Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்!
Page 1 of 1
“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்!
-
2.0 படத்தில், செல்போன்களின் பயன்பாடுகள் அதிகரித்த
பிறகுதான் பக்ஷி ராஜ் போராட்டத்தில் இறங்குவார்.
ஆனால், ரியல் பக்ஷி ராஜான சலீம் அலி, தன்னுடைய
10-ம் வகுப்பில் இருந்தே பறவைகளை நேசிக்க ஆரம்பித்து
விட்டார்.
"மனிதர்கள் இல்லாத உலகில் பறவைகளால் வாழ முடியும்.
ஆனால், பறவைகள் இல்லாத உலகில் மனிதர்களால் வாழ
முடியாது"
இந்தியாவின் பறவைகள் மனிதர் என்றழைக்கப்படும்
சலீம் அலி அடிக்கடி சொல்லும் கருத்து இது.
பறவைகளுக்காகவே தன் வாழ்நாளில் பெரும்பாலான
நாள்களைக் கழித்தவர் சலீம் அலி.
அவரைப் பிரதிபலிக்கும் விதமாகவே, 2.0 படத்தில்
அக்ஷய் குமாரின் பக்ஷிராஜ் கதாப்பாத்திரம் உருவாக்கப்
பட்டுள்ளது. 2.0 படத்தில், செல்போன்களின் பயன்பாடுகள்
அதிகரித்த பிறகுதான் பக்ஷி ராஜ் போராட்டத்தில் இறங்குவார்.
ஆனால், சலீம் அலி, தன்னுடைய 10-ம் வகுப்பில் இருந்தே
பறவைகளை நேசிக்க ஆரம்பித்துவிட்டார்.
1896-ம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் சலீம் மொய்சுதீன்
அலி. இவரின் உறவினர்கள் அவ்வப்போது பறவை
வேட்டையில் ஈடுபடுவது வழக்கம். ஒருமுறை, சலீம் அலியும்
வீட்டில் இருந்தபோது ஒரு குருவியை சுட்டுள்ளார்.
அப்போது துடிதுடித்து கீழே விழுந்த அந்த குருவியின்
தோற்றம் சற்று வித்தியாசமாக இருந்ததைக் கண்ட
சலீம் அலி, அதுகுறித்து தெரிந்துகொள்வதற்காக பம்பாய்
இயற்கை வரலாற்று கழகத்திற்கு சென்றார்.
-
---------------------------------------
Re: “பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்!
ஆனால், அதோடு நிறுத்திக் கொள்ளாமல், பொதுவாகப்
பறவைகளை கண்டறிவது எப்படி, அவற்றைப் பாதுகாப்பது
எப்படி என்று பல தகவல்களை அங்கே கற்றுக்கொண்டார்.
அப்போதுதான், சலீம் அலிக்குப் பறவைகள் குறித்து
ஆர்வம் ஏற்பட்டுள்ளது. பறவைகள் குறித்து தொடர்ந்து
ஆய்வில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.
இந்தியப் பறவைகள், இந்தியா மற்றும் பாகிஸ்தான்
பறவைகள் பற்றிய கையேடு போன்ற புத்தகங்களின்
மூலம் இந்தியப் பறவைகளை உலகறியச் செய்தவர்.
இந்தியாவின் பறவை மனிதர் என்று அனைவராலும்
அழைக்கப்பட்டார். பம்பாய் இயற்கை வரலாற்று
கழகத்துடன் (Bombay Natural history society)
நெருங்கிய தொடர்பில் இருக்கிறார்.
இதன் மூலம், தமிழகத்தில் உள்ள கோடியக்கரை
பறவைகள் சரணாலயத்துக்கும் அடிக்கடி வந்திருக்கிறார்.
அவரது பெயரில் கோவையில் ஒரு பறவைகள் ஆராய்ச்சி
மையத்தைத் திறக்க ஆலோசனைகள் நடந்து வந்தது.
ஆனால், 1987-ம் ஆண்டு சலீம் உயிரிழந்துவிட்டார்.
இதையடுத்து, 1990-ம் ஆண்டு கோவை ஆனைகட்டியில்,
சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று
மையம் தொடங்கப்பட்டது. தற்போதும், பல்வேறு
மாநிலங்களில் இருந்து மாணவர்கள் இங்குப் பயின்று
வருகின்றனர்.
அவரின் மாணவர்கள் சிலர், ஆரம்பக்கட்டத்தில் இந்த
மையத்தில் விஞ்ஞானிகளாக இருந்துள்ளனர்.
இப்போதும் இருக்கின்றனர்.
-
Re: “பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்!
"இந்தியாவில் ஒருவர் பறவைகள் குறித்து ஆராய்ச்சி
மேற்கொள்ள வேண்டுமென்றால், அவர் சலீம் அலியின்
புத்தகங்களை படிக்காமல் இருக்க முடியாது.
கிட்டத்தட்ட 1,300 பறவை வகைகளை ஆவணப்படுத்தி
தெளிவாகவும், எளிமையாகவும் எழுதியுள்ளார். மேற்கு
தொடர்ச்சி மலையடிவாரத்தில் அவரது காலடித் தடம்
படாத இடங்களே கிடையாது.
பறவைகள் குறித்து ஆராய்ச்சி செய்யும் அனைவருக்கும்
சலீம் அலிதான் குரு. பறவைகள் குறித்து அவரைப் போல
யாரும் குறிப்பு(Notes) எடுக்க முடியாது.
எந்த குறிப்பையும் தவற விட மாட்டார். அவ்வளவு
தெளிவாக இருக்கும். அதை வைத்தே புத்தகம் எழுதலாம்"
என்று அவர் குறித்து கேட்டவுடன் விஞ்ஞானிகள்
சிலாகிக்கின்றனர்.
பாலசந்திரன்பம்பாய் இயற்கை வரலாற்று கழகத்தின்
துணை இயக்குநராக இருக்கும் பாலசந்திரன்,
சலீம் அலியுடன் பழகியிருக்கிறார். பாலசந்திரனிடம்
பேசினோம்,
-
-----------------------------------------
Re: “பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்!
"மிகவும் அமைதியானர். யாரிடமும் அதிகம் பேசமாட்டார்.
பைக் பிரியர். சிறிய வயதில் யூ.கே வரை பைக்கில்
சென்றிருக்கிறார். நகைச்சுவை உணர்வு மிக்கவர். நான்
அவருக்கு மிகவும் ஜூனியர்.
ஆனால், ஏதாவது பறவை பறந்து போகும்போது,
அது குறித்து என்னிடம் கேட்பார். ஒருமுறை அவர்
கோடியக்கரை வந்தபோது, ஒரு ஆற்றைக் கடக்க
வேண்டிய நிலை.
அவரை ஒரு சிறிய போட்டில் வைத்து, கயிற்றைக்
கட்டி நான் இழுத்துச் சென்றிருக்கிறேன்.
வயதானவர் என்பதால் அவரது தோல்கள்
சுருங்கியிருக்கும். இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்பு
அவர் கொடைக்கானல் வந்திருந்தார்.
அப்போது, ஒரு பறவை அவரது கையில் அமர்ந்து
கொண்டு, அவரது கை தோலைக் கடித்து இழுத்துக்
கொண்டிருந்தது. அப்போதும் கூட,
'ஏய் எதற்காக ஷாக் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்?'
என்று சிரித்துக் கொண்டே பறவையிடம் கொஞ்சிக்
கொண்டிருந்தார். அந்த அளவுக்குப் பறவைகள் மீது
அன்பு கொண்டிருந்தார்.
குறிப்பாக, காட்டு பறவைகள் மீது அதிக ஆர்வம்
கொண்டவர்" என்றார்.
மொரர்ஜி தேசாய், இந்திராகாந்தி, ராஜிவ் காந்தி
என்று பல தலைவர்களிடம் எளிதில் பேசக் கூடியவராக
இருந்தார் சலீம் அலி.
அப்போதும், பறவைகள் குறித்தே பேசியிருக்கிறார்.
அப்படி ஒரு நாள் பேசிக் கொண்டிருக்கும்போது,
"எத்தனையோ லட்ச மக்கள் பசியில் இருக்கிறார்கள்.
நீ பறவைகள் குறித்து கவலை பட்டுக் கொண்டிருக்கிறாயா?"
என்று இவரிடம் மொரர்ஜி தேசாய் கேட்டாராம்.
புகழ் உச்சத்தில் இருந்த காலகட்டத்திலேயே, இவர் குறித்து
இந்திரா காந்திக்கு புகார்கள் சென்றன. பம்பாய் இயற்கை
வரலாற்று கழகத்தை மூடவும் சிலர் கோரிக்கை வைத்தனர்.
ஆனால், அதே ஆண்டில் இவருக்கு பத்ம விருதளித்து,
எதிர்ப்பாளர்களின் வாயைப் பூட்டினார் இந்திரா காந்தி.
"2.0 படம் சொல்வதைப் போல, செல்போன் டவரால்தான்
பறவைகள் இனம் அழிகின்றன என்பது குறித்து
சலீம் அலி ஏதும் சொல்லவில்லை. அவர் இருந்த கால
கட்டத்தில் இந்த அளவுக்கு செல்போன்கள் பயன்பாட்டிலும்
இல்லை. பறவைகள் அழிவுக்கு நகரமயமாக்கல் தொடங்கி
பல்வேறு காரணங்களும் உள்ளன. எனவே, படத்தை
படமாக மட்டும் பாருங்கள்" என்கின்றனர் விஞ்ஞானிகள்.
சலீம் அலி கோடியக்கரை வந்திருந்தபோது அவரிடம்
ஒரு அரசியல்வாதி, "பறவைகளால் அப்படி என்னதான்
ஆகிவிடப்போகிறது? எதற்காக, பறவைகள், பறவைகள்
என்று சொல்லிக் கொண்டிருக்கின்றீர்கள்?" என்று
கேட்டுள்ளார். அதற்கு அவர் மிகவும் அமைதியான குரலில்,
"பறவைகள் இனம் அழியத் தொடங்கும்போது,
மனிதர்கள் இனத்துக்கும் அழிவு தொடங்கும். அது நமக்குக்
கொடுக்கப்படும் எச்சரிக்கை" என்று கூறியுள்ளார்.
அவர் சொன்ன ஒரு கருத்து இன்றும் நமக்கு தேவைப்படும்
ஒன்று. "மனிதர்கள் இல்லாத உலகில் பறவைகளால்
வாழ முடியும். ஆனால், பறவைகள் இல்லாத உலகில்
மனிதர்களால் வாழ முடியாது".
-
-------------------------------------
இரா.குருபிரசாத்
நன்றி-விகடன்
Similar topics
» அரசியல்வாதிக்கு சாபம் விட்ட த்ரிஷா
» சலீம் - விமர்சனம்
» மறக்க இயலா பழங்காலத்துத் துள்ளல் பாடல்கள்
» நல்ல மெசேஜ் For -->U
» ஒன் மெசேஜ் ரிசீவ்டு
» சலீம் - விமர்சனம்
» மறக்க இயலா பழங்காலத்துத் துள்ளல் பாடல்கள்
» நல்ல மெசேஜ் For -->U
» ஒன் மெசேஜ் ரிசீவ்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|