புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 12:07 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:07 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri Jun 14, 2024 12:12 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
98 Posts - 49%
heezulia
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
7 Posts - 4%
prajai
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
2 Posts - 1%
Barushree
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
2 Posts - 1%
cordiac
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
225 Posts - 52%
heezulia
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
18 Posts - 4%
prajai
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
2 Posts - 0%
Barushree
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அரசியல்  துளிகள். Poll_c10அரசியல்  துளிகள். Poll_m10அரசியல்  துளிகள். Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியல் துளிகள்.


   
   
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Mar 03, 2019 9:30 pm

பிரதமர் மோடி, எப்போதும், அதிரடி முடிவுகள் எடுப்பவர்' என, பா.ஜ., தலைவர்கள் சொல்வது வழக்கம்; ஆனால், வெளியுறவுத்துறையில் முக்கிய பொறுப்பில் இருந்த ஒரு மூத்த அதிகாரி, சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.மோடி பிரதமரான பின், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலரிடம் பேசும் வாய்ப்பு, அந்த அதிகாரிக்கு கிடைத்தது. அப்போது, 'இதுவரை இந்திய பிரதமராக இருந்தவர்களுக்கும், மோடிக்கும் வித்தியாசம் உள்ளது; மற்றவர்களைப் போல மோடியை நினைக்க வேண்டாம்; மோடியிடம், பாக்., கவனமாக இருக்க வேண்டும்' என, அந்த அதிகாரி எச்சரிக்கை விடுத்தாராம்.தான் பதவியில் இருந்தபோது, மோடி எப்படி நடந்து கொண்டார் என்பதையும், அந்த அதிகாரி தெரிவித்தார். ஒரு விவகாரத்தில், 'நீங்கள் சொல்வதை செய்வது கஷ்டம்; அதை, இப்படித்தான் செய்ய வேண்டும்' எனச் சொல்லி, அது தொடர்பான சில ஆவணங்களைக் காட்டினாராம், அந்த அதிகாரி.அதற்கு பதிலளித்த மோடி, 'அந்த ஆவணங்களை நீங்களே படித்துக் கொண்டிருங்கள்; ஆனால், எனக்கு தேவை, இது தான்; நான் சொன்னதை மட்டும் செய்யுங்கள்' எனக் கூறி, அந்த அதிகாரியை அனுப்பி விட்டாராம்.'பொதுவாக, எந்த ஒரு திட்டத்தை முன்வைத்தாலும், ஏதாவது சட்டங்களை கூறி, அதை செய்ய விடாமல், அதிகாரிகள் தடுப்பது வழக்கம்' எனக் கூறிய அந்த மூத்த அதிகாரி, 'பிரதமர் மோடியிடம், அது எடுபடாது' என, உறுதியாக கூறினார்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Mar 03, 2019 9:32 pm

பாட்னா: ஊழல் செய்வதில் ஒன்றிப்போகும் எதிர்கட்சியினர் தம்மை வீழ்த்தவும் ஒன்று சேர்ந்துள்ளனர் என பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டார்.அவர் மேலும் பேசியதாவது: சமீபத்தில் வீரமரணம் அடைந்த நமது தியாகிகளுக்கு நான் தலைவணங்கி எனது உரையை துவக்குகிறேன். மறைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு நாம் அனைவரும் ஆதரவாக இருப்போம். இந்த பீகாரில் பல்வேறு அரசியல் தலைவர்கள், தியாகிகள் உருவாகியுள்ளனர். அவர்களுக்கு நான் தலைவணங்குகிறேன்.முதல்வர் நிதீஷ்குமார் பீகார் மாநிலத்தை முன்னெடுத்து செல்கிறார். வெளிப்படையான நிர்வாகம் நடக்கிறது. ஊழலற்ற நிர்வாகம் நடக்கிறது. இங்குள்ள பாட்னா நகரம் ஸ்மார்ட் சிட்டியாக மாறவுள்ளது. பீகாரின் வளர்ச்சிக்கு மத்திய அரசு அரும்பாடுபட்டு வருகிறது. மாநிலம் அபரித வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருவது மக்கள் அறிவர். ரயில்வே, மின்சாரம், விமானம், மெட்ரோ என பல வளர்ச்சி கிட்டியுள்ளது.கால்நடைத்தீவன ஊழல் மூலம் பலர் பயன்பெற்றனர். இந்த ஊழல் அனைத்து மக்களாலும் அறியப்பட்டது. தற்போதைய ஆட்சியில் இடைத்தரகர் இல்லை. யாரும் அரசு பணத்தை திருடவுமில்லை. எங்கள் ஆட்சியில் ஊழல் இல்லை. எதிர்கட்சியினர் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் விளையாடுகின்றனர். சமீபத்திய இந்தியாவின் தாக்குதல் விஷயத்தில் நாட்டை பலவீனப்படுத்துகின்றனர். ஊழல் செய்தவர்கள் ஒன்று சேருகின்றனர். என்னை அழிக்கவும் ஒன்று சேர்ந்துள்ளனர்.எங்கள் ஆட்சியில் 7 கோடிக்கும் மேல் இலவச சமையல் காஸ் இணைப்பு பெற்றுள்ளனர். விவசாயிகள் பலர் பலன் பெற்றுள்ளனர். முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு உயர்ந்துள்ளது. எங்களின் இலக்கு நாட்டின் வளர்ச்சியே. இவ்வாறு மோடி பேசினார்.


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Mar 03, 2019 9:40 pm

முத்திரை கட்டணம் இல்லை>>>>>>>>>>>
ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநிலத்தில், 'கணவன், தன் மனைவிக்கு பரிசாக அளிக்கும், அசையா சொத்து மீதான பதிவுக்கு முத்திரை கட்டணம் வசூலிப்பதில்லை' என, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.ராஜஸ்தான் மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:ஒருவர் பெயரில் இருந்து, அவரது தந்தை, தாய், மகன், சகோதரி, மருமகள், பேரன் மற்றும் பேத்தி பெயருக்கு மாற்றப்படும் அசையா சொத்து பதிவுக்கு, 2.5 சதவீதம் முத்திரைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதேபோல், மனைவி அல்லது மகளுக்கு, அசையா சொத்துகளை பரிசாக வழங்கும்போது, அதன் பதிவுக்கு, சொத்தின் சந்தை மதிப்பில், 1 சதவீதம் அல்லது அதிகபட்சமாக, 1 லட்சம் ரூபாய் வரை, முத்திரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், கணவன், தன் மனைவிக்கு பரிசாக அளிக்கும் அசையா சொத்தின் மீதான பதிவுக்கு, முத்திரைக் கட்டணம் வசூலிப்பதில்லை என, முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Mar 06, 2019 9:08 pm

புதுடில்லி:'சட்ட அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைக்காததால், ஓட்டுப் பதிவு நாளன்று, செய்தித் தாள்களில், அரசியல் விளம்பரங்களுக்கு தடை விதிக்கும் தேர்தல் குழுவின் திட்டம், வரும் லோக்சபா தேர்தலில் அமல்படுத்தப்படாது' என்ற, தகவல் வெளியாகியுள்ளது.தேர்தல் பிரசாரத்தின்போது, மின்னணு ஊடகங்கள் மற்றும் செய்தித் தாள்களில், அரசியல் கட்சியினர் விளம்பரம் செய்வது வழக்கம்.ஓட்டுப் பதிவு நாளுக்கு, 48 மணி நேரத்துக்கு முன், 'டிவி' ரேடியோ மற்றும் சமூக வலைதளங்கள் உள்ளிட்ட மின்னணு ஊடகங்களில், அரசியல் கட்சியினரின் விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், செய்தித் தாள்களில், ஓட்டுப்பதிவு நாளன்றும் விளம்பரங்கள் வெளியாகின்றன. இந் நிலையில், மின்னணு ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை, செய்தித் தாள்களுக்கும் நீட்டிக்க, மத்திய அரசிடம், தேர்தல் ஆணையம் வலியுறுத்தியது. அதற்காக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான திட்ட முன்மொழிவை, சட்ட அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு, தேர்தல் குழு அனுப்பியது. ஆனால், இதற்கு, சட்ட அமைச்சகம் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.இதனால், 'வரும் லோக்சபா தேர்தலில், ஓட்டுப் பதிவு நாளன்று, செய்தித் தாள்களில் அரசியல் விளம்பரங்களை வெளியிட தடை விதிக்கப்படாது' என, அரசு வட்டாரத்தில் கூறப்படுகிறது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Mar 06, 2019 9:10 pm

திருச்சி: மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் திருச்சி தொகுதியில் போட்டியிட வேண்டும் என, வக்கீல் ஒருவர் விருப்ப மனு கொடுத்துள்ளார்.லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக, மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர், கமல் அறிவித்து உள்ளார். இதற்காக, அந்தக் கட்சியினரிடம் விருப்ப மனுக்களும் பெறப்பட்டு வருகின்றன. திருச்சியைச் சேர்ந்த, வக்கீல் கிஷோர் குமார் என்பவர், 'திருச்சி லோக்சபா தொகுதியில், கமல் போட்டியிட வேண்டும்' என விருப்பமனு கொடுத்துள்ளார். இதனால், கமல், இந்த தொகுதியில் களம் இறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.பொள்ளாச்சி சம்பவம் குறித்து கமல் அறிக்கை: கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், சமூக வலைதளங்கள் வழியாக சிலர், 60க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி, ஆபாச படங்கள் எடுத்து மிரட்டியுள்ளனர். இதை, மக்கள் நீதி மையம், வன்மையாக கண்டிக்கிறது.குற்றவாளிகளை கைது செய்த, காவல் துறையின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இதே வேகத்தில், அடுத்தகட்ட நடவடிக்கையையும், போலீசார் மேற்கொள்ள வேண்டும். நேர்மையான, விரைவான நடவடிக்கை மட்டுமே, மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Mar 06, 2019 9:12 pm

சென்னை:''அ.தி.மு.க., கூட்டணியில் சேர, பா.ம.க.,வுக்கு, 300 கோடி ரூபாய் வழங்கியதாக கூறுவது, ஆதாரமற்ற குற்றச்சாட்டு,'' என, மீன்வளத் துறை அமைச்சர், ஜெயகுமார் கூறினார். சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:பா.ம.க.,வுக்கு, அ.தி.மு.க., சார்பில், 300 கோடி ரூபாய் வழங்கியதாக கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. அ.தி.மு.க., மெகா கூட்டணியை அமைத்த தால், தி.மு.க.,வினர் வயிற்றெரிச்சலால் அவதுாறு பரப்பும் விதமாக, பொய் குற்றச்சாட்டுகளை பரப்பி வருகின்றனர். இந்தக் குற்றச்சாட்டு, மக்கள் மத்தியில் எடுபடாது.இவ்வாறு, ஜெயகுமார் கூறினார்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Mar 07, 2019 6:08 am

சென்னை : தமிழக அரசியல் கூட்டணி பேச்சுவார்த்தையில் தேமுதிக செய்த இரட்டை வேலையால் இன்று (மார்ச் 6) குழப்பம் ஏற்பட்டது.அதிமுகவுடன் ஒரு பக்கம் பேசிக்கொண்டே இன்னொருபுறம் திமுக உடனும் தேமுதிக பேசியது. இதை அறிந்து அதிமுக, திமுக தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுவரை அதிமுகவிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடித்து விட்டது தேமுதிக. கிட்டத்தட்ட கூட்டணி இறுதியாகிவிடும் என அதிமுக எதிர்பார்த்தது. அதிலும் திருப்தி அடையாமல், ரகசியமாக திமுகவிடமும் பேச்சு நடத்தியது அக்கட்சி. இன்றே அதுவும் நடந்தது.
இன்று திமுகவினரிடமும் தேமுதிக நிர்வாகிகள் பேசியதை அறிந்ததும், திமுக பொருளாளர் துரைமுருகனை செய்தியாளர்கள் சூழ்ந்தனர். அவர்களிடம் பேசிய துரைமுருகன், ''இன்று (மார்ச் 6) காலை சுதீஷ் எனக்கு போன் செய்து, 'நாங்கள் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறோம். உங்களுடன் கூட்டணி சேர விரும்புகிறோம் என்றார். அதற்கு நான், எங்கள் தலைவரும் ஊரில் இல்லை. கொடுப்பதற்கு சீட்டும் இல்லை' என்றேன். பின் தேமுதிகவின் சில நிர்வாகிகள் வந்து பேசினர். அவர்களிடமும் இதையே கூறினேன்'' என்று போட்டு உடைத்தார்.இந்நிலையில், தனியார் ஓட்டலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் பேச்சு நடத்தி விட்டு வெளியே வந்த சுதீஷிடம், துரைமுருகன் கூறியது பற்றி நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், ''நான் சில நாட்களுக்கு முன் துரைமுருகனிடம் கூட்டணி பற்றி பேசியது உண்மை. இன்று பியூஸ் கோயலுடன் நடந்த சந்திப்பில் உடன்பாடு ஏற்படவில்லை. பிரதமர் வருவதால் நீண்ட நேரம் பேச முடியவில்லை. பியூஸ் சீக்கிரம் பொதுக்கூட்ட மேடைக்கு செல்ல வேண்டி இருந்தது. மீண்டும் பேசுவோம்'' என்றார். இப்படி துரைமுருகன் ஒன்றையும் சுதீஷ் இன்னொன்றையும் கூற, கூட்டணி பேச்சுவார்த்தையில் பெருங்குழப்பம் ஏற்பட்டது. திமுகவுடன் தேமுதிக பேசி வருவது தெரிந்ததும். பிரதமர் பொதுக்கூட்ட மேடையில் வைக்கப்பட்ட விஜயகாந்த் படம் உடனடியாக அகற்றப்பட்டது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Mar 07, 2019 10:01 pm

புதுடில்லி: இன்னும் 5 நாட்களுக்குள் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக பி.டி.ஐ., செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பல கட்டங்களாக நடக்கவிருக்கும் இந்த தேர்தல் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.நடப்பு லோக்சபா வரும் ஜூன் மாதம் 3 ம் தேதியுடன் காலாவதியாகிறது. தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் பா.ஜ., காங்., உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணியும் ஓரளவு முடிவாகியுள்ளது.இந்நிலையில் தேர்தல் தேதி எப்போது வெளியாகும் என்பது குறித்து தேர்தல் ஆணைய மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது. சில வாரங்களாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் பல கட்ட ஆலோசனைகளை முடித்துள்ளனர். தேர்தல் தேதியை இந்த வார இறுதிக்குள் அல்லது வரும் செவ்வாய்க்கிழமைக்குள் தேர்தல் கமிஷன் அறிவிக்கலாம். ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்க வாய்ப்பு உள்ளது. ஜம்மு காஷ்மீரில் கவர்னர் ஆட்சி காலம் முடிவதற்கு மே மாதம் இறுதி வரை உள்ளதால் இம்மாநிலத்திற்கு தேர்தல் இருக்குமா என்பது சந்தேகமே.534 லோக்சபா தொகுதிகளுக்கு ஏறக்குறைய 10 லட்சம் ஓட்டுச்சாவடிகள் அமைக்க வேண்டியதாக இருக்கும். கடந்த 2014 ல் மார்ச் 5 ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. 9 ம் கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. ஏப்ரல் 17 ம் தேதி முதல்கட்ட தேர்தலும், மே.12 ம் தேதி கடைசிக்கட்ட தேர்தலும் நடந்தது.வரும் லோக்சபா தேர்தல் ஏப்ரல் முதல் வாரத்தில் துவங்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. இந்த தேர்தல் 7 முதல் 8 கட்டமாக தேர்தல் நடக்கலாம். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Mar 07, 2019 10:01 pm

புதுடில்லி: இன்னும் 5 நாட்களுக்குள் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக பி.டி.ஐ., செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பல கட்டங்களாக நடக்கவிருக்கும் இந்த தேர்தல் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.நடப்பு லோக்சபா வரும் ஜூன் மாதம் 3 ம் தேதியுடன் காலாவதியாகிறது. தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் பா.ஜ., காங்., உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணியும் ஓரளவு முடிவாகியுள்ளது.இந்நிலையில் தேர்தல் தேதி எப்போது வெளியாகும் என்பது குறித்து தேர்தல் ஆணைய மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது. சில வாரங்களாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் பல கட்ட ஆலோசனைகளை முடித்துள்ளனர். தேர்தல் தேதியை இந்த வார இறுதிக்குள் அல்லது வரும் செவ்வாய்க்கிழமைக்குள் தேர்தல் கமிஷன் அறிவிக்கலாம். ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்க வாய்ப்பு உள்ளது. ஜம்மு காஷ்மீரில் கவர்னர் ஆட்சி காலம் முடிவதற்கு மே மாதம் இறுதி வரை உள்ளதால் இம்மாநிலத்திற்கு தேர்தல் இருக்குமா என்பது சந்தேகமே.534 லோக்சபா தொகுதிகளுக்கு ஏறக்குறைய 10 லட்சம் ஓட்டுச்சாவடிகள் அமைக்க வேண்டியதாக இருக்கும். கடந்த 2014 ல் மார்ச் 5 ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. 9 ம் கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. ஏப்ரல் 17 ம் தேதி முதல்கட்ட தேர்தலும், மே.12 ம் தேதி கடைசிக்கட்ட தேர்தலும் நடந்தது.வரும் லோக்சபா தேர்தல் ஏப்ரல் முதல் வாரத்தில் துவங்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. இந்த தேர்தல் 7 முதல் 8 கட்டமாக தேர்தல் நடக்கலாம். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Mar 08, 2019 10:03 pm

ஜேபோர்(ஒடிசா): மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை கண்டிப்பாக நிறைவேற்றுவோம் என அக்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, ஒடிசாவில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: பெண்கள் அதிகாரத்தை உறுதி செய்வதற்காக சட்டசபையிலும், லோக்சபாவிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது முக்கியமாகும். இதனை நிறைவேற்ற காங்கிரஸ் உறுதி பூண்டுள்ளது.மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம். பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்க செய்வோம். உ.பி.,யில் எம்எல்ஏ மீது பெண் ஒருவர் பலாத்கார புகார் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் பிரதமரும், உ.பி., முதல்வரும் அமைதியாக உள்ளது துரதிர்ஷ்டவசமானது. இவ்வாறு ராகுல் பேசினார்.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக