ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கு அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை பதவி இழந்தார்

Go down

பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கு அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை பதவி இழந்தார் Empty பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கு அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை பதவி இழந்தார்

Post by ayyasamy ram Tue Jan 08, 2019 7:13 am

பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் பதவியை இழந்தார்.
பதிவு: ஜனவரி 08, 2019 05:45 AM
சென்னை,

இந்த பரபரப்பான வழக்கு பற்றிய விவரம் வருமாறு:-

கலவரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூர், ஜி.மங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கக்கோரி கடந்த 1998-ம் ஆண்டு ஜி.மங்கலம் சர்ஜாபுரம் சந்திப்பில் கோவிந்தரெட்டி என்பவர் தலைமையில் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாகலூர், ஜி.மங்கலம் உள்பட சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், சமரசம் ஏற்படவில்லை. இந்தநிலையில் போராட்டம் திடீரென கலவரமாக மாறியது.

பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசாரை கல், கம்பு, இரும்பு கம்பிகளால் போராட்டக்காரர்கள் தாக்கினர். இதில், போலீஸ் இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர்கள் பலர் காயம் அடைந்தனர்.

போராட்டத்தின் போது போலீஸ் ஜீப் ஒன்றும் தீ வைத்து கொளுத்தப்பட்டது. அரசு பஸ் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் என மொத்தம் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன.

அமைச்சர் மீதும் வழக்கு

இந்த கலவரம் தொடர்பாக பாகலூர் போலீசார் கோவிந்தரெட்டி உள்பட 108 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த போராட்டத்தில் தற்போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்து வரும் பாலகிருஷ்ணரெட்டியும் கலந்து கொண்டதால் அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அவர், 72-வது குற்றவாளியாக வழக்கில் சேர்க்கப்பட்டு இருந்தார். அவர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 147(சட்டவிரோதமாக ஒன்று கூடுதல்), 341(சட்டவிரோதமாக தடுத்தல்), தமிழ்நாடு பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பதை தடுக்கும் சட்டப்பிரிவு ஆகியவற்றின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை ஓசூர் கோர்ட்டில் நடந்தது. பின்னர், கிருஷ்ணகிரி மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 108 பேர் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணையின் போது 27 பேர் இறந்து போனதால் மற்ற 81 பேர் மீதான வழக்கு நடந்து வந்தது. குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பாலகிருஷ்ணரெட்டி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராக இருந்து வருவதால் இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு கோர்ட்டுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மாற்றம் செய்யப்பட்டது.

தீர்ப்பு

இந்த வழக்கை நீதிபதி சாந்தி விசாரித்தார். அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் காயத்ரி ஆஜராகி வாதாடினார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க உள்ளதாக நீதிபதி அறிவித்தார். இதற்காக அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி உள்பட 81 பேரும் கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர். மதியம் 3 மணிக்கு நீதிபதி தீர்ப்பை வாசித்தார்.

தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

இந்த வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 16 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்படுகிறது. அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 147(சட்டவிரோதமாக ஒன்று கூடுதல்), 341(சட்டவிரோதமாக தடுத்தல்), தமிழ்நாடு பொது சொத்துக்கு சேதம் விளைவிக்கும் சட்டப்பிரிவு ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு, இந்திய தண்டனை சட்டப்பிரிவு 147-ன் கீழ் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 341-ன் கீழ் ஒரு மாதம் சிறை தண்டனையும், தமிழ்நாடு பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பதை தடுக்கும் சட்டத்தின் கீழ் 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த தண்டனையை பாலகிருஷ்ணரெட்டி ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்.

போராட்டத்துக்கு தலைமை தாங்கிய கோவிந்த ரெட்டிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.37 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. குற்றம்சாட்டப்பட்ட 10 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரத்து 500 அபராதமும் விதிக்கப்படுகிறது. மீதமுள்ள 4 பேருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. மீதமுள்ள 65 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக் கப்படாததால் அவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தண்டனை நிறுத்திவைப்பு

அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்ததும், அவரது தரப்பில் ஆஜரான வக்கீல் டி.செல்வம் இந்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய இருப்பதால் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தண்டனையை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.

சொந்த காரில்...

முன்னதாக பாலகிருஷ்ண ரெட்டி சிரித்தபடி கோர்ட்டுக்குள் வந்தார். தண்டனை விவரத்தை அறிவித்ததும் அதிர்ச்சி அடைந்த பாலகிருஷ்ணரெட்டி சோகமானார். தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாக நீதிபதி அறிவித்ததும் சோகத்தில் இருந்து மீண்டு வந்தார்.

மதியம் 2.30 மணிக்கு தனக்கு சொந்தமான காரில் பாலகிருஷ்ணரெட்டி கோர்ட்டுக்கு வந்தார். மீண்டும் மாலை 4.30 மணிக்கு கோர்ட்டில் இருந்து அவர் புறப்பட்டு சென்றார். கோவிந்தரெட்டியை தவிர்த்து மற்றவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையையும் நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர்கள், இருநபர் ஜாமீன் அளித்து கோர்ட்டில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

முதல்-அமைச்சரை சந்தித்து விளக்கம்

கோர்ட்டில் இருந்து புறப்பட்டு சென்ற பாலகிருஷ்ணரெட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து தீர்ப்பு குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர், 1998-ம் ஆண்டு நடந்த சம்பவம் குறித்தும் விளக்கி கூறினார்.

இந்த சந்திப்பின் போது தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் உடன் இருந்தார். அவரிடம் முதல்- அமைச்சர் சட்ட ஆலோசனைகளை கேட்டறிந்தார்.

அப்போது, 2013-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு ஒன்று, முதல்-அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மத்திய அரசு மற்றும் லில்லி தாமசுக்கு இடையிலான வழக்கு ஒன்றில் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், குற்ற வழக்கில் விதிக்கப்படும் தண்டனையின் மூலம் தானாகவே தகுதி இழப்பு நேரிட்டு விடுகிறது.

சிறைத்தண்டனை

அதோடு, எம்.எல்.ஏ.க்கான தகுதி இழப்பை, அவரது மேல்முறையீட்டுக்கு வாய்ப்பு அளித்து தள்ளி வைக்கத் தேவையில்லை. அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள தண்டனை உத்தரவுக்கு இடைக்காலத் தடை உத்தரவை வைத்தும், அவரது தகுதி இழப்பை முன்தேதியிட்டு நிறுத்த முடியாது.

அதோடு, கோர்ட்டின் மூலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பிறகு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 103 மற்றும் 192-ம் பிரிவுகளின் கீழ், அவரது தகுதி இழப்புக்காக ஜனாதிபதி அல்லது கவர்னரின் உத்தரவுக்காக காத்திருக்கத் தேவையில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி பாலகிருஷ்ணரெட்டி பதவி இழந்தார்.

கவர்னரிடம் கடிதம்

இந்தநிலையில், கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை நேற்றிரவு அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் சந்தித்து பேசினார். அப்போது கடிதம் ஒன்றை கவர்னரிடம் அவர் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இது அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் தகுதி இழப்பை முன்னிட்டு, அவர் வகித்து வந்த இலாகாக்களை வேறு அமைச்சருக்கு வழங்குவது குறித்த கடிதமாக இருக்கக்கூடும் என்று பரவலாக பேசப்படுகிறது.

மாவட்ட செயலாளர்

பாலகிருஷ்ணரெட்டியின் சொந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஜீமங்கலம் ஆகும். ஆரம்பத்தில் பா.ஜனதா கட்சியில் இருந்த அவர் பின்னர் அ.தி.மு.க.வில் இணைந்தார்.

2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஓசூர் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். பிறகு அவர் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக பதவி வகித்தார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது.

இதையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் பாலகிருஷ்ணரெட்டிக்கு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க. 2-ஆக பிரிக்கப்பட்டது. அதில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக பாலகிருஷ்ணரெட்டிக்கு பதவி வழங்கப்பட்டது.
---
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கு அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை பதவி இழந்தார் Empty Re: பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கு அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை பதவி இழந்தார்

Post by ayyasamy ram Tue Jan 08, 2019 9:14 am

நீதிமன்ற தண்டனையால் இதுவரை பதவி இழந்தவர்கள்

மக்கள் பிரதிநிதித்துவச்சட்டப்படி சிறை தண்டனை பெற்றால்,
எம்.பி., எம்எல்ஏ என மக்கள் பிரதிநிதிகளின் பதவி தானாகவே
பறிபோய்விடும்.

அந்தவகையில், சட்டம் இயற்றப்பட்ட பின் தமிழகத்தில் முதலில்
பறிக்கப்பட்டது திமுக எம்பியான செல்வகணபதியின்
பதவியாகும்.

2014 ஏப்.19-ல் சென்னையில் உள்ள சிபிஐ நீதிமன்றம் சுடுகாட்டு
கூரை ஊழல் வழக்கில் செல்வகணபதிக்கு 2 ஆண்டு சிறைத்
தண்டனை விதித்தது. இதனால், செல்வகணபதி எம்பி பதவியை
இழந்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு
கர்நாடக நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில், அவருக்கு சிறைத்
தண்டனை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டதைத்
தொடர்ந்து, 2014 செப்.27ல் எம்எல்ஏ மற்றும் முதல்வர் பதவியை
இழந்தார்.

புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி என்.ஆர்.காங்கிரஸ்
எம்எல்ஏவான அசோக் ஆனந்த் மீதான வருமானத்துக்கு மீறி சொத்து
சேர்த்த வழக்கில், சிபிஐ நீதிமன்றம் கடந்த நவ. 8-ம் தேதி ஓராண்டு
சிறை தண்டனை வழங்கியது.
இதையடுத்து அவர் எம்எல்ஏ பதவியை இழந்தார்.

இவர்களைத்தவிர, ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத யாதவ்
உள்ளிட்ட மேலும் பலர் வடமாநிலங்களில் நீதிமன்ற தண்டனையால்
பதவியை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
-------------------------இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» பொது சொத்துக்கு சேதம்: பா.ம.க.விடம் ரூ. 50 கோடி நஷ்ட ஈடு
»  சீனாவில் விபத்தை பார்த்து 'சிரித்த அதிகாரி' பதவி இழந்தார்....
» ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ரஷீத் மசூத்துக்கு 4 ஆண்டு சிறை!
» வாச்சாத்தி பாலியல் வழக்கு: வனத்துறை அதிகாரிகள் 12 பேருக்கு 10 ஆண்டு சிறை
» சசிக்கு 4 ஆண்டு சிறை - அடுத்த 10 வருடம் தேர்தலில் நிற்க தடை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum