ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவபூஜைக்கு தாழம்பூ பயன்படுத்தப்படும் ஒரே ஆலயம்

3 posters

Go down

சிவபூஜைக்கு தாழம்பூ பயன்படுத்தப்படும் ஒரே ஆலயம் Empty சிவபூஜைக்கு தாழம்பூ பயன்படுத்தப்படும் ஒரே ஆலயம்

Post by ayyasamy ram Thu Dec 20, 2018 9:06 pm

சிவபூஜைக்கு தாழம்பூ பயன்படுத்தப்படும் ஒரே ஆலயம் IMG-20170622-WA0013

டிசம்பர் 22 - ந் தேதி மரகத நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம்.
உத்தரகோசமங்கையில் வீற்றிருக்கும் மரகத நடராஜர்

சிவபக்தர்களின் சிந்தையெல்லாம் இப்போது ஆருத்ரா தரிசனம் பற்றியதாகத்தான் இருக்கும். சிவன் கோயிலுக்குச் சென்று இந்த நாளில் பக்தர்கள் வழிபட்டு வருவது வழக்கம்.

திருஉத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் நடக்கும் ஆருத்ரா தரிசனம் மகத்துவம் வாய்ந்ததாகக் காலம்காலமாகக் கருதப்பட்டு வருகிறது. அதற்குக் காரணம் இங்கே இருக்கும் மரகத நடராஜர் சிலைதான்.

நவரத்தினங்களில் ஒன்றான பச்சை மரகதம் மிகவும் மென்மையான கல். மத்தளம் முழங்க மரகதம் பொடிபடும் என்று கூறுமளவுக்கு மென் இயல்புடையது.

அவ்வளவு மென்மையான மரகதக் கல்லை உளி கொண்டு செதுக்கி 6 அடி உயரத்தில் அற்புதச் சிலையாக வடித்துள்ளனர் நமது முன்னோர்கள்.

ஒளி மற்றும் ஒலியால் பாதிக்கப்படாமல் இருக்க ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டு பாதுகாக்கப்படுகிறது இந்த மரகத நடராஜர் சிலை. நித்ய அபிஷேகங்கள்கூட, இந்தச் சிலைக்குப் பதிலாக உள்ள உள்ளங்கை அளவு மரகத லிங்கத்திற்குத்தான் நடைபெறும்.

ஆண்டில் ஒருநாள், அதுவும் சிவனுக்கு உகந்த நாளான ஆருத்ரா தரிசனம் அன்று மட்டுமே மரகத நடராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

அன்றைய தினம் முழுவதும் சந்தனக்காப்பு இல்லாமல் மரதகத் திருமேனியுடன் நடராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். அதைக் காணவே நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் இங்கு குவிகிறார்கள்.

இந்த மரகத நடராஜர் ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டு பாதுகாக்கப்படும்.

ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே நடராஜரின் மேல் பூசப்பட்ட சந்தனக் காப்பு களையப்பட்டு பக்தர்களின் பார்வைக்காகவும் , வழிபடுவதற்கும் அனுமதிக்கப்படுவர்.

இதனையொட்டி, வரும் டிசம்பர் 22 - ந் தேதி சனிக்கிழமை காலை சுமார் 09.30 - மனியளவில் சந்தன காப்புகளையப்பட்டு ,
காலை 11.00 மணியளவில் மரகத நடராஜருக்கு 18 வகையான விசேஷ அபிசேகம், பூஜைகள் நடைபெறும்.

மதுரையில் இருந்து ராமநாதபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த ஆலயம் மிகமிகப் பழமையானது.

பூலோக கைலாசம் என்றும், ஆதிசிதம்பரம் என்றும் அழைக்கப்படும் இந்த ஆலயத்தைப் புனரமைக்கச் சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசின் தொல்லியல் துறை 2 கோடி ரூபாய் ஒதுக்கியது என்பதே இதன் பழமைக்கு சாட்சி.

சிவபூஜைக்கு தாழம்பூ பயன்படுத்தப்படும் ஒரே ஆலயம் இது தான். சிவனின் அடி, முடியை காண விஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும் நடந்த போட்டியில் பிரம்மன் வெல்வதற்காக தாழம்பூ பொய் சாட்சி சொன்னது. ‘இனி எந்தப் பூஜைக்கும் நீ பயன்பட மாட்டாய்’ என்று சாபத்துக்குள்ளான தாழம்பூ, இந்தத் தலத்தில் தான் சிவனிடம் வேண்டி மன்னிப்பு பெற்றதாம்.

அதனால்தான் இங்கு மட்டும் பூஜையில் தாழம்பூ பயன்படுத்தப்படுவதாக அர்ச்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.

தொடர்ந்து பொது மக்கள் மரகத நடராஜரை வழிபட்டு அருள் பெற்றுச் செல்வதற்காக அனுமதிக்கப்படுவார்கள்.

தொடர்ந்து, டிசம்பர் 23 - ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 05.30 - மணியளவில் அருணோதய நேரத்தில் மீண்டும் மரகத நடராஜருக்கு சந்தனக் காப்பு பூசப்பட்டு பாதுகாக்கப்படும்.

திருச்சிற்றம்பலம்... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
-
வாட்ஸ் அப் பகிர்வு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82824
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிவபூஜைக்கு தாழம்பூ பயன்படுத்தப்படும் ஒரே ஆலயம் Empty Re: சிவபூஜைக்கு தாழம்பூ பயன்படுத்தப்படும் ஒரே ஆலயம்

Post by krishnaamma Fri Dec 21, 2018 12:46 pm

ஹர ஹர மஹா தேவா ! .................. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிவபூஜைக்கு தாழம்பூ பயன்படுத்தப்படும் ஒரே ஆலயம் Empty Re: சிவபூஜைக்கு தாழம்பூ பயன்படுத்தப்படும் ஒரே ஆலயம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 21, 2018 8:22 pm

ஓம் நம சிவாய
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சிவபூஜைக்கு தாழம்பூ பயன்படுத்தப்படும் ஒரே ஆலயம் Empty Re: சிவபூஜைக்கு தாழம்பூ பயன்படுத்தப்படும் ஒரே ஆலயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum