Latest topics
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க? by ayyasamy ram Today at 7:33 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீதி மன்ற செய்திகள்.
2 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
நீதி மன்ற செய்திகள்.
First topic message reminder :
புதடில்லி:'அடிப்படை சம்பளத்துடன், சிறப்பு படியைச் சேர்த்து, அதன் அடிப்படையில், பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதிக்கான தொகை பிடித்தம் செய்யப்பட வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஊழியர்களுக்கு, நிறுவனம் வழங்கும் அடிப்படை சம்பளத்தில், சிறப்பு படியையும் சேர்த்து, வருங்கால வைப்பு நிதிக்கான தொகை, மாதம்தோறும் பிடித்தம் செய்ய வேண்டும்' என, வருங்கால வைப்பு நிதி கமிஷனர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.இந்த உத்தரவை எதிர்த்து சில நிறுவனங்கள், மேற்கு வங்க உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.
இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், 'ஊழியருக்கு நிறுவனம் வழங்கும் சிறப்பு படியை, அடிப்படை சம்பளத்தில் சேர்த்து, வருங்கால வைப்பு நிதிக்கான தொகையை பிடிக்கக் கூடாது' என உத்தரவிட்டது.இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேற்குவங்க மண்டல வருங்கால வைப்பு நிதி கமிஷனர், மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.பல நிறுவனங்கள் சார்பிலும், சிறப்பு படியை, அடிப்படை சம்பளத்தில் சேர்த்து, வருங்கால வைப்பு நிதிக்கான தொகையை பிடித்தம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இவற்றின் மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவீன் சின்ஹா அடங்கிய அமர்வு முன் நடந்தது.விசாரணை முடிவில், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விபரம்:ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன், சம்பந்தப்பட்ட நிறுவனம் வழங்கும் சிறப்பு படியையும் சேர்த்தே, வருங்கால வைப்பு நிதிக்கான தொகையை பிடித்தம் செய்ய வேண்டும். சிறப்பு படி என்பதை, சம்பளத்தின் ஒரு பகுதியாகவே கருத வேண்டும்.ஊழியருக்கு, சிறப்பு படிகள் எதற்காக வழங்கப்படுகின்றன என்பதை, மனு தாக்கல் செய்த நிறுவனங்கள் தெரிவிக்கவில்லை. எனவே, அவர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப் படுகின்றன. அடிப்படை சம்பளத்துடன், சிறப்பு படியைச் சேர்த்து, அதன் அடிப்படையில், பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதிக்கான தொகை பிடித்தம் செய்யப்பட வேண்டும்இவ்வாறு, நீதிபதிகள் கூறினர்.
புதடில்லி:'அடிப்படை சம்பளத்துடன், சிறப்பு படியைச் சேர்த்து, அதன் அடிப்படையில், பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதிக்கான தொகை பிடித்தம் செய்யப்பட வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஊழியர்களுக்கு, நிறுவனம் வழங்கும் அடிப்படை சம்பளத்தில், சிறப்பு படியையும் சேர்த்து, வருங்கால வைப்பு நிதிக்கான தொகை, மாதம்தோறும் பிடித்தம் செய்ய வேண்டும்' என, வருங்கால வைப்பு நிதி கமிஷனர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.இந்த உத்தரவை எதிர்த்து சில நிறுவனங்கள், மேற்கு வங்க உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.
இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், 'ஊழியருக்கு நிறுவனம் வழங்கும் சிறப்பு படியை, அடிப்படை சம்பளத்தில் சேர்த்து, வருங்கால வைப்பு நிதிக்கான தொகையை பிடிக்கக் கூடாது' என உத்தரவிட்டது.இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேற்குவங்க மண்டல வருங்கால வைப்பு நிதி கமிஷனர், மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.பல நிறுவனங்கள் சார்பிலும், சிறப்பு படியை, அடிப்படை சம்பளத்தில் சேர்த்து, வருங்கால வைப்பு நிதிக்கான தொகையை பிடித்தம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இவற்றின் மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவீன் சின்ஹா அடங்கிய அமர்வு முன் நடந்தது.விசாரணை முடிவில், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விபரம்:ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன், சம்பந்தப்பட்ட நிறுவனம் வழங்கும் சிறப்பு படியையும் சேர்த்தே, வருங்கால வைப்பு நிதிக்கான தொகையை பிடித்தம் செய்ய வேண்டும். சிறப்பு படி என்பதை, சம்பளத்தின் ஒரு பகுதியாகவே கருத வேண்டும்.ஊழியருக்கு, சிறப்பு படிகள் எதற்காக வழங்கப்படுகின்றன என்பதை, மனு தாக்கல் செய்த நிறுவனங்கள் தெரிவிக்கவில்லை. எனவே, அவர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப் படுகின்றன. அடிப்படை சம்பளத்துடன், சிறப்பு படியைச் சேர்த்து, அதன் அடிப்படையில், பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதிக்கான தொகை பிடித்தம் செய்யப்பட வேண்டும்இவ்வாறு, நீதிபதிகள் கூறினர்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: நீதி மன்ற செய்திகள்.
புதுடில்லி,: அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க, லோக்பால் அமைப்பு மற்றும் மாநில அளவில், லோக் ஆயுக்தா அமைப்பதற்கான சட்டம், 2013ல் நிறைவேற்றப்ட்டது.லோக்பால் அமைப்புக்கு, இதுவரை தலைவர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இந்தப் பணியிடங்களை நிரப்புவது குறித்து, உச்ச நீதிமன்றம், 2017, ஏப்., 27ல் தீர்ப்பு அளித்தது.ஆனாலும், 'இந்தப் பணியிடங்கள் நிரப்படவில்லை' என, 'காமன் காஸ்' எனப்படும், அரசு சாரா நிறுவனம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணையின்போது, 'உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான தேடுதல் குழு, பிப்., இறுதிக்குள், தன் பட்டியலை அளிக்க வேண்டும். அது குறித்து, பிரதமர் தலைமையிலான, நியமனக் குழு முடிவு எடுக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்த வழக்கு, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான, அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணுகோபால் கூறியதாவது:நீதிபதி, ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான தேடுதல் குழு, லோக்பால் அமைப்புக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான பட்டியலை தயாரித்துள்ளது. இது குறித்து, பிரதமர் தலைமையிலான நியமனக் குழு, விரைவில் கூடி முடிவு செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.'நியமன குழு கூட்டம் எப்போது நடக்கும் என்பது குறித்து, 10 நாட்களுக்குள் பதில் தாக்கல் செய்ய வேண்டும்' என, அமர்வு உத்தரவிட்டது.
இந்த வழக்கின் விசாரணையின்போது, 'உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான தேடுதல் குழு, பிப்., இறுதிக்குள், தன் பட்டியலை அளிக்க வேண்டும். அது குறித்து, பிரதமர் தலைமையிலான, நியமனக் குழு முடிவு எடுக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்த வழக்கு, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான, அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணுகோபால் கூறியதாவது:நீதிபதி, ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான தேடுதல் குழு, லோக்பால் அமைப்புக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான பட்டியலை தயாரித்துள்ளது. இது குறித்து, பிரதமர் தலைமையிலான நியமனக் குழு, விரைவில் கூடி முடிவு செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.'நியமன குழு கூட்டம் எப்போது நடக்கும் என்பது குறித்து, 10 நாட்களுக்குள் பதில் தாக்கல் செய்ய வேண்டும்' என, அமர்வு உத்தரவிட்டது.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: நீதி மன்ற செய்திகள்.
புதுடில்லி: ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என உத்தரவிட சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது. மேலும், இது குறித்து வழக்கை தள்ளுபடி செய்ததுடன், மனுதாரர் தேர்தல் ஆணையத்தை அணுகவும் உத்தரவிட்டது.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: நீதி மன்ற செய்திகள்.
புதுடில்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி ஆகியோரை கைது செய்வதற்கான தடையை மார்ச் 25 வரை நீட்டித்து டில்லி பாட்டியாலா கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: நீதி மன்ற செய்திகள்.
கோவை:அரசு பஸ்சில், வயதான தம்பதிக்கு, சலுகை அளிக்க மறுத்ததால், இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது.கோவை, கவுண்டம்பாளையம், ராஜிவ் நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம்,63; 2016, ஜூலை, 17ல், மதுரையிலிருந்து, கோவைக்கு அரசு விரைவு பஸ்சில், மனைவியுடன் பயணம் செய்தார்.
இதற்காக, நடத்துனரிடம், இரண்டு டிக்கெட் வாங்கினார்.ஒரு டிக்கெட் 155 ரூபாய் விகிதம் மொத்தம் 310 ரூபாய் நடத்துனர் பெற்றார். அப்போது சண்முகசுந்தரம், 'இருவரும் சீனியர் சிட்டிசன்கள். எங்களுக்கு பயண கட்டணத்தில், 10 சதவிகித சலுகை அளிக்க வேண்டும்' எனக்கேட்டார்.ஆனால், நடத்துனர் கட்டண சலுகை அளிக்க மறுத்தார். அவர்கள் பயணம் செய்த இருக்கையும் பழுதாகி இருந்தது.பாதிக்கப்பட்ட சண்முகசுந்தரம், கோவை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.
விசாரித்த நீதிமன்ற தலைவர் பாலச்சந்திரன் அளித்த தீர்ப்பில், சீனியர் சிட்டிசன்களுக்கு கட்டண சலுகை அளிக்க மறுத்தது, சேவை குறைபாடாகும். எனவே மனுதாரருக்கு, கூடுதலாக வாங்கி கட்டணம் 31 ரூபாயை திருப்பி செலுத்த வேண்டும். இழப்பீடாக 3,000 ரூபாய், செலவு தொகை 3.000 ரூபாய் வழங்க உத்தரவிட்டார்.
இதற்காக, நடத்துனரிடம், இரண்டு டிக்கெட் வாங்கினார்.ஒரு டிக்கெட் 155 ரூபாய் விகிதம் மொத்தம் 310 ரூபாய் நடத்துனர் பெற்றார். அப்போது சண்முகசுந்தரம், 'இருவரும் சீனியர் சிட்டிசன்கள். எங்களுக்கு பயண கட்டணத்தில், 10 சதவிகித சலுகை அளிக்க வேண்டும்' எனக்கேட்டார்.ஆனால், நடத்துனர் கட்டண சலுகை அளிக்க மறுத்தார். அவர்கள் பயணம் செய்த இருக்கையும் பழுதாகி இருந்தது.பாதிக்கப்பட்ட சண்முகசுந்தரம், கோவை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.
விசாரித்த நீதிமன்ற தலைவர் பாலச்சந்திரன் அளித்த தீர்ப்பில், சீனியர் சிட்டிசன்களுக்கு கட்டண சலுகை அளிக்க மறுத்தது, சேவை குறைபாடாகும். எனவே மனுதாரருக்கு, கூடுதலாக வாங்கி கட்டணம் 31 ரூபாயை திருப்பி செலுத்த வேண்டும். இழப்பீடாக 3,000 ரூபாய், செலவு தொகை 3.000 ரூபாய் வழங்க உத்தரவிட்டார்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: நீதி மன்ற செய்திகள்.
புதுடில்லி: சிறை கைதிகளுக்கு ஓட்டுரிமை அளிப்பது தொடர்பான வழக்கில், மத்திய அரசு மற்றும் தேர்தல் கமிஷனுக்கு, டில்லி உயர் நீதிமன்றம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: நீதி மன்ற செய்திகள்.
காஜியாபாத்: உ.பி மாநிலத்தில், கடத்தல் மற்றும் கற்பழிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட, ராஜூ என்பவனுக்கு கைது, 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது. 'ஐந்து மரக்கன்று களை நட்டால், அந்த உத்தரவு ரத்து செய்யப்படும்' என, நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, மரக்கன்றுகளை நட்டதற்கான ஆவணங்களை, நீதிமன்றத்தில் ராஜூ சமர்ப்பித்துள்ளான்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: நீதி மன்ற செய்திகள்.
சென்னை:மருத்துவமனை கட்டுவதாக, பல கோடி ரூபாய் பெற்று மோசடி செய்த நபருக்கு, முன் ஜாமின் வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, ஜவஹர்லால் நகரைச் சேர்ந்த, பிரகாஷ் என்பவருக்கு எதிராக, டாக்டர் கங்காதரன் என்பவர் அளித்த புகாரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில், முன் ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், பிரகாஷ் மனு தாக்கல் செய்தார்.முன் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, டாக்டர் கங்காதரன் தாக்கல் செய்த மனுவில், 'என்னிடம், நகைகள், பணம் என, 4.25 கோடி ரூபாய் பிரகாஷ் பெற்றார். பணத்தை திருப்பி கேட்ட போது, மிரட்டல் விடுத்தார். 'என்னை போன்று, வேறு சிலரையும் ஏமாற்றி உள்ளார். அவரை, போலீஸ் காவலில் எடுத்து, விசாரிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தது. முன் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, டாக்டர் கங்காதரன் சார்பில், வழக்கறிஞர்கள் அபுடுகுமார், வி.எஸ்.செந்தில்குமார் ஆகியோர் ஆஜராகினர்.போலீஸ் தரப்பில் ஆஜரான, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பிரபாவதி, ''உண்மை வெளிவர, பிரகாஷை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும்,'' என்றார். வழக்கறிஞர்களின் வாதங்களுக்கு பின், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில், 'குற்றத்தின் தன்மை கருதி, முன் ஜாமின் வழங்க முடியாது.'மனுதாரர் யார், யாரிடம் இருந்து, பணம் பெற்றுள்ளார் என்பதை கண்டுபிடிக்க, அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியதுள்ளது. அதனால், மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என, கூறப்பட்டுள்ளது.
சென்னை, ஜவஹர்லால் நகரைச் சேர்ந்த, பிரகாஷ் என்பவருக்கு எதிராக, டாக்டர் கங்காதரன் என்பவர் அளித்த புகாரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில், முன் ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், பிரகாஷ் மனு தாக்கல் செய்தார்.முன் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, டாக்டர் கங்காதரன் தாக்கல் செய்த மனுவில், 'என்னிடம், நகைகள், பணம் என, 4.25 கோடி ரூபாய் பிரகாஷ் பெற்றார். பணத்தை திருப்பி கேட்ட போது, மிரட்டல் விடுத்தார். 'என்னை போன்று, வேறு சிலரையும் ஏமாற்றி உள்ளார். அவரை, போலீஸ் காவலில் எடுத்து, விசாரிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தது. முன் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, டாக்டர் கங்காதரன் சார்பில், வழக்கறிஞர்கள் அபுடுகுமார், வி.எஸ்.செந்தில்குமார் ஆகியோர் ஆஜராகினர்.போலீஸ் தரப்பில் ஆஜரான, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பிரபாவதி, ''உண்மை வெளிவர, பிரகாஷை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும்,'' என்றார். வழக்கறிஞர்களின் வாதங்களுக்கு பின், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில், 'குற்றத்தின் தன்மை கருதி, முன் ஜாமின் வழங்க முடியாது.'மனுதாரர் யார், யாரிடம் இருந்து, பணம் பெற்றுள்ளார் என்பதை கண்டுபிடிக்க, அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியதுள்ளது. அதனால், மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என, கூறப்பட்டுள்ளது.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: நீதி மன்ற செய்திகள்.
மதுரை:அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லுாரி உதவி பேராசிரியையாக இருந்தவர் நிர்மலா தேவி. இவர் சில மாணவியரை தவறான பாதைக்கு அழைத்ததாக 'வாட்ஸ் ஆப் ஆடியோ'வெளியானது. 2018 ஏப்ரலில் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார்.பின் கைதான மதுரை காமராஜ் பல்கலை உதவிபேராசிரியர் முருகன், முன்னாள்ஆய்வுமாணவர்கருப்பசாமிக்குஉச்சநீதிமன்றம்ஜாமின்அனுமதித்தது.சி.பி.சி.ஐ.டி.,போலீசார் விசாரிக்கின்றனர். ஸ்ரீவில்லிபுத்துார் மகளிர் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி., போலீசார்இறுதி அறிக்கைதாக்கல் செய்தனர்.பிப்.,27 ல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, 'கீழமை நீதிமன்றத்தில்போலீசார் தாக்கல் செய்த இறுதி அறிக்கைஅடிப்படையில் மேல்நடவடிக்கை, விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது,' என உத்தரவிட்டது.ஜாமின் அனுமதிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நிர்மலா தேவி மனு தாக்கல் செய்துள்ளார். விரைவில் விசாரணைக்கு வரும்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: நீதி மன்ற செய்திகள்.
மதுரை:உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மற்றும் மதுரை நீதிமன்றத்தில் 'மெகா லோக் அதாலத்' மூலம் 25 கோடியே 58 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்கு உட்பட 892 வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டன. நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், ஜெ.நிஷாபானு, ஆர்.பொங்கியப்பன், ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஏ.ஆர்.ராமலிங்கம், ஆர்.கருப்பையா, பி.கோகுல்தாஸ் விசாரித்தனர்.74 வழக்குகளில் மனுதாரர், எதிர்மனுதாரர்கள் இடையே சமரசம் ஏற்பட்டது. 6 கோடியே 50 லட்சத்து 40 ஆயிரத்து 913 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அதிகபட்சமாக ஒரு வழக்கில் 90 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது.
மதுரை நீதிமன்றத்தில் 22 ஆயிரத்து 70 வழக்குகள் பட்டியலிடப்பட்டன. மாவட்ட முதன்மை நீதிபதி நஸிமா பானு, நீதிபதிகள் கணேசன், சத்தியமூர்த்தி, ராஜவேல், செங்கமலச் செல்வன், சுமதி, சந்திரசேகரன் விசாரித்தனர். 4,350 வழக்குகளில் மனுதாரர், எதிர்மனுதாரர்கள் இடையே சமரசம் ஏற்பட்டது. 19 கோடியே 7 லட்சத்து 60 ஆயிரத்து 183 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் பன்னீர்செல்வம் பங்கேற்றார்.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்கு உட்பட 892 வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டன. நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், ஜெ.நிஷாபானு, ஆர்.பொங்கியப்பன், ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஏ.ஆர்.ராமலிங்கம், ஆர்.கருப்பையா, பி.கோகுல்தாஸ் விசாரித்தனர்.74 வழக்குகளில் மனுதாரர், எதிர்மனுதாரர்கள் இடையே சமரசம் ஏற்பட்டது. 6 கோடியே 50 லட்சத்து 40 ஆயிரத்து 913 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அதிகபட்சமாக ஒரு வழக்கில் 90 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது.
மதுரை நீதிமன்றத்தில் 22 ஆயிரத்து 70 வழக்குகள் பட்டியலிடப்பட்டன. மாவட்ட முதன்மை நீதிபதி நஸிமா பானு, நீதிபதிகள் கணேசன், சத்தியமூர்த்தி, ராஜவேல், செங்கமலச் செல்வன், சுமதி, சந்திரசேகரன் விசாரித்தனர். 4,350 வழக்குகளில் மனுதாரர், எதிர்மனுதாரர்கள் இடையே சமரசம் ஏற்பட்டது. 19 கோடியே 7 லட்சத்து 60 ஆயிரத்து 183 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் பன்னீர்செல்வம் பங்கேற்றார்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: நீதி மன்ற செய்திகள்.
புதுடில்லி : லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு அறிவித்த, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் அறிவிப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இது மற்றொரு அமர்விற்கு மாற்றப்படலாமா வேண்டாமா என்பது குறித்து மார்ச் 28 ல் முடிவு செய்யப்படும் எனக் கூறிவழக்கைஒத்திவைத்துள்ளது.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» நீதி மன்ற செய்திகள்.
» நீதி மன்ற செய்திகள்.
» நீதி மன்ற செய்திகள்.
» நீதி மன்ற செய்திகள்.
» நீதி மன்ற செய்திகள்.
» நீதி மன்ற செய்திகள்.
» நீதி மன்ற செய்திகள்.
» நீதி மன்ற செய்திகள்.
» நீதி மன்ற செய்திகள்.
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|