புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 யூகங்களோடு வாழுங்கள்.. யூகங்கள் ஜாக்கிரதை...! (தொடரும்) Poll_c10 யூகங்களோடு வாழுங்கள்.. யூகங்கள் ஜாக்கிரதை...! (தொடரும்) Poll_m10 யூகங்களோடு வாழுங்கள்.. யூகங்கள் ஜாக்கிரதை...! (தொடரும்) Poll_c10 
5 Posts - 63%
heezulia
 யூகங்களோடு வாழுங்கள்.. யூகங்கள் ஜாக்கிரதை...! (தொடரும்) Poll_c10 யூகங்களோடு வாழுங்கள்.. யூகங்கள் ஜாக்கிரதை...! (தொடரும்) Poll_m10 யூகங்களோடு வாழுங்கள்.. யூகங்கள் ஜாக்கிரதை...! (தொடரும்) Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
 யூகங்களோடு வாழுங்கள்.. யூகங்கள் ஜாக்கிரதை...! (தொடரும்) Poll_c10 யூகங்களோடு வாழுங்கள்.. யூகங்கள் ஜாக்கிரதை...! (தொடரும்) Poll_m10 யூகங்களோடு வாழுங்கள்.. யூகங்கள் ஜாக்கிரதை...! (தொடரும்) Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

யூகங்களோடு வாழுங்கள்.. யூகங்கள் ஜாக்கிரதை...! (தொடரும்)


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 05, 2019 4:51 pm



மழை வருமா? வராதா? இந்தத் தேர்தலில் ஜெயிக்கப்
போவது இவரா? அவரா? நல்ல காலம் பிறக்குமா?
பிறக்காதா? இப்படி நூற்றுக்கணக்கான கேள்விகளும்
அதற்கு மெல்ல மனம் முணுமுணுக்கும் பதில்களுமாகத்
தான் வாழ்க்கை நகர்கிறது.

பதில்கள் திட்டவட்டமான கணக்குகளாகவோ, தீர்க்கமான
கண்டுபிடிப்புகளாகவோ இருப்பதில்லை. யூகம்... வெறும்
யூகம்... யூகமாகி விடுகிறது. யூகங்களில் பல நமது
நப்பாசைகளின் மாறுவேடங்கள். மன விழைவுகளின்
புனைபெயர்கள்.

இப்படி தவறாக யூகிப்பவர்கள் பலர் என்றாலும், சரியாக
யூகிப்பவர்கள் சமூகத்தால் மிகவும் மதிக்கப்படுகிறார்கள்.
வாய்பிளந்து பார்க்கப்படுகிறார்கள். சிலநேரங்களில்
வணங்கக் கூடப் படுகிறார்கள்.

இராமாயணத்தில் சீதையை இழந்து இராம, இலட்சுமணர்கள்
வில்லும் கையுமாகக் கிட்கிந்தை நோக்கி வரும் காட்சி.
மலையிடுக்கில் இருந்து எட்டிப்பார்த்த வானரங்கள்
சுக்ரீவன், அனுமன், நீலன் ஆகிய சிலர். "ஐயோ.. ஆபத்து ..
வாலியின் ஆள் வருகிறான்' என்று ராமனை எமனாக, எதிரியாக
யூகித்து ஓடப் பார்த்தான் சுக்ரீவன்.

ஆனால் மதியூகி அனுமனோ, "அவசரப்படாதீர்கள்... இவன்
நல்லவன் போல் தெரிகிறது. பலசாலி, கண்களில் கருணை
இருக்கிறது... ஆனால் எதையோ இழந்து விட்டு (சீதையை!)
இருபக்கமும் துருவித் துருவி தேடுகிறான்'' என்று பேசுகிறான்.

எப்படி இப்படி யூகிக்க முடிகிறது. துல்லியமாக...
வெகுதுல்லியமாக? மிகமிகச் சரியாக... இரகசியம் சொல்கிறேன்.
மனத்தை ஆள்கிறவனுக்குத் தான் இது நடக்கும்.

இதை விட அற்புதம்... இலங்கையில் சீதையைத் தேடுகிறான்
அனுமன். உறங்கிக் கொண்டிருந்த இராவணனை உற்றுப்
பார்த்துவிட்டு, "ஆஹா... அன்னை சீதை உயிருடன் இருக்கிறாள்,
அதுவும் கற்புடன் தான் இருக்கிறாள்'' என்று கண்டு கொண்டானாம்.

அடே பாவி.. என்ன மதி நுட்பம்.. அனுமானம் பாருங்கள்.
அனுமானத்தில் கெட்டிக்காரன் ஆனதால் அனுமான் இவன்
எனப்பட்டானோ? ஒரு வேடிக்கைக்காகச் சொன்னேன். எப்படி
இப்படி யூகித்தான் அனுமன்? அவன் பார்த்த போது பெருமூச்சு
விடுகிறான் இராவணன்...

உயிரை அம்மியில் வைத்து அரைப்பது போல மூச்சு மூச்சு போய்
போய் வருகிறது. இவன் பார்க்கும்போது பெருமூச்சு விடுவதால்
இவனால் சீதையை அடைய முடியவில்லை... அதனால் உண்டான
விரக தாபத்தால் பெருமூச்சு விடுகிறான். எனவே அவள் கற்புடன்
தான் இருக்கிறாள் என்று உறுதிப்படுத்திக் கொண்டானாம்...

"ஆவியை உயிர்ப்பென்றோதும் அம்மியிட்டு அரைக்கின்றானால்'
என்று பாட்டு வரும். இப்படி துல்லியமாக யூகிப்பவர்கள் வாழ்வில்
வெற்றிமேல் வெற்றி பெறுவது சுலபம் தான். முன்னேறுவது
எளிதுதான்.
-
---------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 05, 2019 4:54 pm



நமது குழந்தைக் காலத்தில் படித்த கதைகளின்
கதாநாயகர்கள் தெனாலி ராமன், அப்பாஜி, அவந்தி, முல்லா
எல்லோருமே மதியூகிகளாகவே சொல்லப் பட்டார்கள்.

ஏன்? குழந்தைகள் இவர்களைப் போல ஒன்றிலிருந்து
ஒன்றை யூகிக்கக் கற்றால் தான் வேக வேகமாகக் கற்று
வளரமுடியும் என்று சமூகம் நம்பியது. எல்லாவற்றையும்
இன்னொருவர் சொல்லி கொடுத்துவிட முடியுமா?

அதனால்தான் குழந்தைகளுக்கு இத்தகைய யூகிக்கும்
அறிவாளிகளின் கதைகள் திரும்பத் திரும்பச் சொல்லப்
பட்டன. பெற்றோர்கள் மட்டும் குழந்தைகளை
வளர்ப்பதில்லை. அவர்கள் சொல்லும் கதைகளும்
வளர்க்கின்றன.

பேச்சாளர்களுக்கு, எதிரில் இருக்கும் அமுக்கராகிழங்கு
மகாஜனங்கள் நம்மைப்பற்றி இப்போது என்ன
நினைக்கிறார்கள் என்று யூகிக்கத் தெரிய வேண்டும்.

இல்லை என்றால் பெருத்த அவமானம் அடைய நேரும்.
பேச்சாளர்கள் என்றில்லை... பயணங்கள், திருமணங்கள்...
போன்றவற்றில் மற்றவருடன் உரையாடுகிறவர்கள்
எதிரில் இருப்பவர் என்ன நினைக்கிறார்...

இதே விஷயத்தைத் தொடரலாமா? பேச்சை
(CONVERSATION) இத்துடன் துண்டிப்பது நல்லதா?
என்றெல்லாம் முடிவெடுக்க, யூகிக்கும் கலையில்
வல்லமை பெறுவது நல்லது. ஆனால் யூகம் என்பது
முயன்றும் பயின்றும் வரக்கூடிய பாடத்திட்டம் அன்று.

இயல்பான பரிசளிப்பு அது. பிறவிக் கொடை. இயற்கை
தெய்வத்தின் இனிய ப்ரசாதம் அது.

உண்மையில் யூகம் என்பது உங்கள் மனதின் பாஷை..
ஆனால் அது அறிவின் மொழிபோல் பேசப்படும். தமிழ்
மட்டுமே படித்த சிலர் தமிழ் மாதிரியே ஆங்கிலம்
பேசுவார்கள். இந்திக்காரர்கள் இந்தி மாதிரியே தமிழ்
பேசுவார்கள்.

அது போல் அறிவு மாதிரியே மனம் பேசும் ஆபூர்வ
பாஷைதான் யூகம். கவனம், யூகங்கள் பிழையாகப்
போக எப்போதும் வாய்ப்புண்டு.

அதனால் நம் யூகங்களை உறுதிப்பட பேசி, வெளிப்படுத்தி
பலரது பகையைப் பரிசாகப் பெறக் கூடாது. அது நம்
சுயஜாக்கிரதைக்கான உபகரணம். யூகத்தைத் திட்ட
வட்டமான மொழிகளில் பேசி உதை வாங்கக் கூடாது.

உறவை அறுத்துவிடக் கூடாது. நமக்கு நாமே எச்சரிக்கை
செய்ய மட்டுமே யூகத்தை உபயோகப்படுத்த வேண்டும்.

மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்கள், இன்ஷ்யூரன்ஸ்
முகவர்கள், எதற்கோ ஆள்பிடிக்க அலைபவர்கள்,
ஆலோசனைகள் வழங்கும் மருத்துவ, உளவியல்
ஆலோசகர்கள்... இவர்கள் எல்லார்க்குமே யூகிக்கும்
ஆற்றல் வெகு அவசியம்.

--------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 05, 2019 5:04 pm


முன்னுரைக்கு யூகம் பயன்படும். ஆனால் முடிவுரைக்குப் பயன்படாது என்பது என் தாரகமந்திரம். ஒரு விஷயத்தை அலச, ஆராய, ஆரம்பிக்க, காய்நகர்த்த மட்டுமே யூகம் பயன்படும். தீர்மானிக்க, தீர்ப்பெழுத தண்டிக்க யூகம் பயன் தாராது. இந்த விவேகத்தோடு யூகங்களைக் கையாள வேண்டும். யூகங்கள் உள்ளாடைகளைப் போல.. உள்ளே அவசியம்.. வெளியே தெரிந்தால் அநாகரிகம்.

பேச்சுலகில் நகைச்சுவை சக்ரவர்த்தி பேராசிரியர் சித்சபேசன் , ஒரு சம்பவம் சொல்வார். பட்டிமன்றப் பேச்சாளர்கள் சிலரைத் தமது காரில் ஏற்றிக் கொண்டு காரை அவரே ஓட்டிச் செல்வது அவருக்குப் பிடித்த விஷயம். அப்படி ஒருமுறை கார் ஓட்டும்போது ஒரு ரயில்வே கேட்டில் வண்டி நின்றது.

ஒரு பிச்சைக்காரர் யாசகம் கேட்டு கார் கண்ணாடியைத் தட்டவும் ஐந்து ரூபாய் போட்டார் ஓட்டுநர் இருக்கையில் இருந்த பேராசிரியர் சித்சபேசன். யாசகரோ அதிக ஆசையுடன் காரின் பின் கதவையும் தட்டினார். பின் இருக்கையில் இருந்த ஒரு பேச்சாளர், "அவர்தான் போட்டுட்டாரில்லையா... நீங்க போக வேண்டியதுதானே?'' என்று பிச்சைக்காரரைக் கடுங்குரலில் கண்டித்தார்.

பிச்சைக்காரரோ... "அந்த ஆளு வெறும் டிரைவர்.. அவரே அஞ்சு ரூபா போட்டார்னா பின்னால இருக்கிற பெரிய மனுசன் நீ பத்து ரூபாயாவது போட வேணாமா? வெள்ளையும் சொள்ளையுமா போட்டுகிட்டு உட்காந்திருக்கியே. என்னா முதலாளி நீ? கஞ்சப்பய...'' என்று சொல்லிவிட்டார்.

முன்னால் இருக்கும் முதலாளியை டிரைவர் என்றும் பின்னால் இருப்பவரைப் பெரிய மனிதர் என்றும் யூகித்தது தவறல்ல...
ஆனால் அதை வெளிப்படுத்தி அவமானப்படக்கூடாது என்கிறேன். யூகங்கள் சரியாக இருக்க எவ்வளவு வாய்ப்புண்டோ,
அவ்வளவு தவறாக இருக்கவும் வாய்ப்புண்டு என்று கவனமாகப் பேச வேண்டும்.

பள்ளிக்கூடம் புதிதாகப் போய் வந்த நம்வீட்டுக் குழந்தைகள் பாதி சரியாகவும் பாதி பிழையாகவும். உளறுவதுபோல மனமும் அறிவும் கலந்து பேசும் மொழியே யூகம். சில சமயங்களில் அது மழலை உளறல் என்பதைக் கடந்த ஞானப் பொறியாகவும் வெளிப்படும்.

மனதும் அறிவும் உரசும் போது ஒரு ஞானப்பொறி பறக்கும். அப்படி மிகச் சரியான யூகங்களும் பொறியாக வெளிப்படுவதுண்டு. அவை தவறுவதில்லை
-
---------------.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 05, 2019 5:05 pm


நீ... நான்... நிஜம்! -10

-
------------------------------

நிறைய நாட்கள் தியானம் பழகப்பழக யூகங்கள் சரியாக வெளிப்பட வாய்ப்புண்டு. அதிக மெüனம் பழகினாலும் யூகம் துல்லியமாக இருக்கும். ஆழமாக மூச்சு விடும் பழக்கம், மனம் குவிய உதவும் யோசனைகள். புருவ மத்தியில் தன்னை நிறுத்தும் துரியநிலைப் பயிற்சியில் பழக்கப்பட்டவர்கள் சட்டென்று சில விஷயங்களை யூகிப்பார்கள். மிகப் பிரமாதமாக "ஒழுக்க சீலர் ஆஹா... ஓஹோ' என்று புகழப்பட்ட சிலரைப் பார்த்த விநாடிகளில் இவர் வெளிவேஷக்காரர் என்று எனக்குள் பல்லியடிக்கும்.

நான் எச்சரிக்கை அடைவேனே ஒழிய அவரைப் பற்றி எவரிடமும் எதுவும் பரிமாறிக் கொள்ள மாட்டேன். சரியான முறையில் அதை ஊர்ஜிதம் செய்து கொண்டு ஒதுங்கி விடுவேன். ஆனால் யூகங்களை ஜம்பமடித்து சிக்கலில் மாட்டிக் கொள்ள எனக்கு விருப்பமில்லை.

உங்கள் யூகங்கள் சரியா என்பதற்கு ஒரே ஓர் அளவு கோல் உண்டு. மனம் எதை முன்மொழிகிறதோ அது யூகமன்று. மனம் முன்மொழிவதை அறிவும் வழிமொழிய வேண்டும். அதைவிட முக்கியம் உங்கள் அறிவு முன்மொழியும் ஒன்றை மனம் வழிமொழிய வேண்டும்.

அந்த யூகங்கள் தவற வாய்ப்பில்லை. என்றாலும் அதை உங்களுக்குள் மட்டுமே வைத்துக் கொள்ளுங்கள். பலருடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள் என்று எச்சரிக்கிறேன். யூகிப்பதில் வல்லவன் என்று நான் சொன்ன அனுமான் இராவணன் மனைவி மண்டோதரியைப் பார்த்துவிட்டு சீதையோ என்று ஒரு கணம் யூகித்துத் தடுமாறுகிறான்.

அதன்பின் காரண காரிய அறிவைப் பயன்படுத்தி இல்லை என்று தெளிவுக்கு வருகிறான். எனவே எத்தனை பெரிய மதியூகியும் தவறான யூகங்களால் தடுமாற நேரும் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

மகாத்மாகாந்தி இலங்கை சென்றிருந்தார். உடன் வந்திருந்த கஸ்தூர்பாவை அவரது தாயார் என்று ஒருவர் எண்ணிக் கொண்டார். வரவேற்புரையிலும் அவ்வாறே குறிப்பிட்டார். சபை துணுக்குற்றது. காந்தி சிரித்தபடி, "அவளும் நானும் கணவன் மனைவி என்கிற உறவு முறையிலிருந்து விலகி தாயும் பிள்ளையுமாகிவிட்டது இவருக்கு எப்படியோ தெரிந்துவிட்டது'' என்றாராம். தவறான யூகங்களில் சின்னச் சின்ன சிக்கல்கள் வந்தால் சரிசெய்து விடலாம்.

இதற்கு மாறாக இருவருக்கிடையிலான தூய உறவைக்கூட தவறாக யூகித்து நெருப்பை வாரி இறைத்துக் கொண்டு பொசுங்கிய குடும்பங்களை நான் அறிவேன். நாயை வாசலில் கட்டிக் காவல் செய்கிற மாதிரி யூகங்களை ஓர் எல்லையில் நிறுத்தி ஜாக்கிரதையாக வாழுங்கள்..

ஆனால் யூகங்களோடு வாழுங்கள்.. யூகங்கள் ஜாக்கிரதை...!
-
-------------------------------------
நன்றி- சுகிசிவம்
தினமணி



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக