ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டத்து யானை -நீதிக்கதை

3 posters

Go down

பட்டத்து யானை -நீதிக்கதை Empty பட்டத்து யானை -நீதிக்கதை

Post by ayyasamy ram Thu Nov 15, 2018 3:21 pm

பட்டத்து யானை -நீதிக்கதை Esg6971iSfi1MgWRDswA+nellaiappar-kovil-elepant
\
முன்னொரு காலத்தில் மகத நாட்டு அரண்மனையில்
பட்டத்து யானை ஒன்று இருந்தது. அதன் மீது அமர்ந்து
செல்வதைப் பெருமையாக நினைத்தான் அரசன்.

அதற்கு எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டான்.
அரண்மனை லாயத்தில் அந்த யானை உண்டு கொண்டிருந்தது.

பசியால் வாடிய நாய் ஒன்று அங்கே வந்தது. எலும்பும்,
தோலுமாகப் பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது அது.


யானை உண்ட போது சிந்திய உணவை அது பரபரப்புடன்
உண்டது. இதைப் பார்த்து இரக்கப்பட்ட யானை அதற்கு
நிறைய உணவைத் தந்தது. அதுவும் மகிழ்ச்சியுடன் உண்டது.

அதன் பிறகு அது நாள்தோறும் அங்கே வரத் தொடங்கியது.
யானையும் தன் உணவை அதற்குத் தந்தது.

நாளாக நாளாக
அவை இரண்டும் நெருங்கிய நண்பர்கள் ஆயின.

எப்போதும் இணை பிரியாமல் இருந்தன. நாள்தோறும் நிறைய
உணவு உண்டதால் அந்த நாய் கொழுத்துப் பருத்தது. அழகாகக்
காட்சி அளித்தது.

அங்கே வந்த செல்வர் ஒருவர் அந்த நாயைப் பார்த்தார்.
அதைத் தன் வீட்டில் வளர்க்க விரும்பினார்.

பாகனிடம் அவர்,
“இந்த நாய்க்கு விலையாக நூறு பணம் தருகிறேன்!” என்றார்.



பணத்தாசை கொண்ட அவன் அந்த நாயை அவரிடம் விற்று
விட்டான். தன் நண்பனை நினைத்து அந்த யானை உணவு
உண்ணவில்லை. எப்போதும் கண்ணீர் வடித்தபடியே இருந்தது.

அதை அறிந்த அரசன் அரண்மனை மருத்துவர்களை அனுப்பி
யானையை சோதிக்கச் சொன்னான். பட்டத்து யானையைச்
சோதித்த அவர்கள் அரசனிடம் வந்தனர்.



”அரசே! பட்டத்து யானைக்கு எந்த நோயும் இல்லை. அது ஏன்
உணவு உண்ணவில்லை? கண்ணீர் வடிக்கிறது என்பது
புரியவில்லை!” என்றனர்.

என்ன செய்வது என்று குழம்பிய
அரசன் அமைச்சரை அழைத்தான்.

“பட்டத்து யானைக்கு எந்த நோயும் இல்லை என்று மருத்துவர்கள்
சொல்கின்றனர். நீங்கள்தான் எப்படியாவது அதைக்
குணப்படுத்த வேண்டும்!” என்றான்.
அறிவு நிறைந்த அந்த
அமைச்சர் லாயத்திற்கு வந்தார்.

உடல் மெலிந்து கண்ணீர் வடித்தபடி இருந்த யானையைப்
பார்த்தார். அதன் முன் வைக்கப்பட்டு இருந்த சுவையான
உணவு வகைகள் அப்படியே இருந்தன.

“இந்த யானைக்கு ஏதோ துன்பம் நிகழ்ந்து உள்ளது. கண்டிப்பாக
அது பாகனுக்குத் தெரிந்து இருக்கும்,’ என்று நினைத்தார்
அவர்.

பாகனை அழைத்த அவர், “அண்மையில் இந்த யானையைத்
துன்பப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது.

அது உனக்குத் தெரிந்து இருக்கும். அது என்ன என்ற உண்மையைச்
சொன்னால் நீ உயிர் பிழைப்பாய்,” என்று மிரட்டினார்.


வேறு வழியில்லாத அவன், “”இங்கே கொழு கொழுவென்று நாய்
ஒன்று இருந்தது. அதுவும் இந்த யானையும் எப்போதும் ஒன்றாகவே
இருந்தன. அந்த நாயைச் செல்வந்தர் ஒருவர் விலைக்குக் கேட்டார்.

நானும் விற்று விட்டேன். அன்றிலிருந்து இந்த யானை எதையும்
உண்பது இல்லை. கண்ணீர் வடித்தபடி உள்ளது!” என்றான்.



அந்த நாயை மீண்டும் இங்கே கொண்டுவா!” என்றார் அமைச்சர்.


அவனும் நாயுடன் அங்கே வந்தான். படுத்து இருந்த யானை தன்
நண்பனைப் பார்த்ததும் எழுந்தது. அந்த நாய் வாலை ஆட்டியபடியே
யானையின் அருகே ஓடியது. மகிழ்ச்சியாகக் குரைத்தது.

யானை அதைத் தன் துதிக்கையால் தடவிக் கொடுத்தது.

உணர்ச்சி
மிகுந்த இந்தக் காட்சியைப் பார்த்து உள்ளம் நெகிழ்ந்தார் அமைச்சர்.

விலங்குகளுக்குள் இப்படி ஒரு நட்பா என்று வியப்பு அடைந்தார்.
அரசனைச் சந்தித்த அவர் நடந்ததை எல்லாம் சொன்னார்.



“சில நாட்களில் பட்டத்து யானை பழைய நிலையை அடைந்து விடும்!”
என்றார். அவர் சொன்னது போலவே அந்த யானையும் பழைய
பெருமித நிலையை அடைந்தது.

----------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பட்டத்து யானை -நீதிக்கதை Empty Re: பட்டத்து யானை -நீதிக்கதை

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 15, 2018 8:36 pm

நல்லதொரு நெகிழ்வான அன்பு போராட்டம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பட்டத்து யானை -நீதிக்கதை Empty Re: பட்டத்து யானை -நீதிக்கதை

Post by krishnaamma Mon Dec 09, 2019 8:38 pm

மிக அருமையான நண்பர்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பட்டத்து யானை -நீதிக்கதை Empty Re: பட்டத்து யானை -நீதிக்கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum