ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதி மன்ற செய்திகள்.

2 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

நீதி  மன்ற செய்திகள். - Page 3 Empty நீதி மன்ற செய்திகள்.

Post by சிவனாசான் Sun Mar 03, 2019 8:34 pm

First topic message reminder :

புதடில்லி:'அடிப்படை சம்பளத்துடன், சிறப்பு படியைச் சேர்த்து, அதன் அடிப்படையில், பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதிக்கான தொகை பிடித்தம் செய்யப்பட வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஊழியர்களுக்கு, நிறுவனம் வழங்கும் அடிப்படை சம்பளத்தில், சிறப்பு படியையும் சேர்த்து, வருங்கால வைப்பு நிதிக்கான தொகை, மாதம்தோறும் பிடித்தம் செய்ய வேண்டும்' என, வருங்கால வைப்பு நிதி கமிஷனர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.இந்த உத்தரவை எதிர்த்து சில நிறுவனங்கள், மேற்கு வங்க உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.
இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், 'ஊழியருக்கு நிறுவனம் வழங்கும் சிறப்பு படியை, அடிப்படை சம்பளத்தில் சேர்த்து, வருங்கால வைப்பு நிதிக்கான தொகையை பிடிக்கக் கூடாது' என உத்தரவிட்டது.இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேற்குவங்க மண்டல வருங்கால வைப்பு நிதி கமிஷனர், மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.பல நிறுவனங்கள் சார்பிலும், சிறப்பு படியை, அடிப்படை சம்பளத்தில் சேர்த்து, வருங்கால வைப்பு நிதிக்கான தொகையை பிடித்தம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இவற்றின் மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவீன் சின்ஹா அடங்கிய அமர்வு முன் நடந்தது.விசாரணை முடிவில், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விபரம்:ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன், சம்பந்தப்பட்ட நிறுவனம் வழங்கும் சிறப்பு படியையும் சேர்த்தே, வருங்கால வைப்பு நிதிக்கான தொகையை பிடித்தம் செய்ய வேண்டும். சிறப்பு படி என்பதை, சம்பளத்தின் ஒரு பகுதியாகவே கருத வேண்டும்.ஊழியருக்கு, சிறப்பு படிகள் எதற்காக வழங்கப்படுகின்றன என்பதை, மனு தாக்கல் செய்த நிறுவனங்கள் தெரிவிக்கவில்லை. எனவே, அவர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப் படுகின்றன. அடிப்படை சம்பளத்துடன், சிறப்பு படியைச் சேர்த்து, அதன் அடிப்படையில், பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதிக்கான தொகை பிடித்தம் செய்யப்பட வேண்டும்இவ்வாறு, நீதிபதிகள் கூறினர்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down


நீதி  மன்ற செய்திகள். - Page 3 Empty Re: நீதி மன்ற செய்திகள்.

Post by சிவனாசான் Mon Mar 11, 2019 9:08 pm

சென்னை : கோர்ட் அவமதிப்பு வழக்கில் மதுரை மாநகராட்சி கமிஷனருக்கு ஒரு வாரம் சிறை தண்டனை மற்றும் ரூ.5000 அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. 2016 ம் ஆண்டு சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த தவறிய மதுரை மாநகராட்சிக்கு எதிராக கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரன், கோர்ட் உத்தரவை அமல்படுத்தாமல், மதுரை மாநகராட்சி கமிஷனர், கோர்ட் அவமதிப்பு குற்றம் புரிந்துள்ளது நிரூபணமாகியுள்ளது. எனவும், இதற்கு தண்டனை வழங்காமல் இருந்தால் தவறான முன்னுதாரணமாகிவிடும் எனக் கூறி, ஒரு வார சிறையும், ரூ.5000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

நீதி  மன்ற செய்திகள். - Page 3 Empty Re: நீதி மன்ற செய்திகள்.

Post by சிவனாசான் Tue Mar 12, 2019 8:17 pm

புதுடில்லி, 'பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில், மத்திய அரசு நிறைவேற்றியுள்ள சட்டத்தை எதிர்க்கும் வழக்கை, அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்து, மார்ச் 28ல் முடிவு செய்யப்படும்' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில், புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது; இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில்பலவழக்குகள்தாக்கல்செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில், காங்., ஆதரவு தொழிலதிபர் தெஹ்சீன் புனேவாலா, இந்த சட்டத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளார். மத்திய அரசின் சட்டத்துக்கு தடை விதிக்க, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே மறுத்துள்ளது.இந்த வழக்கு, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'இந்த வழக்கை, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும்' என, மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.இது குறித்து, வரும், 28ல் விசாரிப்பதாக, அமர்வு கூறியுள்ளது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

நீதி  மன்ற செய்திகள். - Page 3 Empty Re: நீதி மன்ற செய்திகள்.

Post by சிவனாசான் Tue Mar 12, 2019 8:19 pm

புதுடில்லி, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான, சிதம்பரத்துக்கு எதிரான, ஐ.என்.எக்ஸ்., மீடியா தொடர்பான வழக்கில், கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய, சி.பி.ஐ.,க்கு, டில்லி உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.கடந்த, காங்., ஆட்சியில், ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்திற்கு, அன்னிய முதலீட்டு வாரியம் சட்டவிரோதமாக அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்குகளை, அமலாக்கத் துறையும், சி.பி.ஐ.,யும், தனித் தனியாக விசாரிக்கின்றன.இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில், சிதம்பரம், கார்த்தி பெயர்கள் சேர்க்கப்பட்டன. இருவரையும் கைது செய்ய, ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு இருந்தது.இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி, சிதம்பரம் சார்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான உத்தரவை, உயர் நீதிமன்றம் ஏற்கனவே ஒத்தி வைத்திருந்தது.இந்நிலையில், நீதிபதி சுனில் கவுர் முன், இந்த மனு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ., சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் கிடைத்த சில கூடுதல் ஆவணங்களை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிஉள்ளது; அதற்கு அனுமதி தேவை' என, வாதிட்டார்.இதையடுத்து, கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய, சி.பி.ஐ., தரப்புக்கு அனுமதி அளித்து, நீதிபதி உத்தரவிட்டார்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

நீதி  மன்ற செய்திகள். - Page 3 Empty Re: நீதி மன்ற செய்திகள்.

Post by சிவனாசான் Wed Mar 13, 2019 8:30 pm

புதுடில்லி: மாநில போலீஸ் டிஜிபிக்கள் நியமனம் தொடர்பாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது.
அதில், போலீஸ் அதிகாரிகள் ஓய்வு பெற 6 மாதம் பணிக்காலம் இருந்தாலும், பணி மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யலாம் எனக்கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2 ஆண்டுகள் பணிக்காலம் இருந்தால் மட்டுமே டிஜிபியாக நியமிக்கலாம் என உத்தரவு பிறப்பித்திருந்தது.சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பில், போலீஸ் டிஜிபிக்களை மாநில அரசுகள் சுயமாக நியமிக்க முடியாது. யுபிஎஸ்சி மட்டுமே நியமிக்க முடியும் என கூறியுள்ளது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

நீதி  மன்ற செய்திகள். - Page 3 Empty Re: நீதி மன்ற செய்திகள்.

Post by சிவனாசான் Wed Mar 13, 2019 8:33 pm

மதுரை:மாணவியரை தவறான பாதைக்கு அழைத்ததாக, கைது செய்யப்பட்ட, அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஓராண்டுக்கு பின், உயர் நீதிமன்ற மதுரை கிளை, ஜாமின் வழங்கியது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லுாரி உதவி பேராசிரியை, நிர்மலா தேவி. மாணவியர் சிலரை தவறான பாதைக்கு அழைத்ததாக, 'வாட்ஸ் ஆப் ஆடியோ' வெளியானது. 2018 ஏப்., 17ல் நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார்.இதைத் தொடர்ந்து, மதுரை காமராஜ் பல்கலை உதவி பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர்.முருகன், கருப்பசாமிக்கு உச்ச நீதிமன்றம் சில நாட்களுக்கு முன் ஜாமின் அனுமதித்தது. நிர்மலா தேவியின் ஜாமின் மனுவை, ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்றம் பலமுறை தள்ளுபடி செய்தது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, 2018 அக்டோபரில் தள்ளுபடி செய்தது. ஜாமின் அனுமதிக்கக்கோரி மீண்டும் உயர் நீதிமன்றக் கிளையில் மனு செய்தார்.நீதிபதி எம்.தண்டபாணி நேற்று காலை விசாரித்தார்.அரசு வழக்கறிஞர், 'மனுதாரருக்கு ஜாமின் அனுமதிக்கக்கூடாது' என ஆட்சேபித்தார்.அவரிடம் நீதிபதி எழுப்பிய கேள்வி:இந்நீதிமன்ற முதன்மை அமர்வில், இவ்விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, ஜாமின் அனுமதிப்பது பற்றி அரசுத் தரப்பில் தெரிவித்த நிலைப்பாட்டிற்கும், தற்போதைய நிலைப்பாட்டிற்கும் வேறுபாடு உள்ளது.ஏன் அரசுத் தரப்பில் மாறி, மாறி பேசுகின்றீர்கள்? ஏன் மனுதாரரை இவ்வளவு காலம் தேவையின்றி சிறையில் வைத்துள்ளீர்கள்? இதில், உங்களுக்கு எதுவும் அச்சம் உள்ளதா?இவ்வாறு கேட்டார்.இது தொடர்பாக, விசாரணை அதிகாரியிடம் விபரம் கோர வேண்டி உள்ளது என, அரசு வழக்கறிஞர் கூறினார்.இதன் பின், பகல், 2:15 மணிக்கு நீதிபதி, எம்.தண்டபாணி மீண்டும் விசாரித் தார்.அரசு வழக்கறிஞர், 'மனுதாரருக்கு ஜாமின் அனுமதிக்க ஆட்சேபம் இல்லை' என்றார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:இவ்வழக்கில் விசாரணை முடிந்து, கீழமை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரண்டு பேருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் அனுமதித்துள்ளது. எனவே மனுதாரருக்கு ஜாமின் அனுமதிக்கப்படுகிறது.தேவைப்படும்போது, விசாரணைக்கு மனுதாரர் ஒத்துழைக்க வேண்டும். வழக்கு தொடர்பாக ஊடகங்கள் மற்றும் தனிநபர்களிடம் மனுதாரர் எவ்வித கருத்தும் தெரிவிக்கக்கூடாது.இவ்வாறு உத்தரவில் கூறினார்.நீதிபதிகள் விசாரணைநேற்று முன்தினம் மனுதாரர் வழக்கறிஞர், 'நிர்மலாதேவியை சந்திக்க அவரது வழக்கறிஞருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால, சட்டரீதியான உதவிகள் தடுக்கப்படுகின்றன' என்றார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'நிர்மலா தேவியை போலீசார் இந்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். அவரிடம், நீதிபதிகளின் தனி அறையில் விசாரணை நடத்தப்படும்' என்றனர்.நேற்று மதுரை மத்திய சிறையிலிருந்து நிர்மலாதேவி, மதியம், 12:55 மணிக்கு அழைத்து வரப்பட்டாள். முதலாவது நீதிமன்ற அறையுடன் இணைந்த நிர்வாக நீதிபதியின், தனி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.அவரிடம், நீதிபதிகள், என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு, விசாரித்தது. பின், சிறைக்கு நிர்மலாதேவி கொண்டு செல்லப்பட்டார்.உயர் நீதிமன்றம் ஜாமின் அனுமதித்த உத்தரவு நகல் சிறை நிர்வாகத்திடம் கிடைக்கப் பெற்ற பின், உரிய நடைமுறைகளை பின்பற்றி வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவார்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

நீதி  மன்ற செய்திகள். - Page 3 Empty Re: நீதி மன்ற செய்திகள்.

Post by சிவனாசான் Fri Mar 15, 2019 9:06 pm

இரட்டை இலை சின்னம்: தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
புதுடில்லி: இரட்டை இலை சின்னம் முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., தரப்புக்கு ஒதுக்கியது சரி என சில நாட்களுக்கு முன்னர் டில்லி ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியது.இதனை எதிர்த்து தினகரன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். டில்லி ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இரட்டை இலை சின்னம் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.,சுக்கு ஒதுக்கப்பட்டதற்கு தடை விதிக்க மறுத்ததுடன், தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது குறித்து பதிலளிக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டுள்ளது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

நீதி  மன்ற செய்திகள். - Page 3 Empty Re: நீதி மன்ற செய்திகள்.

Post by சிவனாசான் Sat Mar 16, 2019 8:16 pm

சென்னை:மருத்துவ செலவு வழங்க மறுத்த காப்பீடு நிறுவனம், வாடிக்கையாளருக்கு, 57 ஆயிரம் ரூபாய் வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.அம்பத்துார், வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர், பழனி. இவர், வாகன விபத்தில் கால் அடிபட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு நட்ட ஈடு வழங்கி உள்ளது...
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

நீதி  மன்ற செய்திகள். - Page 3 Empty Re: நீதி மன்ற செய்திகள்.

Post by சிவனாசான் Sat Mar 16, 2019 8:18 pm

புதுடில்லி:தமிழகத்தில், இடைத்தேர்தல் நடக்கவுள்ள, 18 சட்டசபைத் தொகுதிகளுடன், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கும், இடைத் தேர்தல் அறிவிக்கக் கோரி, தி.மு.க., தாக்கல் செய்த மனு குறித்து, இரு வாரங்களில் முடிவெடுக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'லோக்சபா தேர்தல், ஏழு கட்டமாக நடத்தப்படும்' என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில், ஏப்., 18ல், லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. 'இத்துடன், 18 சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடக்கும்' என, தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இருப்பினும், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகள் தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறி, அங்கு, 'இந்த தொகுதிகளில், தற்போது தேர்தல் நடத்தப்படாது' என, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இதை எதிர்த்து, தி.மு.க., சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:தமிழகத்தில், இடைத் தேர்தல் நடக்கும், 18 தொகுதிகளுடன், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இந்த தொகுதிகள், நீண்ட காலமாக காலியாக உள்ளன.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், எஸ்.ஏ.பாப்டே, அப்துல் நஸீர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, தி.மு.க., சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, வில்சன் ஆகியோர், 'தமிழகத்தில், ஏப்., 18ல், மூன்று தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்த முடியாவிட்டால், நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள, ஏழு கட்ட தேர்தல் தேதிகளுக்குள், அவற்றுக்கு தேர்தல் நடத்தலாமே' என, வாதிட்டனர்.தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், 'தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப் படாத, மூன்று சட்டசபைத் தொகுதிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்க, அவகாசம் தேவைப் படுகிறது' என்றார்.இருதரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விபரம்:
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், மூன்று தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த முடியாது எனக் கூறுவது, பொறுப்பை தட்டிக்கழிப்பது போல் உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, இரு வாரங்களில் தேர்தல் ஆணையம் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

நீதி  மன்ற செய்திகள். - Page 3 Empty Re: நீதி மன்ற செய்திகள்.

Post by சிவனாசான் Sat Mar 16, 2019 8:21 pm

புதுடில்லி,: ஓட்டுப்பதிவு இயந்திரங்களின், ஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரி, 21 எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மனு தொடர்பாக, தேர்தல் ஆணையத்துக்கு, உச்ச நீதிமன்றம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கட்டணி, 2014ல் ஆட்சி அமைத்தது. அதன்பின் நடந்த, பல மாநில சட்டசபை தேர்தல்களில் பெரும்பாலானவற்றில், பா,.ஜ., அமோக வெற்றி பெற்றது.இதையடுத்து, 'மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்து, பா.ஜ., வெற்றி பெறுகிறது' என, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.இதையடுத்து, ஓட்டுப்பதிவு இயந்திரங்களுடன், ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரத்தை இணைக்க, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது. இதன்படி, வாக்காளர்கள், தாங்கள் யாருக்கு ஓட்டளித்தோம் என்பதை, இந்த இயந்திரத்தில் உள்ள ஒப்புகை சீட்டு மூலம் தெரிந்து கொள்ள முடியும். ஆனால், இந்த ஒப்புகை சீட்டை, வாக்காளர்கள் எடுத்துச் செல்ல முடியாது.'ஓட்டு எண்ணிக்கையின்போது, ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள, ஏதாவது ஒரு ஓட்டுச் சாவடியில் உள்ள ஒப்புகை சீட்டுகள் மட்டும் எடுக்கப்பட்டு, அவையும் எண்ணப்படும்' என, தேர்தல் ஆணையம் அறிவித்தது.ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரங்கள், விரை வில் நடக்கவுள்ள லோக்சபா தேர்தல்களில் பயன்படுத்தப்பட உள்ளன.இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில், காங்கிரஸ், தி.மு.க., உட்பட, 21 கட்சிகள் சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 50 சதவீத ஓட்டுப் பதிவு இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை எண்ணும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடும்படி கோரப்பட்டிருந்தது. இந்த மனு, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோேகாய் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் உத்தரவிட்டிருந்ததாவது:ஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரும் மனு தொடர்பாக, பதில் அளிக்கக் கோரி, தேர்தல் ஆணையத்துக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்படுகிறது; இந்த வழக்கில் உதவுவதற்காக, மூத்த அதிகாரி ஒருவரை, தேர்தல் ஆணையம் நியமிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.விசாரணை, 25ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

நீதி  மன்ற செய்திகள். - Page 3 Empty Re: நீதி மன்ற செய்திகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum