ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

``ஒரே ஒரு பெருமாள் சிலைக்காக மரங்களை வெட்டுவதா?" - கொதிக்கும் திருவண்ணாமலை சூழலியலாளர்கள்!

2 posters

Go down

``ஒரே ஒரு பெருமாள் சிலைக்காக மரங்களை வெட்டுவதா?" - கொதிக்கும் திருவண்ணாமலை சூழலியலாளர்கள்! Empty ``ஒரே ஒரு பெருமாள் சிலைக்காக மரங்களை வெட்டுவதா?" - கொதிக்கும் திருவண்ணாமலை சூழலியலாளர்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 08, 2019 7:45 pm

``ஒரே ஒரு பெருமாள் சிலைக்காக மரங்களை வெட்டுவதா?" - கொதிக்கும் திருவண்ணாமலை சூழலியலாளர்கள்! PzbRCGMGQuWFRQvX6SMZ+Screenshot_20190108-194332

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த மலையையே லிங்கமாகக் கருதி பக்தர்கள் வணங்கி வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். `மலையைச் சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம், பக்தர்கள் இடையூறு இல்லாமல் கிரிவலம் செல்ல கிரிவலப்பாதை விரிவாக்கம் செய்யப்படும்’ என முதலமைச்சர் ஜெயலலிதா 2016ம் ஆண்டு 110-விதியின் கீழ் அறிவித்து இருந்தார். அந்த அறிவிப்பில் `திருவண்ணாமலை கோயிலில் பக்தர்கள் கிரிவலப் பாதை 7 மீட்டர் அகலமாக இருக்கிறது, அதனை 10 மீட்டராக மாற்றப்படும்; பக்தர்களுக்குத் தங்கும் வசதிகளும் செய்துதரப்படும். இதன் மொத்த மதிப்பு ரூ.65 கோடி' எனக் குறிப்பிட்டிருந்தார்.

நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

``ஒரே ஒரு பெருமாள் சிலைக்காக மரங்களை வெட்டுவதா?" - கொதிக்கும் திருவண்ணாமலை சூழலியலாளர்கள்! Empty Re: ``ஒரே ஒரு பெருமாள் சிலைக்காக மரங்களை வெட்டுவதா?" - கொதிக்கும் திருவண்ணாமலை சூழலியலாளர்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 08, 2019 7:46 pm

இதனையடுத்து, 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் நெடுஞ்சாலைத்துறை கிரிவலப்பாதை அகலப்படுத்துவதற்காகப் பாதையை நேரில் ஆய்வு செய்தது. அதன் முதற்கட்டமாக நெடுஞ்சாலைத் துறையினர் கிரிவலப்பாதையில் உள்ள மரங்களையும், மூலிகைச் செடிகளையும் வெட்டி வேரோடு சாய்த்தனர்.

இந்த விரிவாக்கம், பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அப்போதே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து சமூக ஆர்வலர்கள் சிலர் கலெக்டரிடம் மனு அளித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போதைய திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் ஞானசேகரன், பணியினைத் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தார். ஆனால், பணி நேற்று தொடர்ந்து நடைபெற்று வந்தது. சில சமூக ஆர்வலர்கள் சென்று கேள்வி கேட்டவுடன் தற்காலிகமாக நிறுத்துவது போல நிறுத்திவிட்டு, மீண்டும் பணி இரவு, பகலாகத் தொடர்ந்தது. இதையடுத்து அங்கு திரண்ட பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் மரங்களை வெட்டக்கூடாது எனத் தடுத்தனர். ஆனால் மரம் வெட்டுவோர் மட்டும் தங்களது வேலையை நிறுத்தியதாகத் தெரியவில்லை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

``ஒரே ஒரு பெருமாள் சிலைக்காக மரங்களை வெட்டுவதா?" - கொதிக்கும் திருவண்ணாமலை சூழலியலாளர்கள்! Empty Re: ``ஒரே ஒரு பெருமாள் சிலைக்காக மரங்களை வெட்டுவதா?" - கொதிக்கும் திருவண்ணாமலை சூழலியலாளர்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 08, 2019 7:49 pm

இதைத் தொடர்ந்து, தென்மண்டல தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் தானாக முன்வந்து விசாரணை செய்தது. அப்போது தடைவிதித்த பசுமைத் தீர்ப்பாயம், ஒரு சில நிபந்தனைகளுடன் பணிகள் மீதான தடையை விலக்கியது. அதில் `ஒரு மரத்தைக்கூட வெட்டாமல், விரிவாக்கம் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டிருந்தது. இதை ஏற்றுக்கொண்ட வனத்துறையும், நெடுஞ்சாலைத்துறையும் பணிகளை அவ்வாறே செய்ய அனுமதித்தது. அதன்படி பாதை அமைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கிரிவலப்பாதையில் மரங்கள் வெட்டப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
``ஒரே ஒரு பெருமாள் சிலைக்காக மரங்களை வெட்டுவதா?" - கொதிக்கும் திருவண்ணாமலை சூழலியலாளர்கள்! 8b3KL3VQTPCOWJy4G9k6+Screenshot_20190108-194819


இதுகுறித்து, நம்மிடம் பேசிய, திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் அமைப்பின் தலைவர் செந்தமிழ் அரசு, ``கிரிவலப்பாதையில் மரங்களை வெட்டாமல் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி பணிகள் நடைபெற்று வந்துகொண்டிருந்தன. அது முடிந்து மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்ட நிலையில் மீண்டும் கிரிவலப்பாதையில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள கோதண்டராமர் கோயிலுக்காக திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகில் உள்ள அசுரக்கோட்டை எனும் கிராமத்தில் 108 அடி உயரமும், 25 அடி அகலமும் கொண்ட கோதண்டராமர் சிலை வெட்டி எடுக்கப்பட்டு 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் ஏற்றப்பட்டு பெங்களூருவுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

``ஒரே ஒரு பெருமாள் சிலைக்காக மரங்களை வெட்டுவதா?" - கொதிக்கும் திருவண்ணாமலை சூழலியலாளர்கள்! Empty Re: ``ஒரே ஒரு பெருமாள் சிலைக்காக மரங்களை வெட்டுவதா?" - கொதிக்கும் திருவண்ணாமலை சூழலியலாளர்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 08, 2019 7:51 pm

வந்தவாசியிலிருந்து காஞ்சிபுரம் மிக அருகில்தான் இருக்கிறது. காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் எளிதாகப் பயணிக்கலாம். அதனால் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் இதற்கு அனுமதி தரவில்லை. முழுக்க முழுக்க மாநில அரசின் தயவோடு நடந்து கொண்டிருக்கிறது. இதற்காகப் பல மரங்களை நேற்று இரவோடு இரவாக வெட்டியிருக்கிறார்கள். நடுவிலுள்ள சென்டர்மீடியன்களை வெட்டி அகற்றுகிறார்கள்.


இதையெல்லாம் விடத் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் மரங்களை வெட்டி சிலையை எடுத்துச் சென்றிருக்கின்றனர். மரங்களை வெட்டி எடுக்க பசுமைத் தீர்ப்பாயத் தென்மண்டல அமர்வு தடை விதித்திருக்கும் நிலையில் ஒரு சிலைக்காக மரங்களை எப்படி வெட்டி எடுக்க முடியும். இதற்கு காவல்துறையும், மாவட்ட ஆட்சியரும் துணையாக இருக்கின்றனர். அந்தச் சிலை கர்நாடக அரசுக்காகக் கூட எடுத்துச் செல்லப்படவில்லை. ஒரு தனியார் நிறுவனத்துக்காக மரங்களை வெட்டிக் குவிக்கிறார்கள். பாரபட்சம் பாராமல் கிரிவலப்பாதை மரங்களை வெட்டி அகற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இவை எல்லாமே பல வருடங்களான விலையுயர்ந்த மரங்கள். மரங்களை வெட்டிக் கொண்டுபோகும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததா அந்தச் சிலை? அந்த மரங்களைக் காக்க எங்களால் ஆன முயற்சிகளை எடுத்துக் கொண்டு இருக்கிறோம்" என்றார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

``ஒரே ஒரு பெருமாள் சிலைக்காக மரங்களை வெட்டுவதா?" - கொதிக்கும் திருவண்ணாமலை சூழலியலாளர்கள்! Empty Re: ``ஒரே ஒரு பெருமாள் சிலைக்காக மரங்களை வெட்டுவதா?" - கொதிக்கும் திருவண்ணாமலை சூழலியலாளர்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 08, 2019 7:53 pm

இப்படியே ஒவ்வொரு காரணத்துக்காக மரங்களை வெட்டிக்கொண்டு போனால், கிரிவலப்பாதையில் மரங்களே இருக்காது. தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்து இருக்கும் நிலையில் மரங்களை எப்படி வெட்ட முடியும் என்ற கேள்விகள் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. கிரிவலப்பாதை மரங்களின் மீது அதிகாரிகளுக்கு என்ன கோபமோ தெரியவில்லை.

இதுபற்றி பேசிய உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தனஞ்செயன், ``மரங்களை வெட்டுவதற்கு முறையான அனுமதியோ அல்லது ஏலமோ விடுக்க வேண்டும். அதைத் தொடர்ந்துதான் மரங்களை வெட்ட வேண்டும். ஆனால், கிரிவலப்பாதையில் மரங்களை வெட்டத் தடை இருக்கிறது. கோர்ட் உத்தரவினை மீறி சிலைகளை கொண்டு செல்ல தடையாக இருந்த அனைத்து மரங்களையும் வெட்டித் தள்ளியிருக்கிறார்கள். இந்த முறைகேடான செயலை மாவட்ட ஆட்சியரும், தாசில்தாரும் கண்டுகொள்ளவில்லை. இதை ஒரு ஆன்மிக சேவையாகப் பார்க்கிறார்கள். இதை கர்நாடக அரசே கேட்டால் கூட விலையுயர்ந்த பாறையைக் கொடுத்திருக்கக் கூடாது. அங்கிருந்து ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வர முடியாது. 400 டன் கொண்ட பாறையை வெட்டி எடுத்து கர்நாடகாவுக்கு அனுப்புகிறது, தமிழக அரசு. இது முழுக்க முழுக்க தமிழக அரசின் மெத்தனப்போக்குதான்" என்றார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

``ஒரே ஒரு பெருமாள் சிலைக்காக மரங்களை வெட்டுவதா?" - கொதிக்கும் திருவண்ணாமலை சூழலியலாளர்கள்! Empty Re: ``ஒரே ஒரு பெருமாள் சிலைக்காக மரங்களை வெட்டுவதா?" - கொதிக்கும் திருவண்ணாமலை சூழலியலாளர்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 08, 2019 7:57 pm

மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என்ற வாசகம் புதிய மரங்களை நடுவதற்கு மட்டுமல்ல, இருக்கும் மரங்களைக் காப்பதற்கும்தான் என அரசுக்கும் அதிகாரிகளுக்கும் எப்போது புரியுமோ தெரியவில்லை. குறைந்தபட்சம் அந்தச் சிலையை எடுத்துச்செல்லும் இந்த மனிதர்களுக்காவது அந்தப் பெருமாள் இதை உணர்த்தியிருக்கலாம்.

குறிப்பு
இந்த மரங்களை வெட்டாது பெயர்த்து
எடுத்து வேறிடத்தில் நடலாம்.

ஆதலால் இந்த இயற்கை வளங்கள்
அழிக்கப் படுவதையும் தவிர்க்க இயலும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

``ஒரே ஒரு பெருமாள் சிலைக்காக மரங்களை வெட்டுவதா?" - கொதிக்கும் திருவண்ணாமலை சூழலியலாளர்கள்! Empty Re: ``ஒரே ஒரு பெருமாள் சிலைக்காக மரங்களை வெட்டுவதா?" - கொதிக்கும் திருவண்ணாமலை சூழலியலாளர்கள்!

Post by T.N.Balasubramanian Tue Jan 08, 2019 8:33 pm

அந்த சிலை எங்கு எதற்காக இவருக்காக கொண்டு செல்லப்படுகிறது?
 மரங்களை வெட்டவும், தடையாய் வீடு /கடைகளை இடிக்கவும் 
யார் அதிகாரம் கொடுத்தார்கள்? கலெக்டருக்கு தெரியுமா?  மாநில அரசு
ஒப்புதலுடன்தான் நடக்கிறதா?
தனியார் நிறுவத்தினருக்கு என்றால், பணம் விளையாடுகிறதா?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

``ஒரே ஒரு பெருமாள் சிலைக்காக மரங்களை வெட்டுவதா?" - கொதிக்கும் திருவண்ணாமலை சூழலியலாளர்கள்! Empty Re: ``ஒரே ஒரு பெருமாள் சிலைக்காக மரங்களை வெட்டுவதா?" - கொதிக்கும் திருவண்ணாமலை சூழலியலாளர்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jan 09, 2019 9:43 am

T.N.Balasubramanian wrote:அந்த சிலை எங்கு எதற்காக இவருக்காக கொண்டு செல்லப்படுகிறது?
 மரங்களை வெட்டவும், தடையாய் வீடு /கடைகளை இடிக்கவும் 
யார் அதிகாரம் கொடுத்தார்கள்? கலெக்டருக்கு தெரியுமா?  மாநில அரசு
ஒப்புதலுடன்தான் நடக்கிறதா?
தனியார் நிறுவத்தினருக்கு என்றால், பணம் விளையாடுகிறதா?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1290930
இதற்கெல்லாம் யார் பண உதவி செய்கிறார்கள் என்று தெரியவில்லை.
ஆனால் அனைத்து வேலைகளும் தங்கு தடையின்றி நடைபெறுகிறது.
யாரோ பெரிய நபர் இதன் பின்
உள்ளனர்.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

``ஒரே ஒரு பெருமாள் சிலைக்காக மரங்களை வெட்டுவதா?" - கொதிக்கும் திருவண்ணாமலை சூழலியலாளர்கள்! Empty Re: ``ஒரே ஒரு பெருமாள் சிலைக்காக மரங்களை வெட்டுவதா?" - கொதிக்கும் திருவண்ணாமலை சூழலியலாளர்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum