசு பின்னும் அவர்களை நோக்கி: பிள்ளைகளே, ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது. ஐசுவரியவான் தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும் ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார். அவர்கள் பின்னும் அதிகமாய் ஆச்சரியப்பட்டு, அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் கூடாதுதான், தேவனால் இது கூடாததல்ல. தேவனாலே எல்லாம் கூடும் என்றார் (மாற்.10:21-27).

பணக்காரராய் இருப்பது பாவமல்ல. ஆனால் அப்பணம், கிறிஸ்தவ நீதி நெறிப்படி சம்பாதிக்கப்பட்டதாய் இருக்கவேண்டும். அது கிறிஸ்துவை ஒதுக்கி வைத்துவிட்டு சம்பாதிக்கப்பட்ட செல்வமாய் இருக்கக்கூடாது. அது கிறிஸ்து தந்த செல்வமாய் இருக்கவேண்டும். அது கிறிஸ்துவின் இராஜ்ய விருத்திக்கென்றும், கிறிஸ்துவின் நாம மகிமைக்கென்று செலவிடப்பட வேண்டும். வேதாகமத்தில் சில ஐசுவரியவான்கள் தங்கள் ஐசுவரியத்தை கிறிஸ்துவின் நாம மகிமைக்கென்று செலவிட்டதைக் காண்கிறோம். இயேசுவுக்குச் சீடனும் ஐசுவரியவானுமாயிருந்த யோசேப்பு என்னும் பேர் கொண்ட அரிமத்தியா ஊரான் (மத்.27:57) இயேசுவுக்கென்று தன்னுடைய பொருளை மனப்ப+ர்வமாய் செலவிட்டதைப் பற்றி வாசிக்கிறோம். நம்முடைய செல்வத்தை நமக்கென்று மட்டும் வைத்துக்கொள்ளக்கூடாது. தேவைப்படுவோர்க்கு மனமுவந்து கொடுத்து சேவைசெய்யவேண்டும். கைம்மாறு கருதாது பிறருக்கு உதவி செய்ய வேண்டும். நம்முடைய உடல், பொருள், ஆவி அனைத்தும் ஆண்டவருக்கென்று அர்ப்பணம் செய்யப்படவேண்டும்.

ஐசுவரியவான்களுக்கு மட்டுமல்ல, ஏழைகளுக்கும் பண ஆசை உண்டு. பேராசை உண்டு, பிறர் பொருள் மீது இச்சை உண்டு. மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை போன்ற ஆசைகளால் மாந்தர் அவதிப்படுகின்றனர். பண ஆசை அகில உலகத்தாரையும் அரிபிளவைப்போல் அரித்துக்கொண்டிருக்கிறது. பேராசை, பொருளாசை, பிறர்பொருள்மீது இச்சை, பணஆசை போன்ற பாவங்களால் அடிமையாக்கப்பட்டு ஊடுருவக் குத்துண்டு கிடக்கிற உனக்கு விமோசனமே இல்லையா? ஒரே ஒரு விமோசனந்தான் உண்டு. இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். நமக்கு பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார் (1.யோ.1:7-9). ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புது சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்துபோயின. எல்லாம் புதிதாயின (2.கொரி.5:17). தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார். நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது (1.தெச.4:3-7). கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை (ரோ.8:1).


கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு - Page 3 Empty Re: கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum