ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பைக்கில் இருந்து விழுந்த 4 வயது சிறுமியை கால் இடுக்கில் வைத்து யானைக் கூட்டத்தில் இருந்து பாதுகாத்த யானை

3 posters

Go down

பைக்கில் இருந்து விழுந்த 4 வயது சிறுமியை கால் இடுக்கில் வைத்து யானைக் கூட்டத்தில் இருந்து பாதுகாத்த யானை Empty பைக்கில் இருந்து விழுந்த 4 வயது சிறுமியை கால் இடுக்கில் வைத்து யானைக் கூட்டத்தில் இருந்து பாதுகாத்த யானை

Post by ayyasamy ram Sat Feb 23, 2019 2:28 pm

மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரியில் வனப்பகுதி
சாலையில், பைக்கில் இருந்து விழுந்த 4 வயது சிறுமியை,
மற்ற யானைகள் தாக்காமல் இருக்கும் வகையில்,
கால் இடுக்கில் வைத்து யானை ஒன்று பாதுகாத்த
சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவம் ஜல்பைகுரி மாவட்டம், கருமரா
வனப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 31-ல் நேற்று
நடந்துள்ளது.

இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:

லடாகுரி பகுதியைச் சேர்ந்தவர் நிது கோஷ். இவரின்
மனைவி டிட்லி, 4 வயது மகள் அஹானா. இவர்கள் மூவரும்
பைக்கில் வனப்பகுதியில் உள்ள ஒரு கோயிலில் சாமி
தரிசனம் செய்துவிட்டு மீண்டும் லடாகுரிக்கு நேற்று
திரும்பினார்கள்.

அப்போது, வனப்பகுதியில் மையத்தில் நெடுஞ்சாலை
இருபகுதிகளாகப் பிரியும். அந்த இடத்துக்கு அருகே வந்த
போது, பெரிய யானைக்கூட்டம் சாலையைக் கடந்துள்ளது.
நிதுகோஷ் தான் வந்த பைக்கை நிறுத்திவிட்டு,
சாலையைக் கடக்கும் யானைக் கூட்டத்தை
குடும்பத்தாருடன் நின்று ரசித்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து பல லாரி, கார் உள்ளிட்ட
வாகனங்களும் வரிசையாக நின்றன.

அப்போது, யானைகள் அனைத்தும் சாலையைக் கடந்து
சென்றுவிட்டதாக நினைத்து நிதுகோஷ் மீண்டும் தனது
பயணத்தைத் தொடர்ந்தார். பைக்கில் புறப்பட்டபோது,
மீண்டும் ஒரு யானைக் கூட்டம் திடீரென சாலையைக்
கடந்துள்ளது.

இதைப் பார்த்த நிதுகோஷ் திடீரென தனது பைக்கை
பிரேக் அடித்து நிறுத்த முயன்றபோது, சாலையில் பைக்
கீழே விழுந்து இழுத்துச் செல்லப்பட்டனர்.

அப்போது, பைக்கில் இருந்த நிதுகோஷ் அவரின் மனைவி,
மகள் அஹானா ஆகியோர் கீழே விழுந்தனர்.

அப்போது, சாலையைக் கடந்த யானைக் கூட்டத்தில்
இருந்த ஒரு யானை மற்ற யானைகள் ஏதும் அந்த சிறுமி
அஹானாவை தாக்கிவிடக்கூடாது என்பதற்காக,
திடீரென பின்னோக்கி நகர்ந்துவந்து, அந்த சிறுமியை
தனது 4 கால்களுக்கு இடையே வைத்துக்கொண்டது.

இதைப் பார்த்த மற்ற யானைகள், ஆவேசமாக வந்தும்,
இந்த யானையின் செயலைப் பார்த்து திரும்பிச்
சென்றன.

அதன்பின், சாலையில் நிதுகோஷுக்கு பின்னால் இருந்த
லாரியின் டிரைவர் ஒலிபெருக்கி மூலம் சத்தம் எழுப்பவே,
சிறுமியை மிதித்துவிடாமல் மெதுவாகக் காலை எடுத்து
வைத்து அங்கிருந்து நகர்ந்து சென்றது.

அங்கிருந்து செல்லும் போது சத்தமாகப் பிளிறிக்கொண்டு,
அவர்களைப் பார்த்துவிட்டுச் சென்றது. அதன்பின்
அனைவரும் ஓடிவந்து நிதுகோஷ் அவரின மனைவி, மகள்
அஹானா ஆகியோரைக் காயங்களுடன் மீட்டு ஜல்பைகுரி
மருத்துவமனையில் சேர்த்தனர்.

பைக்கில் இருந்த விழுந்த 3 பேருக்கும் லேசான காயம்
மட்டுமே ஏற்பட்டது, யானையின் கால்களுக்கு இடையே
இருந்தால், சிறுமி அஹானா மட்டும் சிறிது மிரட்சியுடன்
காணப்பட்டார்.

இவ்வாறு வனத்துறையினர் தெரிவித்தனர்.

கருமரா வனச்சரக ரேஞ்சர் அயன் சக்ரவர்த்தி
கூறுகையில், " யானைகளை சாலையைக் கடப்பது இங்கு
வழக்கமாக இருக்கிறது. அப்போது சாலையில் இருக்கும்
வாகன ஓட்டிகளிடம் எச்சரித்துவிடுவோம்.

ஆனால், யானைகள் பெரும்பாலும் தாமாக யாரையும்
கொல்வதில்லை. தங்களுக்கு இடையூறு விளைவிப்பவர்களை
மட்டுமே தாக்கும்" எனத் தெரிவித்தார்
-
--------------------------------
இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பைக்கில் இருந்து விழுந்த 4 வயது சிறுமியை கால் இடுக்கில் வைத்து யானைக் கூட்டத்தில் இருந்து பாதுகாத்த யானை Empty Re: பைக்கில் இருந்து விழுந்த 4 வயது சிறுமியை கால் இடுக்கில் வைத்து யானைக் கூட்டத்தில் இருந்து பாதுகாத்த யானை

Post by T.N.Balasubramanian Sat Feb 23, 2019 2:50 pm

ஒரு சிறுமியை காப்பாற்ற யானையின் தாய் பாசம் மனதை நெகிழவைத்தது.

இங்கும் இருக்கிறீரார்களே சில தாய்மார்கள்: கள்ள காதல், உடல் சுகம் காண 

பெற்றெடுத்த சொந்த குழந்தைகளையே கொலை செய்கிறார்கள்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பைக்கில் இருந்து விழுந்த 4 வயது சிறுமியை கால் இடுக்கில் வைத்து யானைக் கூட்டத்தில் இருந்து பாதுகாத்த யானை Empty Re: பைக்கில் இருந்து விழுந்த 4 வயது சிறுமியை கால் இடுக்கில் வைத்து யானைக் கூட்டத்தில் இருந்து பாதுகாத்த யானை

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Feb 23, 2019 5:30 pm

T.N.Balasubramanian wrote:ஒரு சிறுமியை காப்பாற்ற யானையின் தாய் பாசம் மனதை நெகிழவைத்தது.

இங்கும் இருக்கிறீரார்களே சில தாய்மார்கள்: கள்ள காதல், உடல் சுகம் காண 

பெற்றெடுத்த சொந்த குழந்தைகளையே கொலை செய்கிறார்கள்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1293765
உங்கள் ஆதங்கம் புரிகிறது
என்ன செய்ய, தாய் பாசம்
கொஞ்சம் சீரழிந்து உள்ளது,
வேதனை தரும் வகையில்
உள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பைக்கில் இருந்து விழுந்த 4 வயது சிறுமியை கால் இடுக்கில் வைத்து யானைக் கூட்டத்தில் இருந்து பாதுகாத்த யானை Empty Re: பைக்கில் இருந்து விழுந்த 4 வயது சிறுமியை கால் இடுக்கில் வைத்து யானைக் கூட்டத்தில் இருந்து பாதுகாத்த யானை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 13 வயது சிறுமியை கடத்தி 18 ஆண்டுகளாக செக்ஸ் அடிமையாக வைத்து இருந்தவருக்கு 431 ஆண்டு ஜெயில்
» சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்
» துபாயில் 15 வயது சிறுமியை மணந்த 90 வயது முதியவர்: மனித உரிமை அமைப்பு கடும் எதிர்ப்பு..........
» உ.பி: 13 வயது சிறுமியை மணக்க முயன்ற 45 வயது டி.எஸ்.பி. கைது..
» பார்லி., கூட்டத்தில் மயங்கி விழுந்த கேரள எம்.பி., அகமது மாரடைப்பால் காலமானார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum