ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை நீர்வழித் தடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்

2 posters

Go down

சென்னை நீர்வழித் தடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் Empty சென்னை நீர்வழித் தடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்

Post by ayyasamy ram Sun Feb 17, 2019 8:22 am

சென்னை நீர்வழித் தடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் 23THCOOUMjfif
-
சென்னை நீர்வழித் தடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

அடையாற்றின் முகத்துவாரப் பகுதியில் குப்பைகள் நிறைந்திருப்பதாக கடந்த 2013-ம் ஆண்டு செய்தித்தாளில் வந்த செய்தி அடிப்படையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு, தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரித்து வந்தது.

அதே ஆண்டில், கூவம் ஆற்றை சீரமைக்கக் கோரி எட்வின் வில்சன் என்பவரும், 2015-ம் ஆண்டில் பக்கிங்ஹாம் கால்வாயை தூர் வாரக் கோரி ஜவஹர்லால் சண்முகம் என்பவரும், அதே கோரிக்கையுடன் கடந்த 2016-ம் ஆண்டு எஸ்.முத்துமீனா என்பவரும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

சென்னையில் உள்ள நீர்வழித் தடங்களை சீரமைக்கும் பணிகளை சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை மேற்கொண்டு வருவதால், அந்த 4 வழக்குகளும் ஒன்றாக விசாரிக்கப்பட்டு வந்தன.

பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்குகளை டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரித்து வந்தது.

இந்த வழக்குகள் மீதான தீர்ப்பு, புதுடெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத் தலைவர் நீதிபதி ஏ.கே.கோயல், நீதித்துறை உறுப்பினர் கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் நாகின் நந்தா ஆகியோரால் கடந்த 13-ம்தேதி வழங்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் ஆகிய நீர்வழித் தடங்களில் நகர்ப்புற கழிவுநீர், தொழிற்சாலை கழிவுநீர், குப்பைகள் கலந்து கடும் மாசடைந்து சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது. அதை மறுசீரமைக்க கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு உத்தரவுகளை பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்துள்ளது.

26 ஆண்டுகளாக தொடரும் மாசுசீரமைப்புப் பணிகள் மெதுவாக நடந்த நிலையில் தலைமைச் செயலர் தலைமையில் 2 மாதங்களுக்கு ஒருமுறை, இப்பணிகள் மீதான முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.

மாசுகட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த ஆய்வறிக்கையில், கூவம் ஆற்றில் 5 கல்வி நிறுவனங்கள், 12 தொழிற்சாலைகள் கழிவுநீரை சுத்திகரிக்காமல் விடுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அவை கடந்த 26 ஆண்டுகளாக மாசுபடுத்தி வரும் நிலையில், அவற்றின் மீது அரசுத் துறைகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளன.

பின்னர், 2015-ம் ஆண்டு நீர்வழித் தடங்களை சீரமைக்க ரூ.1,646 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு,ரூ.604 கோடி முதற்கட்டமாக ஒதுக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது.

சீரமைப்புப் பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்த அறிக்கையை கடந்த ஆண்டு அக்டோபரில் கேட்கப்பட்டிருந்தது. அதில், பக்கிங்ஹாம் கால்வாயில் 26,300 ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும், அதில் வெறும் 408 ஆக்கிரமிப்புகள் மட்டுமே அகற்றப்பட்டதாகவும் பொதுப்பணித் துறை தெரிவித்திருந்தது. அதற்காக பொதுப்பணித் துறைக்கு ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

தன் பணியில் அரசு தோல்விஅதே ஆண்டின் இறுதியில் அரசு தாக்கல் செய்த அறிக்கையில், 3 நீர்வழித் தடங்களிலும், 50,239 ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும், அதில் 13,531 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதாகவும், மீதம் உள்ள 36,708 ஆக்கிரமிப்புகள் அகற்றவேண்டி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழக அரசு தன் பணிகளில் மீண்டும் மீண்டும் தோல்வி கண்டுள்ளது. அரசுத் துறைகள் பல ஆண்டுகளாக நீர்வழித்தட சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தோல்வியடைந்துள்ளது. எனவே சுற்றுச்சூழல் பாதிப்புக்கான நிவாரணமாக ரூ.100 கோடியை மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் தமிழக அரசு செலுத்த வேண்டும். அந்த தொகையை சூழல் மீட்டெடுப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

சென்னை நீர்வழித் தடங்களில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட 5 நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட கூட்டுக் குழு அமைக்கப்படுகிறது. இக்குழு தனது ஆய்வறிக்கையை 3 மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

ஏப்ரல் 23-ல் ஆஜராக உத்தரவுதமிழக அரசு தலைமைச் செயலர், அடுத்த 3 மாதங்களுக்கு நீர்வழித் தடங்கள் சீரமைப்புப் பணிகள் தொடர்பாக 15 நாட்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும். அதன் பின்னர் மாதம் ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும். ஏப்ரல் 23-ம் தேதி புதுடெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நேரில் ஆஜராக வேண்டும். இந்த வழக்கு இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83736
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சென்னை நீர்வழித் தடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் Empty Re: சென்னை நீர்வழித் தடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Feb 17, 2019 12:36 pm

பொது மக்கள் ஒத்துழைப்பு இன்றி
இது சாத்தியம் இல்லை.
ஒவ்வொரு தனி நபருக்கும்
நீராதாரம் மாசு படாது
பார்த்து கொள்ளும்
கடமையுணர்வு இருக்க வேண்டும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக அரசுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!
» தூய்மைப் பணியாளருக்கு ஓய்வூதிய பலன்கள்: காலதாமதமாக மேல்முறையீடு செய்த தமிழக அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
» பீர் விலை உயர்வால் தமிழக அரசுக்கு ரூ 300 கோடி கூடுதல் வருவாய்!
» ரூ.1000 கோடி! டீசல் விலையேற்றத்தால் தமிழக அரசுக்கு கூடுதல் செலவு....

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum