Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
prajai |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் கடைசிப் பேட்டி
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் கடைசிப் பேட்டி
![174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் கடைசிப் பேட்டி 9tnJOBkDSxilYd7Sfjpf+jayaramanjpg](https://www.filepicker.io/api/file/9tnJOBkDSxilYd7Sfjpf+jayaramanjpg.jpeg)
இன்றைய தலைமுறை இழந்துகொண்டிருக்கும் விஷயங்களில் முக்கியமானது மண் சார்ந்த பாரம்பரிய அறிவு. அப்படிப்பட்ட அறிவின் விளைச்சலான 170-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்தவர் நெல் ஜெயராமன். தமிழ்நாட்டு விவசாயிகள் கவனத்தை இயற்கை வேளாண்மை நோக்கித் திருப்பிய நம்மாழ்வாரின் விழுதுகளில் ஒருவர் இவர்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வேளாண் விஞ்ஞானி நெல் ஜெயராமன் சிகிச்சை பலனின்றி இன்று ( வியாழக்கிழமை) அதிகாலையில் மரணம் அடைந்தார். இதற்கு, ஓரிரு வாரங்களுக்கு முன்பு திருவாரூர் மாவட்டத்தின் திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள கீழச்சிங்களாந்தி கிராமத்தில் அவரைச் சந்தித்துப் பேசினேன். தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி துளியும் பொருட்படுத்தாதவராகப் பேசியவர் விவசாயம், விவசாயிகள், தமிழ் மக்கள் மீது அத்தனை கரிசனத்தை வெளிப்படுத்தினார்.
நன்றி
இந்து தமிழ்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் கடைசிப் பேட்டி
உங்கள் வாழ்க்கையில் நம்மாழ்வார்தான் திருப்புமுனை அல்லவா?
நான் அரசியல் சார்பு கொண்டவன் இல்லை என்றாலும், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவந்த ராஜீவ் காந்தி மீது எனக்குத் தனி ஈர்ப்பு ஏற்பட்டது. வழக்கறிஞர்களின் துணை இல்லாமலேயே ஒரு நுகர்வோன் நீதிமன்றத்தை அணுக, வாதாட உதவிய சட்டம் இது. பொது வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்தேன். நுகர்வோர் இயக்கச் செயல்பாடுகள்தான் தொடக்கத்தில் என் களம். வெறும் ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த நான் ஐந்நூறுக்கும் மேற்பட்ட வழக்குகளைக் கையாண்டேன். ‘ஏன் நாம் நஞ்சில்லாத உணவு நுகர்வோருக்குக் கிடைப்பதற்காகப் போராடக் கூடாது?’ என்று ஒரு நாள் கேள்வி எழுந்தது. நம்மாழ்வாரைத் தேடிப்போனோம். இப்படித்தான் அவருடன் என்னுடைய பயணம் தொடங்கியது.
நான் அரசியல் சார்பு கொண்டவன் இல்லை என்றாலும், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவந்த ராஜீவ் காந்தி மீது எனக்குத் தனி ஈர்ப்பு ஏற்பட்டது. வழக்கறிஞர்களின் துணை இல்லாமலேயே ஒரு நுகர்வோன் நீதிமன்றத்தை அணுக, வாதாட உதவிய சட்டம் இது. பொது வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்தேன். நுகர்வோர் இயக்கச் செயல்பாடுகள்தான் தொடக்கத்தில் என் களம். வெறும் ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த நான் ஐந்நூறுக்கும் மேற்பட்ட வழக்குகளைக் கையாண்டேன். ‘ஏன் நாம் நஞ்சில்லாத உணவு நுகர்வோருக்குக் கிடைப்பதற்காகப் போராடக் கூடாது?’ என்று ஒரு நாள் கேள்வி எழுந்தது. நம்மாழ்வாரைத் தேடிப்போனோம். இப்படித்தான் அவருடன் என்னுடைய பயணம் தொடங்கியது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் கடைசிப் பேட்டி
பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் யோசனை எப்படி உங்களுக்கு வந்தது?
நிறையப் பயணங்கள் செய்தோம். அப்படி 2006-ல் ஒரு பயணம். பூம்புகாரிலிருந்து கல்லணை வரை. அப்போதுதான் வடுகூர் கிராமத்தில் ராமகிருஷ்ணன் என்ற ஓய்வுபெற்ற தமிழாசிரியர் தன்னுடைய வீட்டுக்கு எங்களை அழைத்தார். வீட்டில் ஒரு மஞ்சள் பையை அவர் நம்மாழ்வாரிடம் கொடுத்தார். பையைத் திறந்தால் விதைநெல். “இது காட்டு யானம். 180 நாள் பயிர். நாங்க ஒருமுறை விதைச்சிட்டோம்னா அறுவடைக்குப் போனா போதும். தண்ணியில் நின்னா படகுல போய் அறுப்போம். தண்ணி இல்லன்னா ஆளுங்களை வச்சு அறுப்போம். அப்படிப்பட்ட நெல்லு. எங்க தாத்தா காலத்துலருந்து நாங்க இதைச் சாகுபடி பண்ணிக்கிட்டிருக்கோம். இப்பவும் சாப்பாட்டுக்கு இதுதான் எங்களுக்கு. ரொம்ப ஆரோக்கியமா இருக்கோம். ஆனா, சுத்துப்பட்டு இடங்கள்ல இந்த நெல் ரகம் மறைஞ்சிபோயிடுச்சிங்க. இந்த ரகத்தை மீட்டெடுக்கணும்னுதான் உங்ககிட்ட கொடுத்தேன்” என்றார் ராமகிருஷ்ணன். அதைக் கேட்டதும், “ஒரு நெல்ல மீட்டுட்டோம். இனி இப்படியான ரகங்கள் அத்தனையையும் மீட்டெடுப்போம்” என்று சொன்னார் நம்மாழ்வார். அந்தப் பயணம் முடியும்போதே குடவாலை, பால்குடவாலை, பூங்கார் என்று ஏழு வகை நெல் வகைகள் எங்களிடம் சேர்ந்திருந்தன. அது அத்தனையையும் என்னிடம் கொடுத்து, “இன்னையிலருந்து ஒங்களுக்கு நெல் ஜெயராமன்னு பேரு வைக்கிறேன். நம்முடைய பாரம்பரிய நெல் வகைகளைச் சேகரிங்க” என்று சொன்னார் நம்மாழ்வார். இதுவரை 174 ரகங்களை மீட்டெடுத்திருக்கிறோம். 41 ஆயிரம் விவசாயிகளிடம் இந்த ரகங்களைக் கொண்டுசேர்த்திருக்கிறோம்.
நிறையப் பயணங்கள் செய்தோம். அப்படி 2006-ல் ஒரு பயணம். பூம்புகாரிலிருந்து கல்லணை வரை. அப்போதுதான் வடுகூர் கிராமத்தில் ராமகிருஷ்ணன் என்ற ஓய்வுபெற்ற தமிழாசிரியர் தன்னுடைய வீட்டுக்கு எங்களை அழைத்தார். வீட்டில் ஒரு மஞ்சள் பையை அவர் நம்மாழ்வாரிடம் கொடுத்தார். பையைத் திறந்தால் விதைநெல். “இது காட்டு யானம். 180 நாள் பயிர். நாங்க ஒருமுறை விதைச்சிட்டோம்னா அறுவடைக்குப் போனா போதும். தண்ணியில் நின்னா படகுல போய் அறுப்போம். தண்ணி இல்லன்னா ஆளுங்களை வச்சு அறுப்போம். அப்படிப்பட்ட நெல்லு. எங்க தாத்தா காலத்துலருந்து நாங்க இதைச் சாகுபடி பண்ணிக்கிட்டிருக்கோம். இப்பவும் சாப்பாட்டுக்கு இதுதான் எங்களுக்கு. ரொம்ப ஆரோக்கியமா இருக்கோம். ஆனா, சுத்துப்பட்டு இடங்கள்ல இந்த நெல் ரகம் மறைஞ்சிபோயிடுச்சிங்க. இந்த ரகத்தை மீட்டெடுக்கணும்னுதான் உங்ககிட்ட கொடுத்தேன்” என்றார் ராமகிருஷ்ணன். அதைக் கேட்டதும், “ஒரு நெல்ல மீட்டுட்டோம். இனி இப்படியான ரகங்கள் அத்தனையையும் மீட்டெடுப்போம்” என்று சொன்னார் நம்மாழ்வார். அந்தப் பயணம் முடியும்போதே குடவாலை, பால்குடவாலை, பூங்கார் என்று ஏழு வகை நெல் வகைகள் எங்களிடம் சேர்ந்திருந்தன. அது அத்தனையையும் என்னிடம் கொடுத்து, “இன்னையிலருந்து ஒங்களுக்கு நெல் ஜெயராமன்னு பேரு வைக்கிறேன். நம்முடைய பாரம்பரிய நெல் வகைகளைச் சேகரிங்க” என்று சொன்னார் நம்மாழ்வார். இதுவரை 174 ரகங்களை மீட்டெடுத்திருக்கிறோம். 41 ஆயிரம் விவசாயிகளிடம் இந்த ரகங்களைக் கொண்டுசேர்த்திருக்கிறோம்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் கடைசிப் பேட்டி
இந்த நெல் ரகங்களின் வயது ஒரே மாதிரி இருந்ததா, இல்லை வேறு வேறா?
பூங்கார் 70 நாள் பயிர், கருங்குறுவைக்கும் குள்ளக்காருக்கும் 90 நாள், மட்டைக்கார் 110 நாள், குழிவெடிச்சானுக்கும் சேலம் சன்னாவுக்கும் 110 நாள், தூயமல்லிக்கும் சிவப்புக் கவுணிக்கும் 130 நாள், கருப்புக் கவுணி 135 நாள், மைசூர் மல்லி 140 நாள், கருடன் சம்பா 145 நாள், மாப்பிள்ளைச் சம்பா 150, காட்டு யானம் 180, ஒட்டடையான் 200 நாள்.
நெல் ரகங்களை மீட்டெடுப்பதில் என்னென்ன சிரமங்களை எதிர்கொண்டீர்கள்?
ஐயோ பெரிய கஷ்டம்! வயசாளிகளிடம் பேசுகையில் அவர்கள் சொல்லும் நெல் ரகங்களைத் தேடிச் செல்வோம். விவசாயிகளிடம் போய்க் கேட்டால் “ஆடிப்பட்டமெல்லாம் முடிச்சிட்டு அப்புறம் தாறோம்” என்று சொல்லிவிடுவார்கள். அப்புறம் அவர்களிடம் உட்கார்ந்து ஒரு நாள் முழுக்கப் பேசிய பிறகு, நமக்குக் கால் கிலோ தருவார்கள். அந்த நெல்லை எடுத்துக்கொண்டுபோய் ஊரிலுள்ள வயசாளிகளிடம் அதன் அருமை பெருமையையெல்லாம் கேட்போம். எவ்வளவு உயரம் வளரும், சிவப்பரிசியா வெள்ளையரிசியா, சாப்பாட்டுக்கு நன்றாக இருக்குமா என்றெல்லாம் கேட்டுக்கொள்வோம். ஊர் ஊராக அலைவோம். எதுவுமே எளிதல்ல.
பூங்கார் 70 நாள் பயிர், கருங்குறுவைக்கும் குள்ளக்காருக்கும் 90 நாள், மட்டைக்கார் 110 நாள், குழிவெடிச்சானுக்கும் சேலம் சன்னாவுக்கும் 110 நாள், தூயமல்லிக்கும் சிவப்புக் கவுணிக்கும் 130 நாள், கருப்புக் கவுணி 135 நாள், மைசூர் மல்லி 140 நாள், கருடன் சம்பா 145 நாள், மாப்பிள்ளைச் சம்பா 150, காட்டு யானம் 180, ஒட்டடையான் 200 நாள்.
நெல் ரகங்களை மீட்டெடுப்பதில் என்னென்ன சிரமங்களை எதிர்கொண்டீர்கள்?
ஐயோ பெரிய கஷ்டம்! வயசாளிகளிடம் பேசுகையில் அவர்கள் சொல்லும் நெல் ரகங்களைத் தேடிச் செல்வோம். விவசாயிகளிடம் போய்க் கேட்டால் “ஆடிப்பட்டமெல்லாம் முடிச்சிட்டு அப்புறம் தாறோம்” என்று சொல்லிவிடுவார்கள். அப்புறம் அவர்களிடம் உட்கார்ந்து ஒரு நாள் முழுக்கப் பேசிய பிறகு, நமக்குக் கால் கிலோ தருவார்கள். அந்த நெல்லை எடுத்துக்கொண்டுபோய் ஊரிலுள்ள வயசாளிகளிடம் அதன் அருமை பெருமையையெல்லாம் கேட்போம். எவ்வளவு உயரம் வளரும், சிவப்பரிசியா வெள்ளையரிசியா, சாப்பாட்டுக்கு நன்றாக இருக்குமா என்றெல்லாம் கேட்டுக்கொள்வோம். ஊர் ஊராக அலைவோம். எதுவுமே எளிதல்ல.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் கடைசிப் பேட்டி
மீட்டெடுத்த பின் அடுத்தகட்டமாக என்ன செய்வீர்கள்?
அந்த நெல் ரகங்களின் விசேஷத் தன்மைகள் என்று நாங்கள் கேள்விபட்டவை எல்லாவற்றையும் உறுதிசெய்துகொள்ள பரிசோதனைகள் செய்வோம். உறுதிசெய்துகொண்ட விஷயங்களை மக்களிடம் கொண்டுசெல்வோம். இலுப்பைப்பூச் சம்பா என்ற ரகத்தைக் கொடுத்த விவசாயி சொன்னார், “இது மூணுவேளை சாப்பாட்டுக்கான அரிசி இல்லை. காய்ச்சல், ஒவ்வாமை அப்படின்னு உடம்புக்கு ஏதும் முடியலன்னா இந்த அரிசியில கஞ்சி வெச்சிக் குடிச்சிட்டு ஓய்வெடுத்தா சரியாப்போயிடும்.” கேட்க அதிசயம்போல இருந்தது! ஆனால், பரீட்சிக்காமல், நிரூபணம் செய்யாமல் எப்படி மக்களிடம் கொண்டுசெல்வது?
எப்படிப் பரிசோதிப்பீர்கள்?
நாங்களே நட்டுப்பார்ப்போம். விளைச்சல், மகசூல் எப்படி இருக்கிறது என்பது தொடங்கி, சாப்பாட்டு ருசி வரை சோதித்துப்பார்ப்போம். அப்புறம் நவீன அறிவியல் முறைப்படியிலான ஆராய்ச்சி. உதாரணமாக, தஞ்சாவூரில் உள்ள இந்திய பயிர்ப் பதனத் தொழில்நுட்பக் கழகத்தில் எங்களுக்கு ஒரு நண்பர். தனிப்பட்ட வகையில் அவர் இந்த நெல் ரகங்களையெல்லாம் சோதித்து, இன்னின்னவற்றில் இன்னின்ன சத்துக்கள் இருக்கின்றன; இன்னின்னவை இந்தந்தத் தன்மைகளைக் கொண்டவை என்பதையெல்லாம் சொல்வார். இப்படியானவர்களை எல்லாமும் பயணத்தில் இணைத்துக்கொண்டோம்.
அந்த நெல் ரகங்களின் விசேஷத் தன்மைகள் என்று நாங்கள் கேள்விபட்டவை எல்லாவற்றையும் உறுதிசெய்துகொள்ள பரிசோதனைகள் செய்வோம். உறுதிசெய்துகொண்ட விஷயங்களை மக்களிடம் கொண்டுசெல்வோம். இலுப்பைப்பூச் சம்பா என்ற ரகத்தைக் கொடுத்த விவசாயி சொன்னார், “இது மூணுவேளை சாப்பாட்டுக்கான அரிசி இல்லை. காய்ச்சல், ஒவ்வாமை அப்படின்னு உடம்புக்கு ஏதும் முடியலன்னா இந்த அரிசியில கஞ்சி வெச்சிக் குடிச்சிட்டு ஓய்வெடுத்தா சரியாப்போயிடும்.” கேட்க அதிசயம்போல இருந்தது! ஆனால், பரீட்சிக்காமல், நிரூபணம் செய்யாமல் எப்படி மக்களிடம் கொண்டுசெல்வது?
எப்படிப் பரிசோதிப்பீர்கள்?
நாங்களே நட்டுப்பார்ப்போம். விளைச்சல், மகசூல் எப்படி இருக்கிறது என்பது தொடங்கி, சாப்பாட்டு ருசி வரை சோதித்துப்பார்ப்போம். அப்புறம் நவீன அறிவியல் முறைப்படியிலான ஆராய்ச்சி. உதாரணமாக, தஞ்சாவூரில் உள்ள இந்திய பயிர்ப் பதனத் தொழில்நுட்பக் கழகத்தில் எங்களுக்கு ஒரு நண்பர். தனிப்பட்ட வகையில் அவர் இந்த நெல் ரகங்களையெல்லாம் சோதித்து, இன்னின்னவற்றில் இன்னின்ன சத்துக்கள் இருக்கின்றன; இன்னின்னவை இந்தந்தத் தன்மைகளைக் கொண்டவை என்பதையெல்லாம் சொல்வார். இப்படியானவர்களை எல்லாமும் பயணத்தில் இணைத்துக்கொண்டோம்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் கடைசிப் பேட்டி
விவசாயிகளிடமிருந்து ஆதரவு எப்படி இருக்கிறது?
சிரமம்தான். ஆனால், இன்று சூழல் மாறுகிறது. ‘பாரம்பரிய நெல் ரகங்கள் நல்ல விளைச்சல் தராது’ என்று பல ஆண்டுகள் பிரச்சாரம் செய்திருக்கிறார்களே, என்ன செய்வது? பாரம்பரிய ரகங்களைக் காணமலடிப்பதற்கே பெரிய வியாபார சதி வேலை செய்யும்போது அதையெல்லாம் தாண்டி வருவது அவ்வளவு எளிதா என்ன? ஆனால், நாங்கள் பேசியும், செய்துகாட்டியும் நம்பிக்கையை உண்டாக்கினோம். ஒடிஷாவின் மத்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக இருந்த ரிச்சார்யா கூறியதைத்தான் அடிக்கடி சொல்வோம், “இந்தியாவில் உள்ள நெல் ரகங்கள், நாட்டு மாடுகளைக் கொண்டே வேளாண் புரட்சியைச் சாதிக்க முடியும்” என்றவர் அவர். அவருடைய கணிப்பின்படி இந்தியா மொத்தம் இரண்டு லட்சம் பாரம்பரிய நெல் ரகங்களின் தாயகம். அவற்றில் இரண்டாயிரம் ரகங்களாவது நல்ல விளைச்சலைக் கொடுக்கக் கூடியவை. ஒரு ஹெக்டேருக்கு 7,500 கிலோ வரைக்கும் அறுக்கலாம் என்று கூறியவர் அவர்.
சிரமம்தான். ஆனால், இன்று சூழல் மாறுகிறது. ‘பாரம்பரிய நெல் ரகங்கள் நல்ல விளைச்சல் தராது’ என்று பல ஆண்டுகள் பிரச்சாரம் செய்திருக்கிறார்களே, என்ன செய்வது? பாரம்பரிய ரகங்களைக் காணமலடிப்பதற்கே பெரிய வியாபார சதி வேலை செய்யும்போது அதையெல்லாம் தாண்டி வருவது அவ்வளவு எளிதா என்ன? ஆனால், நாங்கள் பேசியும், செய்துகாட்டியும் நம்பிக்கையை உண்டாக்கினோம். ஒடிஷாவின் மத்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக இருந்த ரிச்சார்யா கூறியதைத்தான் அடிக்கடி சொல்வோம், “இந்தியாவில் உள்ள நெல் ரகங்கள், நாட்டு மாடுகளைக் கொண்டே வேளாண் புரட்சியைச் சாதிக்க முடியும்” என்றவர் அவர். அவருடைய கணிப்பின்படி இந்தியா மொத்தம் இரண்டு லட்சம் பாரம்பரிய நெல் ரகங்களின் தாயகம். அவற்றில் இரண்டாயிரம் ரகங்களாவது நல்ல விளைச்சலைக் கொடுக்கக் கூடியவை. ஒரு ஹெக்டேருக்கு 7,500 கிலோ வரைக்கும் அறுக்கலாம் என்று கூறியவர் அவர்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் கடைசிப் பேட்டி
பாரம்பரிய ரகத்தைக் கொண்டு, அதிக மகசூலை உங்களால் காண முடிந்ததா?
இந்தியாவின் சராசரி மகசூல் 1.5 டன். தமிழ்நாட்டின் சராசரி 2 டன். ஆலங்குடியில் பெருமாள் என்றொரு விவசாயியைப் பற்றி நம்முடைய ‘இந்து தமிழ்’ நாளிதழிலேயே செய்தி வந்திருந்ததே! ஒரு ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய கால் கிலோ விதை நெல்லை மட்டுமே பயன்படுத்தி, மூன்று டன்னுக்கு மேல் மகசூல் பார்த்தவர் அவர். ஆனால், அவர் செய்தது ரசாயன உரங்களைப் பயன்படுத்தித்தான். நாங்கள் அவருடைய உத்தியைப் பின்பற்றி இயற்கை விவசாயத்தில் தூய மல்லி என்கிற ரகத்தைப் பயன்படுத்தி, கதிராமங்கலத்தில் பரிசோதனை செய்துபார்த்தோம். கதிராமங்கலத்தில் நிலத்தடிநீர்தான். வழக்கமாக 30 கிலோ விதைநெல்லுக்கும் மேலாகத்தான் ஒரு ஏக்கருக்குப் போடுவார்கள். ஆலங்குடி பெருமாளின் உத்தியில் முக்கியமான அம்சம், கால் கிலோ விதையில் ஒரு ஏக்கர் நடுவதுதான். நாற்றங்காலில் விதைநெல்லை அப்படிக்கப்படிச் சுற்றி நின்று போட வேண்டும். பதினெட்டு நாள் கழித்துப் போய்ப் பார்த்தால், நாற்று ஒவ்வொன்றும் ஏழெட்டுச் சிம்புகள் வெடிச்சிருக்கும். அந்த நாற்றை எடுத்து 50 செமீ இடைவெளி விட்டு நட்டீர்கள் என்றால், ஒரு ஏக்கருக்குத் தேவை 16 ஆயிரம் நாற்றுக்கள்தான். அதற்கு அடிப்படை கால் கிலோ விதை நெல்தான்.
இந்தியாவின் சராசரி மகசூல் 1.5 டன். தமிழ்நாட்டின் சராசரி 2 டன். ஆலங்குடியில் பெருமாள் என்றொரு விவசாயியைப் பற்றி நம்முடைய ‘இந்து தமிழ்’ நாளிதழிலேயே செய்தி வந்திருந்ததே! ஒரு ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய கால் கிலோ விதை நெல்லை மட்டுமே பயன்படுத்தி, மூன்று டன்னுக்கு மேல் மகசூல் பார்த்தவர் அவர். ஆனால், அவர் செய்தது ரசாயன உரங்களைப் பயன்படுத்தித்தான். நாங்கள் அவருடைய உத்தியைப் பின்பற்றி இயற்கை விவசாயத்தில் தூய மல்லி என்கிற ரகத்தைப் பயன்படுத்தி, கதிராமங்கலத்தில் பரிசோதனை செய்துபார்த்தோம். கதிராமங்கலத்தில் நிலத்தடிநீர்தான். வழக்கமாக 30 கிலோ விதைநெல்லுக்கும் மேலாகத்தான் ஒரு ஏக்கருக்குப் போடுவார்கள். ஆலங்குடி பெருமாளின் உத்தியில் முக்கியமான அம்சம், கால் கிலோ விதையில் ஒரு ஏக்கர் நடுவதுதான். நாற்றங்காலில் விதைநெல்லை அப்படிக்கப்படிச் சுற்றி நின்று போட வேண்டும். பதினெட்டு நாள் கழித்துப் போய்ப் பார்த்தால், நாற்று ஒவ்வொன்றும் ஏழெட்டுச் சிம்புகள் வெடிச்சிருக்கும். அந்த நாற்றை எடுத்து 50 செமீ இடைவெளி விட்டு நட்டீர்கள் என்றால், ஒரு ஏக்கருக்குத் தேவை 16 ஆயிரம் நாற்றுக்கள்தான். அதற்கு அடிப்படை கால் கிலோ விதை நெல்தான்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் கடைசிப் பேட்டி
இப்படிச் செய்துபார்த்து எவ்வளவு மகசூல் கண்டீர்கள்?
நம்ப மாட்டீர்கள்! 4,170 கிலோ மகசூல் எடுத்தோம். அடுத்து, ஐந்தாயிரம் கிலோ தாண்டி எடுக்க வேண்டும் என்று இலக்கு வைத்திருக்கிறோம்.
மலைப்பாக இருக்கிறதே… இதை மற்றவர்கள் நம்பினார்களா?
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரிடம் ஒருமுறை இதைச் சொன்னோம். அவர் நம்பவில்லை. அதற்குப் பிறகு அவர்களே சோதனை செய்துபார்த்து, அதில் 3,800 கிலோவுக்குச் சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து இந்த ‘ஒரு ஏக்கர் - கால் கிலோ உத்தி’யையும் அதற்கான பாரம்பரிய நெல் ரகங்களையும் இயற்கை விவசாயத்தையும் தமிழ்நாட்டிலுள்ள எல்லா வேளாண் அறிவியல் நிலையங்களுக்கும் கொண்டுபோகும் வேலையை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் கையில் எடுத்திருக்கிறது.
தமிழ்நாட்டின் பெரும்பாலான நெல் ரகங்களை மீட்டெடுத்துவிட்டீர்கள் என்று சொல்லலாம்தானே?
அப்படி இல்லை. இன்னும் ஐந்நூறு நெல் ரகங்களாவது இருக்கலாம். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் சுமார் ஆயிரம் ரகங்களாவது வைத்திருப்பார்கள். துணைவேந்தரின் உதவியுடன் அவற்றில் பலவற்றையும் வெளிக்கொண்டுவர வேண்டும் என்ற யோசனையும் உண்டு.
நம்ப மாட்டீர்கள்! 4,170 கிலோ மகசூல் எடுத்தோம். அடுத்து, ஐந்தாயிரம் கிலோ தாண்டி எடுக்க வேண்டும் என்று இலக்கு வைத்திருக்கிறோம்.
மலைப்பாக இருக்கிறதே… இதை மற்றவர்கள் நம்பினார்களா?
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரிடம் ஒருமுறை இதைச் சொன்னோம். அவர் நம்பவில்லை. அதற்குப் பிறகு அவர்களே சோதனை செய்துபார்த்து, அதில் 3,800 கிலோவுக்குச் சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து இந்த ‘ஒரு ஏக்கர் - கால் கிலோ உத்தி’யையும் அதற்கான பாரம்பரிய நெல் ரகங்களையும் இயற்கை விவசாயத்தையும் தமிழ்நாட்டிலுள்ள எல்லா வேளாண் அறிவியல் நிலையங்களுக்கும் கொண்டுபோகும் வேலையை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் கையில் எடுத்திருக்கிறது.
தமிழ்நாட்டின் பெரும்பாலான நெல் ரகங்களை மீட்டெடுத்துவிட்டீர்கள் என்று சொல்லலாம்தானே?
அப்படி இல்லை. இன்னும் ஐந்நூறு நெல் ரகங்களாவது இருக்கலாம். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் சுமார் ஆயிரம் ரகங்களாவது வைத்திருப்பார்கள். துணைவேந்தரின் உதவியுடன் அவற்றில் பலவற்றையும் வெளிக்கொண்டுவர வேண்டும் என்ற யோசனையும் உண்டு.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் கடைசிப் பேட்டி
பாரம்பரிய நெல் ரகங்கள் நம் கலாச்சாரத்தில் எப்படி இடம்பிடித்திருந்தன?
ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்ப ஒவ்வொரு நெல் வகைகளை அந்தக் காலத்தில் சாப்பிட்டிருக்கிறார்கள். திருமணக் காலத்துக்கு முன்பு மாப்பிள்ளைச் சம்பா, பின்பு கருப்புக் கவுணி, மகப்பேறு காலத்தில் பூங்கார், குழந்தை பிறந்த பிறகு பால் குடவாலை, குழந்தைக்கு ஆறு மாதத்தில் முதல் உணவாக வாடன் சம்பா. கன்னியாகுமரியில் அரச குடும்பம் சாப்பிடும் கொட்டாரச் சம்பா என்று நெல் ரகம் இருந்திருக்கிறது. சாப்பாடு என்றில்லாமல் நம் வாழ்க்கையோடும் பண்பாட்டோடும் பின்னிப்பிணைந்தவை அரிசியும் நெல்லும். பிறந்த பதினாறாவது நாள் காப்பரிசி தொடங்கி இறந்த பின் வாய்க்கரிசி வரை அரிசியும் நெல்லும் நம்மோடு ஒட்டி உறவாடுபவை. பொங்கல் அன்று கள்ளி வட்டம் வைப்போம். அதில் ஒரு நெற்பயிர் வைப்போம். அப்புறம் விதை முகூர்த்தம் செய்வது, நல்லேர் பூட்டுவது போன்றவையும் நெல்லையும் வேளாண்மையையும் கொண்டாடும் சடங்குகள்.
ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்ப ஒவ்வொரு நெல் வகைகளை அந்தக் காலத்தில் சாப்பிட்டிருக்கிறார்கள். திருமணக் காலத்துக்கு முன்பு மாப்பிள்ளைச் சம்பா, பின்பு கருப்புக் கவுணி, மகப்பேறு காலத்தில் பூங்கார், குழந்தை பிறந்த பிறகு பால் குடவாலை, குழந்தைக்கு ஆறு மாதத்தில் முதல் உணவாக வாடன் சம்பா. கன்னியாகுமரியில் அரச குடும்பம் சாப்பிடும் கொட்டாரச் சம்பா என்று நெல் ரகம் இருந்திருக்கிறது. சாப்பாடு என்றில்லாமல் நம் வாழ்க்கையோடும் பண்பாட்டோடும் பின்னிப்பிணைந்தவை அரிசியும் நெல்லும். பிறந்த பதினாறாவது நாள் காப்பரிசி தொடங்கி இறந்த பின் வாய்க்கரிசி வரை அரிசியும் நெல்லும் நம்மோடு ஒட்டி உறவாடுபவை. பொங்கல் அன்று கள்ளி வட்டம் வைப்போம். அதில் ஒரு நெற்பயிர் வைப்போம். அப்புறம் விதை முகூர்த்தம் செய்வது, நல்லேர் பூட்டுவது போன்றவையும் நெல்லையும் வேளாண்மையையும் கொண்டாடும் சடங்குகள்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் கடைசிப் பேட்டி
நெல் ரகங்களின் வரலாறு குறித்தும் தேடிப்பார்த்திருக்கிறீர்களா?
நிறைய. அப்படித் தேடிப்பார்த்தபோது சுவாரசியமான விஷயங்கள் நிறையக் கிடைத்திருக்கின்றன. 1911-ல் விழுப்புரம் உளுந்தூர்பேட்டையில் முடிகொண்டான் என்று ஒரு கிராமத்தில் குழந்தைவேல் என்று ஒரு பண்ணையார் இருந்திருக்கிறார். அந்தப் பண்ணையாருக்குக் கருடன் சம்பா மட்டும் எவ்வளவு மகசூல் தந்தது தெரியுமா? ஏக்கருக்கு 3,420 கிலோ.
ஒருங்கிணைந்த தஞ்சையில் மட்டும் எத்தனை ரகங்களை மீட்டெடுத்திருப்பீர்கள்?
சுமார் 60 ரகங்கள் இருக்கும். தமிழ்நாட்டிலேயே பாரம்பரிய நெல் ரகங்கள் அதிக அளவில் கிடைத்தது வேதாரண்யம், தலைஞாயிறு பகுதிகளில்தான்.
நிறைய. அப்படித் தேடிப்பார்த்தபோது சுவாரசியமான விஷயங்கள் நிறையக் கிடைத்திருக்கின்றன. 1911-ல் விழுப்புரம் உளுந்தூர்பேட்டையில் முடிகொண்டான் என்று ஒரு கிராமத்தில் குழந்தைவேல் என்று ஒரு பண்ணையார் இருந்திருக்கிறார். அந்தப் பண்ணையாருக்குக் கருடன் சம்பா மட்டும் எவ்வளவு மகசூல் தந்தது தெரியுமா? ஏக்கருக்கு 3,420 கிலோ.
ஒருங்கிணைந்த தஞ்சையில் மட்டும் எத்தனை ரகங்களை மீட்டெடுத்திருப்பீர்கள்?
சுமார் 60 ரகங்கள் இருக்கும். தமிழ்நாட்டிலேயே பாரம்பரிய நெல் ரகங்கள் அதிக அளவில் கிடைத்தது வேதாரண்யம், தலைஞாயிறு பகுதிகளில்தான்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல்!
» C.S.ஜெயராமனின் இனிய பாடல்கள் தொகுப்பு - காணொளி
» கடைசிப் பந்து – நாடகம்
» கடைசிப் புகையின் கல்லறை – புத்தக மதிப்புரை
» ஜுராஸிக் பார்க்’ வரிசையின் கடைசிப் படப் பெயர் அறிவிப்பு
» C.S.ஜெயராமனின் இனிய பாடல்கள் தொகுப்பு - காணொளி
» கடைசிப் பந்து – நாடகம்
» கடைசிப் புகையின் கல்லறை – புத்தக மதிப்புரை
» ஜுராஸிக் பார்க்’ வரிசையின் கடைசிப் படப் பெயர் அறிவிப்பு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|