புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தானம் செய்வோம்! Poll_c10தானம் செய்வோம்! Poll_m10தானம் செய்வோம்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
தானம் செய்வோம்! Poll_c10தானம் செய்வோம்! Poll_m10தானம் செய்வோம்! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
தானம் செய்வோம்! Poll_c10தானம் செய்வோம்! Poll_m10தானம் செய்வோம்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தானம் செய்வோம்! Poll_c10தானம் செய்வோம்! Poll_m10தானம் செய்வோம்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தானம் செய்வோம்! Poll_c10தானம் செய்வோம்! Poll_m10தானம் செய்வோம்! Poll_c10 
19 Posts - 3%
prajai
தானம் செய்வோம்! Poll_c10தானம் செய்வோம்! Poll_m10தானம் செய்வோம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தானம் செய்வோம்! Poll_c10தானம் செய்வோம்! Poll_m10தானம் செய்வோம்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தானம் செய்வோம்! Poll_c10தானம் செய்வோம்! Poll_m10தானம் செய்வோம்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தானம் செய்வோம்! Poll_c10தானம் செய்வோம்! Poll_m10தானம் செய்வோம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
தானம் செய்வோம்! Poll_c10தானம் செய்வோம்! Poll_m10தானம் செய்வோம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தானம் செய்வோம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 26, 2018 10:42 pm

நல்லதே நினை... நன்றாக இருப்பாய்...' என்பது, முன்னோர் வாக்கு. 
வசு தேவரும், தேவகியும் சிறையில் இருந்தபோது, அவதரித்தார், பகவான் கண்ணன். சிறைச்சாலையில் இருப்பவர் தானம் செய்ய முடியாதல்லவா... அதனால், மனதாலேயே அளவில்லாத பசு மாடுகளை, தானம் அளித்தார், வசு தேவர்.

பாகவதம் கூறும் வரலாறு இது!


'நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை' என்பது, அவ்வையார் வாக்கு. 



இவ்வாறு நல்லதே நினைத்த, மனதாலேயே தானம் கொடுத்த, நல்லவர் ஒருவரைப் பற்றிய வரலாறு இது!

அளவில்லாத புண்ணியம் செய்த, அரசர் ஒருவர் இருந்தார். அவருடைய கடைசி காலம் நெருங்கியது. எமதர்மர், தன் தூதர்களை அழைத்து, 'அந்த அரசர், மிகுந்த புண்ணியசாலி. தகுந்த மரியாதைகளுடன் சொர்க்கத்துக்கு அழைத்து வாருங்கள். ஆனால், அவர் அறியாமல் ஒரு சிறு தவறு செய்து விட்டார்.


'அதனால், அவரை அழைத்து வரும்போது, நரகத்தின் வழியாக அழைத்து வாருங்கள்... ஒரு நொடி, அவர் நரகத்தை பார்த்தால் போதும்...' என்றார். 


அதன்படியே, அரசரை, நரகத்தின் வழியே அழைத்து வந்தனர், எம தூதர்கள். அங்கே, நரகத்தின் கொடுமை தாங்காமல், பயங்கரமாக அலறியபடி இருந்தனர்.


அரசர் அந்த இடத்தை நெருங்கியதும், நரகவாசிகளின் கூக்குரல் அப்படியே அடங்கிப்போனது.
அதை அறிந்த அரசர், 'என்ன இது... ஏன் இப்படி?' என, கேட்டார். 


'இவர்கள் எல்லாரும், பெரும் பாவம் செய்தவர்கள். அதற்கான தண்டனையை இப்போது நரகத்தில் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். உத்தம ஆத்மாவான உங்களைக் கண்டதும், நரகத்தில் இவர்கள் அனுபவிக்கும் துயரத்தின் கொடுமை சற்று தணிந்தது. அதனால் தான், கூக்குரலை நிறுத்தி விட்டனர்...' என, பதில் கூறினர், எம தூதர்கள்.


நரகவாசிகளோ, 'புண்ணியாத்மாவே... அரசரே... உங்கள் பார்வை பட்டதால் தான், நரகத்தின் கொதிப்பு அடங்கியது. நீங்கள் இங்கேயே இருங்கள்...' என்று வேண்டினர்.


'அடியேனால் உங்களுக்கு நல்லது நடக்குமென்றால், சொர்க்கம் வேண்டாம். இங்கேயே இருக்கிறேன்...' என்று சொன்னது மட்டுமல்ல, அங்கேயே இருந்து விட்டார், அரசர். 


எமதர்மருக்கு தகவல் போனது. உடனே, தேவேந்திரனையும் அழைத்து, அரசர் இருக்கும் இடத்திற்கு வந்து விட்டார். 


அவர்களைப் பார்த்ததும், வணங்கிய அரசர், 'தேவ புருஷர்களே... நரகவாசிகளுக்காக, அடியேன் செய்த புண்ணியங்கள் அனைத்தையும் தானம் செய்கிறேன். தயவுசெய்து, இவர்களை சொர்க்கத்திற்கு அனுப்புங்கள்...' என, வேண்டினார்.


அதே வினாடியில், ஏராளமான தெய்வ விமானங்கள் அங்கு வந்தன. அவற்றில் ஏறி நரகவாசிகள் அனைவரும் சொர்க்கத்தை அடைந்தனர். ஆனால், அரசர் மட்டும் அங்கேயே இருந்தார். 


அதைப் பார்த்த தேவேந்திரன், 'நீங்களும், சொர்க்கத்திற்கு வாருங்கள்...' என்றார்.


'அடியேன் எப்படி சொர்க்கத்திற்கு வர முடியும்... செய்த புண்ணியத்தையெல்லாம் தான், அவர்களுக்கு தானம் செய்து விட்டேனே...' என்றார், அரசர்.


'நீங்கள் செய்த புண்ணியத்தையெல்லாம் தானம் செய்தீர்கள் அல்லவா... அந்த தான பலன் காரணமாகவே, உங்களுக்கு சொர்க்கம் கிடைத்திருக்கிறது. வாருங்கள்...' என்று, தன் விமானத்தில் ஏற்றி, சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றார், இந்திரன். 


கொடுக்க முடிகிறதோ இல்லையோ, மனதாலாவது தானம் செய்யலாமே. அந்த எண்ணமே நமக்கு நல்லதை கொடுக்கும். நேரிடையாக, 10 பேருக்கு கொடுக்கக்கூடிய அளவிற்கு வளம் சேரும்; கண்டிப்பாக உயர்வோம்.

பி.என்.பரசுராமன் 




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 26, 2018 10:44 pm

ம்ம்.. நல்லதே நினைப்போம்...நல்லதே நடக்கும்.... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 27, 2018 8:26 pm

Code:

அதைப் பார்த்த தேவேந்திரன், 'நீங்களும், சொர்க்கத்திற்கு வாருங்கள்...' என்றார்.

'அடியேன் எப்படி சொர்க்கத்திற்கு வர முடியும்... செய்த புண்ணியத்தையெல்லாம் தான், அவர்களுக்கு தானம் செய்து விட்டேனே...' என்றார், அரசர்.

'நீங்கள் செய்த புண்ணியத்தையெல்லாம் தானம் செய்தீர்கள் அல்லவா... அந்த தான பலன் காரணமாகவே, உங்களுக்கு சொர்க்கம் கிடைத்திருக்கிறது. வாருங்கள்...' என்று, தன் விமானத்தில் ஏற்றி, சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றார், இந்திரன்.






தானத்திற்கு எத்தனை மகிமை
நிச்சயமாக இதை சிறிதேனும்
செய்தால் கூட போதுமானது.
நன்றி அம்மா.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 27, 2018 9:51 pm

நன்றி ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Nov 27, 2018 10:09 pm

நல்ல கதை

தானம் செய்வோம்! 3838410834 தானம் செய்வோம்! 3838410834



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 29, 2018 10:56 am

krishnaamma wrote:ம்ம்.. நல்லதே நினைப்போம்...நல்லதே நடக்கும்.... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 1287203
-
சூப்பருங்க
-
மனதி லுறுதி வேண்டும்.
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்.
பெண் விடுதலை வேண்டும்.
பெரிய கடவுள் காக்க வேண்டும்;
மண்பயனுற வேண்டும்,
வாகனமிங்கு தென்பட வேண்டும்.
உண்மை நின்றிட வேண்டும்.
ஓம் ஓம் ஓம் ஓம்.
-
பாரதியார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக