ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹெலிகாப்டர் பேர வழக்கு: இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டார் இடைத்தரகர் கிறிஸ்டியன் மிஷெல்

Go down

ஹெலிகாப்டர் பேர வழக்கு: இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டார் இடைத்தரகர் கிறிஸ்டியன் மிஷெல் Empty ஹெலிகாப்டர் பேர வழக்கு: இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டார் இடைத்தரகர் கிறிஸ்டியன் மிஷெல்

Post by ayyasamy ram Wed Dec 05, 2018 9:11 am



அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர வழக்கில்
இடைத்தரகராக செயல்பட்டதாக கூறப்படும்
கிறிஸ்டியன் ஜேம்ஸ் மிஷெல், துபையிலிருந்து இந்தியாவுக்கு
செவ்வாய்க்கிழமை இரவு நாடு கடத்தி கொண்டுவரப்பட்டார்.

இந்தியாவில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட மிக மிக
முக்கியப் பிரமுகர்கள் பயணிப்பதற்காக, இத்தாலியைச்
சேர்ந்த ஃபின்மெக்கானிக்கா நிறுவனத்தின் துணை
நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து
ரூ.3,100 கோடி மதிப்பில் 12 ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு
மத்திய அரசு கடந்த 2010-இல் ஒப்பந்தம் மேற்கொண்டது.

இந்த ஒப்பந்தத்துக்காக, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம்
சார்பில் இந்திய தரப்புக்கு ரூ.423 கோடி வரை லஞ்சம்
அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த
2014-இல் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

இந்த முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ-யும், அமலாக்கத்
துறையும் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

இடைத்தரகர்:

ஹெலிகாப்டர் ஒப்பந்த விவகாரத்தில் 3 இடைத்தரகர்களில்
முக்கிய நபராக குற்றம்சாட்டப்படுபவர் பிரிட்டனைச் சேர்ந்த
தொழிலதிபர் கிறிஸ்டியன் ஜேம்ஸ் மிஷெல் (57).

விமானப்படை முன்னாள் தலைமை தளபதி எஸ்.பி.தியாகி
உள்ளிட்டோருடன் சேர்ந்து குற்றச் சதியில் ஈடுபட்டதாக இவர்
மீது குற்றம்சாட்டு உள்ளது.

இந்தியாவில் விசாரணையை எதிர்கொள்வதை மிஷெல்
தவிர்த்து வந்ததைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக, பிணையில்
வெளிவர இயலாத பிடியாணையை தில்லி சிறப்பு நீதிமன்றம்
கடந்த 2015-இல் பிறப்பித்தது.

அதனடிப்படையில், சர்வதேச காவல்துறை மூலம் ரெட் கார்னர்
நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், துபையில் கடந்த 2017, பிப்ரவரியில் மிஷெல்
கைது செய்யப்பட்டார். அவரை நாடு கடத்தி வருவதற்கான
முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த துபை நீதிமன்றம்,
மிஷெலை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பது குறித்து
பரிசீலிக்க அந்நாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் மிஷெல்
தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், அவரது
மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதையடுத்து,
அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு, ஐக்கிய அரபு அமீரக
அரசு ஒப்புதல் வழங்கியது.

நாடு கடத்தல்

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வழிகாட்டுதலின்
அடிப்படையில், மிஷெலை நாடு கடத்துவதற்கான நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டது.

சிபிஐ இடைக்கால இயக்குநர் எம்.நாகேஸ்வர ராவ் இந்த ந
டவடிக்கையை ஒருங்கிணைத்தார்.

சிபிஐ இணை இயக்குநர் சாய் மனோகர் தலைமையிலான
குழுவினரால், துபையில் இருந்து விமானம் மூலம் தில்லிக்கு
செவ்வாய்க்கிழமை இரவு 10.35 மணியளவில் மிஷெல்
கொண்டுவரப்பட்டார்.

அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை
சிபிஐ மேற்கொண்டுள்ளது. அவர் தில்லி விமான நிலையத்தில்
வந்திறங்கியதும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச்
செல்லப்பட்டு, அவருக்கு உடல்நிலை பரிசோதனை
மேற்கொள்ளப்பட்டது. புதன்கிழமை அவர் நீதிபதி முன்
ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
-
----------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவுக்கு ஹெலிகாப்டர் விற்பனை செய்ய லஞ்சம்: இத்தாலி நிறுவன தலைவர் கைது.......
» ஆம்புலன்ஸ் ஊழல் வழக்கு: கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு
» ராணுவ தேர்வு முகாமில் போலி சான்றிதழ் வழங்கிய இடைத்தரகர் கைது
» வழக்கு போட்ட போலீஸ் மீது வழக்கு: அன்புமணி ராமதாஸ்
» உன்னாவ் பலாத்கார வழக்கு: சரணடைவதாக நாடகமாடிய எம்.எல்.ஏ. மீது வழக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum