ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீராமதரிசனம் !

2 posters

Go down

ஸ்ரீராமதரிசனம் ! Empty ஸ்ரீராமதரிசனம் !

Post by krishnaamma Mon Nov 12, 2018 11:15 pm

ஸ்ரீராமதரிசனம் ! GTurXBntSXGtCj1ZnZJC+08253d07-5a13-4d83-8335-ce7022b49d1c
ஸ்ரீராமதரிசனம்... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

‘ராமா.. நீயா என் வீட்டுக்கு வந்தாய்?’
தியாகராஜரின் அதிகாலை உருக்கம்....

திருவையாற்றில் ஒரு மாலைப் பொழுது. தியாகராஜ சுவாமிகள் தனது வீட்டுத் திண்ணையில் தியானத்தில் ஆழ்ந்திருந்தார்.

‘‘#நமஸ்காரம்...’’

குரல் கேட்டுக் கண் விழித்தார் தியாகராஜர். 80 வயது வயோதிகர் ஒருவரும், அவரின் மனைவியும், சுமார் 20 வயது இளைஞன் ஒருவரும் கைகூப்பி நின்றிருந்தனர் தெருவில். அவர்கள் உடம்பில் அழுக்கும், புழுதியும் படிந்திருந்தன. வெகு தூரத்திலிருந்து வந்தவர்கள் போல் தோற்றம் அளித்தனர்.

‘‘வாங்கோ... உள்ள வாங்கோ...’’ - அவர்களை வரவேற்று நமஸ்காரம் செய்தார் தியாகராஜர்.

‘மாதா, பிதா, குருவுக்குப் பிறகு வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை தெய்வமாக நினை!’ என்கிறது உபநிஷத்துகளும் வேதங்களும். ‘அதிதி தேவோ பவ.’

வயோதிகர் பேச ஆரம்பித் தார்: ‘‘நாங்க வடக்கே ரொம்ப தூரத்திலிருந்து க்ஷேத்ராடனம் பண்ணிண்டு வர்றோம். ராமேஸ்வரம் போகணும். பகவான் கருணை வைக்கணும்... காலைல எழுந்து ஸ்நானம் செஞ்சுட்டு நடக்கணும். இன்னிக்கு ராத்திரி உங்க வீட்டுல தங்கலாம்னு இருக்கோம்!’’

‘‘ஆகா... தாராளமா தங்குங்கோ!’’ என்று மகிழ்வுடன் சம்மதித்த தியாகராஜர், தன் மனைவியிடம் இரவில் அவர்களுக்கும் சேர்த்துச் சமைக்கச் சொன்னார்.

அவர் மனைவியோ, ‘‘நமக்கே ராத்திரி சாப் பாட்டுக்கு அரிசி இல்லே... இவங்களை எப்படி உபசாரம் பண்றதுனும் தெரியலை. சரி... பக்கத்துல போய் கொஞ்சம் அரிசி கடன் வாங்கிண்டு வரேன்!’’ என்று கையில் பாத்திரத்துடன் மனைவி கிளம்பினார்.

அதை கவனித்த வயோதிகர், ‘‘எங்களுக்காகச் சமைக்க வேண்டாம். என்கிட்ட தேனும் தினை மாவும் இருக்கு. ரெண்டையும் பிசைஞ்சு, ரொட்டி மாதிரி தட்டி, சுட்டுச் சாப்பிட்டா ருசியா இருக்கும். நாம எல்லோரும் அதையே சாப்பிடுவோமே!’’ என்றார்.

அதன்படி அன்று இரவில் அனைவரும் பசியாறினர். வீட்டுத் தாழ்வாரத்தில் படுத்த விருந்தாளிகளிடம் தியாகராஜர் க்ஷேத்திராடனம் பற்றி விடிய விடியப் பேசிக் கொண்டிருந்தார்.

கோழி கூவிற்று. ‘‘அடடா... பொழுது விடிஞ்சாச்சா?’’ என்று எழுந்தார் வயோதிகர். உடனே அவர் மனைவியும், இளைஞனும் கூட எழுந்தனர். ‘‘நாங்க அப்படியே காவிரியில ஸ்நானம் செஞ்சுட்டுக் கிளம்பறோம்!’’ என்றார் முதியவர்.

தியாகராஜர், தன் மனைவியுடன் அவர்களை நமஸ்காரம் செய்தார். பின்பு வாசலில் இறங்கி, அவர்கள் கண்ணிலிருந்து மறையும் வரை அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார் தியாகராஜர். சட்டென்று அந்த வயோதிகர் வில்லுடன் ராமபிரானாகவும், அவருடன் வந்த முதிய பெண்மணி சீதா பிராட்டி யாகவும், இளைஞன் அனுமனாகவும் காட்சியளித்து மறைந்தனர்.

தியாகராஜர் பரவசத்துடன் தெருவில் ஆனந்தக் கூத்தாடினார். ‘‘ராமா... ராமா... நீயா எனது வீட்டுக்கு வந்தே?... என் தெய்வமே... நீயா வந்தாய்? ரொம்ப தூரத்திலேருந்து நடந்து வந்ததா
சொன்னியே... பேசியே ராத்திரி முழுக்க உன்னை தூங்க விடலையே... மகாபாவி நான்!

காலைப் பிடித்து அமுக்கி, உன் கால் வலியைப் போக்காமல் பேசிக் கொண்டே இருந்தேனே. ராத்திரி நீ கொண்டு வந்ததை நாங்க சாப்பிட்டோமே? என் வீட்டுல தரித்திரம் தாண்டவமாடறதுனு தெரிஞ்சிண்டு, நீ ஒரு தாய்- தகப்பனா இருந்து எங்க பசியைப் போக்கினியே...’’ என்று புரண்டு புரண்டு அழுதார் தியாகராஜ சுவாமிகள்.

அப்போது அவரிடமிருந்து பிறந்த வசந்தா ராக கீர்த்தனைதான், ‘சீதம்ம மாயம்மா...’ என்பது.

ராம் ராம் ராம் ராம் ராம் ராம்..... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:    அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஸ்ரீராமதரிசனம் ! Empty Re: ஸ்ரீராமதரிசனம் !

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Nov 13, 2018 9:47 am

இத்தனை கீர்த்தனைகள் அருளிய தியாகராசர் அவர்கள் பசி பட்டினியால்
வாடியதை பொறுக்காத ராமனே அவருக்கு
தேனும் தினை மாவும் அருளிய அற்புதம்
நல்லதொரு உணர்வு பூர்வமான பதிவு
நன்றி அம்மா

ராம்.. ராம்.. ராம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஸ்ரீராமதரிசனம் ! Empty Re: ஸ்ரீராமதரிசனம் !

Post by krishnaamma Wed Nov 14, 2018 1:59 pm

நன்றி ஐயா ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஸ்ரீராமதரிசனம் ! Empty Re: ஸ்ரீராமதரிசனம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum