புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கலெக்ட்ரண்ணன் --கந்தசாமி 2 Poll_c10கலெக்ட்ரண்ணன் --கந்தசாமி 2 Poll_m10கலெக்ட்ரண்ணன் --கந்தசாமி 2 Poll_c10 
58 Posts - 48%
ayyasamy ram
கலெக்ட்ரண்ணன் --கந்தசாமி 2 Poll_c10கலெக்ட்ரண்ணன் --கந்தசாமி 2 Poll_m10கலெக்ட்ரண்ணன் --கந்தசாமி 2 Poll_c10 
48 Posts - 39%
mohamed nizamudeen
கலெக்ட்ரண்ணன் --கந்தசாமி 2 Poll_c10கலெக்ட்ரண்ணன் --கந்தசாமி 2 Poll_m10கலெக்ட்ரண்ணன் --கந்தசாமி 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
கலெக்ட்ரண்ணன் --கந்தசாமி 2 Poll_c10கலெக்ட்ரண்ணன் --கந்தசாமி 2 Poll_m10கலெக்ட்ரண்ணன் --கந்தசாமி 2 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
கலெக்ட்ரண்ணன் --கந்தசாமி 2 Poll_c10கலெக்ட்ரண்ணன் --கந்தசாமி 2 Poll_m10கலெக்ட்ரண்ணன் --கந்தசாமி 2 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
கலெக்ட்ரண்ணன் --கந்தசாமி 2 Poll_c10கலெக்ட்ரண்ணன் --கந்தசாமி 2 Poll_m10கலெக்ட்ரண்ணன் --கந்தசாமி 2 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
கலெக்ட்ரண்ணன் --கந்தசாமி 2 Poll_c10கலெக்ட்ரண்ணன் --கந்தசாமி 2 Poll_m10கலெக்ட்ரண்ணன் --கந்தசாமி 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலெக்ட்ரண்ணன் --கந்தசாமி 2 Poll_c10கலெக்ட்ரண்ணன் --கந்தசாமி 2 Poll_m10கலெக்ட்ரண்ணன் --கந்தசாமி 2 Poll_c10 
58 Posts - 48%
ayyasamy ram
கலெக்ட்ரண்ணன் --கந்தசாமி 2 Poll_c10கலெக்ட்ரண்ணன் --கந்தசாமி 2 Poll_m10கலெக்ட்ரண்ணன் --கந்தசாமி 2 Poll_c10 
48 Posts - 39%
mohamed nizamudeen
கலெக்ட்ரண்ணன் --கந்தசாமி 2 Poll_c10கலெக்ட்ரண்ணன் --கந்தசாமி 2 Poll_m10கலெக்ட்ரண்ணன் --கந்தசாமி 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
கலெக்ட்ரண்ணன் --கந்தசாமி 2 Poll_c10கலெக்ட்ரண்ணன் --கந்தசாமி 2 Poll_m10கலெக்ட்ரண்ணன் --கந்தசாமி 2 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
கலெக்ட்ரண்ணன் --கந்தசாமி 2 Poll_c10கலெக்ட்ரண்ணன் --கந்தசாமி 2 Poll_m10கலெக்ட்ரண்ணன் --கந்தசாமி 2 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
கலெக்ட்ரண்ணன் --கந்தசாமி 2 Poll_c10கலெக்ட்ரண்ணன் --கந்தசாமி 2 Poll_m10கலெக்ட்ரண்ணன் --கந்தசாமி 2 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
கலெக்ட்ரண்ணன் --கந்தசாமி 2 Poll_c10கலெக்ட்ரண்ணன் --கந்தசாமி 2 Poll_m10கலெக்ட்ரண்ணன் --கந்தசாமி 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலெக்ட்ரண்ணன் --கந்தசாமி 2


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 23, 2018 7:27 pm

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம்.
அன்று, மக்கள் குறை தீர்வு கூட்டம் நடந்தது.
ஏழை, எளிய மக்கள், கையில் மனுவும், கண்ணீருடன், மனதில் வேதனையோடு மெல்ல மெல்ல நகர்கின்றனர்.
'எப்படியும் அதிகாரியை பார்த்து விடுவோம்... அவர் மூலம் நம் கோரிக்கை நிறைவேறும்...' என்ற நம்பிக்கையுடன், மக்கள், தங்கள் முறைக்காக காத்திருந்தனர்.
வரிசையில் நிற்பவர்களை பார்த்தார், கலெக்டர் கந்தசாமி. அவர்களில் ஒருவராக நின்றிருந்த, சிறு வயது பெண்ணின் ஏழை கோலமும், கண்களில் கண்ணீருடன் சோகமும், அவர் மனதை நெருடியது.
அருகே அழைத்து, 'என்ன தாயி... உன் பிரச்னை?' என, விசாரித்தார்.
கனத்த விம்மலுடன், தன் கதையை விவரித்தார், ஆனந்தி.
தி.மலை மாவட்டம், ஆரணியை அடுத்த, கனி கிலுப்பை கிராமம், அவர் சொந்த ஊர். தந்தை வெங்கடேசன், கூலி தொழிலாளி. தாய் அனிதா, சத்துணவு அமைப்பாளர். தங்கை அமுதா, தம்பி மோகன் மற்றும் பாட்டி ராணி.
சிறுநீரக கோளாறால் தந்தை திடீரென இறந்துவிடவே, தாய் அனிதா, குடும்ப பாரத்தை சுமந்தார். இந்நிலையில், திடீரென தாய் அனிதாவும், கர்ப்பப்பை கோளாறால் இறந்தார்; சில நாட்களில், கீழே விழுந்த பாட்டி ராணி, தலையில் அடிபட்டு , நினைவு திரும்பாமல், இறந்து போனார்.
குடும்ப தலைகள் அடுத்தடுத்து இறந்த நிலையில், குழந்தைகள் மூவரும், ஆதரவின்றி தனித்து, 'சாப்பிட்டியா...' எனக் கேட்க, ஆள் இல்லாமல், தவித்தனர்.
எத்தனை நாட்கள் அழுது கொண்டிருப்பது, பசிக்கிற வயிறுக்கு கண்ணீர் உணவாகாதே...
பிளஸ் 2 முடித்த, 19 வயதான ஆனந்தியும், 17 வயதான, தங்கை அமுதாவும், விவசாய கூலி வேலைக்கு சென்று, அதில் வரும் சொற்ப வருமானத்தில் பசியாறி, தம்பியை படிக்க வைத்தனர். ஆனாலும், வருமானம் போதாததால், அவர்கள் மூவரும், பட்டினிக்கு ஆளாகினர்.
இந்நிலையில், 'தாய் பார்த்த சத்துணவு அமைப்பாளர் வேலையை எனக்கு கொடுத்தால், தங்கை, தம்பியுடன் கவுரவமாக பிழைத்துக் கொள்வோம்...' என, எழுதிய மனுவுடன், கலெக்டரை பார்க்க வந்திருந்தார், ஆனந்தி.
அரசு விதிப்படி, 21 வயதில் தான், சத்துணவு அமைப்பாளர் வேலை தர முடியும் என்பதால், மனுவை வாங்கிய கலெக்டர் கந்தசாமி, 'நம்பிக்கையுடன் போம்மா... நல்லது நடக்கும்...' எனக் கூறி, ஆனந்தியை அனுப்பி வைத்தார்.
இது நடந்து, சில நாட்களுக்கு பின்-
திடீரென ஒரு நாள், ஆனந்தியின் வீட்டு வாசலில், கலெக்டர் கந்தசாமியின் கார் வந்து நின்றது. காரிலிருந்து இறங்கிய கலெக்டர், எடுத்து வந்த தின்பண்டங்களை மூன்று பேருக்கும் கொடுத்தார். பின், 'வீட்டில் என்ன இருக்கு... வாங்க, ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடுவோம்...' என, அவர்களுடன் சாப்பிட்டார்.
பின், அரசு முத்திரையிட்ட பேப்பரை, ஆனந்தியிடம் கொடுத்து, 'படித்து பாரும்மா...' என்றார்.
நடுங்கும் விரல்களுடன் பேப்பரில் உள்ள வாசகத்தை படித்த ஆனந்தி, ஆனந்த கண்ணீர் பொங்க, பெருங்குரலெடுத்து அழுது, கலெக்டரின் காலில் விழுந்து வணங்கினார்.
தாய் அனிதா பார்த்த, சத்துணவு அமைப்பாளர் வேலையை, ஆனந்திக்கு கொடுப்பதற்கான அரசு உத்தரவு தான், அந்த முத்திரை தாளில் இருந்தது. ஆனந்தி என்ற தன் பெயருக்கு பொருத்தமாக, அன்று தான் ஆனந்தத்தில் திளைத்தார்.
இது, எப்படி நடந்தது...
மனு கொடுத்து போன பின், கலெக்டர் கந்தசாமி, சிறப்பு அனுமதியின்படி, ஆனந்திக்கு, அவர் கேட்ட சத்துணவு அமைப்பாளர் வேலை கிடைக்க, முயற்சித்ததன் பலன் தான்.
இதற்கு பிறகும் தொடர்ந்தது, கலெக்டரின் கனிவு.
சத்துணவு அமைப்பாளர் வேலை பார்த்தபடியே, தொலை துார கல்வியில் பட்டப்படிப்பு படிப்பதற்கான அனுமதி மற்றும் அதற்கான முழு கட்டணத்தையும், தான் ஏற்பதற்கான ஆவணங்களை, ஆனந்தியிடம் கொடுத்தார்.
அடுத்து, ஆனந்தியின் தங்கை அமுதா, 'ரெகுலர்' மாணவியாக, எவ்வித கட்டணமும் இன்றி கல்லுாரி படிப்பை தொடர, அதற்கான சான்றுகளை வழங்கினார். தன் வாகனத்திலிருந்து இறக்கிய புது சைக்கிளை, ஆனந்தியின் தம்பி மோகனுக்கு பரிசளித்து, 'பள்ளிக்கு, நடந்து போக வேண்டாம். சைக்கிளில் போய் வா...' என்று கூறி, வாழ்த்தினார்.
மேலும், 'இது, ஆரம்பம் தான். அவ்வப்போது வருவேன்; ஒரு அண்ணனாக...' என்று சொல்லி, கிளம்பினார், கலெக்டர் கந்தசாமி.

எல்.முருகராஜ்

வாரமலர் தினமலர் கலெக்ட்ரண்ணன் --கந்தசாமி 2 1571444738

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 23, 2018 7:41 pm

சீரும் சிறப்புடனும் என்றும் கலெக்டர் கந்தசாமி வாழ்க அன்பு மலர் அன்பு மலர் .
இவருடைய கடமை உணர்வு,தேவையானவர்களுக்கு செய்யும் உதவி
மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமையவேண்டும்.

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Nov 24, 2018 6:27 am

வாழ்க கலெக்டர் கந்தசாமி ! ஆனால் இதுபோன்று நிறைய குடும்பங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன . அவர்களையெல்லாம் , அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கண்டு , உதவி செய்யவேண்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 24, 2018 7:16 am

Code:

சத்துணவு அமைப்பாளர் வேலை பார்த்தபடியே, தொலை துார கல்வியில் பட்டப்படிப்பு படிப்பதற்கான அனுமதி மற்றும் அதற்கான முழு கட்டணத்தையும், தான் ஏற்பதற்கான ஆவணங்களை, ஆனந்தியிடம் கொடுத்தார்.
அடுத்து, ஆனந்தியின் தங்கை அமுதா, 'ரெகுலர்' மாணவியாக, எவ்வித கட்டணமும் இன்றி கல்லுாரி படிப்பை தொடர, அதற்கான சான்றுகளை வழங்கினார். தன் வாகனத்திலிருந்து இறக்கிய புது சைக்கிளை, ஆனந்தியின் தம்பி மோகனுக்கு பரிசளித்து, 'பள்ளிக்கு, நடந்து போக வேண்டாம். சைக்கிளில் போய் வா...' என்று கூறி, வாழ்த்தினார்.
மேலும், 'இது, ஆரம்பம் தான். அவ்வப்போது வருவேன்; ஒரு அண்ணனாக...' என்று சொல்லி, கிளம்பினார், கலெக்டர் கந்தசாமி.




இதை படிக்கும் போதே கண்களில் பெருக்கெடுத்து வடிந்தது.
நிச்சயமாக இவரின் பணி அபாரமானது.
பாராட்டுக்குரியது.
இவரின் மனிதாபிமானம் அளப்பரியது.
அவர் நீடுவாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 27, 2018 7:35 pm

கலெக்டர் கந்தசாமி 2

கலெக்ட்ரண்ணன் --கந்தசாமி 2 Assetshouldbetrasfertoparentsnamebythiruvannamalaicollector3-1543315421

கலெக்ட்ரண்ணன் --கந்தசாமி 2 Assetshouldbetrasfertoparentsnamebythiruvannamalaicollector6-1543315448



திருவண்ணாமலை: பின்னே என்ன? பெத்தவங்களுக்கு சாப்பாடு போடாத பிள்ளைகளுக்கு எல்லாம் இப்படித்தான் பாடம் சொல்ல வேண்டியிருக்கு!! திருவண்ணாமலை மாவட்டம் கீழ் பென்னாத்தூரை அடுத்துள்ள கிராமம் வேடநத்தம். இங்கு வசித்து வந்த தம்பதிதான் கண்ணன் - பூங்காவனம். இவங்களுக்கு 2 மகன்கள். மகன்களை வளர்க்க பட்ட பாடு இந்த தம்பதிக்கு மட்டும்தான் தெரியும். ரெண்டு பேரையுமே வளர்த்து ஆளாக்கி கல்யாணமும் பண்ணி வைத்தனர். 2 பேருக்கும் கல்யாணம் ஆகிவிட்டதால், கண்ணன் - பூங்காவனம் தங்களிடமிருந்த 5 ஏக்கர் நிலத்தை பிள்ளைகளுக்கு சமமாக பிரித்து கொடுத்து விட்டனர். இது 7 வருஷத்துக்கு முன்னேயே நடந்த ஒன்று. தங்கள் பேருக்கு சொத்து எழுதி கொடுத்தவுடன் 2 பிள்ளைகளும் அதோடு ச துரத்தி விட்டனர் பெத்தவங்களை கவனிக்கவே இல்லை. அவங்களுக்கு சாப்பாடு தருவதில்லை. துணிமணி எடுத்து தருவது கிடையாது. இத்தனைக்கும் 2 பையன்களும் அதே ஊரில் மனைவி, குடும்பம் என்றுதான் வாழ்ந்து வருகிறார்கள். கடைசியில் அம்மா-அப்பாவை தங்களது வீட்டிலிருந்தே துரத்தி விட்டார்கள். நடுத்தெருவில் நின்றனர் இப்படிதான் 7 வருஷமா இந்த தம்பதி அவதிப்பட்டு வந்திருக்கிறார்கள். தெரிந்தவர்கள், சொந்தக்காரர்கள் வீடுகளில் போய் தங்குவது, சாப்பிடுவது என்றே இருந்திருக்கிறார்கள். எத்தனை நாளுக்குத்தான் அடுத்தவர்களுக்கு பாரமா இருப்பது? இவ்வளவு தூரம் வளர்த்து, கல்யாணமும் செய்து, சொத்தையும் எழுதி கொடுத்து, கடைசியில் இப்படி நடுத்தெருவில் நிற்க வைத்துவிட்ட மகன்களை நினைத்து மனம் நொந்து போயினர். கண்ணீர் வடித்தனர் தங்களது பிச்சையெடுத்து பிழைக்கும் நிலைமையை எண்ணி தினமும் கண்ணீர் வடித்தனர். இப்படி மற்றவர்களுக்கு பாரமாக இருக்க கூடாது என்று நினைத்து இருவரும் ஒரு முடிவெடுத்தார்கள். அதன்படி, நேராக போய் திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமியை போய் பார்த்தார்கள். மகன்கள் பண்ணின அக்கிரமத்தையெல்லாம் சொன்னார்கள். புகாராக மனு எழுதி கலெக்டரிடம் தந்தார்கள். பத்திர பதிவு எல்லா பிரச்சனையையும் கேட்ட கலெக்டர் கந்தசாமி ஒரு அதிரடி முடிவு எடுத்தார். அதன்படி, மகன்கள் பெயருக்கு நிலத்தை எழுதிக் கொடுத்த பத்திரத்தை ரத்து செய்தார். எழுதி கொடுக்கப்பட்ட அந்த நிலம் திரும்பவும் கண்ணன்- பூங்காவனம் தம்பதியின் பெயருக்கே பத்திர பதிவும் செய்து கொடுத்தார். அதோடு அந்த நிலத்தில் தம்பதி தொடர்ந்து விவசாயம் செய்ய கடன் வழங்கியும் உத்திரவிட்டார். சரியான சவுக்கடி இப்போ, பூங்காவனம் - கண்ணன், இவங்களா பார்த்து இனி யாருக்கு வேண்டுமானாலும் அந்த சொத்துக்களை ஒப்படைக்கலாம்! கலெக்டரின் இப்படி அதிரடியை யாருமே எதிர்பார்க்கவில்லை. சொத்து என்னமோ தம்பதிக்கு கிடைத்தாலும், தங்களுக்கே அது கிடைத்துவிட்டது போல மாவட்ட மக்களுக்கு ஒரு சந்தோஷம்!! பெத்தவங்களை தவிக்க விட்ட நன்றி கெட்ட பிள்ளைகளுக்கு இதைவிட ஒரு சவுக்கடியை யாராலும் தர முடியாது.

நன்றி தட்ஸ்தமிழ்

ரமணியன் கலெக்டர் கந்தசாமி 2





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Nov 27, 2018 8:40 pm

நேர்மையான அதிகாரியாக இருக்கிறார் விரைவில் இவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 27, 2018 8:54 pm

அடப்பாவி கூடாது கூடாது உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 27, 2018 10:38 pm

மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ளும் கலெக்டர்கள்
பாரட்டப்பட வேண்டியவர்களே...!
-
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக