Latest topics
» கருத்துப்படம் 26/09/2024by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை...
2 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை...
மதுரையும் அரசியலும் பிரிக்க முடியாததாகவே இருக்கிறது. தேசிய அரசியலாக இருக்கட்டும்...மாநில அரசியலாக இருக்கட்டும்... இரண்டிலுமே மதுரை மண்ணின் வாசம் இருக்கத்தான் செய்கிறது. இன்றளவும் அது தொடர்கிறது.
மகாத்மா காந்தி தொடங்கி, அண்ணாயிஸத்தை அறிவித்த எம்.ஜி.ஆரைக் கடந்து, மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன் வரை மதுரையுடன் அரசியல் தொடர்பை ஏற்படுத்தி மதுரை அரசியல் வரலாற்றின் பக்கங்களைக் கூட்டிக் கொண்டே செல்கின்றனர்.
நன்றி
தி இந்து தமிழ்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை...
அது ஏன் மதுரை மட்டும்?
வேறு எந்த நகருக்கும் இல்லாத அளவுக்கு மதுரைக்கு மட்டும் ஏன் இத்தகைய சிறப்பு என அரிய முற்பட்டபோது சில சுவாரஸ்யத் தகவல்கள் கிடைத்தன.
அரசர் காலத்திலிருந்து இதனைத் தொடங்குவோம். பாண்டிய மன்னர்களின் தலைநகராக மதுரை இருந்தது. தலைநகரம் என்றால் அதில் சிறப்பான கட்டமைப்பு இருக்க வேண்டும். அதன் நிமித்தமாகவே அனைத்து தொழில் சமூகத்தினரும் மதுரை நகரில் குடியேறினர். சிலர் மன்னர்களால் குடியேற்றப்பட்டனர். வெளியூர்களில் இருந்துகூட கைவினைக் கலைஞர்கள் குடியமர்த்தப்பட்டனர்.
தொழில்வளம் சிறந்து வாணிபம் வளர கலாச்சாரம் செறிவு கண்டது. சங்கம் வைத்து தமிழ் மொழி வளர்க்கப்பட்டது. அதனாலேயே இயல்பாகவே மதுரை மக்களுக்கு இயலும், இசையும், நாடகமும் அனுபவிப்பது சாத்தியமாயிற்று. கலையைக் கொண்டாடினர் மதுரை மக்கள். கலைஞர்களை உருவாக்கியது மதுரை மண். கலாச்சாரம் மேலோங்க மேலோங்க விழிப்புணர்வும் அதிகமானது.
வேறு எந்த நகருக்கும் இல்லாத அளவுக்கு மதுரைக்கு மட்டும் ஏன் இத்தகைய சிறப்பு என அரிய முற்பட்டபோது சில சுவாரஸ்யத் தகவல்கள் கிடைத்தன.
அரசர் காலத்திலிருந்து இதனைத் தொடங்குவோம். பாண்டிய மன்னர்களின் தலைநகராக மதுரை இருந்தது. தலைநகரம் என்றால் அதில் சிறப்பான கட்டமைப்பு இருக்க வேண்டும். அதன் நிமித்தமாகவே அனைத்து தொழில் சமூகத்தினரும் மதுரை நகரில் குடியேறினர். சிலர் மன்னர்களால் குடியேற்றப்பட்டனர். வெளியூர்களில் இருந்துகூட கைவினைக் கலைஞர்கள் குடியமர்த்தப்பட்டனர்.
தொழில்வளம் சிறந்து வாணிபம் வளர கலாச்சாரம் செறிவு கண்டது. சங்கம் வைத்து தமிழ் மொழி வளர்க்கப்பட்டது. அதனாலேயே இயல்பாகவே மதுரை மக்களுக்கு இயலும், இசையும், நாடகமும் அனுபவிப்பது சாத்தியமாயிற்று. கலையைக் கொண்டாடினர் மதுரை மக்கள். கலைஞர்களை உருவாக்கியது மதுரை மண். கலாச்சாரம் மேலோங்க மேலோங்க விழிப்புணர்வும் அதிகமானது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை...
நாடகம் ஊட்டிய விடுதலை வேட்கை:
மன்னராட்சி எல்லாம் முடிந்த பின்னரும்கூட நாடகங்கள் மதுரை மக்களின் மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சமாக இருந்தது. விடிய விடிய நாடகங்கள் நடந்தேறிய ஊர் மதுரை. வெறும் புராணக் கதைகள் மட்டும்தான் அரங்கேறின என்று நினைக்க வேண்டாம்.
நாடகக் கலைஞர் எஸ்.எஸ். விஸ்வநாத தாஸ் போன்றோர் தெய்வீகத்தில் தேசபக்தியைக் கலந்து மக்களுக்குக் கொடுத்தனர். மகாத்மா காந்தியுடனான சந்திப்புக்குப் பின்னர் தனது நாடகங்களில் தேசபக்தியை கலந்த விஸ்வநாததாஸ் இதற்காக சிறை சென்றும் வந்தார்.
மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடகக் கம்பெனியை 1910-ம் ஆண்டில் எஸ்.எம். சச்சிதானந்தம் பிள்ளை தொடங்கினார். இளைஞர்களை (பால்யர்கள்) கொண்டே இதை இயக்கினார். இவரது நோக்கம் மக்கள் சீர்திருத்தமாகவே இருந்தது. தேசபக்தியையும் அவர் விதைக்கத் தவறவில்லை.
மன்னராட்சி எல்லாம் முடிந்த பின்னரும்கூட நாடகங்கள் மதுரை மக்களின் மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சமாக இருந்தது. விடிய விடிய நாடகங்கள் நடந்தேறிய ஊர் மதுரை. வெறும் புராணக் கதைகள் மட்டும்தான் அரங்கேறின என்று நினைக்க வேண்டாம்.
நாடகக் கலைஞர் எஸ்.எஸ். விஸ்வநாத தாஸ் போன்றோர் தெய்வீகத்தில் தேசபக்தியைக் கலந்து மக்களுக்குக் கொடுத்தனர். மகாத்மா காந்தியுடனான சந்திப்புக்குப் பின்னர் தனது நாடகங்களில் தேசபக்தியை கலந்த விஸ்வநாததாஸ் இதற்காக சிறை சென்றும் வந்தார்.
மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடகக் கம்பெனியை 1910-ம் ஆண்டில் எஸ்.எம். சச்சிதானந்தம் பிள்ளை தொடங்கினார். இளைஞர்களை (பால்யர்கள்) கொண்டே இதை இயக்கினார். இவரது நோக்கம் மக்கள் சீர்திருத்தமாகவே இருந்தது. தேசபக்தியையும் அவர் விதைக்கத் தவறவில்லை.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை...
சங்கரதாஸ் சுவாமிகளும், நவாப் ராஜமாணிக்கமும் மதுரை மண்ணில் நாடகங்களை அரங்கேற்றினார்கள். நாடகங்கள் வாயிலாக விடுதலை வேட்கையை அதிகமாகப் பெற்ற மண் மதுரை.
அந்தக் காலத்தில் நாடகங்கள் நடத்தப்பட்ட இடங்கள்தான் பின்னாளில் திரையரங்குகள் அமைக்கும் இடமாகத் தேர்வு செய்யப்பட்டதாகவும். சாந்தி, பத்மா போன்ற திரையரங்குகள் அதன் அடிப்படையிலேயே அந்த இடங்களில் நிறுவப்பட்டன என்ற தகவலும் உள்ளது.
நாடகத்தைப் பார்த்து ரசித்து விமர்சித்து வந்த மதுரை மக்கள் பின்னாளில் சினிமாவுக்கு அதே வரவேற்பை அளித்தனர். அதனாலேயே அந்தக் காலத்தில் ஒரு படம் வெற்றிப்படமா என்பதைத் தீர்மானிக்க மதுரை முடிவு முக்கியமாகக் கருதப்பட்டது. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் போன்ற இயக்குநர்கள் தங்கள் படத்துக்கான வரவேற்பை மாறுவேடத்தில் வந்து கண்ட காலமும் உண்டு.
அந்தக் காலத்தில் நாடகங்கள் நடத்தப்பட்ட இடங்கள்தான் பின்னாளில் திரையரங்குகள் அமைக்கும் இடமாகத் தேர்வு செய்யப்பட்டதாகவும். சாந்தி, பத்மா போன்ற திரையரங்குகள் அதன் அடிப்படையிலேயே அந்த இடங்களில் நிறுவப்பட்டன என்ற தகவலும் உள்ளது.
நாடகத்தைப் பார்த்து ரசித்து விமர்சித்து வந்த மதுரை மக்கள் பின்னாளில் சினிமாவுக்கு அதே வரவேற்பை அளித்தனர். அதனாலேயே அந்தக் காலத்தில் ஒரு படம் வெற்றிப்படமா என்பதைத் தீர்மானிக்க மதுரை முடிவு முக்கியமாகக் கருதப்பட்டது. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் போன்ற இயக்குநர்கள் தங்கள் படத்துக்கான வரவேற்பை மாறுவேடத்தில் வந்து கண்ட காலமும் உண்டு.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை...
தூங்காநகரம்:
மதுரைக்கு தூங்காநகரம் என பெயர் பெற்றுத்தந்ததில் ஊரில் அமைந்த மதுரா கோட்ஸ், மீனாட்சி மில் போன்ற தொழிற்சாலைகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. மூன்று ஷிப்டில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பணிக்குச் செல்லும் முன்னரோ அல்லது பணி முடிந்து வரும்போது நாடகமும் சினிமாவும் பார்ப்பதைப் பழக்கமாகக் கொண்டிருந்தனர். அவர்களுக்காகவே இரவு நேர உணவகங்களும் களைகட்டத் தொடங்கின.
சித்திரைத் திருவிழாவும், மாசி சிவராத்திரி திருவிழாக்களும், சிறு தெய்வங்கள் விழாக்களும் மதுரையைத் திருவிழாக்களின் நகரமாக வளர்த்தெடுத்தது. திருவிழா சார்ந்த தொழிலும் திருவிழாவைச் சிறப்பிக்க நடத்தப்படும் கூத்தும், நாடகமும், நாட்டியமும் மதுரை மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை அந்தக் காலம் தொட்டே விதித்திருந்தது.
மதுரைக்கு தூங்காநகரம் என பெயர் பெற்றுத்தந்ததில் ஊரில் அமைந்த மதுரா கோட்ஸ், மீனாட்சி மில் போன்ற தொழிற்சாலைகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. மூன்று ஷிப்டில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பணிக்குச் செல்லும் முன்னரோ அல்லது பணி முடிந்து வரும்போது நாடகமும் சினிமாவும் பார்ப்பதைப் பழக்கமாகக் கொண்டிருந்தனர். அவர்களுக்காகவே இரவு நேர உணவகங்களும் களைகட்டத் தொடங்கின.
சித்திரைத் திருவிழாவும், மாசி சிவராத்திரி திருவிழாக்களும், சிறு தெய்வங்கள் விழாக்களும் மதுரையைத் திருவிழாக்களின் நகரமாக வளர்த்தெடுத்தது. திருவிழா சார்ந்த தொழிலும் திருவிழாவைச் சிறப்பிக்க நடத்தப்படும் கூத்தும், நாடகமும், நாட்டியமும் மதுரை மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை அந்தக் காலம் தொட்டே விதித்திருந்தது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை...
உத்வேகம் தந்த ஞாயிறு படிப்பகங்கள்...
மதுரையின் முக்கிய தொழில் வீதிகளில் ஞாயிறு விடுமுறை தினத்தன்று அரசியல் கட்சிகளும் சில கடை அதிபர்களும் கடை வாசல்களில் படிப்பகங்கள் அமைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ரிக்ஷாக்காரர்கள் கொண்டாடிய படிப்பகங்கள் அவை. அடிமட்டத்திலிருந்து அரசியல் அலசி ஆராயப்பட்ட இடம் அந்தப் படிப்பகங்கள். தானப்பமுதலி தெருவில் லால்பகதூர் சாஸ்திரி படிப்பகம் இருந்தது. காங்கிரஸ் செய்திகளை அங்கே படிக்கலாம். பேச்சியம்மன் படித்துறை பகுதியில் கம்யூனிஸ்ட் படிப்பகம் இருந்தது. கல்பனா தியேட்டர் அருகே ஒரு படிப்பகம் இருந்தது. இந்தப் படிப்பகங்கள் மதுரை மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் மிக முக்கியப் பங்காற்றியது.
மதுரையின் முக்கிய தொழில் வீதிகளில் ஞாயிறு விடுமுறை தினத்தன்று அரசியல் கட்சிகளும் சில கடை அதிபர்களும் கடை வாசல்களில் படிப்பகங்கள் அமைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ரிக்ஷாக்காரர்கள் கொண்டாடிய படிப்பகங்கள் அவை. அடிமட்டத்திலிருந்து அரசியல் அலசி ஆராயப்பட்ட இடம் அந்தப் படிப்பகங்கள். தானப்பமுதலி தெருவில் லால்பகதூர் சாஸ்திரி படிப்பகம் இருந்தது. காங்கிரஸ் செய்திகளை அங்கே படிக்கலாம். பேச்சியம்மன் படித்துறை பகுதியில் கம்யூனிஸ்ட் படிப்பகம் இருந்தது. கல்பனா தியேட்டர் அருகே ஒரு படிப்பகம் இருந்தது. இந்தப் படிப்பகங்கள் மதுரை மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் மிக முக்கியப் பங்காற்றியது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை...
காந்தி துறந்த மேலாடை:
மதுரைக்கு மகாத்மா காந்தி 5 முறை வந்திருப்பதாக வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன. 22-9–1921ல் அவர் மதுரை வந்தபோது மேலமாசிவீதியில் தங்கியிருந்தார். தனது அறையிலிருந்து வெளியில் பார்க்கும்போது பலரும் மேலாடையின்றி இருப்பதைக் கவனித்துள்ளார். அன்று தான் அவர் அரை ஆடைக்கு மாறினார். அடுத்த நாள் அவர் மதுரையில் முதன்முறையாக உரையாற்றினார். அவர் உரையாற்றிய இடம் இன்றளவும் காந்தி பொட்டல் என்று அறியப்படுகிறது. காந்தி காலத்திலேயே அரசியலில் மதுரை முக்கியத்துவம் பெற்றுவிட்டது.
மதுரை ஆலயப் பிரவேசத்தை வெறும் சமூகப் புரட்சியாக மட்டுமே பார்த்துவிடமுடியாது. அதன் பின்னர் அரசியலும் இருந்தது. மதுரை ஆலயப் பிரவேசத்தை காந்தியடிகள் 'ஓர் அற்புதம்' என்றே வர்ணித்தார்.
மதுரைக்கு மகாத்மா காந்தி 5 முறை வந்திருப்பதாக வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன. 22-9–1921ல் அவர் மதுரை வந்தபோது மேலமாசிவீதியில் தங்கியிருந்தார். தனது அறையிலிருந்து வெளியில் பார்க்கும்போது பலரும் மேலாடையின்றி இருப்பதைக் கவனித்துள்ளார். அன்று தான் அவர் அரை ஆடைக்கு மாறினார். அடுத்த நாள் அவர் மதுரையில் முதன்முறையாக உரையாற்றினார். அவர் உரையாற்றிய இடம் இன்றளவும் காந்தி பொட்டல் என்று அறியப்படுகிறது. காந்தி காலத்திலேயே அரசியலில் மதுரை முக்கியத்துவம் பெற்றுவிட்டது.
மதுரை ஆலயப் பிரவேசத்தை வெறும் சமூகப் புரட்சியாக மட்டுமே பார்த்துவிடமுடியாது. அதன் பின்னர் அரசியலும் இருந்தது. மதுரை ஆலயப் பிரவேசத்தை காந்தியடிகள் 'ஓர் அற்புதம்' என்றே வர்ணித்தார்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை...
மேங்காட்டு பொட்டலும் திலகர் திடலும்..
1950-களில் மதுரையில்தான் எம்.ஜி.ஆர். தனது முதல் ரசிகர் மன்றத்தைத் தொடங்கினார். அப்போதே அவருக்கு மதுரை மக்கள் மத்தியில் அதீத செல்வாக்கு ஏற்பட்டுவிட்டது. எம்.ஜி.ஆரின் திரைப்படங்களுக்கு ஹாட்ரிக் வெற்றி தந்த திரையரங்குகள் மதுரையில்தான் இருக்கின்றன. கதாநாயகராக எம்.ஜி.ஆரைக் கொண்டாடிய மதுரை மக்கள் அரசியல்வாதியாகவும் அவரைக் கொண்டாடத் தவறவில்லை. அவரை ஆதரித்து மேங்காட்டு பொட்டலில் நடந்த கூட்டம் அதற்கு ஒரு முக்கிய சாட்சி.
1972 அக்டோபர் 14-ம் தேதி எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். மூன்றே நாட்களில் அக்டோபர் 17, 1972-ல் அதிமுகவை எம்.ஜி.ஆர் நிறுவினார்.
1950-களில் மதுரையில்தான் எம்.ஜி.ஆர். தனது முதல் ரசிகர் மன்றத்தைத் தொடங்கினார். அப்போதே அவருக்கு மதுரை மக்கள் மத்தியில் அதீத செல்வாக்கு ஏற்பட்டுவிட்டது. எம்.ஜி.ஆரின் திரைப்படங்களுக்கு ஹாட்ரிக் வெற்றி தந்த திரையரங்குகள் மதுரையில்தான் இருக்கின்றன. கதாநாயகராக எம்.ஜி.ஆரைக் கொண்டாடிய மதுரை மக்கள் அரசியல்வாதியாகவும் அவரைக் கொண்டாடத் தவறவில்லை. அவரை ஆதரித்து மேங்காட்டு பொட்டலில் நடந்த கூட்டம் அதற்கு ஒரு முக்கிய சாட்சி.
1972 அக்டோபர் 14-ம் தேதி எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். மூன்றே நாட்களில் அக்டோபர் 17, 1972-ல் அதிமுகவை எம்.ஜி.ஆர் நிறுவினார்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை...
அதற்கு முன்னதாக மதுரையில் மேங்காட்டுப் பொட்டல் என்ற இடத்தில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அனுதாபிகள் இணைந்த மாபெரும் கூட்டத்தை நடத்தினர். எம்.ஜி.ஆர் நீக்கத்தைக் கண்டித்தும் அவர் தனிக்கட்சி தொடங்க வலியுறுத்தியும் அந்தக் கூட்டம் நடைபெற்றது. இப்படியாக, எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வித்திட்டதும் மதுரை மண் தான்.
இதே மண்ணில்தான் 1974-ல் எம்.ஜி.ஆர் எனது கொள்கை அண்ணாயிஸம் என அறிவித்தார். 1980 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக மேங்காட்டுப் பொட்டலில் இரவு 2.45 மணி முதல் 3.45 மணி வரை எம்.ஜி.ஆர் ஆற்றிய தேர்தல் பிரச்சார உரை அவரது வெற்றிக்கு வித்திட்டது. மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்ட எம்.ஜி.ஆர் அமோக வெற்றி பெற்றார்.
1980-ம் ஆண்டு மே மாதம் 28 முதல் 31 வரை நடைபெற்ற தேர்தலில் அதிமுக 129 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைக் தக்க வைத்துக்கொண்டது. அவரது கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகள் 33 இடங்களை வென்றன. திமுக தலைமையிலான அணியில் திமுக 37 இடங்களையும், காங்கிரஸ் 31 இடங்களையும் பெற்று படுதோல்வி அடைந்தன. இதைத் தொடர்ந்து 9.6.1980 அன்று 2-வது முறை முதல்வராகப் பதவியேற்றார் எம்.ஜி.ஆர்.
இதே மண்ணில்தான் 1974-ல் எம்.ஜி.ஆர் எனது கொள்கை அண்ணாயிஸம் என அறிவித்தார். 1980 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக மேங்காட்டுப் பொட்டலில் இரவு 2.45 மணி முதல் 3.45 மணி வரை எம்.ஜி.ஆர் ஆற்றிய தேர்தல் பிரச்சார உரை அவரது வெற்றிக்கு வித்திட்டது. மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்ட எம்.ஜி.ஆர் அமோக வெற்றி பெற்றார்.
1980-ம் ஆண்டு மே மாதம் 28 முதல் 31 வரை நடைபெற்ற தேர்தலில் அதிமுக 129 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைக் தக்க வைத்துக்கொண்டது. அவரது கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகள் 33 இடங்களை வென்றன. திமுக தலைமையிலான அணியில் திமுக 37 இடங்களையும், காங்கிரஸ் 31 இடங்களையும் பெற்று படுதோல்வி அடைந்தன. இதைத் தொடர்ந்து 9.6.1980 அன்று 2-வது முறை முதல்வராகப் பதவியேற்றார் எம்.ஜி.ஆர்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை...
தேர்தல் வெற்றிக்கு வித்திட்ட பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட பல கூட்டங்கள் நடைபெற்ற மெய்காட்டும் பொட்டல் என்ற பெயரே மேங்காட்டுப் பொட்டல் என்று மருவியது. மதுரையின் கான்சாமேட்டுத் தெருவின் முனையில் (பழைய நியூ சினிமா எதிரில்) முன்பு ஜான்சிராணி பூங்காவாக இருந்த இந்த இடம் இன்று வணிக வளாகமாக இருக்கிறது.
இதேபோல் பல அரசியல் தலைவர்களின் பேச்சுக் களமாக இருந்த திலகர் திடலும் மிக மதுரை அரசியலில் மிக முக்கியமானது. அண்ணா தொடங்கி பல தலைவர்கள் திலகர் திடலில் தங்கள் பொதுக்கூட்டங்களை நடத்தியிருக்கின்றனர். கக்கன் அரசிலையும் பார்த்திருக்கிறது எம்.ஜி.ஆர் அரசியலையும் பார்த்திருக்கிறது.
கக்கன், மவுலானா சாஹிப், கே.பி.ஜானகிஅம்மா, சொர்னத்தம்மாள், என்.எம்.ஆர்.சுப்புராமன், மாயாண்டி பாரதி, மதுரை முத்து, பி.நெடுமாறன், ஆண்டித்தேவர், சுப்பிரமணியன் சுவாமி, விஜயகாந்த் என மதுரை மண்ணின் மைந்தர்கள் பலர் இருக்கின்றனர்.
தேர்தல் அரசியல் மட்டுமல்லாமல் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் பலவும் மதுரையில் நடந்திருக்கிறது.
இதேபோல் பல அரசியல் தலைவர்களின் பேச்சுக் களமாக இருந்த திலகர் திடலும் மிக மதுரை அரசியலில் மிக முக்கியமானது. அண்ணா தொடங்கி பல தலைவர்கள் திலகர் திடலில் தங்கள் பொதுக்கூட்டங்களை நடத்தியிருக்கின்றனர். கக்கன் அரசிலையும் பார்த்திருக்கிறது எம்.ஜி.ஆர் அரசியலையும் பார்த்திருக்கிறது.
கக்கன், மவுலானா சாஹிப், கே.பி.ஜானகிஅம்மா, சொர்னத்தம்மாள், என்.எம்.ஆர்.சுப்புராமன், மாயாண்டி பாரதி, மதுரை முத்து, பி.நெடுமாறன், ஆண்டித்தேவர், சுப்பிரமணியன் சுவாமி, விஜயகாந்த் என மதுரை மண்ணின் மைந்தர்கள் பலர் இருக்கின்றனர்.
தேர்தல் அரசியல் மட்டுமல்லாமல் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் பலவும் மதுரையில் நடந்திருக்கிறது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
» மதுரையும் துணுக்கு செய்திகளும்....!
» கமல் தமிழகத்தை விட்டு வெளியேறினால் ரேஷன் கார்டை ஒப்படைத்துவிடுவோம்- இது கமல் ரசிகர்கள்
» மோகன், அஜித்துக்கு பாடிய பின்னணிப் பாடகர் கமல்; கமல் 61 ஸ்பெஷல்!
» போர்க்கப்பலில் ராஜீவ் காந்தி பயணம்: மோடி குற்றச்சாட்டுக்கு ராகுல் காந்தி பதில்
» மதுரையும் துணுக்கு செய்திகளும்....!
» கமல் தமிழகத்தை விட்டு வெளியேறினால் ரேஷன் கார்டை ஒப்படைத்துவிடுவோம்- இது கமல் ரசிகர்கள்
» மோகன், அஜித்துக்கு பாடிய பின்னணிப் பாடகர் கமல்; கமல் 61 ஸ்பெஷல்!
» போர்க்கப்பலில் ராஜீவ் காந்தி பயணம்: மோடி குற்றச்சாட்டுக்கு ராகுல் காந்தி பதில்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|