ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !  Empty இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !

Post by krishnaamma Wed Dec 19, 2018 11:12 pm


கனம் ‘food court ‘நீதிபதி அவர்களே,  

இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !  7aIO2tyOSCNOPp0DdNd8+5esmஇதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !  DE0Hd7PTlaDtcl6ScfEi+IMG_20181216_110656_Bokeh

இன்று எனது கட்சிக்காரர் மார்கழி மாதத்தின் முடி சூடா மன்னன் வெண் பொங்கலின் சார்பாக வாதாட ஆஜர் ஆகி உள்ளேன்!

சாப்பிட்ட பின் தூக்கம்தான் வரும்,வயிற்றை அடைத்து விடும்,வேலை பார்ப்பது கஷ்டம்,இப்படி எவ்வளவு குற்றச்சாட்டுக்கள் என் கட்சிக்காரர் மேல்!Silly!

அவர்களுக்கு ஒன்றுதான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.பொங்கல் சாப்பிட என்று ஒரு வாழ்வாங்கு வந்த முறை இருக்கிறது.
கனம் கோர்ட்டார் அவர்கள் முன் அதை விளக்க அனுமதிக்க வேண்டுகிறேன்!

அதைக் கேட்ட உடன் இது இன்னொரு ரஃபேல் கேசாகி விடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை!

ஆவி பறக்கும் வெண் பொங்கலைப் ப்ளேட்டில் சாப்பிடுவது எந்திரன் 2.0 வை கேமேரா ப்ரிண்டில் பார்ப்பதற்கு ஒப்பனாது.வாழை இலையே உகந்தது!இலையில் போடும்போது அதன் பதம் எப்படி இருக்கிறது என்பது மிக முக்கியம்!கொள கொள வென்று ஓடினாலோ அல்லது பாறாங்கல்லைப் போல உட்கார்ந்தாலோ rejected!இரண்டுக்கும் இடைப்பட்ட கன்ஸிஸ்டன்சி மிக முக்கியம்.

பொங்கல் என்றாலே ஜோடி முக்கியம்.ஆக....வடை இல்லாப் பொங்கல் வெண் பொங்கல் அல்ல...அது வீண் பொங்கல்!வடையானது வெளிப்பக்கம் மொறு மொறுவென்றும் உள்ளே சாஃப்டாகவும் இருத்தல் விவசாயக் கடன் தள்ளுபடி ஆட்சிக்கு வர எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம்!

தேங்காய் சட்னி,சாம்பார்,காரச் சட்னி லட்சியம்.முதலில் சொன்ன இரண்டும் அவசியம்!இவற்றைக் கப்பில் வைத்துச் சாப்பிடும் சின்னப் பையன்கள் ஓரமாகக் கூப்பேயில் உட்கார்ந்து ஆட்டத்தைக் கவனிக்கவும்.வாளியுடன் சாப்பிடுபவர்களுக்கே ப்ளேயிங் லெவனில் இடமுண்டு!

ஆவி பறக்கும் பொங்கலின் ஓரத்தில் கொஞ்சம் ஸ்பூனால் எடுத்து குற்றால அருவியில் குளிக்கத் தலையை நீட்டும் முன் கையை நீட்டி டெஸ்ட் செய்வது போல் முதலில் சாம்பாரில் லேசாக நனைக்கவும்,பின் தேங்காய் சட்னியில் கொஞ்சம் ...நாக்கின் நுனியில் வையுங்கள்...வாயையும் கண்களையும் ஒரு செகண்ட் மூடுங்கள்.அது கடிக்கத் தேவையில்லாமல் கரைந்து தொண்டை வழியாக ஓடியே போயிருக்கும்.அடுத்த காம்பினேஷன் காரச் சட்னி ப்ளஸ் சாம்பார்...!சட்னி சாம்பாருடன் அத்தனை வகை காபினேஷனுடனும் ட்ரை செய்து ஒரு நாலைந்து வாய் சாப்பிட்டு அதில் இருக்கும் மிளகு டேஸ்ட்,அவ்வப்போது மாட்டும் வறுத்த முந்திரி இவற்றை ரசித்து விட்டு வடைக்குக் கவனத்தைத் திருப்புங்கள!

வடையை விண்டு சாம்பாரில் புஷ்கர முக்கு கொடுங்கள்!அதன் பிறகு அப்படியே தூக்கி தேங்காய் சட்னியில் ஒரு நனையல்...வாயில் போட்ட உடனே மொறு மொறுப்பு கடிக்கும் போது தெரியும் அளவிற்கே நனைக்க வேண்டும்.Detailing is very important!

மூன்று ஸ்பூன் பொங்கலுக்கு ஒரு ஒரு ஸ்பூன் வடை இந்த ratio maintain செய்யுங்கள்!

இரண்டு நிமிங்களில் ப்ளேட் காலி!

ஆனால் ஆட்டம் முடியவில்லை!

விராட் கோலி மாதிரி சூடான ஃபில்டர் காஃபி!படு ஸ்ட்ராங்க்!சக்கரைக் குறைவாகப் போட்டுக் கொண்டு ஒரு ஆற்று ஆற்றி வாயில் ஊற்றி டேஸ்டை உள் நாக்கு அனுபவிக்க விடுங்கள்!

இரண்டு நிமிடங்கள் அப்படியே கண்களை மூடி உட்கார்ந்திருங்கள்.

பொங்கல் ஒரு experience,your honor!  

அதை உணராமல் ‘பொங்கல் பார்ட்டி,என்னை என்ன பொட்டு வைச்சுகிட்டு பொங்கல் சாப்பிடறவன்னு நினைச்சியா? ‘இது போல அபத்த டயலாக்குகள் எனது கட்சிக்காரரை மிகவும் புண் படுத்துகின்றன!

மார்கழி மாதத்தில் நல்லதொரு தீர்ப்பை வழங்கி எங்கள் மார்கழி கிங்கிற்கு உரிய இடத்தைப் பெற்றுத் தருமாறு கனம் கோர்ட்டார் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்!

That’s all your honour!


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !  Empty Re: இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !

Post by krishnaamma Thu Dec 20, 2018 2:56 pm

42 பேர் படித்துமா?????? ........


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !  Empty Re: இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !

Post by ரா.ரமேஷ்குமார் Thu Dec 20, 2018 3:28 pm

நேற்று காலை கூட பொங்கல் தான் அம்மா ... சிரி ஆனால் நான் சாப்பிட்ட பொங்கல் வடைக்கு ப்ளெயிங் லெவனில் இடம் இல்லை(கேபிடேரியா பொங்கல்).. இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !  745155


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !  Empty Re: இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !

Post by krishnaamma Thu Dec 20, 2018 3:35 pm

ரா.ரமேஷ்குமார் wrote:நேற்று காலை கூட பொங்கல் தான் அம்மா ... சிரி  ஆனால் நான் சாப்பிட்ட பொங்கல் வடைக்கு ப்ளெயிங் லெவனில் இடம் இல்லை(கேபிடேரியா பொங்கல்).. இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !  745155
மேற்கோள் செய்த பதிவு: 1289159

ஹா..ஹா..ஹா... இங்கு ( பெங்களூரில் ) டம்ளரில் தான் பொங்கல் கிடைக்கும் ரமேஷ்... ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !  Empty Re: இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !

Post by T.N.Balasubramanian Thu Dec 20, 2018 5:12 pm

krishnaamma wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:நேற்று காலை கூட பொங்கல் தான் அம்மா ... சிரி  ஆனால் நான் சாப்பிட்ட பொங்கல் வடைக்கு ப்ளெயிங் லெவனில் இடம் இல்லை(கேபிடேரியா பொங்கல்).. இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !  745155
மேற்கோள் செய்த பதிவு: 1289159

ஹா..ஹா..ஹா... இங்கு ( பெங்களூரில் ) டம்ளரில் தான் பொங்கல் கிடைக்கும் ரமேஷ்... ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1289166

அப்பிடி என்றால் ஒரு பிளேட் பொங்கல் என்று ஆர்டர் கொடுக்கணுமா? அல்லது ஒரு டம்பளர் பொங்கல் என்று ஆர்டர் கொடுக்கணுமா? சாப்பிடனுமா அல்லது கரைத்து/கலந்து குடிக்கனுமா?

சட்னியும் சாம்பாரும் எதில் கொடுக்கிறார்கள்.?
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !  Empty Re: இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !

Post by ரா.ரமேஷ்குமார் Thu Dec 20, 2018 6:15 pm

காரா பொங்கல் என்று சொல்லுவார்கள் ஐயா இங்கு(பெங்களூரில்) ... கரைந்ததும் கலந்ததும் போல் இருக்கும் ... சிரி அள்ளி ஊற்றுவார்கள் ... இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !  745155

சட்டினியும் சாம்பாரும் கிண்ணத்தில் தான் ஐயா ... ஆனால் சென்னை கணேஷ் பவனில் கிடைப்பது போல் இருக்காது ...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !  Empty Re: இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !

Post by T.N.Balasubramanian Thu Dec 20, 2018 6:36 pm

"காரா பாத்"தும் காரா பொங்கலும் ஒன்றா? நான் ருசித்த அனுபவம் இல்லை.
எனது உறவுக்காரர் அபார்ட்மெண்டிற்கு எதிரே ஒரு கடை,.எல்லாம் சுடசுட கிடைக்கும்.
மதுர் வடை +பொடி தோசை அவர் ஸ்பெஷாலிட்டி. எனக்கும் பிடிக்கும்..
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !  Empty Re: இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !

Post by krishnaamma Thu Dec 20, 2018 7:43 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:நேற்று காலை கூட பொங்கல் தான் அம்மா ... சிரி  ஆனால் நான் சாப்பிட்ட பொங்கல் வடைக்கு ப்ளெயிங் லெவனில் இடம் இல்லை(கேபிடேரியா பொங்கல்).. இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !  745155
மேற்கோள் செய்த பதிவு: 1289159

ஹா..ஹா..ஹா... இங்கு ( பெங்களூரில் ) டம்ளரில் தான் பொங்கல் கிடைக்கும் ரமேஷ்... ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1289166

அப்பிடி என்றால் ஒரு பிளேட் பொங்கல் என்று ஆர்டர் கொடுக்கணுமா? அல்லது ஒரு டம்பளர் பொங்கல் என்று ஆர்டர் கொடுக்கணுமா? சாப்பிடனுமா அல்லது கரைத்து/கலந்து குடிக்கனுமா?

சட்னியும் சாம்பாரும் எதில் கொடுக்கிறார்கள்.?
ரமணியன்

ஆர்டர் பண்ணியதும் நாம என்னவோ plate இல் தான் வரும் என்று நினைத்திருப்போம்... வருவதும் அப்படித்தான் வரும் ஆனால் மிக மிக தளர இருக்கும்............சோகம்...பொங்கல் சாப்பிடும் ஆசையே போய்விடும்.... தொட்டுக்கொள்ள கொஞ்சம் சர்க்கரை போட்ட சாம்பார் மற்றும் சட்னி தருவார்கள்.....பூரிக்கு உருளைக்கிழங்கு மசாலா வேண்டும் என்றால் முதலிலேயே சொல்லி விடவேண்டும்...இல்லாவியிட்டால் 'சாகு' என்று சொல்லி ஒரு பண்டம் தருவார்கள்....புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !  Empty Re: இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !

Post by krishnaamma Thu Dec 20, 2018 7:45 pm

ரா.ரமேஷ்குமார் wrote:காரா பொங்கல் என்று சொல்லுவார்கள் ஐயா இங்கு(பெங்களூரில்) ... கரைந்ததும் கலந்ததும் போல் இருக்கும் ... சிரி  அள்ளி ஊற்றுவார்கள் ...  இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !  745155
சட்டினியும் சாம்பாரும் கிண்ணத்தில் தான் ஐயா ... ஆனால் சென்னை கணேஷ் பவனில் கிடைப்பது போல் இருக்காது ...

சரவண பவன், A 2 B மாதிரி இருக்காது ....புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !  Empty Re: இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !

Post by krishnaamma Thu Dec 20, 2018 7:50 pm

T.N.Balasubramanian wrote:"காரா பாத்"தும் காரா பொங்கலும் ஒன்றா? நான் ருசித்த அனுபவம் இல்லை.
எனது உறவுக்காரர் அபார்ட்மெண்டிற்கு எதிரே ஒரு கடை,.எல்லாம் சுடசுட கிடைக்கும்.
மதுர் வடை +பொடி தோசை அவர் ஸ்பெஷாலிட்டி. எனக்கும் பிடிக்கும்..
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1289205

ஆஹா மதுர்வடா .... பேர போலவே மதுரமான தின்பண்டம்.... இவர்கள் பொங்கலத்தான் சரியாக தரமாட்டார்களே தவிர மற்ற டிபன்களில் இவர்களை அடித்துக்கொள்ள முடியாது......ரவா இட்லி ..... நீர் தோசை.... பழபன் என்று சொல்லிக்கொண்டே போகலாம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !  Empty Re: இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum