Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல் பார்வை: டுலெட்
2 posters
Page 1 of 1
முதல் பார்வை: டுலெட்
-
வாடகைக்கு வீடு தேடும் படலத்தில் அவதிப்படும்
ஒரு குடும்பத்தின் கதையே 'டுலெட்'.
சினிமா துறையில் உதவி இயக்குநராக இருப்பவர் சந்தோஷ்.
அவரது மனைவி ஷீலா. இவர்களின் 5 வயது மகன் தருண்
யு.கே.ஜி. படிக்கிறார். வீட்டின் உரிமையாளர் ஆதிரா அடுத்த
மாதத்துக்குள் வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்று கறாராகச்
சொல்கிறார்.
சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் சந்தோஷ்- ஷீலா
தம்பதியினர் சென்னை முழுக்க வாடகை வீடு தேடி
அலைகிறார்கள். சாதி, மதம், உணவுப் பழக்கம், வேலையின்
நிமித்தம் என்று பல்வேறு காரணங்களால் வீடு கிடைக்காமல்
அவதிப்படுகிறார்கள்.
ஒரு கட்டத்தில் நண்பரின் ஆலோசனைப்படி சினிமாவில்
வேலை செய்வதை மறைத்து வீடு தேடுகிறார் சந்தோஷ்.
ஆனால், அப்போதும் ஒரு சிக்கல் எழுகிறது. அந்தச் சிக்கல்
என்ன, வீடு தேடுவதில் உள்ள சிரமங்கள் என்ன, வீடு
என்பதற்கான கனவுகளைச் சுமந்துகொண்டிருக்கும் அந்த
மூவரும் என்ன செய்கிறார்கள், எங்கே அவர்களுக்கு
வீடு கிடைத்தது போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது
திரைக்கதை.
-
ஓர் இளம் தம்பதி, அவர்களது மகன் ஆகியோரை இந்த ‘டுலெட்’
என்கிற வார்த்தை எப்படி அலைய வைக்கிறது என்ற ஒருவரிக்
கதையை வைத்துக்கொண்டு அதற்கு அழகான திரைக்கதை
வடிவம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் செழியன்.
மேலும், வழக்கமான விருது சினிமாக்களுக்குரிய
வரையறைகளையும் உடைத்து எறிந்திருக்கிறார். பாடல்கள்
இல்லை, பின்னணி இசை இல்லை.
நல்ல கதைக்கு அது தேவையும் இல்லை என்பதை செழியன்
காட்சிகள் மூலம் தெளிவுபடுத்திவிடுகிறார்.
நடுத்தரக் குடும்பத்தின் ஏக்கத்தை, தவிப்பை, அவமானத்தை,
இயலாமையை, மகிழ்ச்சியை, தொந்தரவை, சங்கடத்தை
அப்படியே நடிப்புக்குள் கொண்டு வந்திருக்கிறார் ஷீலா.
பிரச்சினைகளின் போது கண்ணீர் விட்டு மன்றாடும்போதும்,
சொந்த வீடு குறித்து கண்களில் தேக்கி வைத்திருக்கும்
கனவை வார்த்தைகளால் கணவனிடம் சொல்லும்போதும்,
வாடகை வீடு கிடைக்காத அவஸ்தையிலும் குறைந்த
விலையில் வீடு என்பதால் சொந்த வீட்டுக்கான
விளம்பரத்துக்கு போன் நம்பரைக் கொடுத்ததாக வருத்தம்
தோய்ந்த குரலில் சொல்லும்போதும் வீடு குறித்த தன்
அர்த்தமுள்ள ஆசையை வெளிப்படுத்துகிறார்.
குழந்தையைக் கொஞ்சும் அந்தப் புன்னகை மொழியில்
இயல்பாக ஈர்க்கிறார்.
-
-----------------------
Re: முதல் பார்வை: டுலெட்
-
பொருளாதாரச் சிரமங்களுக்கு மத்தியில் தன்னை நிரூபிக்கப்
போராடும் உதவி இயக்குநர் கதாபாத்திரத்தில் சந்தோஷ்
கச்சிதமாகப் பொருந்துகிறார். மனைவியிடம் கோபமுகம்
காட்டி கன்னத்தில் அறைந்த மறு நொடியில் மன்னிப்பு
கேட்கும் சந்தோஷ், அவரைச் சிரிக்க வைக்கவும் நெகிழ
வைக்கவும் எடுக்கும் முயற்சிகள், நீ யார் கிட்டயும் கெஞ்சுறது
எனக்குப் பிடிக்காது என்று மனைவியிடம் சொல்லும்
தருணங்கள் நல்ல குடும்பத் தலைவனுக்கான அடையாளம்.
தமிழ் சினிமாவில் குழந்தைகளை அவர்களின் குழந்தைத்
தன்மையோடு பதிவு செய்வது அரிது. தருண் கதாபாத்திரத்தின்
மூலம் அந்த அரிதான பதிவை செழியன் சாத்தியப்
படுத்தியுள்ளார். விளையாட்டு, ஓவியம், பெற்றோர் மீதான
அன்பு, புது வாடகை வீடு குறித்த தன் மகிழ்ச்சி என
எல்லாவற்றிலும் செயற்கைத்தனம் கலக்காத தருண்
ஆச்சர்யப்படுத்துகிறார்.
தன் விளையாட்டில் 100 ரூபாய்க்கு வாடகை வீடு தருவதாகச்
சொல்வது, அப்பாவிடம் கசக்கி எறியப்பட்ட ஓவியத்துக்கு
இஸ்திரி போடச் சொல்வது என படம் முழுக்க வசீகரிக்கிறார்.
இந்த டிவி நம்மளோடது, வண்டி நம்மளோடது, ஆனா இந்த
வீடு மட்டும் ஏன் நம்மளோடது இல்லை என்று தருண் கேட்கும்
ஒற்றைக் கேள்வி நம்மையும் சேர்த்தே உலுக்குகிறது.
கண்டிப்பான ஹவுஸ் ஓனராக வரும் ஆதிரா பாண்டியலட்சுமி,
எதிலும் ஒட்டாமல் ஒதுங்கியே இருக்கும் ஆதிராவின் கணவர்
கவிஞர் ரவி சுப்பிரமணியன், விளம்பரப் பட இயக்குநராக
வரும் மணி எம்கே மணி ஆகியோர் பொருத்தமான வார்ப்புகள்.
வாடகை மூவாயிரம், கரண்ட் பில் 30 ஆயிரம் கட்டணும்
போல, குகைக்குள்ளே கூட்டிட்டுப் போற, அவரும் நீங்களும்
ஒண்ணுக்குள்ளே ஒண்ணு... ஒரே மணவாடு என்று சொல்லி
சூழலின் இறுக்கத்தைத் தளர்த்தும் அருள் எழிலன் கவன
ஈர்ப்பை ஏற்படுத்துகிறார்.
-
-------------------
Re: முதல் பார்வை: டுலெட்
''கதைக்குள்ள இருக்குற மனுஷங்களுக்கு காட்டுற அக்கறையை
பக்கத்துல இருக்கிற மனுஷங்ககிட்டயும் காட்டணும்'', ''குற்ற
உணர்வும் மன அழுத்தமும்தான் கலைஞனுக்கு உரிய
ரா மெட்டீரியல்'' போன்ற இயல்பான அளவான வசனங்கள்
படத்துக்கு அழகு சேர்க்கின்றன.
நெரிசல் மிக்க சென்னையின் சத்தங்களையும் பம்பை, மேளம்,
கடல் அலை, போக்குவரத்தின் ஓசைகளையும் தபஸ் நாயக்
சவுண்ட் டிசைனில் செதுக்கி இருக்கிறார். எடிட்டிங் நேர்த்தியில்
ஸ்ரீகர் பிரசாத் மலைக்க வைக்கிறார். நிழல், இருட்டின் அடர்த்தி,
ஒளியின் தன்மைக்கேற்றவாறு செழியனின் கேமரா
லாவகமாகப் பயணிக்கிறது.
ஐடி துறைக்குப் பிறகு வாடகை வீடுகளுக்கான மவுசு எப்படி?
யாரால்? அதிகரித்தது என்பதையும் படம் மிக அழுத்தமாகப்
பதிவு செய்கிறது.
வாடகைக்கு வீடு தேடும் அலைச்சல், வலி, துயரத்தைப்
பாசாங்கு இல்லாமல் சொல்லியிருக்கும் விதம்
பாராட்டுக்குரியது. அழுது வடியும் காட்சிகள், எனக்கு மட்டும்
ஏன் இப்படி என்ற சுய புலம்பல், உலகத்தின் வலிமிக்க மனிதன்
நானே என்ற பிரச்சாரம் போன்றவை படத்தில் இல்லாதது
வரவேற்கத்தக்கது.
அதே சமயம் போரடிக்கும் காட்சிகள், நிதானகதியில் செல்லும்
திரைக்கதை போன்ற வழக்கமான குறைகளாகச் சொல்லப்படும்
அம்சங்களும் இல்லை.
படத்தின் யதார்த்தமான அணுகுமுறையும், அது பேசும்
உண்மையும், நேர்மையும் நம்மை படத்துக்குள் அழைத்துச்
செல்கிறது. நாயகன் - நாயகி- வில்லன் என்ற ஃபார்முலாக்களும்
இல்லாதது படத்தின் ஆகச் சிறந்த பலம். எந்த ஒரு நெகட்டிவ்
கதாபாத்திரமும் படத்தில் கட்டமைக்கப்படாதது
ஆரோக்கியமானது. அந்த வகையில் தமிழில் தகுதியும், தரமும்
நிறைந்த ஒப்புயர்வற்ற சினிமாவாக 'டுலெட்' தனித்து நிற்கிறது.
-
------------------------------------
இந்து தமிழ் திசை
Re: முதல் பார்வை: டுலெட்
"டுலெட் "என்று இருப்பதால் எல்லோரும் சென்று பார்க்கலாம்.
படத்தின் பெயர் ஆங்கிலத்தில் இருப்பதால் அரசின் வரிச்சலுகை கிடையாது.
என்ன கொடுமை பாருங்கள்!
ரமணியன்
படத்தின் பெயர் ஆங்கிலத்தில் இருப்பதால் அரசின் வரிச்சலுகை கிடையாது.
என்ன கொடுமை பாருங்கள்!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Similar topics
» சினிமா -முதல் பார்வை: செம
» முதல் பார்வை: ஜாக்பாட்
» முதல் பார்வை: பாரம்
» முதல் பார்வை: ஆண் தேவதை
» முதல் பார்வை: சிம்பா
» முதல் பார்வை: ஜாக்பாட்
» முதல் பார்வை: பாரம்
» முதல் பார்வை: ஆண் தேவதை
» முதல் பார்வை: சிம்பா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|