புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வர வேண்டாம் என் மகனே! Poll_c10வர வேண்டாம் என் மகனே! Poll_m10வர வேண்டாம் என் மகனே! Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
வர வேண்டாம் என் மகனே! Poll_c10வர வேண்டாம் என் மகனே! Poll_m10வர வேண்டாம் என் மகனே! Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
வர வேண்டாம் என் மகனே! Poll_c10வர வேண்டாம் என் மகனே! Poll_m10வர வேண்டாம் என் மகனே! Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
வர வேண்டாம் என் மகனே! Poll_c10வர வேண்டாம் என் மகனே! Poll_m10வர வேண்டாம் என் மகனே! Poll_c10 
3 Posts - 2%
prajai
வர வேண்டாம் என் மகனே! Poll_c10வர வேண்டாம் என் மகனே! Poll_m10வர வேண்டாம் என் மகனே! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வர வேண்டாம் என் மகனே! Poll_c10வர வேண்டாம் என் மகனே! Poll_m10வர வேண்டாம் என் மகனே! Poll_c10 
1 Post - 1%
Kavithas
வர வேண்டாம் என் மகனே! Poll_c10வர வேண்டாம் என் மகனே! Poll_m10வர வேண்டாம் என் மகனே! Poll_c10 
1 Post - 1%
bala_t
வர வேண்டாம் என் மகனே! Poll_c10வர வேண்டாம் என் மகனே! Poll_m10வர வேண்டாம் என் மகனே! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வர வேண்டாம் என் மகனே! Poll_c10வர வேண்டாம் என் மகனே! Poll_m10வர வேண்டாம் என் மகனே! Poll_c10 
284 Posts - 42%
heezulia
வர வேண்டாம் என் மகனே! Poll_c10வர வேண்டாம் என் மகனே! Poll_m10வர வேண்டாம் என் மகனே! Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
வர வேண்டாம் என் மகனே! Poll_c10வர வேண்டாம் என் மகனே! Poll_m10வர வேண்டாம் என் மகனே! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
வர வேண்டாம் என் மகனே! Poll_c10வர வேண்டாம் என் மகனே! Poll_m10வர வேண்டாம் என் மகனே! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
வர வேண்டாம் என் மகனே! Poll_c10வர வேண்டாம் என் மகனே! Poll_m10வர வேண்டாம் என் மகனே! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வர வேண்டாம் என் மகனே! Poll_c10வர வேண்டாம் என் மகனே! Poll_m10வர வேண்டாம் என் மகனே! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
வர வேண்டாம் என் மகனே! Poll_c10வர வேண்டாம் என் மகனே! Poll_m10வர வேண்டாம் என் மகனே! Poll_c10 
5 Posts - 1%
prajai
வர வேண்டாம் என் மகனே! Poll_c10வர வேண்டாம் என் மகனே! Poll_m10வர வேண்டாம் என் மகனே! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
வர வேண்டாம் என் மகனே! Poll_c10வர வேண்டாம் என் மகனே! Poll_m10வர வேண்டாம் என் மகனே! Poll_c10 
4 Posts - 1%
manikavi
வர வேண்டாம் என் மகனே! Poll_c10வர வேண்டாம் என் மகனே! Poll_m10வர வேண்டாம் என் மகனே! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வர வேண்டாம் என் மகனே!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81952
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 12, 2019 9:55 pm

வர வேண்டாம் என் மகனே!

தைப் பொங்கல் திருநாளென்றும்
தமிழினத்தின் பெருநாளென்றும்
பொங்கலோப் பொங்கலென்று
பொங்கியெழும் மகிழ்ச்சியென்றும்,

ஆடு மாடு கோழியெல்லாம்
ஆனந்தக் கூத்தாடுமென்றும்
பறவைகளின் பெருங்கூச்சல்
பரவசத்தைக் கொடுக்குமென்றும்,

விதம் விதமாய்க் கற்பனையை
வீணாகச் சுமந்து கொண்டு
பிறந்த ஊரைப் பார்க்க நீ
புறப்படாதே என் மகனே!

அப்படியெல்லாம் இங்கே
அற்புதங்கள் நடப்பதில்லை
பற்பல ஆண்டுகளாய்ப்
பால்பானைப் பொங்கவில்லை!

உன்னை நான் கருத்தரித்தேன்
உயிர்ச் செண்டாய்ப் பெற்றெடுத்தேன்
ஓராயிரங் கதை சொல்லி
உரமூட்டி வளர்த்தெடுத்தேன்!

படி படி என்றுன்னைப்
படுத்திப் படிக்க வைத்தேன்–என்
உழைப்பையெல்லாம் உடையாக்கி
உடுத்தியுன்னை உலவ வைத்தேன்!
நீ வாழ்ந்தால் போதுமென்று
நான் வாழத் தவறிவிட்டேன்–உன்
அப்பனுக்கும் கூடுதலாய்
அரை அடி உயர வைத்தேன்!

பட்டணத்தில் வாழ்வதுதான்
பெருமையென மனந்திரிந்து
பாவி நான்தான் உன்னைப்
பேருந்தில் ஏற்றிவிட்டேன்!

உன்னோடு படித்தவர்கள்
ஊரிலே யாருமில்லை
அப்பன் அழியும் ஊரில்
அவன் பிள்ளை இருப்பதில்லை!

கெட்டுப் பட்டணம் போய்ச்
சேர்ந்தவர்கள் எத்தனைப் பேர்?
பட்டணம் போய்ச் சேர்ந்த பின்னர்
கெட்டவர்கள் எத்தனைப் பேர்?

வயல் வேலை செய்து இங்கே
வாழவே முடியாதென்று
அயல் வேலை செய்வதற்கு
அவனவன் பறந்து விட்டான்!

வெறிச்சோடிப் போய்விட்ட
வேளாண்மைக் கிராமத்தில்
பாற்பொங்கல் பொங்குமெனப்
பகற்கனவு காணாதே!

ஒப்புக்குத் தான் இது
ஊர் போலத் தெரிகிறது
ஒவ்வொரு வீட்டுக்குள்ளும்
உயிர்க் குமுறல் கேட்கிறது!

வேளாண்குடி மக்களது
வாழ்வறமும் வீரியமும்
பாலைவனம் போலாகிப்
பாழ்பட்டுப் போனதனால்,
ஊருக்குள் ஆங்காங்கே
உயிரொன்று பிரிகிறது!

என்றைக்கோ மூட்டிய
இடுகாட்டுப் பெருநெருப்பு
இன்றைக்கும் கூட
அணையாமல் எரிகிறது!

நெடுநாள் உறவாக
நிலைத்திருந்த விளை நிலங்கள்
வேளாண்மை கசந்து
விற்றுவிட்ட காரணத்தால்
கம்பிவேலிக் காரனுக்குக்
கைமாறிப் போனதடா!

நான்கு தலைமுறையாய்
நமதாக இருந்த நிலம்
பத்திரக் காகிதத்தில்
பெயர் மாறி போனதனால்
பதறிய உன் அப்பன்
பைத்தியமாகிச் செத்தான்!

வாய்க்காலின் வரப்புகளில்
வளருகின்ற மரங்களெல்லாம்
கூடுதலாய்ப் பூப்பூத்துக்
கொத்துக் கொத்தாய்ப் பழங்கொடுக்கும்!

வழிநெடுக எம் பெண்கள்
வளை சிணுங்கக் குளிப்பார்கள்,
குளித்து முடித்த பின்னர்
கூந்தலைத் துவட்டிக் கொண்டே
கூடுதலாய்க் குளிர்வதாகக்
கண்சிமிட்டிச் சிரிப்பார்கள்!

மாடுகளும் ஆடுகளும்
மண்டியிட்டு நீர் குடிக்க,
முந்தானை கொண்டே பெண்கள்
மீன் பிடித்துச் சேகரிக்க,

மேட்டு நிலத்துக்காரன்
கொண்டம் கட்டி நீர் தேக்க–அவன்
கால்வாயின் இருபுறமும்‘
காய்கறிகள் விளைந்திருக்க,

வாத்துகளின் கூட்டம்
வரும்நீரை வழிமறித்துப்
பெருங் கூச்சலிட்டுப்
படபடத்து நீர்த் தெளிக்க,

ஒரேயொரு கால்வாயில்
ஒரு நூறு பயன் கண்டு
ஈரமும் நீருமாக,
எங்களது நிலம் மணக்க,
உயிர்கள் அனைத்துக்கும்
உரியது நீர் என்றும்
எல்லோரும் எல்லாமும்
ஏற்பதுதான் வாழ்வென்றும்,

சிந்தித்த நாங்கள் இன்று
சீர்குலைந்து நீர் மறந்து
சொட்டு நீர்ப் பாசனத்தில்
செடி கொடியை வளர்க்கின்றோம்!
ஆற்று நீர்ப் பாசனம்
அருகி மறைந்து வர,
ஏரி நீர்ப் பாசனம்
இனி இல்லை என்றாக,
கண்மாய்ப் பாசனமோ
காணாமற் போய் மறைய,
எந்தப் பாசனத்தால்
எம் பயிரின் உயிர்காப்போம்?
எந்த நீரைக் கொண்டு
எம் உயிரைத் தக்கவைப்போம்?
சொட்டுச் சொட்டாய் வடிகின்ற
சொட்டு நீர்ப் பாசனமும்,
குடம் குடமாய் இரைக்கின்ற
கிணற்று நீர்ப் பாசனமும்,
பயிர் செய்ய ஏதுவான
பாசன முறை என்றால்,

பொதுவான ஏரி நீரைப்
பகிர்ந்து பயிர்செய்த
ஏரிப் பாசனத்தார்
எங்கேதான் போவார்கள்?

எங்களது நீர் நிலையின்
இடுப்பொடித்துக் காயவிட்டு
இஸ்ரேலைப் பார் என்று
எங்களுக்குச் சொல்கிறார்கள்!

நீர் தேடிப் பறந்து வரும்
நெடுந்தூரப் பறவைகளும்,
நீந்தித் துள்ளியெழும்
நூறுவகை மீனினமும்,
ஏரி நீரில் அமிழ்ந்து
இறுமாந்து கிடந்தெழுந்து
எங்களுக்குப் பால் சுரக்கும்
எருமைக் கூட்டங்களும்
எங்கேயேடா போகும்?
இஸ்ரேல் பிரியர்களே!

நூறடி ஆழத்தில்
நீரை உறிஞ்சுகின்ற
மோட்டாருக்குக் கூட
மூச்சிரைக்கும் நிலை கண்டு
வெட்கித் தலைக் குனிந்து
வேண்டாமென விட்டுவிட்டோம்!

ஓர் ஆண்டுக் கால
உழைப்பிலே உயிர்பெற்று
உலக்கை உலக்கையாக
உற்பத்தியாகுமெங்கள்
ஒரு டன் கரும்பு இங்கே
இரண்டாயிரத் தைந்நூறு!

மூன்று மணி நேரத்துக்கு
மூன்றாயிரங் கொடுத்து
புதுப்படம் ஒன்றை அங்கே
பார்த்தவர்கள் பல நூறு!

இருவேறு உலகத்து
இயற்கையிது என்றாலும்
அருவருப்பாய் இருக்குதடா– உங்கள்
ஆடம்பரக் கலாசாரம்!

ஒரு கரண்டி மாவெடுத்து
ஒரு தோசை சுட்டு வைத்து
எழுபது எண்பது என்று
ஈட்டுகின்ற திறமையற்று,

மூட்டை மூட்டையாய் நெல்லை
மோசடி விலைக்குப்போடும்
விவரமே தெரியாத
விவசாயிகளப்பா நாங்கள்!
அரிசி மூட்டைக்காரன் அங்கே
அவன் விலைக்கு அவன் விற்பான்–இங்கே
நெல் மூட்டைக் காரனுக்கோ
எவன் எவனோ விலை விதிப்பான்!

யார் யாரோ ஆண்டார்கள்
எங்களுக்கு விடியவில்லை,
எங்களை நிமிர வைக்க
எழுபதாண்டு போதவில்லை!

எங்களது மாண்புகள்
எல்லாவற்றையும் இழந்து
கிழிந்தும் இழிந்தும் இங்கே
கிடக்கிறோமடா நாங்கள்!

தைப் பொங்கல் திருநாளென்றும்
தமிழினத்தின் பெருநாளென்றும்
பொங்கலோப் பொங்கலென்று
பொங்கியெழும் மகிழ்ச்சியென்றும்

ஆடு மாடு கோழியெல்லாம்
ஆனந்தக் கூத்தாடுமென்றும்
பறவைகளின் பெருங்கூச்சல்
பரவசத்தைக் கொடுக்குமென்றும்
விதம் விதமாய்க் கற்பனையை
வீணாகச் சுமந்து கொண்டு
பிறந்த ஊரைப் பார்க்க நீ
புறப்படாதே என் மகனே!
பெற்றவளையேனும் பார்க்கப்
புறப்பட்டு வருவாயெனில்
வா இங்கு வந்து சேர்!
வந்துவிட்டால் போகாதே!
உன்னோடு படித்தவரை
ஊருக்கு அழைத்துவந்து,
ஒன்றிக் கலந்துவிடு
உன்னுடைய ஊரோடு!
உருக்குலையும் எம் வாழ்வை
உயிர்ப்பிக்கப் போராடு!

-வாட்ஸ் அப் பகிர்வு

v

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 13, 2019 10:55 am

அப்படியே ஒரு கிராமத்து வாழ்க்கை முறை
அதன் அழிவு வேதனை நவீன வாழ்க்கை முறை. குமுறல் அனைத்தும் கொட்டிக் தீர்த்த
கவிதை தொகுப்பு.
அருமை... அருமை.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக