புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசியல்  துளிகள். - Page 3 Poll_c10அரசியல்  துளிகள். - Page 3 Poll_m10அரசியல்  துளிகள். - Page 3 Poll_c10 
36 Posts - 47%
heezulia
அரசியல்  துளிகள். - Page 3 Poll_c10அரசியல்  துளிகள். - Page 3 Poll_m10அரசியல்  துளிகள். - Page 3 Poll_c10 
19 Posts - 25%
mohamed nizamudeen
அரசியல்  துளிகள். - Page 3 Poll_c10அரசியல்  துளிகள். - Page 3 Poll_m10அரசியல்  துளிகள். - Page 3 Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
அரசியல்  துளிகள். - Page 3 Poll_c10அரசியல்  துளிகள். - Page 3 Poll_m10அரசியல்  துளிகள். - Page 3 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
அரசியல்  துளிகள். - Page 3 Poll_c10அரசியல்  துளிகள். - Page 3 Poll_m10அரசியல்  துளிகள். - Page 3 Poll_c10 
4 Posts - 5%
Raji@123
அரசியல்  துளிகள். - Page 3 Poll_c10அரசியல்  துளிகள். - Page 3 Poll_m10அரசியல்  துளிகள். - Page 3 Poll_c10 
2 Posts - 3%
prajai
அரசியல்  துளிகள். - Page 3 Poll_c10அரசியல்  துளிகள். - Page 3 Poll_m10அரசியல்  துளிகள். - Page 3 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
அரசியல்  துளிகள். - Page 3 Poll_c10அரசியல்  துளிகள். - Page 3 Poll_m10அரசியல்  துளிகள். - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
அரசியல்  துளிகள். - Page 3 Poll_c10அரசியல்  துளிகள். - Page 3 Poll_m10அரசியல்  துளிகள். - Page 3 Poll_c10 
1 Post - 1%
Barushree
அரசியல்  துளிகள். - Page 3 Poll_c10அரசியல்  துளிகள். - Page 3 Poll_m10அரசியல்  துளிகள். - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரசியல்  துளிகள். - Page 3 Poll_c10அரசியல்  துளிகள். - Page 3 Poll_m10அரசியல்  துளிகள். - Page 3 Poll_c10 
155 Posts - 40%
ayyasamy ram
அரசியல்  துளிகள். - Page 3 Poll_c10அரசியல்  துளிகள். - Page 3 Poll_m10அரசியல்  துளிகள். - Page 3 Poll_c10 
151 Posts - 39%
mohamed nizamudeen
அரசியல்  துளிகள். - Page 3 Poll_c10அரசியல்  துளிகள். - Page 3 Poll_m10அரசியல்  துளிகள். - Page 3 Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
அரசியல்  துளிகள். - Page 3 Poll_c10அரசியல்  துளிகள். - Page 3 Poll_m10அரசியல்  துளிகள். - Page 3 Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
அரசியல்  துளிகள். - Page 3 Poll_c10அரசியல்  துளிகள். - Page 3 Poll_m10அரசியல்  துளிகள். - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
அரசியல்  துளிகள். - Page 3 Poll_c10அரசியல்  துளிகள். - Page 3 Poll_m10அரசியல்  துளிகள். - Page 3 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அரசியல்  துளிகள். - Page 3 Poll_c10அரசியல்  துளிகள். - Page 3 Poll_m10அரசியல்  துளிகள். - Page 3 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
அரசியல்  துளிகள். - Page 3 Poll_c10அரசியல்  துளிகள். - Page 3 Poll_m10அரசியல்  துளிகள். - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அரசியல்  துளிகள். - Page 3 Poll_c10அரசியல்  துளிகள். - Page 3 Poll_m10அரசியல்  துளிகள். - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அரசியல்  துளிகள். - Page 3 Poll_c10அரசியல்  துளிகள். - Page 3 Poll_m10அரசியல்  துளிகள். - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியல் துளிகள்.


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Feb 14, 2019 7:46 pm

First topic message reminder :

மதுரை : லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கலின் போதே தேர்தல் வாக்குறுதியை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் எனக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் பிப்.,28 க்குள் அதிமுக, திமுக, பா.ஜ., உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் பதிலளிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Feb 18, 2019 7:14 pm

புதுச்சேரி: கவர்னர் மாளிகை முன்பு கருப்புச் சட்டை அணிந்து, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி போராட்டம் நடத்தி வரும் நிலையில், தர்ணாவும் ஒரு யோகாதான் என்றும், காக்கையும் யோகா செய்வதாக கிரண்பேடி டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இன்று காலை 8.30 மணியளவில், காக்கை யோகா என்ற பெயரில் இரு காக்கைகள் அமர்ந்திருப்பது போல படம் ஒன்றை தமது டுவிட்டர் பக்கத்தில் கிரண்பேடி வெளியிட்டிருந்தார். அதில் யோகா என்பது சர்வமயம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஒரு மணி நேரம் கழித்து அதே படத்தை பதிவிட்டு, தர்ணா என்பது யோகா ஆகுமா என செய்தியாளர் ஒருவர் தம்மிடம் கேள்வி எழுப்பியதாக அவர் பதிவிட்டிருந்தார். அதற்கு, தர்ணாவும் யோகாதான் . என்ன நோக்கத்திற்காக, எந்த ஆசனத்தில் அமர்ந்து, என்ன சத்தம் எழுப்புகிறோம் என்பதைப் பொறுத்தது என்று தாம் பதிலளித்ததாக கிரண்பேடி பதிவிட்டிருந்தார்.தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு பின், புல்தரை விரிப்பின் மீது பூனை இருப்பது போன்ற படத்தை வெளியிட்டு, தான் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல யோகா என்பது சர்வமயம் என கிரண்பேடி பதிவிட்டார். பால்கனிக்கு வந்த காக்கை, முன்னர் பாயை விட்டு நகராத பூனையாக இருந்தது என்று பொருள்படும்படியும் அவர் குறிப்பிட்டுள்ளார். யோகா, தர்ணா, காக்கை என கிரண்பேடி, நாராயணசாமியின் போராட்டத்தை கிண்டலடிப்பதாகவும், காக்கை எனக் கூறியிருப்பது நிறத்தை குறிப்பிட்டு அவமதிக்கும் செயல் என்றும் சர்ச்சைகள் உருவாகியுள்ளன.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Feb 18, 2019 8:07 pm

சென்னை: ''நிதி பற்றாக்குறை காரணமாக புதுச்சேரியில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை'' என புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி கூறினார்.சென்னை விமான நிலையத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நடத்தி வரும் தர்ணா போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறை காரணமாக பல நலத் திட்டங்கள் செயல்படுத்த முடியாமல் உள்ளன. இது குறித்து நிதித்துறை செயலரிடம் பேச வேண்டும்.நான் கவர்னர் என்பதால் எனக்கு நிதி, அரசு நிர்வாகம், பாதுகாப்பு போன்றவற்றை நிர்வகிக்க அதிகாரம் உள்ளது. முதல்வர் 39 கோப்புகளை கையெழுத்திடும்படி என்னிடம் கொடுத்துள்ளார். மக்கள் வரிப்பணம் என்பதால் கோப்புக்களை ஆராய்ந்து நிதித்துறை அதிகாரிகளிடம் பேசி முடிவெடுக்க வேண்டும்.தற்போதைய சூழலில் மக்களிடம் தவறான தகவல்களை முதல்வர் நாராயணசாமி பரப்பி வருகிறார். 'ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க வேண்டும்' என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு அமல்படுத்தப்படுகிறதா என உச்சநீதிமன்றம் கண்காணித்து வருகிறது. உத்தரவை செயல்படுத்த புதுச்சேரி அரசு முன்வரவில்லை.இவ்வாறு கூறினார்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Feb 18, 2019 8:09 pm

புதுடில்லி : புதுச்சேரி துணைநிலை கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி தொடர் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். இந்த போராட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின், நேற்று நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் இன்று புதுச்சேரி சென்று, நாராயணசாமியின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். அங்கு அவர் பேசுகையில்: டில்லி மக்களால் தோற்கடிக்கப்பட்ட கிரண்பேடி புதுச்சேரியில் பிரச்சனை ஏற்படுத்துகிறார். டில்லியை போல் புதுச்சேரியிலும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Feb 19, 2019 7:48 pm

லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணியை, அமைச்சர் தங்கமணி சந்தித்து பேசினார். இதன் பின்னர், சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் ஓட்டலுக்கு, ராமதாஸ், அன்புமணி ஆகியோர் வந்தனர். அவர்களை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர். தொடர்ந்து, இரு தரப்பிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. இதில், அதிமுக தரப்பில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், வேலுமணி ஆகியோரும், பா.ம.க., சார்பில், ராமதாஸ், அன்புமணி, ஜி.கே. மணி ஆகியோர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து அதிமுக, பாமக இடையே கூட்டணிக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் பின்னர் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.அப்போது, அதிமுக ஓருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், லோக்சபா தேர்தலில் அதிமுகவும் பாமகவும் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளது. பாமகவுக்கு 7 லோக்சபா சீட்களும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்படுகிறது. 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாம.க., ஆதரவு அளிக்கும் என்றார்.பின்னர் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், அதிமுக - பாமக கூட்டணி., மக்கள் நலகூட்டணி, மெகா கூட்டணி. எந்தெந்த தொகுதிகளில் பாமக போட்டியிடும் என்பது விரைவில் அறிவிக்கப்படும். 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே கூட்டணி வைத்துள்ளோம். அந்த கோரிக்கைகளை முதல்வர், துணை முதல்வரிடம் வழங்கியுள்ளோம். 40 தொகுதிகளிலும் அதிமுக பாமக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Feb 19, 2019 8:03 pm

அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.காவிரியில், கர்நாடகா மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது.விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். உழவர் ஊதியக்குழு அமைக்க வேண்டும். நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். என பா.ம.க. தேர்தல் கூட்டணியில் கோரிக்கை வைத்துள்ளது. இவைகள் ஏற்க தக்கதல்ல.


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Feb 19, 2019 8:03 pm

அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.காவிரியில், கர்நாடகா மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது.விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். உழவர் ஊதியக்குழு அமைக்க வேண்டும். நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். என பா.ம.க. தேர்தல் கூட்டணியில் கோரிக்கை வைத்துள்ளது. இவைகள் ஏற்க தக்கதல்ல.


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Feb 19, 2019 8:06 pm

சென்னை: அதிமுக கூட்டணியில் பா.ஜ.க.,வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனை முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் ஆகியோர் கூஅதிமுக - பா.ஜ., கூட்டணி குறித்து இரு கட்சிகள் இடையே 2 ம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை நந்தனம் கிரவுன்பிளாசா ஓட்டலில் நடந்தது. இங்கு பியூஷ் கோயலுடன் இ.பி.எஸ்., பேச்சு நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையில், பா.ஜ., சார்பில், பியூஷ் கோயல், தமிழக பா.ஜ., பொறுப்பாளர் முரளிதரராவ், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் , வானதி சீனிவாசன், அதிமுக சார்பில், முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் பங்கேற்றனர்.இன்றைய பேச்சில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது எனவும் யாருக்கு எத்தனை தொகுதிகள் எனவும் முடிவானது. இதன்படி லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.ட்டாக நிருபர்களிடம் தெரிவித்தனர்.பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் ஓ.பி.எஸ்., நிருபர்களிடம் பேசுகையில்:2019 பொதுத்தேர்தலில் அதிமுகவும்,. பாஜவும் வெற்றிக்கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதுஎன்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இரு கட்சிகள் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில் பா.ஜ.,வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து பியூஷ்கோயல் நிருபர்களிடம் பேசுகையில்: (தமிழில் வணக்கம் என்று கூறிவிட்டு தொடங்கினார்) பார்லி., தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது என முடிவு செய்துள்ளோம். இது போல் 21 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பா.ஜ., ஆதரவு அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.இந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் நாற்பதும் நமதே (தமிழில் கூறினார்) என வெற்றி பெறுவோம். கடந்த 2016ல் ஜூலையில் ஜெயலலிதாவை சந்தித்து எரிசக்தி தொடர்பாக பேச்சு நடத்தினேன். இது என்றும் எனது நினைவில் உள்ளது
.தற்போது நாங்கள் ஏற்படுத்தியுள்ள இந்த கூட்டணியால் ஜெயலலிதா ஆத்மா மகிழ்ச்சி கொள்ளும். இந்த கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Feb 20, 2019 6:52 am

புதுடில்லி:மத்திய அரசால் தடை செய்யப் பட்டுள்ள, 'சிமி' எனப்படும், இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு, சட்ட விரோதமாக நிதி திரட்டி பயன்படுத்துவதையும், சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் தடுக்கும் அதிகாரங்களை, மாநிலங்களுக்கு, மத்திய அரசு வழங்கி உள்ளது. மேலும், இந்த அமைப்புக்கான தடை, மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.'சிமி' பயங்கரவாத அமைப்பு, நாடு முழுவதும் பல்வேறு நாசகார செயல்களில் ஈடுபட்டு வந்ததால், 2001ல், மத்திய அரசால் தடை செய்யப்பட்டது. அது முதல், அவ்வப்போது, இந்த அமைப்பு மீதான தடை, தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.கடைசியாக, 2014, பிப்., 1ல், சிமி அமைப்பின் மீதான தடையை, அப்போதைய, ஐ.மு., கூட்டணி அரசு நீட்டித்து, உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், சிமி மீதான தடையை, மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்து, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை விபரம்:சிமி பயங்கரவாத அமைப்பு மீதான தடை, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது.இந்த சட்டத்தின் ஏழாவது பிரிவு, சட்டவிரோத மாக நிதி திரட்டி பயன்படுத்துவதை தடுக்கிறது; எட்டாம் பிரிவு, சட்டவிரோத அமைப்புகள், எந்தவொரு இடத்தையும், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதை தடை
செய்கிறது.சட்டவிரோதமாக நிதி திரட்டுவதையும், சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு, இடங்களை பயன் படுத்துவதையும் தடுக்க, இந்த சட்ட அதிகாரங்கள் அனைத்தையும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசுகளுக்கு, மத்திய அரசு வழங்கி உள்ளது.எனவே, சிமி அமைப்பு, சட்டவிரோத நடவடிக்கை களில் ஈடுபடாமல் தடுக்க,மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசுகள், தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம். சிமி அமைப்பின் சட்டவிரோத நடவடிக்கைகளை, உடன் தடுக்காவிடில், அந்த அமைப்பை சேர்ந்தோர், பிரிவினைவாத நடவடிக்கைகளில் தீவிரம் காட்டுவர்.தலைமறைவாக உள்ள சிமி பயங்கரவாதி கள், மீண்டும் ஒன்று சேர்ந்து, நாட்டின் மதச் சார் பின்மையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவர்.
தேசவிரோத மனப்பான்மையை மக்கள் மத்தியில் விதைக்கச் செய்து, பிரிவினையை வளர்ப்பர். அதற்கு, இடம் தராது, மாநில, யூனியன் பிரதேச அரசுகள் அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே, ஜம்மு - காஷ்மீர் உட்பட, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாதுகாப்பு நிலை குறித்து, மத்திய உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங், நேற்று ஆய்வு நடத்தினார். இந்த கூட்டத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித் தோவல் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள்பங்கேற்றனர்சிமி' பயங்ரவாத அமைப்பு, 1977, ஏப்., 25ல், உத்தர பிரதேச மாநிலம், அலிகாரில் துவக்கப்பட்டது. இந்தியாவை மதச்சார்பற்ற நிலைப்பாட்டில் இருந்து விடுவித்து,இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் என்பதே, இந்த அமைப்பின் கொள்கை. சிமி தலைவர்கள் சப்தர் நகோரி, அபு பைசல் உள்ளிட்டோர் செய்துள்ள கொடுமை யான குற்றங்கள் குறித்த தகவல்களை, மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, டில்லி, தமிழகம், தெலுங்கானா, கேரளா மாநிலங்களை சேர்ந்த போலீசார், விசாரணை அமைப்புகளுக்கு அளித்துள்ளனர்.இவர்களில், அபு பைசல், ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறான். மற்ற பயங்கரவாத தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்கடந்த, 2013ல், மத்தியப் பிரதேச மாநிலம், கண்ட்வாவில் உள்ள சிறையில் அடைக்கப் பட்டிருந்த, 'சிமி' பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஏழு பயங்கரவாதிகள், 14 அடி உயர சுவரை தாண்டி, தப்பியோடினர். இவர்களில் சிலர் கொல்லப்பட்டனர்; சிலர், மீண்டும் கைது செய்யப்பட்டனர். இதே அமைப்பைச் சேர்ந்த எட்டு பேர், 2016ல், ம.பி., மாநிலம், போபாலில் உள்ள சிறையில் இருந்து தப்பியோடி, பரபரப்பை ஏற்படுத்தினர்.கடந்த,2014ல், கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில், இவர்கள் குண்டுவெடிப்புகளை நிகழ்த்திஉள்ளனர்.கடந்த, 2017ல்,பீஹார் மாநிலம்,கயாவில் நடந்த குண்டு வெடிப்புகளின் பின்னணியில்,'சிமி' பயங்கர வாதிகள் இருந்ததாக, புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.




சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Feb 20, 2019 6:57 am

புதுடில்லி, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி டில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சமூக நீதிக்காக போராடுவதே தன் கொள்கை என பா.ம.க. தலைவர் ராமதாஸ் கூறுவார். தற்போது அந்த கொள்கையை அ.தி.மு.க.- பா.ஜ.வுடன் கூட்டணி அமைத்து குழி தோண்டி புதைத்துவிட்டார்.இரு தரப்பிலும் பேச்சு நடத்தும் வழக்கமுள்ள கட்சியாக பா.ம.க. உள்ளது மிகத் தவறு. யாருடன் கூட்டணி என்பதில் குறைந்தபட்ச கொள்கை அடிப்படை இருந்தாக வேண்டும். அவ்வாறு இல்லாமல் யாரோடு வேண்டுமானாலும் கூட்டணி அமைக்கலாம் என பா.ம.க. நினைப்பது சரியானதாக தெரியவில்லை. தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி முடிவாகிவிட்டது. இது குறித்த அறிவிப்பு சென்னையில் வெளியாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Feb 20, 2019 7:00 am

சென்னை: பா.ம.க.,விற்கு ராஜ்யசபா 'சீட்' ஒதுக்கப்பட்டதால் தே.மு.தி.க., தலைமை கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து தே.மு.தி.க. வட்டாரத்தில் கூறப்படுவதாவது: ஆரம்பத்தில் அ.தி.மு.க., தலைமையிடம்தே.மு.தி.க.,வும் ராஜ்யசபா எம்.பி. கேட்டு நிர்ப்பந்தம் செய்தது. உள்ளாட்சி தேர்தலில் 20 சதவீதஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் கேட்கப்பட்டது. ஆனால் ராஜ்யசபா 'சீட்' தருவது குறித்து பின்னர் பரிசீலிப்பதாக அ.தி.மு.க. தரப்பில்கூறப்பட்டது.இந்நிலையில் பா.ம.க.விற்கு ஏழு தொகுதிகள் மட்டுமின்றி ஒரு ராஜ்யசபா எம்.பி. பதவியும் தரப்பட உள்ளது. இதனால் பா.ம.க. போல தே.மு.தி.க.வுக்கும் ராஜ்யசபா பதவியை உறுதி செய்ய வேண்டும் என அ.தி.மு.க. - பா.ஜ.விடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் அ.தி.மு.க.வுடன் கூட்டணியை உறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.




Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக