Latest topics
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க? by ayyasamy ram Today at 7:33 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீதி மன்ற செய்திகள்.
2 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
நீதி மன்ற செய்திகள்.
புதடில்லி:'அடிப்படை சம்பளத்துடன், சிறப்பு படியைச் சேர்த்து, அதன் அடிப்படையில், பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதிக்கான தொகை பிடித்தம் செய்யப்பட வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஊழியர்களுக்கு, நிறுவனம் வழங்கும் அடிப்படை சம்பளத்தில், சிறப்பு படியையும் சேர்த்து, வருங்கால வைப்பு நிதிக்கான தொகை, மாதம்தோறும் பிடித்தம் செய்ய வேண்டும்' என, வருங்கால வைப்பு நிதி கமிஷனர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.இந்த உத்தரவை எதிர்த்து சில நிறுவனங்கள், மேற்கு வங்க உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.
இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், 'ஊழியருக்கு நிறுவனம் வழங்கும் சிறப்பு படியை, அடிப்படை சம்பளத்தில் சேர்த்து, வருங்கால வைப்பு நிதிக்கான தொகையை பிடிக்கக் கூடாது' என உத்தரவிட்டது.இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேற்குவங்க மண்டல வருங்கால வைப்பு நிதி கமிஷனர், மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.பல நிறுவனங்கள் சார்பிலும், சிறப்பு படியை, அடிப்படை சம்பளத்தில் சேர்த்து, வருங்கால வைப்பு நிதிக்கான தொகையை பிடித்தம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இவற்றின் மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவீன் சின்ஹா அடங்கிய அமர்வு முன் நடந்தது.விசாரணை முடிவில், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விபரம்:ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன், சம்பந்தப்பட்ட நிறுவனம் வழங்கும் சிறப்பு படியையும் சேர்த்தே, வருங்கால வைப்பு நிதிக்கான தொகையை பிடித்தம் செய்ய வேண்டும். சிறப்பு படி என்பதை, சம்பளத்தின் ஒரு பகுதியாகவே கருத வேண்டும்.ஊழியருக்கு, சிறப்பு படிகள் எதற்காக வழங்கப்படுகின்றன என்பதை, மனு தாக்கல் செய்த நிறுவனங்கள் தெரிவிக்கவில்லை. எனவே, அவர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப் படுகின்றன. அடிப்படை சம்பளத்துடன், சிறப்பு படியைச் சேர்த்து, அதன் அடிப்படையில், பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதிக்கான தொகை பிடித்தம் செய்யப்பட வேண்டும்இவ்வாறு, நீதிபதிகள் கூறினர்.
இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், 'ஊழியருக்கு நிறுவனம் வழங்கும் சிறப்பு படியை, அடிப்படை சம்பளத்தில் சேர்த்து, வருங்கால வைப்பு நிதிக்கான தொகையை பிடிக்கக் கூடாது' என உத்தரவிட்டது.இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேற்குவங்க மண்டல வருங்கால வைப்பு நிதி கமிஷனர், மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.பல நிறுவனங்கள் சார்பிலும், சிறப்பு படியை, அடிப்படை சம்பளத்தில் சேர்த்து, வருங்கால வைப்பு நிதிக்கான தொகையை பிடித்தம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இவற்றின் மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவீன் சின்ஹா அடங்கிய அமர்வு முன் நடந்தது.விசாரணை முடிவில், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விபரம்:ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன், சம்பந்தப்பட்ட நிறுவனம் வழங்கும் சிறப்பு படியையும் சேர்த்தே, வருங்கால வைப்பு நிதிக்கான தொகையை பிடித்தம் செய்ய வேண்டும். சிறப்பு படி என்பதை, சம்பளத்தின் ஒரு பகுதியாகவே கருத வேண்டும்.ஊழியருக்கு, சிறப்பு படிகள் எதற்காக வழங்கப்படுகின்றன என்பதை, மனு தாக்கல் செய்த நிறுவனங்கள் தெரிவிக்கவில்லை. எனவே, அவர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப் படுகின்றன. அடிப்படை சம்பளத்துடன், சிறப்பு படியைச் சேர்த்து, அதன் அடிப்படையில், பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதிக்கான தொகை பிடித்தம் செய்யப்பட வேண்டும்இவ்வாறு, நீதிபதிகள் கூறினர்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: நீதி மன்ற செய்திகள்.
சென்னை:மாநிலம் முழுவதும், தொழிலாளர் நலத்துறையினர் நடத்திய ஆய்வில், 236 கடைகளில், விதி மீறல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.தொழிலாளர் நலத்துறை கமிஷனர், நந்தகோபால் உத்தரவுப்படி, துறை அதிகாரிகள், பிப்ரவரியில், மாநிலம் முழுவதும், 609 எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கடைகளில் சோதனை நடத்தினர். இவற்றில், 96 கடைகளில் விதிமீறல் இருப்பது கண்டறியப்பட்டது. அதேபோல, அனைத்து மாவட்டங்களிலும், சாலையோரத்தில் உள்ள, பழம், பூ மற்றும் காய்கறி விற்பனை செய்யும், 851 கடைகளில், சோதனை நடத்தினர்.
சோதனையில், 140 கடைகளில் விதிமீறல் இருந்தது கண்டறியப்பட்டது.சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆய்வின்போது, மறு முத்திரையிடப்படாத எடை அளவுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சோதனையில், 140 கடைகளில் விதிமீறல் இருந்தது கண்டறியப்பட்டது.சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆய்வின்போது, மறு முத்திரையிடப்படாத எடை அளவுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: நீதி மன்ற செய்திகள்.
மின் வினியோக செய்தி, தினசரி செய்திகளுக்கு மாற்றப்பட்டுள்ளது [You must be registered and logged in to see this link.]
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: நீதி மன்ற செய்திகள்.
ஆமதாபாத்: குஜராத் மாநிலத்தில், சட்டவிரோத சுரங்க வழக்கில், தண்டனை விதிக்கப்பட்ட, காங்., எம்.எல்.ஏ., பகவான் பாரத் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக, அம்மாநில சட்டசபை சபாநாயகரும், பா.ஜ., கட்சியை சேர்ந்தவருமான, ராஜேந்திர திரிவேதி,தெரிவித்தார்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: நீதி மன்ற செய்திகள்.
மதுரை: தமிழகத்தில் எத்தனை மதுபான ஆலைகள் உள்ளன என்பது தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆலைகள் தயாரிக்கும் மதுபானங்களில் எவ்வளவு மதுபானங்கள், டாஸ்மாக்கிற்கு விநியோகம் செய்யப்படுகிறது எனவும் கோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: நீதி மன்ற செய்திகள்.
புதுடில்லி: அயோத்தி வழக்கில் நிரந்தர தீர்வு காண்பதற்கு மத்தியஸ்தர்களையோ அல்லது பேச்சுவார்த்தை குழுவையோ நியமித்தால் உத்தரவு பிறப்பிக்க தயாராக உள்ளதாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு தெரிவித்து, உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அளித்த உத்தரவில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வே இந்த வழக்கை விசாரிக்க போதுமானது என்று சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்தது. இதனை எதிர்த்து 3 அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தன.இதனையடுத்து இவ்வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுவதாகதெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் அமர்வு, இது மக்களின் மத உணர்வுகள் தொடர்பான வழக்கு. இது கோயிலா, மசூதியா என்பது பற்றி நாங்கள் தலையிட முடியாது. தற்போதைய நிலையின் அடிப்படையிலேயே வழக்கை விசாரித்து உத்தரவு பிறப்பிக்க முடியும். மத்தியஸ்தர்கள் அல்லது மத்தியஸ்தர் குழுவில் இடம்பெறுபவர்களின் பெயர்களை வழக்கில் தொடர்புடையவர்கள் தெரிவிக்க வேண்டும். மத்தியஸ்தர் பெயர்களை அளித்தால் இவ்வழக்கில் நிரந்த தீர்வு காண்பதற்கான உத்தரவை விரைவில் பிறக்க முடிவு செய்துள்ளோம்.கோர்ட் உத்தரவை ஏற்க தயாராக இல்லாததால், மத்தியஸ்தம் செய்ய வாய்ப்பு வழங்குகிறோம். பிரச்னையை நிரந்தமாக தீர்க்க மத்தியஸ்தம் செய்வதற்கு ஒரு சதவீதம் வாய்ப்பு இருந்தாலும் அதற்காக நாங்கள் முயற்சிக்கிறோம். கடந்த கால வரலாறு குறித்து நாங்களும் படித்துள்ளோம். இவ்வாறு தெரிவித்த நீதிபதிகள், உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: நீதி மன்ற செய்திகள்.
சென்னை:கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளையில் குற்றம் சாட்டப்பட்ட, இருவரது ஜாமின் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.மறைந்த முதல்வர், ஜெ., தங்கும் கோடநாடு எஸ்டேட்டில், காவலாளியை கொலை செய்து, கொள்ளை அடிக்கப்பட்டது இதன் பின்னணியில், தமிழக முதல்வரை தொடர்புபடுத்தி, 'தெஹல்கா' இணையதள பத்திகையின் முன்னாள் ஆசிரியர், மாத்யூ சாமுவேல், ஆவணப்படம் வெளியிட்டு இருந்தார்.இதையடுத்து, முதல்வரை அவதுாறு செய்வதாக அளித்த புகாரில், மாத்யூ சாமுவேல், சயன், மனோஜ் உள்ளிட்டோருக்கு எதிராக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், சயன், மனோஜ் ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஜாமினை, நீலகிரி நீதிமன்றம், ரத்து செய்தது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், இருவரும் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு, நீதிபதி இளந்திரையன் முன்,விசாரணைக்கு வந்தது.போலீஸ் தரப்பில், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர், ஏ.நடராஜன், ''வழங்கப்பட்ட ஜாமினை, இருவரும் தவறாக பயன்படுத்தி உள்ளனர். மிரட்டல் விடுத்ததாக, இரண்டு சாட்சிகள் அளித்த புகாரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.மனுதாரர்களின் செயல், நீதி நிர்வாகத்தில் குறுக்கிடுவதாக உள்ளது. ஜாமின் ரத்து சரி தான்,'' என, வாதாடினார்.ஜாமின் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட இருவரது மனுவையும், தள்ளுபடி செய்து, நீதிபதி, இளந்திரையன் நேற்று உத்தரவிட்டார்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: நீதி மன்ற செய்திகள்.
சென்னை:'திருமணத்தை மீறிய உறவுகள் அதிகரிக்க, 'டிவி' மெகா தொடர்கள் காரணமா' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னை, அயனாவரத்தில், ஜோசப் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். அயனாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கொலை பின்னணியில், கள்ள தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த வழக்கில், கைது செய்யப்பட்ட சிலர், குண்டர் சட்டத்தின் கீழ், காவலில் வைக்கப்பட்டனர்.இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், அஜித்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை, நீதிபதிகள், கிருபாகரன், அப்துல் குத்துாஸ் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. தாமதமாக, குண்டர் சட்டத்தில் கைதுக்கான உத்தரவு பிறப்பித்ததற்கு, காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை என கூறி, அஜித்குமாரை விடுதலை செய்தது.திருமணத்தை மீறிய உறவுகளால் ஏற்படும் குற்றங்களை தடுக்க, இவ்வழக்கில், மத்திய, மாநில அரசுகள் சேர்க்கப்பட்டன. வழக்கு, மீண்டும், டிவிஷன் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில், உதவி சொலிசிட்டர் ஜெனரல், ஜி.கார்த்திகேயன், போலீஸ் தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், முகமது ரியாஸ் ஆஜராகினர்.விசாரணைக்கு பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:திருமணம் தாண்டிய உறவு, ஆபத்தான சமூக தீங்காக மாறி விட்டது. இதனால், கொலைகள், கடத்தல், தாக்குதல் குற்றங்கள் நடக் கின்றன. தவறான உறவுகளால், மனைவியை கணவனோ அல்லது கணவனை மனைவியோ, கொலை செய்யும் குற்றங்கள் நடக்கின்றன.இந்த பிரச்னைக்கு தீர்வு காண, முதலில், அதற்கான காரணங்களை அறிய வேண்டும். எனவே, கீழ்கண்ட கேள்விகளுக்கு, அரசு பதில் அளிக்க வேண்டும்:* திருமணத்தை மீறிய உறவால், 10 ஆண்டுகளில், சென்னை, தமிழகம், இந்தியாவில், எத்தனை கொலைகள் நடந்து உள்ளன; தற்கொலை, கடத்தல், தாக்குதல் சம்பவங்கள் எத்தனை நடந்துள்ளன; ஆண்டுக்கு ஆண்டு, குற்றங்கள் அதிகரிக்கின்றனவா?*அத்தகைய உறவுகள் அதிகரிக்க, 'டிவி' தொடர்கள், சினிமாக்கள், முக்கிய காரணமா; கொலைகள், கடத்தல் சம்பவங்களுக்கு, 'டிவி' மற்றும் சினிமாக்களில் வரும் காட்சிகள் வித்திடுகின்றனவா?* வாழ்க்கை துணையை கொலை செய்ய, கூலிப்படையை ஏற்பாடு செய்வது அதிகரித்துள்ளதா?
* திருமணத்தை மீறிய உறவுகளுக்கு, பொருளாதார சுதந்திரம் காரணமா? கணவன் - மனைவி, இருவரில் ஒருவருக்கு, செக்ஸ் ஆர்வ குறைவு அல்லது குறைபாடுகள் காரணமா; மேற்கத்திய கலாசாரம், இணையதளங்கள் காரணமா?
* ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், உளவியல், நரம்பியல், சமூக ஆர்வலர்கள் அடங்கிய நிபுணர்கள் குழுவை அமைத்து, இந்த பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய, மாநில அரசுகள், ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?
* ஒவ்வொரு மாவட்டத்திலும், குடும்ப நல ஆலோசனை மையங்களை அமைத்து, கணவன், மனைவிக்கு, ஆலோசனை ஏன் வழங்கக் கூடாது?இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.வழக்கு விசாரணை, ஜூன் மூன்றாம் வாரத்துக்கு, ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை, அயனாவரத்தில், ஜோசப் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். அயனாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கொலை பின்னணியில், கள்ள தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த வழக்கில், கைது செய்யப்பட்ட சிலர், குண்டர் சட்டத்தின் கீழ், காவலில் வைக்கப்பட்டனர்.இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், அஜித்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை, நீதிபதிகள், கிருபாகரன், அப்துல் குத்துாஸ் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. தாமதமாக, குண்டர் சட்டத்தில் கைதுக்கான உத்தரவு பிறப்பித்ததற்கு, காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை என கூறி, அஜித்குமாரை விடுதலை செய்தது.திருமணத்தை மீறிய உறவுகளால் ஏற்படும் குற்றங்களை தடுக்க, இவ்வழக்கில், மத்திய, மாநில அரசுகள் சேர்க்கப்பட்டன. வழக்கு, மீண்டும், டிவிஷன் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில், உதவி சொலிசிட்டர் ஜெனரல், ஜி.கார்த்திகேயன், போலீஸ் தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், முகமது ரியாஸ் ஆஜராகினர்.விசாரணைக்கு பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:திருமணம் தாண்டிய உறவு, ஆபத்தான சமூக தீங்காக மாறி விட்டது. இதனால், கொலைகள், கடத்தல், தாக்குதல் குற்றங்கள் நடக் கின்றன. தவறான உறவுகளால், மனைவியை கணவனோ அல்லது கணவனை மனைவியோ, கொலை செய்யும் குற்றங்கள் நடக்கின்றன.இந்த பிரச்னைக்கு தீர்வு காண, முதலில், அதற்கான காரணங்களை அறிய வேண்டும். எனவே, கீழ்கண்ட கேள்விகளுக்கு, அரசு பதில் அளிக்க வேண்டும்:* திருமணத்தை மீறிய உறவால், 10 ஆண்டுகளில், சென்னை, தமிழகம், இந்தியாவில், எத்தனை கொலைகள் நடந்து உள்ளன; தற்கொலை, கடத்தல், தாக்குதல் சம்பவங்கள் எத்தனை நடந்துள்ளன; ஆண்டுக்கு ஆண்டு, குற்றங்கள் அதிகரிக்கின்றனவா?*அத்தகைய உறவுகள் அதிகரிக்க, 'டிவி' தொடர்கள், சினிமாக்கள், முக்கிய காரணமா; கொலைகள், கடத்தல் சம்பவங்களுக்கு, 'டிவி' மற்றும் சினிமாக்களில் வரும் காட்சிகள் வித்திடுகின்றனவா?* வாழ்க்கை துணையை கொலை செய்ய, கூலிப்படையை ஏற்பாடு செய்வது அதிகரித்துள்ளதா?
* திருமணத்தை மீறிய உறவுகளுக்கு, பொருளாதார சுதந்திரம் காரணமா? கணவன் - மனைவி, இருவரில் ஒருவருக்கு, செக்ஸ் ஆர்வ குறைவு அல்லது குறைபாடுகள் காரணமா; மேற்கத்திய கலாசாரம், இணையதளங்கள் காரணமா?
* ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், உளவியல், நரம்பியல், சமூக ஆர்வலர்கள் அடங்கிய நிபுணர்கள் குழுவை அமைத்து, இந்த பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய, மாநில அரசுகள், ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?
* ஒவ்வொரு மாவட்டத்திலும், குடும்ப நல ஆலோசனை மையங்களை அமைத்து, கணவன், மனைவிக்கு, ஆலோசனை ஏன் வழங்கக் கூடாது?இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.வழக்கு விசாரணை, ஜூன் மூன்றாம் வாரத்துக்கு, ஒத்திவைக்கப்பட்டது.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: நீதி மன்ற செய்திகள்.
சென்னை : வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள ஏழை தொழிலாளர்களுக்கு ரூ.2000 நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» நீதி மன்ற செய்திகள்.
» நீதி மன்ற செய்திகள்.
» நீதி மன்ற செய்திகள்.
» நீதி மன்ற செய்திகள்.
» நீதி மன்ற செய்திகள்.
» நீதி மன்ற செய்திகள்.
» நீதி மன்ற செய்திகள்.
» நீதி மன்ற செய்திகள்.
» நீதி மன்ற செய்திகள்.
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|