ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் கடைசிப் பேட்டி

Page 2 of 2 Previous  1, 2

Go down

174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் கடைசிப் பேட்டி - Page 2 Empty 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் கடைசிப் பேட்டி

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 06, 2018 7:53 pm

First topic message reminder :

174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் கடைசிப் பேட்டி - Page 2 9tnJOBkDSxilYd7Sfjpf+jayaramanjpg
இன்றைய தலைமுறை இழந்துகொண்டிருக்கும் விஷயங்களில் முக்கியமானது மண் சார்ந்த பாரம்பரிய அறிவு. அப்படிப்பட்ட அறிவின் விளைச்சலான 170-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்தவர் நெல் ஜெயராமன். தமிழ்நாட்டு விவசாயிகள் கவனத்தை இயற்கை வேளாண்மை நோக்கித் திருப்பிய நம்மாழ்வாரின் விழுதுகளில் ஒருவர் இவர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வேளாண் விஞ்ஞானி நெல் ஜெயராமன் சிகிச்சை பலனின்றி இன்று ( வியாழக்கிழமை) அதிகாலையில் மரணம் அடைந்தார். இதற்கு, ஓரிரு வாரங்களுக்கு முன்பு திருவாரூர் மாவட்டத்தின் திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள கீழச்சிங்களாந்தி கிராமத்தில் அவரைச் சந்தித்துப் பேசினேன். தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி துளியும் பொருட்படுத்தாதவராகப் பேசியவர் விவசாயம், விவசாயிகள், தமிழ் மக்கள் மீது அத்தனை கரிசனத்தை வெளிப்படுத்தினார்.

நன்றி
இந்து தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down


174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் கடைசிப் பேட்டி - Page 2 Empty Re: 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் கடைசிப் பேட்டி

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 06, 2018 8:04 pm

அது கடைமடைப் பகுதி அல்லவா?

ஆமாம். தண்ணீர் இல்லாத இடத்தில்தான் கண்டுபிடிப்புகள் நிறைய நடந்திருக்கின்றன. திருத்துறைப்பூண்டிக்கு உரிய ரகம் கார் நெல்லு. கார் ஐப்பசி மாதம் அறுவடை செய்வது. கடுமையான மழையில் தண்ணீருக்குள் போய் அறுப்பார்கள். தெளிக்காமல், நடவு நட்டுவிட்டுத் தண்ணீர் விடுவார்கள். பயிர் வளர ஆரம்பித்த பின் தண்ணீர் எவ்விடும். தண்ணீருக்குள்ளேயே அந்தப் பயிர்கள் கதிர் வைக்கும், பழுக்கும், தண்ணீருக்குள்ளேயே அறுவடை செய்துவிட்டு வருவோம். எந்த உரமும் கொடுக்க வேண்டியதில்லை. நடவு நடுவது ஒன்றுதான் வேலை. அறுத்துவிட்டு ஈரத்தோடு போட்டால் முளைக்காது என்பது அதன் தனிச்சிறப்பு. அப்புறம் அவலுக்காகவே உள்ள நெல் கார்தான். கார்த்திகை மாதத்தில் கார் நெல்லைச் சிறகி என்ற பறவையிடமிருந்து பாதுகாக்கப் பெரும்பாடு படுவோம். தப்பு வைத்துக்கொண்டு வயல்காட்டில் அடிப்பார்கள், தீப்பந்தம் கொளுத்திவைப்பார்கள். அந்த மாதிரி பாரம்பரிய நெல் ரகங்களை நாடி வலசைப் பறவைகளும் வருவதை முன்பு நான் பார்த்திருக்கிறேன்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் கடைசிப் பேட்டி - Page 2 Empty Re: 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் கடைசிப் பேட்டி

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 06, 2018 8:05 pm

நெல் விவசாயம் என்பது இந்த அளவுக்குத் தண்ணீர் தேவைப்படும் ஒன்றாக இருக்கிறதே?

நெல் என்பது புல் வகையைச் சேர்ந்தது. அதில் தண்ணீரை நிறுத்த அவசியமே இல்லை. ‘நீர் மறைய நீர் கட்டு’ என்று சொல்வார்கள். ஒரு தடவை தண்ணீர் வைத்தால் தண்ணீர் காய்ந்துபோய், காக்காய் கால்விரல்கள் எந்த அளவுக்கு இருக்கோ அந்த அளவுக்கு இடைவெளி விட்டுத் தரையில் வெடிப்பு வர வேண்டும். அதற்குப் பிறகுதான் மறுபடியும் தண்ணீர் வைக்க வேண்டும். அப்போதுதான் தூர் அதிகமாகக் கட்டும். அந்த மாதிரி தொழில்நுட்பம்தான் முன்பு இருந்தது. அதையெல்லாம் மீண்டும் மீட்டு நாம் நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும்.
இந்தப் பயணத்தில் உங்களைச் சோர்வடையச் செய்த விஷயம் எது?

நம்மாழ்வார் ஐயா ஒரு 50 ஆண்டுகள் வேலைபார்த்திருக்கார். நான் ஒரு 12 ஆண்டுகள் வேலைபார்த்திருக்கிறேன். இன்னும் மாற்றம் வராத மாவட்டம் என்றால், அது காவிரி மாவட்டங்கள்தான். இயற்கை வேளாண்மையில் திருவண்ணாமலை, ஈரோடு, ராமநாதபுரம், திண்டுக்கல், கோயம்புத்தூர் என்று நிறைய மாவட்டங்களில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் கடைசிப் பேட்டி - Page 2 Empty Re: 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் கடைசிப் பேட்டி

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 06, 2018 8:06 pm

என்ன காரணம்?

காவிரிப் படுகை மாவட்டங்களுக்குக் கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்துதான். களைக்கொல்லி, இடுபொருட்கள், ரசாயன உரங்கள் இலவசமாகக் கொடுக்கிறது. ரசாயனத்தை அடிப்படையாகக் கொண்ட விவசாயம் செய்தால்தான் இந்த இடுபொருட்கள், மோட்டார் இன்ஜின், பைப், தார்ப்பாய் இலவசமாகக் கிடைக்கும் என்பதால் அதிலிருந்து வெளிவர மாட்டேன் என்கிறார்கள் விவசாயிகள். ஒரு ஏக்கருக்கு ரசாயன உரத்திலிருந்து பல விஷயங்களுக்காகவும் அரசாங்கம் ரூ.18 ஆயிரம் வரை செலவுசெய்கிறது. அது மறைமுகமாக விவசாயிகள் அல்லாதவர்களுக்குத்தான் போகிறது. தார்ப்பாய் கம்பெனி, டிராக்டர் கம்பெனி, மோட்டார் இன்ஜின் கம்பெனி என்று விவசாயிகள் பேரைச் சொல்லி, மற்றவர்கள் காசு பார்க்கிறார்கள். ரூ.15 விற்கும் ஆயில் இன்ஜினுக்கு மானியம் ரூ.10 தருவதாக அரசு கூறினால், கம்பெனிக்காரர்கள் ரூ.25-க்கு விற்கிறார்கள். இல்லையென்றால், இடையிலுள்ள அதிகாரிகள் கம்பெனிக்காரர்களின் பேரைச் சொல்லிக் கொள்ளை அடிக்கிறார்கள். இயற்கை விவசாயம் செய்யும் நாங்கள் ஏக்கருக்கு ரூ. 3,000 கொடுங்கள்; நல்ல மகசூல் எடுத்துக்காட்டுகிறோம் என்று அரசைக் கேட்கிறோம். அதேபோல் பாரம்பரிய நெல் ரகங்களை அரசு பரவலாக ஆக்க வேண்டும் என்றும் கேட்டிருக்கிறோம். பார்ப்போம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் கடைசிப் பேட்டி - Page 2 Empty Re: 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் கடைசிப் பேட்டி

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 06, 2018 8:10 pm

இயற்கை விவசாயம் பணக்காரர்கள் தொடர்பான விஷயம்போல் ஆகிவிட்டதே?

வருத்தமான விஷயம்தான். குறைந்த செலவில் உற்பத்திசெய்து, குறைந்த விலைக்கு விற்பதுதான் அதன் இலக்கு. ஆனால், விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு வாங்கிச் செல்பவர்கள் ஒரு கிலோ ரூ.150, ரூ.200 என்று நகரங்களில் அதிக விலை வைத்து விற்கிறார்கள். எல்லாம் மாறும்.

காவிரிப் படுகையில் விவசாயத்தின் எதிர்காலம் என்ன?

தமிழ்நாட்டின் மூன்று வேளை உணவில், ஒரு வேளை உணவை வழங்குவது காவிரிப் படுகை. அங்கே புயல் அடித்தாலும் சரி, நிலம் வறண்டுபோனாலும் சரி; நம்முடைய உணவுப் பத்தாயமே ஓட்டையாகிவிடும். ஒட்டுமொத்த தமிழகத்தையும் அது பாதிக்கும். ஆகையால், காவிரிப் படுகையின் எதிர்காலம் என்பது வெறுமனே விவசாயிகளின் பிரச்சினை மட்டும் அல்ல. ஆனால், வறட்சியோ, வெள்ளமோ; காவிரிப் படுகை பாதிக்கப்படும்போது நாம் அதற்குரிய முக்கியத்துவத்தைத் தருவதே இல்லை. விவசாயம் அங்கு நிலைத்திருப்பதற்கான வேலைகளை நீண்ட கால நோக்கில் நாம் செய்வதே இல்லை. ஆனால், எனக்கு இளைய தலைமுறை மீது நம்பிக்கை இருக்கிறது. என்னுடைய நம்பிக்கை என்னவென்றால், கொஞ்சம் கொஞ்சமாக நாம் மரபில் இழந்த விஷயங்களையெல்லாம் மீட்டெடுத்தால், அடுத்த பத்திருபது வருடங்களுக்குள் காவிரி விவசாயிகள் மீண்டும் தலைநிமிர்ந்துவிடுவார்கள். அதோடு, நம் தமிழ் மக்களும் நஞ்சில்லா உணவைச் சாப்பிடுவார்கள். இயற்கை வேளாண்மை இதற்கு நிச்சயம் வழிகாட்டும். அப்போது காவிரிப் படுகையின் முகமும் மாறும். அதற்கு நிறைய வேலை செய்ய வேண்டியிருக்கிறது. என்ன ஒரு வேதனை என்றால், நோய் என்னைக் கடுமையாகப் படுத்துகிறது. எனக்கு என்னுடைய குடும்பம்,
தனிப்பட்ட வாழ்க்கையெல்லாம் ஒரு பொருட்டல்ல. மக்களுக்காக ஓடுகிறோம். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால், நிறைய வேலை இருக்கும்போது பாதியைக்கூட முடிக்கவில்லையே என்ற கவலைதான் என்னைக் கடுமையாக வருத்துகிறது!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் கடைசிப் பேட்டி - Page 2 Empty Re: 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் கடைசிப் பேட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum