புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 pm

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm

» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசியல்  துளிகள். - Page 2 I_vote_lcapஅரசியல்  துளிகள். - Page 2 I_voting_barஅரசியல்  துளிகள். - Page 2 I_vote_rcap 
36 Posts - 46%
heezulia
அரசியல்  துளிகள். - Page 2 I_vote_lcapஅரசியல்  துளிகள். - Page 2 I_voting_barஅரசியல்  துளிகள். - Page 2 I_vote_rcap 
19 Posts - 24%
mohamed nizamudeen
அரசியல்  துளிகள். - Page 2 I_vote_lcapஅரசியல்  துளிகள். - Page 2 I_voting_barஅரசியல்  துளிகள். - Page 2 I_vote_rcap 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
அரசியல்  துளிகள். - Page 2 I_vote_lcapஅரசியல்  துளிகள். - Page 2 I_voting_barஅரசியல்  துளிகள். - Page 2 I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
அரசியல்  துளிகள். - Page 2 I_vote_lcapஅரசியல்  துளிகள். - Page 2 I_voting_barஅரசியல்  துளிகள். - Page 2 I_vote_rcap 
4 Posts - 5%
prajai
அரசியல்  துளிகள். - Page 2 I_vote_lcapஅரசியல்  துளிகள். - Page 2 I_voting_barஅரசியல்  துளிகள். - Page 2 I_vote_rcap 
3 Posts - 4%
Raji@123
அரசியல்  துளிகள். - Page 2 I_vote_lcapஅரசியல்  துளிகள். - Page 2 I_voting_barஅரசியல்  துளிகள். - Page 2 I_vote_rcap 
2 Posts - 3%
kavithasankar
அரசியல்  துளிகள். - Page 2 I_vote_lcapஅரசியல்  துளிகள். - Page 2 I_voting_barஅரசியல்  துளிகள். - Page 2 I_vote_rcap 
2 Posts - 3%
M. Priya
அரசியல்  துளிகள். - Page 2 I_vote_lcapஅரசியல்  துளிகள். - Page 2 I_voting_barஅரசியல்  துளிகள். - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அரசியல்  துளிகள். - Page 2 I_vote_lcapஅரசியல்  துளிகள். - Page 2 I_voting_barஅரசியல்  துளிகள். - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரசியல்  துளிகள். - Page 2 I_vote_lcapஅரசியல்  துளிகள். - Page 2 I_voting_barஅரசியல்  துளிகள். - Page 2 I_vote_rcap 
156 Posts - 41%
ayyasamy ram
அரசியல்  துளிகள். - Page 2 I_vote_lcapஅரசியல்  துளிகள். - Page 2 I_voting_barஅரசியல்  துளிகள். - Page 2 I_vote_rcap 
150 Posts - 39%
mohamed nizamudeen
அரசியல்  துளிகள். - Page 2 I_vote_lcapஅரசியல்  துளிகள். - Page 2 I_voting_barஅரசியல்  துளிகள். - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
அரசியல்  துளிகள். - Page 2 I_vote_lcapஅரசியல்  துளிகள். - Page 2 I_voting_barஅரசியல்  துளிகள். - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
அரசியல்  துளிகள். - Page 2 I_vote_lcapஅரசியல்  துளிகள். - Page 2 I_voting_barஅரசியல்  துளிகள். - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
அரசியல்  துளிகள். - Page 2 I_vote_lcapஅரசியல்  துளிகள். - Page 2 I_voting_barஅரசியல்  துளிகள். - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அரசியல்  துளிகள். - Page 2 I_vote_lcapஅரசியல்  துளிகள். - Page 2 I_voting_barஅரசியல்  துளிகள். - Page 2 I_vote_rcap 
7 Posts - 2%
T.N.Balasubramanian
அரசியல்  துளிகள். - Page 2 I_vote_lcapஅரசியல்  துளிகள். - Page 2 I_voting_barஅரசியல்  துளிகள். - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அரசியல்  துளிகள். - Page 2 I_vote_lcapஅரசியல்  துளிகள். - Page 2 I_voting_barஅரசியல்  துளிகள். - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
அரசியல்  துளிகள். - Page 2 I_vote_lcapஅரசியல்  துளிகள். - Page 2 I_voting_barஅரசியல்  துளிகள். - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியல் துளிகள்.


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 25/07/2014

Postசிவனாசான் Thu Feb 14, 2019 8:16 am

First topic message reminder :

மதுரை : லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கலின் போதே தேர்தல் வாக்குறுதியை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் எனக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் பிப்.,28 க்குள் அதிமுக, திமுக, பா.ஜ., உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் பதிலளிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 25/07/2014

Postசிவனாசான் Thu Feb 14, 2019 8:46 am

புதுடில்லி: ''பொய், அச்சுறுத்தல், சகிக்க முடியாத வகையில் சத்தமாக பேசுதல் ஆகியவை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் தத்துவங்கள்,'' என, காங்., மூத்த தலைவர், சோனியா குற்றஞ்சாட்டி உள்ளார்.டில்லியில் நேற்று, காங்., பார்லிமென்ட் கட்சி பொது குழு கூட்டத்தில், சோனியா பேசியதாவது: நாடு முழுவதும், சச்சரவுகளும், அச்சுறுத்தலுமாக காணப்படுகிறது. விரைவில் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலை, புதிய நம்பிக்கையுடனும், தீர்க்கமாகவும் சந்திப்போம். ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில், காங்.,கிற்கு கிடைத்தவெற்றி, புதிய நம்பிக்கையை தந்துள்ளது. நம் எதிரிகள், தங்களை வெல்ல முடியாதவர்களாக தம்பட்டம் அடித்தனர். காங்., தலைவர், ராகுல், லட்சக்கணக்கான தொண்டர்களை திரட்டி, புதிய உத்வேகத்துடன் தேர்தலை சந்தித்தார். எதிரிகளின் கோட்டைகளாக கருதப்பட்ட மாநிலங்களில், காங்., சிறப்பான வெற்றி பெற்றுள்ளது. மதச்சார்பற்ற குடியரசின் ஜனநாயக அடித்தளங்களை தகர்க்கும் வகையில், மத்திய அரசு தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.மத்திய அரசு அமைப்புகளில், அரசின் தலையீடு அதிகமாக உள்ளது. எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தொடர்ந்து அடக்கு முறைகளுக்கு ஆளாகின்றனர். எதிர்ப்பு குரல்கள் ஒடுக்கப்படுகின்றன. எல்லாவற்றிலும் முக்கியமான, பேச்சு சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. பொய், அச்சுறுத்தல், சகிக்க முடியாத வகையில் சத்தமாக பேசுதல் ஆகியவை, மத்திய அரசின் தத்துவங்களாக உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 14, 2019 9:04 am

அரசியல்  துளிகள். - Page 2 3838410834 அரசியல்  துளிகள். - Page 2 103459460


 ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 14, 2019 9:59 am

ஸ்ரீநகர்:
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்
42 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
வீரர்கள் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதால்,
பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
-
தினமலர்



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 25/07/2014

Postசிவனாசான் Sat Feb 16, 2019 8:10 am

சென்னை: முதல்வர், இ.பி.எஸ்., தலைமையிலான அரசு பொறுப்பேற்று, இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றதை ஒட்டி, சாதனை மலர், குறும்படம், முதல்வரின் பொன்மொழிகள்,காலப்பேழைபுத்தகம்ஆகியவை,நேற்றுவெளியிடப்பட்டன.இ.பி.எஸ்., அரசு பொறுப்பேற்று, நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி, செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், 'சாதனைகள் ஈராண்டு, தொடரும் பல்லாண்டு' என்ற தலைப்பில், இரண்டாண்டு சாதனை மலர், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.அத்துடன், முதல்வர் ஆற்றிய உரைகளின் தொகுப்பு; சட்டசபையில் பேசிய உரைகளின் தொகுப்பு; முதல்வரின் பொன்மொழிகள் அடங்கிய புத்தகங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. இப்புத்தகங்கள் வெளியிடும் நிகழ்ச்சி, நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் நடந்தது.புத்தகங்களை, முதல்வர் வெளியிட்டார்; துணை முதல்வர், பன்னீர்செல்வம் பெற்றார். அரசின் இரண்டாண்டு சாதனைகளின் குறும்படத்தை, செய்தித் துறை அமைச்சர், ராஜு பெற்றார். காலப்பேழை புத்தகத்தை, முதல்வர் வெளியிட, தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன் பெற்று கொண்டார்.விழாவில், அமைச்சர்கள் அனைவரும், முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு, மாலை அணிவித்தனர். அதன்பின், அனைவரும் அமர்ந்து, அரசின் சாதனைகளை விளக்கும் குறும்படத்தை பார்த்தனர். செய்தித் துறை செயலர், வெங்கடேசன் வரவேற்றார். இயக்குனர், சங்கர் நன்றி கூறினார்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 25/07/2014

Postசிவனாசான் Sat Feb 16, 2019 8:13 am

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு, டிசம்பரில் சட்டசபை தேர்தல் நடந்தது.இதில், ஆளும் கட்சி அபார வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது.இதையடுத்து, டிச., 13ல், முதல்வராக சந்திரசேகர ராவ் பதவியேற்றார். அவருடன், முகமது அலி மட்டும், உள்துறை அமைச்சரானார். இருவரை தவிர, வேறு யாரும் அமைச்சராக பொறுப்பேற்கவில்லை. புதிய ஆட்சி அமைந்து, இரண்டு மாதங்களுக்கு மேலாகியும், அமைச்சரவை விரிவுபடுத்தப்படாதது, கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஜோதிட நிபுணர்கள் ஆலோசனைப்படி, அமைச்சரவை விரிவாக்கத்தை, சந்திரசேகர ராவ் காலம் தாழ்த்துவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
இந்நிலையில், வரும், 19ம் தேதி முகூர்த்த நாள் என்பதாலும், தெலுங்கு காலண்டரின்படி, மகா சுதா பவுர்ணமி தினம் என்பதாலும், அன்று, அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய,சந்திரசேகர ராவ் திட்டமிட்டுள்ளார்.இது தொடர்பாக, கவர்னர் நரசிம்மனை சந்தித்து, பதவியேற்கவுள்ள அமைச்சர்களின் பட்டியலை, அவர் அளித்துள்ளதாக, முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.மொத்தம், 119 சட்டசபை உறுப்பினர்களை உடைய, தெலுங்கானா மாநிலத்தில், அமைச்சரவையில், அதிகபட்சமாக, 17 பேர் இடம்பெற முடியும்.




சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 25/07/2014

Postசிவனாசான் Sat Feb 16, 2019 8:16 am

யவத்மல்: காஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு படையினருக்கு சுதந்திரம் வழங்கியுள்ளதாக கூறியுள்ள பிரதமர் மோடி, பாகிஸ்தான் என்றாலே பயங்கரவாதம் மஹாராஷ்டிரா மாநிலம், யவத்மால் மாவட்டத்தில் நடந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, பிரிவினைக்கு பின்னர் உருவான நாடு (பாகிஸ்தான்) பயங்கரவாத செயல்களை ஊக்குவித்து வருகிறது. தற்போது திவாலாகும் நிலையில், இருக்கும் அந்த நாடு, பயங்கரவாதத்திற்கு பெயர் பெற்றுள்ளது. புல்வாமாவில், வீரமரணம் அடைந்த வீரர்களின் தியாகம் வீண்போகாது.தான் எனக்கூறினார்.குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு படையினருக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டு உள்ளது. பயங்கரவாதத்திற்கு இன்னொரு பெயர பாகிஸ்தான். இந்த நேரத்தில், பாதுகாப்பு படையினர் மீது நம்பிக்கை வைத்து மக்கள் அமைதியாக இருக்க வேண்டும். குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது எங்கு, எப்போது நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி பாதுகாப்பு படையினர் முடிவு செய்வார்கள் .வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினரின் வேதனை மற்றும் உங்களின் கோபத்தை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.




சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 25/07/2014

Postசிவனாசான் Sat Feb 16, 2019 8:18 am

ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன், மசூத் அசாருக்கு, அல் - குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவன், ஒசாமா பின்லேடனுக்கு நேர்ந்த கதியே ஏற்படும். இந்தியாவுக்குள் ஊடுருவிஉள்ள எல்லா பயங்கரவாதிகளையும், கொன்று குவிக்க வேண்டும்.
ராம்தேவ், யோகா குருசம்பிரதாயங்களை மதிக்கலாமே!மத சம்பிரதாயங்கள் மதிக்கப்பட வேண்டும். தங்களை பிரபலப்படுத்த, மத சம்பிரதாயங்களை மீறுவோரால், நாட்டின் ஒற்றுமைக்கு தீங்கு ஏற்படுகிறது. பார்சி மதத்தவரை திருமணம் செய்த நான், அக்னி கோவிலுக்குள் செல்லக் கூடாது. சம்பிரதாயங்களை மதித்து, கோவிலுக்கு செல்லாமல் இருக்கிறேன். இதற்காக, நீதிமன்ற படிகளில் ஏறும் எண்ணம் இல்லை.ஸ்மிருதி இரானி, மத்திய ஜவுளி அமைச்சர், பா.ஜ.,நடந்ததை எல்லாரும் அறிவர்!நரேந்திர மோடி, பிரதமர் பதவிக்கு வரும் முன், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், 'பயங்கரவாதிகள் விஷயத்தில், பாக்.,கிற்கு பாடம் கற்பிக்க தவறி விட்டார்' என, குற்றஞ் சாட்டினார். 56 அங்குல மார்பு உள்ளோரால் தான், பாக்.,கிற்கு பாடம் புகட்ட முடியும் என்றும், அவர் கூறினார். ஆனால், தற்போது நடந்தவற்றை எல்லாரும் அறிவர்.சரத் பவார், தலைவர், தேசியவாத காங்கிரஸ்



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 25/07/2014

Postசிவனாசான் Sun Feb 17, 2019 5:33 am

புதுச்சேரி : 5வது நாளாக தர்ணா போராட்டம் நடத்தி வரும் முதல்வர் நாராயணசாமியை இன்று மாலை பேச்சுவார்த்தைக்கு வரும்படிகவர்னர்கிரண்பேடிஅழைப்புவிடுத்துள்ளார்துணைநிலை கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக பிப்.,13 ம் தேதி முதல் கவர்னர் மாளிகை முன், கருப்பு சட்டை அணிந்துபடி அமைச்சர்களுடன் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார் முதல்வர் நாராயணசாமி. நிலுவையில் உள்ள 36 கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் அறிவித்திருந்தார். இதனால் கவர்னர் மாளிகையில் அதிவிரைவுப்படை குவிக்கப்பட்டது. துணை ராணுவத்தின் பாதுகாப்புடன் கவர்னர் மாளிகையில் இருந்து வெளியேறிய கிரண்பேடி, பிப்.,14 அன்று டில்லி புறப்பட்டுச் சென்றார்.முன்னதாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கிரண்பேடி பிப்.,20 வரை சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாகவும், பிப்.,20 அன்று நள்ளிரவே புதுச்சேரி திரும்ப உள்ளதாக தெரிவித்தார். இருப்பினும் கவர்னர் மாளிகை முன் அமர்ந்து நாராயணசாமி தர்ணா போராட்டத்தை தொடர்ந்தார். தொடர்ந்து கிரண்பேடிக்கு எதிராக கருத்துக்களை கூறி வந்த நாராயணசாமி, கிரண்பேடி பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 5வது நாளாக இன்றும் தனது போராட்டத்தை தொடர்ந்து வருகிறார். இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் கிரண்பேடி பேசுகையில், முதல்வர் நாராயணசாமியுடன் தனிப்பட்ட முறையில் விரோதம் ஏதும் இல்லை. ஹெல்மெட் அணிவதை மட்டும் நான் வலியுறுத்தினேன். சட்டத்தின்படி தான் நான் பணியாற்றி வவருகிறேன். நிர்வாக ரீதியாகவும், நிதி விவகாரங்கள் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டு வருகிறது. கோப்புகளை முறையாக படித்து பார்க்காமல் நடவடிக்கை எடுக்க முடியாது. முதல்வர் நாராயணசாமி மாலை 6 மணிக்கு , கவர்னர் மாளிகைக்கு வந்து என்னுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.முதல்வர் நாராயணசாமி தனது வீட்டின் முன் கருப்புக் கொடி ஏற்றி கிரண்பேடிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். புதுச்சேரி காங்., அலுவலகங்களிலும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் நாராயணசாமியை கைது செய்ய போவதாக ஏற்கனவே கூறி இருந்த கிரண்பேடி, புதுச்சேரி திரும்பியதும் முக்கிய முடிவுகள் எடுப்பார் என கூறப்படுகிறது. இதனால் புதுச்சேரி அரசியலில் பதற்றமான நிலை காணப்படுகிறது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 25/07/2014

Postசிவனாசான் Sun Feb 17, 2019 5:36 am

புதுடில்லி, மகாராஷ்டிராவில் அடுத்த சட்டசபை தேர்தலுக்குப்பின் முதல்வர் பதவியை 28 வயதாகும் ஆதித்ய தாக்கரேக்கு தர வேண்டும் என்ற சிவசேனாவின் நிபந்தனையால் பா.ஜ தவிக்கிறது.மகாராஷ்டிராவில் 48 லோக்சபா தொகுதிகளும், 288 சட்டசபை தொகுதிகளும் உள்ளன. மே மாதம் லோக்சபா தேர்தலும், அக்டோபரில் சட்டசபை தேர்தலும் நடக்க உள்ளன. இரு கட்சிகளுக்குமான கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதில், ''டில்லி உங்களுக்கு, மும்பை எங்களுக்கு'' என்கிறாராம் தாக்கரே.1995 பார்முலாவை பின்பற்ற விரும்புகிறது சேனா. அப்போது 288 தொகுதிகளில் 169 தொகுகளில் சேனாவும், 116 தொகுதிகளில் பா.ஜ.,வும் போட்டியிட்டன.அதில் சேனா 73 தொகுதிகளிலும், பா.ஜ., 65 தொகுதிகளிலும் ஜெயித்து, கூட்டணி ஆட்சி அமைத்தன.பெரும்பாலான சட்டசபை தொகுதிகளை தங்களுக்கு தர சம்மதித்தால் லோக்சபா தேர்தலில் 22 இடங்களை ஏற்கிறோம், என்கிறது சேனா.ஆனால் 2014 தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்டு பா.ஜ., 122 இடங்களிலும் சேனா 63 இடங்களிலும் வெற்றி பெற்றன.ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவைப்பட்டதால் சேனாவுடன் கூட்டணி சேர்ந்து பா.ஜ., ஆட்சி நடத்தி வருகிறது.1995 பார்முலா மட்டுமின்றி யார் அதிக தொகுதிகளில் வென்றாலும் தனது 28 வயது மகன் ஆதித்ய தாக்கரேயை முதல்வராக்க வேண்டும் என்பதே உத்தவின் முக்கிய நிபந்தனை. இதைக் கேட்டு பா.ஜ., முதல்வர் பட்னாவிஸ் அதிர்ந்து நிற்கிறார்.''ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் ஆட்சி செய்து கொள்ளலாம்'' என்ற பட்னாவிசின் யோசனைக்கும் தாக்கரே மசிவதாக இல்லை.ஏற்கனவே பட்னாவிஸ் ஒரு சிறந்த முதல்வர் என்ற பெயர் எடுத்து விட்டார். எனவே ஆதித்ய தாக்கரேயை முதல்வராக்க பா.ஜ., விரும்பவில்லை. துணை முதல்வராக வேண்டுமானால் ஏற்கலாம், என்கிறது பா.ஜ., சிவசேனாவின் பல எம்.எல்.ஏ.,க்களும் எம்.பி.,க்களும் பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்கவே விரும்புகிறார்கள்.சேனாவுடன் கூட்டணி வைக்கலாம், ஆனால், அவர்கள் நிபந்தனைக்கும் பிளாக் மெயிலுக்கும் ஒத்துக்கொள்ள முடியாது'' என்பது மோடி, அமித்ஷா எண்ணம்.மொத்தத்தில் உத்தவ் தாக்கரேயின் நிபந்தனைகளுக்கு பா.ஜ.வில் மட்டுமின்றி சிவசேனாவிலும் அதிருப்தி குரல்கள் எழுந்துள்ளன.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 25/07/2014

Postசிவனாசான் Sun Feb 17, 2019 6:00 am

எதிர்க்கட்சிகள் ஆட்சி நடத்தும், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய அரசை கண்டித்து, போராட்டத்தில் குதிக்கும் போக்கு அதிகரித்து உள்ளது. அரசியலில், தங்கள் இருப்பை தக்க வைக்கவும், விளம்பரம் தேடவும், சுயநலத்துக்காக, இது போன்ற யுக்திகளை அவர்கள் கையில் எடுத்துள்ளதாக, அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.அரசியல் என்பது போராட்டங்களால் நிரம்பியது. பொதுமக்கள், தங்கள் உரிமை களுக்காகவும், எதிர்க்கட்சிகள், தங்கள் எதிர்ப்பு களை தெரிவிப்
பதற்காகவும், போராட்டங்கள் நடத்துவது காலம் காலமாக பின்பற்றப்படும் நடைமுறை.
சமீபகாலமாக, எதிர்க்கட்சிகள் ஆட்சி நடத்தும் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய அரசை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.இது குறித்து, அரசியல் ஆர்வலர்கள் கூறியதாவது:மேற்கு வங்கத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, சாரதா, 'சிட்பண்ட்' முறைகேடு விவகாரத்தில், கோல்கட்டா போலீஸ் கமிஷனர், ராஜீவ் குமாரை விசாரிப்பதற்காக, சமீபத்தில், அவரது வீட்டிற்கு, சி.பி.ஐ., சென்றது. இதை கண்டித்து, அம்மாநில முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான, மம்தா பானர்ஜி, விடிய விடிய போராட்டம் நடத்தினார். மாநில போலீசாரை வைத்து,விசாரணைக்கு வந்த, சி.பி.ஐ., அதிகாரிகளையும் கைது செய்தார்.
இதேபோல், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தர மறுப்பதாக கூறி, மத்திய அரசை கண்டித்து, அம் மாநில முதல்வரும், தெலுங்கு தேசம் தலைவரு மான, சந்திரபாபு நாயுடு, சமீபத்தில் டில்லியில் உண்ணாவிரதம் இருந்தார்.இந்த போராட்டத்தில் பங்கேற்க, ஆந்திராவிலிருந்து பெரும் படையையே, அவர் திரட்டிச் சென்றார்.இந்த போராட்டம் நடந்த மூன்று நாட்களுக்குப் பின், மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கக் கோரி, ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், தலைநகரில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் திரட்டி, போராட்டம் நடத்தினார்
மம்தாவும், சந்திரபாபு நாயுடுவும் தற்போதுநடத்தும் போராட்டங்களில், புதிதாக ஒன்றும் இல்லை. மாநில முதல்வர்களே போராட்டங்களில் இறங்கிய பல சம்பவங்கள், இதற்கு முன்னும் அரங்கேறி உள்ளன. ஆந்திராவில் இருந்து, தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்படுவதை கண்டித்து, 2014ல், அன்றைய ஆந்திர முதல்வரும், காங்., மூத்த தலைவருமான கிரண்குமார் ரெட்டி, டில்லியில்போராட்டம் நடத்தினார். முதல்வர்கள் போராட்டத்தில்ஈடுபட்டமபவங்கள்,இதற்குமுன்,வரலாற்றில்இடம்பெற்றிருந்தாலும்,
தற்போது நடக்கும் போராட்டங்கள், முழுக்க முழுக்க சுய நலத்துக்காகவும், விளம்பரத் துக்காகவுமே நடத்தப்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளது. 'மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள், சட்டத்தை மீறலாமா?' என, மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த போராட்டங்கள் அனைத் திலுமே, மாநில நலன் பின்னுக்கதள்ளப்பட்டுள்ளதுமக்களை திசை திருப்பவும், விரைவில் நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் அரசியல் ஆதாயம் பெறுவதற்காகவுமே, நடத்தப்படுவதாக, பரவலாக பேசப்படுகிறது.

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக