Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
துள்ளிக் குதிக்கும் காளைகள், அடக்கத் துடிக்கும் `காளையர்'; அமர்க்களத்துடன் அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு: மதுரை மாவட்டமே விழா கோலம்
Page 1 of 1
துள்ளிக் குதிக்கும் காளைகள், அடக்கத் துடிக்கும் `காளையர்'; அமர்க்களத்துடன் அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு: மதுரை மாவட்டமே விழா கோலம்
![துள்ளிக் குதிக்கும் காளைகள், அடக்கத் துடிக்கும் `காளையர்'; அமர்க்களத்துடன் அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு: மதுரை மாவட்டமே விழா கோலம் IvzuraFDSCeBeH2c2c0o+ad1d4bdeP1826342mrjpg](https://www.filepicker.io/api/file/ivzuraFDSCeBeH2c2c0o+ad1d4bdeP1826342mrjpg.jpg)
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க உள்ள காளைகளை பதிவு செய்வதற்காக வரிசையில் காத்திருக்கும் காளை வளர்ப்போர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுத் திருவிழாவுக்காக மதுரை மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது. முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி அவனியாபுரத்தில் நாளை அமர்க்களத்துடன் தொடங்குகிறது.
பொங்கல் பண்டிகை என்றாலே நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டுதான். தமிழர்களின் பாரம்பரியத்தையும், வீரத்தையும் பறைசாட்டும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் சில ஆண்டுகளுக்கு முன் தடை விதித்திருந்தது.
தமிழக மக்களின் வலிமையான போராட்டத்தால் தடைகளைத் தகர்த்தெறிந்த பின் 2017-ம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் மீண்டும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜன.15, பாலமேட்டில் ஜன.16, அலங்காநல்லூரில் ஜன.17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன.
அவனியாபுரத்தில் ஜல்லிக் கட்டு நடத்துவதில் விழாக் குழுவினரிடையே பிரச்சினை ஏற்பட்டதால் உயர் நீதிமன்றம் தலையிட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ராகவன் தலைமையிலான ஒருங்கிணப்புக் குழு ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிட்டது. உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஒருங்கிணைப்புக் குழுவினர் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
நன்றி
இந்து தமிழ்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: துள்ளிக் குதிக்கும் காளைகள், அடக்கத் துடிக்கும் `காளையர்'; அமர்க்களத்துடன் அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு: மதுரை மாவட்டமே விழா கோலம்
காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் 6 துணை காவல் ஆணையர்கள், 15 உதவி ஆணையர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க 596 வீரர்கள் முன்பதிவு செய்துள் ளனர். 570 காளைகளுக்கு நேற்று வரை டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை ஆட்சியர் நடராஜன் ஆய்வு செய்தார்.
ஓய்வுபெற்ற நீதிபதி ராகவன் கூறியதாவது:
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு அரசுத் தரப்பில் இன்சூரன்ஸ் செய்யப்படுகிறது. பார்வையாளர்கள் அவரவர் பாதுகாப்புக்கு ரூ.330 இன்சூரன்ஸ் செய்யலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்திய குழுவினரும் பொது மக்களும் நல்ல ஒத்துழைப்புத் தருகின்றனர். சிலர் தானாகவே முன் வந்து பரிசுப் பொருட்களை வழங்குகின்றனர். இவர்களுக்கு ரசீது வழங்கப்படுகிறது என்றார்.
பாலமேடு
பாலமேட்டில் நாளை மறுநாள் (ஜன.16) ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் நடராஜன் தலைமையில் அதிகாரிகள், விழாக் குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.
மஞ்சமலை ஆற்றுத்திட லில் வாடிவாசல், பார்வையாளர் களுக்கான கேலரி அமைத்தல், வாடிவாசலில் இருந்து காளைகள் ஓடும் தளத்தில் தேங்காய் நார் பரப்புதல், வெளியேறும் பகுதியைச் சீரமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன், காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் 800 காளைகளுக்கும், மாடுபிடி வீரர்கள் 800 பேருக்கும் நேற்று முன்பதிவு நடந்தது. வீரர்களுக்கு மருத்துவர் வளர்மதி மேற்பார்வையில் உடல் தகுதிச்சான்று வழங்கப்பட்டது.
ஓய்வுபெற்ற நீதிபதி ராகவன் கூறியதாவது:
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு அரசுத் தரப்பில் இன்சூரன்ஸ் செய்யப்படுகிறது. பார்வையாளர்கள் அவரவர் பாதுகாப்புக்கு ரூ.330 இன்சூரன்ஸ் செய்யலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்திய குழுவினரும் பொது மக்களும் நல்ல ஒத்துழைப்புத் தருகின்றனர். சிலர் தானாகவே முன் வந்து பரிசுப் பொருட்களை வழங்குகின்றனர். இவர்களுக்கு ரசீது வழங்கப்படுகிறது என்றார்.
பாலமேடு
பாலமேட்டில் நாளை மறுநாள் (ஜன.16) ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் நடராஜன் தலைமையில் அதிகாரிகள், விழாக் குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.
மஞ்சமலை ஆற்றுத்திட லில் வாடிவாசல், பார்வையாளர் களுக்கான கேலரி அமைத்தல், வாடிவாசலில் இருந்து காளைகள் ஓடும் தளத்தில் தேங்காய் நார் பரப்புதல், வெளியேறும் பகுதியைச் சீரமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன், காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் 800 காளைகளுக்கும், மாடுபிடி வீரர்கள் 800 பேருக்கும் நேற்று முன்பதிவு நடந்தது. வீரர்களுக்கு மருத்துவர் வளர்மதி மேற்பார்வையில் உடல் தகுதிச்சான்று வழங்கப்பட்டது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: துள்ளிக் குதிக்கும் காளைகள், அடக்கத் துடிக்கும் `காளையர்'; அமர்க்களத்துடன் அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு: மதுரை மாவட்டமே விழா கோலம்
அலங்காநல்லூர்
உலகப் பிரசித்தி பெற்ற அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டுக் கான ஏற்பாடுகளில் மாவட்ட நிர்வாகம், காவல் துறையினர் மும்முரம் காட்டி வருகின்றனர். இதில் வெளிநாட்டினரும் பங்கேற்பர் என்பதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 876 வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இதில் 848 பேர் உடல் தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பங்கேற்கும் காளைகளுக்கான முன்பதிவு அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று (ஜன.14) நடைபெறுகிறது.
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று இடங்களில் நடைபெறும் ஜல்லிக் கட்டுக்காக மதுரை மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
பரிசுகளை அள்ள பயிற்சி தீவிரம்
மதுரை மாவட்டத்தில் அடுத்தடுத்து நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளை நீர்நிலைகளிலும், தோப்புப் பகுதிகளிலும் தயார்படுத்துவதில் உரிமையாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். மாடுபிடி வீரர்களும், களத்தில் துள்ளிக்குதிக்கும் காளைகளை அடக்கி பரிசுப் பொருட்களை அள்ளத் தேவையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருப்பாயூரணி, மேலூர், அலங்காநல்லூர், பாலமேடு, வரிச்சியூர், கருப்புக்கால் போன்ற பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போர் குழுக்களாக இணைந்து காளைகளுக்குப் பயிற்சி அளிக்கின்றனர்.
உலகப் பிரசித்தி பெற்ற அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டுக் கான ஏற்பாடுகளில் மாவட்ட நிர்வாகம், காவல் துறையினர் மும்முரம் காட்டி வருகின்றனர். இதில் வெளிநாட்டினரும் பங்கேற்பர் என்பதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 876 வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இதில் 848 பேர் உடல் தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பங்கேற்கும் காளைகளுக்கான முன்பதிவு அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று (ஜன.14) நடைபெறுகிறது.
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று இடங்களில் நடைபெறும் ஜல்லிக் கட்டுக்காக மதுரை மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
பரிசுகளை அள்ள பயிற்சி தீவிரம்
மதுரை மாவட்டத்தில் அடுத்தடுத்து நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளை நீர்நிலைகளிலும், தோப்புப் பகுதிகளிலும் தயார்படுத்துவதில் உரிமையாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். மாடுபிடி வீரர்களும், களத்தில் துள்ளிக்குதிக்கும் காளைகளை அடக்கி பரிசுப் பொருட்களை அள்ளத் தேவையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருப்பாயூரணி, மேலூர், அலங்காநல்லூர், பாலமேடு, வரிச்சியூர், கருப்புக்கால் போன்ற பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போர் குழுக்களாக இணைந்து காளைகளுக்குப் பயிற்சி அளிக்கின்றனர்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கும் மதுரை இளம்பெண்: இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு விவசாயமும் பார்க்கிறார்
» ஜல்லிக்கட்டு காளைகள் கொம்பால் குத்தி தூக்கி வீசியதில் 19 பேர் காயம்
» ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...!
» இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்?
» முதலமைச்சரே வந்தாலும் அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு இல்லை
» ஜல்லிக்கட்டு காளைகள் கொம்பால் குத்தி தூக்கி வீசியதில் 19 பேர் காயம்
» ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...!
» இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்?
» முதலமைச்சரே வந்தாலும் அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு இல்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|