Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!
Page 1 of 1
!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!
உலகையே காத்தருளும் சிவபெருமான், ஜோதிடர் ஒருவரை சித்தராக வந்து சோதித்த சம்பவம் தெரியுமா? பண்ருட்டி அருகே பாக்கம் கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கணிக்கர் என்ற ஜோதிடர் வாழ்ந்து வந்தார்.
சிறந்த சிவபக்தரான இவர் தினமும் ஈசனை வணங்கிய பின்னரே ஜோதிடம் பார்க்க அமர்வார்.ஒருநாள் அருகிலுள்ள சித்தர் சாவடியில் இருந்து, ஒரு சித்தர் ஓலைச்சுவடிகளுடன் வந்தார்.
‘சிவபூஜை முடிந்த பின்னரே ஜோதிடம் பார்க்க முடியும்’ என்று கணிக்கரின் உதவியாளர் கூறியதை ஏற்க மறுத்த சித்தர், அவசரப்படுத்தினார்.
அதிக பொன்னும் பொருளும் தருவதாக ஆசை காட்டினார்.ஆனாலும் கணிக்கர் மறுத்துவிட்டார். ‘‘யாராக இருந்தாலும் எவ்வளவு பொருள் கொடுத்தாலும், தான் அனுதினமும் வணங்கும் சிவபெருமானுக்கு பூஜை செய்யாமல் எந்த காரியத்தையும் தொடங்குவதில்லை’’ என்று கூறினார். அதற்கு சித்தர், ‘‘சரி, பூஜையை முடித்துக்கொண்டு வாருங்கள்’’ என்று கூறி காத்திருந்தார்.
பூஜை முடிந்து வந்த கணிக்கரிடம், தன்னை வீரசித்தர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, சுவடிக்கட்டை கொடுத்து, ஜாதகம் பார்க்குமாறு கேட்டுக் கொண்டார்.
ஜாதகக் கட்டை வாங்கிப் பார்த்த கணிக்கர், ‘‘இதில் எந்த குறையும் இல்லையே, வேறு என்ன சந்தேகம்?’’ என்று கேட்டார். சித்தரோ, ‘‘எனக்கு திருமணம் நடக்குமா? பிள்ளைப்பேறு உண்டா?’’ என்று கேட்டார்.
மறுபடியும் ஜாதகத்தை பார்த்த கணிக்கர், ‘‘சுவாமி, தங்களுக்கு ஜாதகப்படி திருமணம் நடந்து விட்டது, 2 பிள்ளைகளும் இருக்கிறார்கள்’’ என்று கூறினார்.
திடுக்கிட்ட வீரசித்தர், ‘‘நீர் என்னய்யா ஜோதிடர், அப்பட்டமான பொய் சொல்லி என்னை அவமானப்படுத்தி விட்டீரே! நானோ பிரம்மச்சாரி சித்தன்.
ஜோதிடம் கணிக்கத் தெரியாத உம்மிடம் வந்ததே நான் செய்த குற்றம்தான்’’ என்று கோபித்துக்கொண்டார்
.கணிக்கரோ, ‘‘எனது கணிப்பில் இதுவரை பிழை ஏற்பட்டதில்லை. இனியும் ஏற்படாது’’ என்று கூற, வீரசித்தரோ, ‘‘பிழைதான்.
இதை ஊர் முழுக்க கூறப்போகிறேன். சிவபூஜை செய்து அருள் மகிமையோடு ஜோதிடம் கூறுகிறேன் என்று மக்களை ஏமாற்றும் உம்மிடம் இனி யாரும் ஜாதகம் கணிக்க வரப்போவதில்லை’’ என்று ஆவேசத்துடன் கூறினார்.கணிக்கரோ, ‘‘சுவாமி நீங்கள் சித்தராக இருப்பதால் நான் ஆத்திரப்படாமல் கூறுகிறேன்.
உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. மனைவி, மக்கள் இருக்கிறார்கள். உங்கள் ஜாதகம் அப்படித்தான் சொல்கிறது. இது நான் வணங்கும் சிவபெருமான் மீது சத்தியம்’’ என்று நிதானமாக கூறினார்.
வீரசித்தரோ, ‘‘நான் பற்றற்ற துறவி, மனைவி, மக்களுக்கு வாய்ப்பில்லை என்று சொல்லுங்கள். அதற்கு ஈடாக இந்த பொற்காசுகளை வைத்துக் கொள்ளுங்கள்’’ என்று பொற்காசுகளை ஜோதிடரிடம் நீட்டினார்.
அதுவரை பொறுமையாக இருந்த கணிக்கர், ‘‘ஒருபோதும் நான் பொய் சொல்ல மாட்டேன். கணித்துக்கூறியது கூறியதுதான். தாங்கள் சாபமிட்டு, நான் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை’’ என்றார்
.உடனே வீரசித்தர் ஜாதகச் சுவடியை மீண்டும் கணிக்கரிடம் கொடுத்து, ‘‘நீ தினமும் பூஜை செய்து வணங்கும் சிவபெருமான் திருமுன்பு இந்த சுவடியை வைத்து ‘நான் கணித்துக்கூறிய ஜாதகத்தில் தவறில்லை, பொய்யுமில்லை, அனைத்தும் உண்மைதான்’ என்று சத்தியம் செய்து விட்டு, பின்னர் ஓலைச்சுவடியை பிரித்துப்பார், உண்மை புரியும்’’ என்று கூறினார்.
கணிக்கனார் அவ்வாறே ஓலைச்சுவடியை வாங்கி சிவலிங்கத்தின் முன்பு வைத்து கண்மூடி வணங்கினார்.
சிறிதுநேரத்தில் கண்திறந்து பார்த்தபோது என்ன ஆச்சரியம்! சுவடியில் இருந்த சாதக குறிப்புகள் அனைத்தும் மறைந்து போயிருந்தன. அதற்கு பதிலாக திருவதிகை வீரட்டானமுடைய மகாதேவர் என்று ஒவ்வொரு சுவடியிலும் இருந்தது.
மெய்சிலிர்த்த கணிக்கர், வெளியே ஓடிவந்து பார்த்தபோது சித்தரைக் காணவில்லை. அப்போது அவர்முன் ஒரு பேரொளி தோன்றியது.
சிவபெருமான் ரிஷபவாகனத்திலும் உடன் அம்மை, விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் என பஞ்சமூர்த்திகளும் காட்சியளித்தனர்.
மெய்சிலிர்த்து விழுந்து வணங்கிய கணிக்கனார், ‘‘எல்லாம் வல்ல பரம்பொருளே, இது என்ன சோதனை!’’ என்று கேட்டு நெகிழ்ந்தார்.
சிவபெருமான், ‘‘சோதனை அல்ல கணிக்கரே, உம் சாதனைகளை மெச்சவே வந்தோம். ஜோதிடம் கணிக்கும்போது உண்மையை கூற வேண்டும், பொய்கூறி பிழைத்தல் தவறு என்பதை உணர்த்திய உமக்கு அருள்புரிந்தோம். உமக்கு என்ன வரம் வேண்டும்?’’ என்று கேட்டார்.
அதற்கு கணிக்கர், ‘‘உலகையே கணிக்கும் பரம்பொருளே, நீங்கள் ஜோதிடம் கணிக்க வந்த இந்தத் திருவிளையாடலால் கணி ஈசராக, கணிச்சபுரீஸ்வரராக இவ்வூரில் கோயில் கொண்டு நாடி வருவோருக்கு நலம்புரிய வேண்டும்.
அவரவர் ஜாதகத்தை கொண்டு வந்து தங்கள் திருவடியில் வைத்து வணங்கி செல்வோருக்கு இடையூறுகளை போக்கி நன்மைகளை தந்தருள வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.
உடனே சிவபெருமான் கணிக்கரிடம், ‘‘இனி இவ்வூர் உன்பெயரால் கணிச்சப்பாக்கம் எனும் கணிச்சபுரி என்று விளங்கும். உன் ஜாதக கணிப்பில் நீ மென்மேலும் புகழ்பெற்று என் பதம் அடைவாய்’’ என்று ஆசியருளினார்.
இந்த நிகழ்ச்சியை கேட்டறிந்த அரசன், கணிக்கனாரின் விருப்பப்படி கணீஸ்வரர் ஆலயத்தை நிர்மாணித்தார்.
கணிச்சபுரீஸ்வரர், கணிச்சநாதர் என்று இந்த இறைவன் அழைக்கப்படுகிறார். இறைவியின் பெயர் பெரியநாயகி. தலவிருட்சம் வேங்கை மரமாகும்.
தற்போது சுயம்புவாக தோன்றிய வேம்பு மரம் உள்ளது. கோயில் சிவலிங்க அமைப்பை வைத்துப் பார்க்கும்போது இது 8&9ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. 1200 ஆண்டுகளுக்கு முன்பு பிரசித்தி பெற்றிருந்தது.
பல கல்வெட்டுகள் காலப்போக்கில் பகைவர்களால் அழிக்கப்பட்டிருக்கலாம். மிகப்பெரிய அளவில் கோயில் இருந்ததற்கான அடித்தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ராஜராஜசோழனின் மகன் முதலாம் ராஜேந்திரசோழன் இவ்வூரின் கிழக்கே பெரிய ஏரியை அமைத்துக் கொடுத்துள்ளான்
. திருவதிகை கோயிலின் முதல் பிராகாரத்தில் மடப்பள்ளி அருகில் தென்புற சுவரில் உள்ள கல்வெட்டில் இந்தத் தகவல் தெரியவருகிறது.
திருமணத்தடை, குழந்தையின்மை, தீராத நோய், தொழில் முடக்கம், குடும்ப பிரச்னை உள்ளிட்ட எந்த பிரச்னை என்றாலும் கணீஸ்வர பெருமான் அவற்றை தீர்த்து வைப்பார் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
குறிப்பாக ஜாதகம் பார்க்கச் செல்பவர்கள், சென்று விட்டு வந்தவர்கள் இந்த கோயிலில் வந்து வழிபட்டால் ஜாதகத்தில் உள்ள தோஷங்களின் வீரியம் குறைந்து மன நிம்மதி அடைவார்கள் என்பது ஐதீகம்.
பண்ருட்டியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் கணிச்சப்பாக்கத்தில் இந்தக்கோயில் உள்ளது.
மினிபஸ் வசதி உண்டு. ஆட்டோவிலும் செல்லலாம். நண்பரின் பதிவு.
வாழ்க மெய்அன்பர்கள்..
அன்பே சிவம்..
----------------------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு
சிறந்த சிவபக்தரான இவர் தினமும் ஈசனை வணங்கிய பின்னரே ஜோதிடம் பார்க்க அமர்வார்.ஒருநாள் அருகிலுள்ள சித்தர் சாவடியில் இருந்து, ஒரு சித்தர் ஓலைச்சுவடிகளுடன் வந்தார்.
‘சிவபூஜை முடிந்த பின்னரே ஜோதிடம் பார்க்க முடியும்’ என்று கணிக்கரின் உதவியாளர் கூறியதை ஏற்க மறுத்த சித்தர், அவசரப்படுத்தினார்.
அதிக பொன்னும் பொருளும் தருவதாக ஆசை காட்டினார்.ஆனாலும் கணிக்கர் மறுத்துவிட்டார். ‘‘யாராக இருந்தாலும் எவ்வளவு பொருள் கொடுத்தாலும், தான் அனுதினமும் வணங்கும் சிவபெருமானுக்கு பூஜை செய்யாமல் எந்த காரியத்தையும் தொடங்குவதில்லை’’ என்று கூறினார். அதற்கு சித்தர், ‘‘சரி, பூஜையை முடித்துக்கொண்டு வாருங்கள்’’ என்று கூறி காத்திருந்தார்.
பூஜை முடிந்து வந்த கணிக்கரிடம், தன்னை வீரசித்தர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, சுவடிக்கட்டை கொடுத்து, ஜாதகம் பார்க்குமாறு கேட்டுக் கொண்டார்.
ஜாதகக் கட்டை வாங்கிப் பார்த்த கணிக்கர், ‘‘இதில் எந்த குறையும் இல்லையே, வேறு என்ன சந்தேகம்?’’ என்று கேட்டார். சித்தரோ, ‘‘எனக்கு திருமணம் நடக்குமா? பிள்ளைப்பேறு உண்டா?’’ என்று கேட்டார்.
மறுபடியும் ஜாதகத்தை பார்த்த கணிக்கர், ‘‘சுவாமி, தங்களுக்கு ஜாதகப்படி திருமணம் நடந்து விட்டது, 2 பிள்ளைகளும் இருக்கிறார்கள்’’ என்று கூறினார்.
திடுக்கிட்ட வீரசித்தர், ‘‘நீர் என்னய்யா ஜோதிடர், அப்பட்டமான பொய் சொல்லி என்னை அவமானப்படுத்தி விட்டீரே! நானோ பிரம்மச்சாரி சித்தன்.
ஜோதிடம் கணிக்கத் தெரியாத உம்மிடம் வந்ததே நான் செய்த குற்றம்தான்’’ என்று கோபித்துக்கொண்டார்
.கணிக்கரோ, ‘‘எனது கணிப்பில் இதுவரை பிழை ஏற்பட்டதில்லை. இனியும் ஏற்படாது’’ என்று கூற, வீரசித்தரோ, ‘‘பிழைதான்.
இதை ஊர் முழுக்க கூறப்போகிறேன். சிவபூஜை செய்து அருள் மகிமையோடு ஜோதிடம் கூறுகிறேன் என்று மக்களை ஏமாற்றும் உம்மிடம் இனி யாரும் ஜாதகம் கணிக்க வரப்போவதில்லை’’ என்று ஆவேசத்துடன் கூறினார்.கணிக்கரோ, ‘‘சுவாமி நீங்கள் சித்தராக இருப்பதால் நான் ஆத்திரப்படாமல் கூறுகிறேன்.
உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. மனைவி, மக்கள் இருக்கிறார்கள். உங்கள் ஜாதகம் அப்படித்தான் சொல்கிறது. இது நான் வணங்கும் சிவபெருமான் மீது சத்தியம்’’ என்று நிதானமாக கூறினார்.
வீரசித்தரோ, ‘‘நான் பற்றற்ற துறவி, மனைவி, மக்களுக்கு வாய்ப்பில்லை என்று சொல்லுங்கள். அதற்கு ஈடாக இந்த பொற்காசுகளை வைத்துக் கொள்ளுங்கள்’’ என்று பொற்காசுகளை ஜோதிடரிடம் நீட்டினார்.
அதுவரை பொறுமையாக இருந்த கணிக்கர், ‘‘ஒருபோதும் நான் பொய் சொல்ல மாட்டேன். கணித்துக்கூறியது கூறியதுதான். தாங்கள் சாபமிட்டு, நான் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை’’ என்றார்
.உடனே வீரசித்தர் ஜாதகச் சுவடியை மீண்டும் கணிக்கரிடம் கொடுத்து, ‘‘நீ தினமும் பூஜை செய்து வணங்கும் சிவபெருமான் திருமுன்பு இந்த சுவடியை வைத்து ‘நான் கணித்துக்கூறிய ஜாதகத்தில் தவறில்லை, பொய்யுமில்லை, அனைத்தும் உண்மைதான்’ என்று சத்தியம் செய்து விட்டு, பின்னர் ஓலைச்சுவடியை பிரித்துப்பார், உண்மை புரியும்’’ என்று கூறினார்.
கணிக்கனார் அவ்வாறே ஓலைச்சுவடியை வாங்கி சிவலிங்கத்தின் முன்பு வைத்து கண்மூடி வணங்கினார்.
சிறிதுநேரத்தில் கண்திறந்து பார்த்தபோது என்ன ஆச்சரியம்! சுவடியில் இருந்த சாதக குறிப்புகள் அனைத்தும் மறைந்து போயிருந்தன. அதற்கு பதிலாக திருவதிகை வீரட்டானமுடைய மகாதேவர் என்று ஒவ்வொரு சுவடியிலும் இருந்தது.
மெய்சிலிர்த்த கணிக்கர், வெளியே ஓடிவந்து பார்த்தபோது சித்தரைக் காணவில்லை. அப்போது அவர்முன் ஒரு பேரொளி தோன்றியது.
சிவபெருமான் ரிஷபவாகனத்திலும் உடன் அம்மை, விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் என பஞ்சமூர்த்திகளும் காட்சியளித்தனர்.
மெய்சிலிர்த்து விழுந்து வணங்கிய கணிக்கனார், ‘‘எல்லாம் வல்ல பரம்பொருளே, இது என்ன சோதனை!’’ என்று கேட்டு நெகிழ்ந்தார்.
சிவபெருமான், ‘‘சோதனை அல்ல கணிக்கரே, உம் சாதனைகளை மெச்சவே வந்தோம். ஜோதிடம் கணிக்கும்போது உண்மையை கூற வேண்டும், பொய்கூறி பிழைத்தல் தவறு என்பதை உணர்த்திய உமக்கு அருள்புரிந்தோம். உமக்கு என்ன வரம் வேண்டும்?’’ என்று கேட்டார்.
அதற்கு கணிக்கர், ‘‘உலகையே கணிக்கும் பரம்பொருளே, நீங்கள் ஜோதிடம் கணிக்க வந்த இந்தத் திருவிளையாடலால் கணி ஈசராக, கணிச்சபுரீஸ்வரராக இவ்வூரில் கோயில் கொண்டு நாடி வருவோருக்கு நலம்புரிய வேண்டும்.
அவரவர் ஜாதகத்தை கொண்டு வந்து தங்கள் திருவடியில் வைத்து வணங்கி செல்வோருக்கு இடையூறுகளை போக்கி நன்மைகளை தந்தருள வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.
உடனே சிவபெருமான் கணிக்கரிடம், ‘‘இனி இவ்வூர் உன்பெயரால் கணிச்சப்பாக்கம் எனும் கணிச்சபுரி என்று விளங்கும். உன் ஜாதக கணிப்பில் நீ மென்மேலும் புகழ்பெற்று என் பதம் அடைவாய்’’ என்று ஆசியருளினார்.
இந்த நிகழ்ச்சியை கேட்டறிந்த அரசன், கணிக்கனாரின் விருப்பப்படி கணீஸ்வரர் ஆலயத்தை நிர்மாணித்தார்.
கணிச்சபுரீஸ்வரர், கணிச்சநாதர் என்று இந்த இறைவன் அழைக்கப்படுகிறார். இறைவியின் பெயர் பெரியநாயகி. தலவிருட்சம் வேங்கை மரமாகும்.
தற்போது சுயம்புவாக தோன்றிய வேம்பு மரம் உள்ளது. கோயில் சிவலிங்க அமைப்பை வைத்துப் பார்க்கும்போது இது 8&9ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. 1200 ஆண்டுகளுக்கு முன்பு பிரசித்தி பெற்றிருந்தது.
பல கல்வெட்டுகள் காலப்போக்கில் பகைவர்களால் அழிக்கப்பட்டிருக்கலாம். மிகப்பெரிய அளவில் கோயில் இருந்ததற்கான அடித்தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ராஜராஜசோழனின் மகன் முதலாம் ராஜேந்திரசோழன் இவ்வூரின் கிழக்கே பெரிய ஏரியை அமைத்துக் கொடுத்துள்ளான்
. திருவதிகை கோயிலின் முதல் பிராகாரத்தில் மடப்பள்ளி அருகில் தென்புற சுவரில் உள்ள கல்வெட்டில் இந்தத் தகவல் தெரியவருகிறது.
திருமணத்தடை, குழந்தையின்மை, தீராத நோய், தொழில் முடக்கம், குடும்ப பிரச்னை உள்ளிட்ட எந்த பிரச்னை என்றாலும் கணீஸ்வர பெருமான் அவற்றை தீர்த்து வைப்பார் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
குறிப்பாக ஜாதகம் பார்க்கச் செல்பவர்கள், சென்று விட்டு வந்தவர்கள் இந்த கோயிலில் வந்து வழிபட்டால் ஜாதகத்தில் உள்ள தோஷங்களின் வீரியம் குறைந்து மன நிம்மதி அடைவார்கள் என்பது ஐதீகம்.
பண்ருட்டியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் கணிச்சப்பாக்கத்தில் இந்தக்கோயில் உள்ளது.
மினிபஸ் வசதி உண்டு. ஆட்டோவிலும் செல்லலாம். நண்பரின் பதிவு.
வாழ்க மெய்அன்பர்கள்..
அன்பே சிவம்..
----------------------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு
Similar topics
» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
» விவேகானந்தரை சோதித்த சாரதாதேவி
» பொறுமையை சோதித்த அம்மாவும் நான்கு குழந்தைகளும் *(காணொலி)
» சிவபெருமான் போற்றி
» சிவபெருமான் - 108 போற்றிகள்
» விவேகானந்தரை சோதித்த சாரதாதேவி
» பொறுமையை சோதித்த அம்மாவும் நான்கு குழந்தைகளும் *(காணொலி)
» சிவபெருமான் போற்றி
» சிவபெருமான் - 108 போற்றிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|