ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்டான உடல் தசைக்கு உணவுகள்

Go down

கட்டான உடல் தசைக்கு உணவுகள் Empty கட்டான உடல் தசைக்கு உணவுகள்

Post by சிவா Tue Dec 22, 2009 6:45 pm

உடம்பு கூடவும், குறையவும் மருந்து மாத்திரைகளையும், பயிற்சி முறைகளையும் மேற்கொண்டு செலவு செய்தும் அதனால் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் வருந்துவோர் பலரை நாம் அன்றாடம் பார்த்துக் கொண்டிருக்கி றோம்.

இப்படி எந்தவிதமான செலவுகளும், பக்கவிளைவுகளும் இல்லாமல் இயற்கை உணவுகள் மூலமாகவே உடலை திடகாத்திரமாக வைத்துக் கொள்ள முடியும்.

இதற்கு செய்யவேண்டியதெல்லாம், ஆறு சுவைகளும் அளவோடு இருக்கும் படியாக, நாம் உண்ணும் உணவில் நார்ச்சத்து உட்பட இரும்புச்சத்து, புரதச்சத்து, வைட்டமின் சி, பி12 மற்றும் பாலிக் அமிலம் ஆகியவை தேவையான அளவு இருக்கவேண்டும். இவை தவிர கூடுதலான தகவல்களையும் தெரிந்து கொள்ளுங்களேன்!

உடலுக்கு ஆற்றலைக் கொடுப்பது உணவில் இருந்து பெறப்படும் சத்துக்கள். இவற்றை கலோரிகள் என்கிறோம். கலோரி சத்து குறைந்தால் ரத்தசோகை, தோல் மினு மினுப்பை இழப்பது, தோல் வறட்சி, தோல் சுருக்கம், உலர்ந்த முடி, மனச்சோர்வு, இயலாமை போன்ற பல பிரச்சினைகள் வரும். அதனால் நோயாளிகளாக- அல்லது நோயாளிகளைப் போல காட்சி தரவேண்டியிருக்கும்.

கலோரி அதிகமாக இருந்து பயன்படுத்தாத நிலையில் தோலின் உள் அடுக் குகளில் அவை கொழுப்பாக மாற்றப்பட்டு படிந்து உடல் எடைகூடும். ரத்த நாளச் சுவர்களில் கொழுப்பு அடைத்து ரத்த நாள சுருக்கம், இதய நோய்கள், மாரடைப்பு போன்ற உடல் நோய்களும், சுறுசுறுப்பின்மை, எதிலும் கவனம் செலுத்த இயலாமை போன்ற பிற பிரச்சினைகளும் வரும்.

ஒரேவித கலோரி போதுமா?

சராசரி எடை உள்ளவர்கள் அனைவருக்குமே ஒரு மாதிரி கலோரி சத்துக் கிடைத்தால் போதும் என நினைப்பது தவறானது. ஒவ்வொருவருக்கும் தேவையான கலோரிகளின் அளவு வித்தியாசப் படும். ஐநு}று கலோரி சத்துள்ள உணவு சாப்பிடும் இரண்டு நபர்களில் ஒருவர் கடுமையான உழைப்பாளி, இன்னொரு வர் சோம்பேறி என்று வைத்துக் கொள்ளுங்களேன், சோம்பேறிக்கு அதிக கலோரி தேவைப்படாது. அவையெல்லாம் கொழுப்பாக மாற்றப் பட்டுவிடும். உழைப்பாளிக்கு இந்த கலோரி போதுமானதாக இருக்காது. அவர் உழைப்பதால் கலோரி எரிந்து ஆற்றலாக மாற்றப் பட்டுவிட்டிருக்கும். மேற்கொண்டு கூடுதல் சத்து தேவை. உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்கு இது அவசியம்.

500 கலோரி சத்தை எரிக்க சராசரியாக ஒரு நபர் ஏழு மணி 40 நிமிடம் உறங்கவேண்டும். அல்லது ஐந்து மணி நேரம் எழுதவேண்டும். கார் ஓட்டுதல், சமைத்தல் அல்லது நடத்தல் ஆகிய வற்றை இரண்டு மணி நேரம் செய்ய வேண்டும். 1 மணி 40 நிமிடம் சைக்கிள் ஓட்டவேண்டும். 1 மணி 15 நிமிடத்திற்கு மலை ஏறுதல் அல்லது ஒரு மணி நேர நீச்சல் அல்லது 45 நிமிட நேரம் ஓடுதல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உடல் எடை கூடும்.

உடல் எடை குறைவதற்கான எளிய வழி, நாம் உண்ணும் கலோரியை விட, உடல் செலவழிக்கும் கலோரியின் அளவு அதிகமாக இருக்கவேண்டும். இந்த இரண்டும் சம அளவில் இருந்தால் உடல் எடை தற்போதுள்ள நிலையில் இருக்கும். கலோரி குறைந்தால் எடை குறையும். கூடினால் எடை அதிகமாகும்.

எதையும் விட்டு வைக்காமல் நன்றாக சாப்பிட விரும்புவோர் அதற்கேற்ப வேலை செய்யவேண்டும். டி.வி. பார்த்துக்கொண்டே 45 நிமிட நேரம் உடற்பயிற்சி செய்யலாம், அல்லது காலை நேரத்தில் 45 நிமிட நேரம் நடக்கலாம். இவ்வாறு செய்தால் உடல் கட்டுக் கோப் பாக இருக்கும்.

சத்தான காய்கறிகளை சாப்பிட்டால் அவற்றிலிருந்து கிடைக் கும் பைட்டோ கெமிக்கல்கள் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகின்றன. ஆன்தோசையானிஸ், சியாசான்தின்ஸ் ஆகிய நோய் எதிர்ப்பு ஊக்கி கள் காய்கறிகளிலும், பழங்களிலும் கிடைக்கின்றன.

இவை ரத்த நாளங்களிலுள்ள நச்சுக் கழிவுகளை நீக்கி, அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்து, செல்வளர்ச்சியை தூண்டுதோடு, செல்லைத் தாக்கும் கிருமிகளையும், புற்றுநோய் உருவாவதையும் தடுக்கின்றன.

ண்க் னி-காய்ள்

அனைவருக்கும் ஒரே மாதிரியான இயற்கை உணவுப் பொருட்கள் பிடிப்ப தில்லை. இதனால் ஊட்டச் சத்துள்ள உணவுப்பொருட்களை அவர்கள் தவிர்க்க நேரிடும். இதனால்தான் சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் பருக்காமல் நோஞ் சான்களாக இருப்பார்கள். இவர்கள் உடல் நலம் தேறுவதற்கு அவர்கள் விரும்பும் வண்ணக் காய்கறிகளை சாப்பிடக் கொடுக்க வேண்டும். இந்த கனி மற்றும் காய்கறில் உள்ள பைட்டோ கெமிக் கல்கள் அவர்களின் உடல் பாதிப்பை நீக்கி உடல் வளர்ச்சிக்கு உதவுகின்றன.

உதாரணமாக, ஒருவருக்கு சிவப்பு நிற காய்கனிகள் பிடிக்கிறது என்றால்,

தக்காளி, பீட்ரூட், தர்பூசணி, மாதுளம் பழம், ஆப்பிள் போன்றவற்றை வாங்கித் தரலாம்.

இவற்றில் உள்ள பீட்டா சையானின் என்ற பொருட்கள் பாக்டீரியாக்கள் வளர்வதை கட்டுப்படுத்துகிறது. புற்றுநோயை எதிர்க்கும் பொருட்கள் அளவுக்கு அதிகமாக கிடைக்கிறது.

தக்காளியில் உள்ள மைகோபீன் புற்று நோய்வருவதை தடுக்கிறது. பச்சையாக தக்காளி சாப்பிடுவோருக்கு வயிறு, குடல், சிறுநீர்ப் பை புற்றுநோய் வரும் வாய்ப்;பு ஏழு மடங்கு தடுக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.

மஞ்சள் நிற காய்கறிகள், உருளை, காலிப்ளவர் போன்றவற்றில் ஆன்தோ சான்திஸ் என்ற பொருளும், தானியங்களில் லியூடின் என்ற பொருளும் உள்ளது. இது பார்வை இழப்புகளை தடுக்கிறது.

ஆரஞ்சு நிற காய்கறிகளான கேரட், பப்பாளி, மாங்காய் போன்றவற்றில் பீட்டா- கரோட்டின் உள்ளது. இது மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றை தடுக்கிறது. கரோடினாய்டுகள் என்ற சத்துப் பொருட்களும் உள்ளன. தினமும் இரண்டு மூன்று காரட்டுகளை பச்சையாக தின்று வந்தால் ரத்தக்கொழுப்பு அளவு பதினோறு விழுக்காடு குறைவதாக தெரிய வந்துள்ளது.

பச்சை நிற காய்கறிகளில் குளோரோபில் என்ற பொருட்கள் உள்ளன. இவை புற்றுநோயை தடுக்கிறது. உடம்புக்குத் தேவையான எல்லா சத்துக்களும் இதில் அடங்கியுள்ளன.

நீல நிற காய் கனிகளான திராட்சை, கத்தரிக்காய், நாவல் பழங்கள் போன்ற வற்றில் ஆன்த்தோசையின் என்ற பொருட்கள் உள்ளன. இவை ரத்த நாளங்களை இளக்கி மாரடைப்பு உண்டாக்கும் வாய்ப்பை குறைக்கிறது. ரத்த நாளங்கள் வழியாக ரத்தம் சீராக பாய்வதற்கு உதவி செய்கிறது.


கட்டான உடல் தசைக்கு உணவுகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கட்டான உடல் தசைக்கு உணவுகள் Empty Re: கட்டான உடல் தசைக்கு உணவுகள்

Post by சிவா Tue Dec 22, 2009 6:51 pm


சத்து அளிக்கும் சில உணவுப் பொருட்கள்:


கீரைகளில் இரும்புச்சத்துக்கள் அதிகம் உள்ளன. குறிப்பாக முருங்கைக் கீரை, வெந்தயக் கீரை, வெங்காயம், கொத்த மல்லி, கறிவேப்பிலை, புதினா, பூண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, போன்ற வற்றை முடிந்த அளவு பச்சையாகவோ, சமைத்தோ சாப்பிடலாம். கருணைக் கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

பழவகைகளில் பேரீட்சை, கொய்யா, அத்தி, சீத்தா, பப்பாளி, வாழை, நாவல், நெல்லி, எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, மாதுளை, தக்காளி, ஆகியவையும், இளநீர், பதநீர், நுங்கு, கரும்புச்சாறு போன்றவைகளில் இருந்து ஏதேனும் ஒன்றிரண்டு ஒருவேளை உண்பதும் நல்லது.

புரோட்டின் அதிகமுள்ள பருப்பு வகைகளான வேர்க்கடலை, பொட்டுக ;கடலை, பட்டாணி, காராமணி, உளுந்து, கொண்டைக் கடலை, மக்காச் சோளம், ராகி போன்றவற்றை வாரத்திற்கு இரண்டொரு நாட்களாவது சாப்பிட வேண்டும்.

மூலிகைகள்:

அமுக்கிரா, நன்னாரி, வெட்டிவேர், முருங்கை, அரசனிலை, வில்வம், அத்தியிலை, மாவிலை, கடுக்காய், வெந்தயம், நெல்லி, நாவல், உலர் பழங்கள், பாதாம், முந்திரி, போன்ற பலவித மூலிகைகளை லேகியமாக்கி இயற்கை வைத்திய நிபுணரின் ஆலோசனையோடு சாப்பிட்டு வர உடல் திடகாத்திரமாகும்.

உடல் மெலிவுள்ளவர்கள் உடற்கட்டுப் பெறவும், உடற்பருமன் உள்ளவர்கள் எடை குறை வதற்கும் தேவையான மூலிகைகளை லேகியங்களாக்கி எங்கள் நோயாளிகளுக்குத் தந்து வருகிறோம். இவ்வாறு மருத்துவர் ஆலோசனைப்படி சாப்பிடும் போதுதான் சரியான பலன் கிடைக்கும்.

எப்படி சாப்பிடுவது?

மூலிகைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட வேண்டும். மற்றபடி உணவுப் பொருட்களை பசித்த பின்- தேவையறிந்து சாப்பிடுவதுதான் சிறந்தது. இதனால் நோய் வராது, நோய்க்கான காரணங்களும் உருவாகாது. உணவு மிகினும், குறையினும் நோய் செய்யும்.

உணவு அளவோடு இருக்க வேண்டும். உணவில் உப்பு, புளி, கொழுப்பு, சர்க்கரை ஆகியவை குறைவாக இருக்க வேண்டும்.
ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்பினால், பழச்சாறுகள், காய்கறி ஜூஸ், கொழுப்பு நீக்கிய பால் ஆகியவற்றை அருந்தலாம்.
அமர்ந்து பொறுமையாக மென்று சாப்பிடவேண்டும்.

டி.வி.பார்த்தபடி சாப்பிடுவது, நின்றுகொண்டு சாப்பிடுவது, மெல்லாமல் விழுங்குவது, சாப்பிடும் போது பேசுவது, விவாதிப்பது ஆகிய வற்றால் அதிக உணவை சாப்பிட நேரும். சாப்பிட அரை மணிநேரமாவது ஒதுக்க வேண்டும். காலையில் நன்றாக சாப்பிடுங் கள், மதியமும், இரவும் உணவின் அளவை குறைத்துக் கொள்ளுங்கள்.

ஒரே மாதிரியாக உண்ணாமல், உணவில் பல அயிட்டங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

என்னென்ன தவிர்க்கலாம்!.

உருளைக்கிழங்கு சிப்ஸ், வறுத்த உணவுகளை தவிர்த்து விடுங்கள்..

டின்களில் அடைத்து பாதுகாக்கப் பட்ட உணவை உட்கொள்ளக்கூடாது. துரித உணவகங்களில் சாப்பிடுவதை விட்டுவிட வேண்டும்.

கிரிம், ஆடை நீக்காதபால் ஆகிய வற்றையும், கொழுப்பு அதிகமுள்ள உணவையும் தவிர்க்க வேண்டும். வறுத்த இறைச்சி, பாலாடைக்கட்டிகள், நெய்ப்பொருட்கள் ஆகியவற்றையும் தவிர்க்கவேண்டும்.

அரிசி சாதத்தைவிட நெய் எண்ணெய் சேர்க்காத ரொட்டி சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது.

காய்கறிகளில் வெள்ளரி, முட்டைக்கோஸ், பீன்ஸ், காலிபிளவர், வெண்டைக்காய், வெங்காயம், டர்னிப்பு போன்ற பச்சைநிற காய்கறிகளையும், காளான்களையும் சாப்பிட வேண்டும். அதே நேரத்தில் சிலருக்கு சில உணவுப் பொருட்கள் ஒவ்வாமையை உண்டாக்கி விடும். இவற்றை தவிர்க்க வேண்டும்.

இவ்வளவு நன்மை உண்டாக்கும் இயற்கை உணவை சாப்பிட்டுவிட்டு ஓய்வாக உட்கார்ந்துகொண்டிருந்தால் அதன் முழுப்பலனும் கிடைக்காது.

ஆகவே, இயற்கை உணவை சாப்பிட்டு, அதன் பலன்கள் உடலுக்குக் கிடைப்பதற்கு, உண்ட உணவு செரிமானமாகி, அதன் சத்துக்களை உடல் முழுஅளவில் பயன்படுத்திக் கொள்ளும் வரை நன்றாக உழைப்பவர்கள் கட்டுமஸ்தான உடலமைப்பை பெறலாம


கட்டான உடல் தசைக்கு உணவுகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum