ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி

2 posters

Go down

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Empty இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி

Post by ayyasamy ram Sat Nov 10, 2018 7:09 am


முடக்கப்பட்டிருந்த இலங்கை நாடாளுமன்றம் வரும்
14-ஆம் தேதி கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,
அதிபர் சிறீசேனா வெள்ளிக்கிழமை இரவு, நாடாளுமன்றத்தை
திடீரென கலைத்து உத்தரவிட்டார்.


அதற்கான அறிவிக்கையில் அவர் கையெழுத்திட்டுள்ளதாக
அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிபரின் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்திருப்பதாக
இலங்கை அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இதன் மூலம் 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை
நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் இரண்டாண்டுகளுக்கு
முன்பே முடிவுக்கு வந்துள்ளது.

அவையில் பெரும்பான்மையை நிரூபிக்க
பிரதமர் ராஜபட்சவுக்கு போதிய பலம் இல்லாததால்தான்
இந்த முடிவை அதிபர் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, இந்தக் கருத்தை ராஜபட்சவுக்கு நெருக்கமானவரும்,
நாடாளுமன்ற எம்.பி.யுமான கெஹெலியா ராம்பெக்வெல்லாவும்
உறுதிபடுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசியலில் அனுதினமும் அதிரடி திருப்பங்கள்
அரங்கேறி வரும் நிலையில், அவற்றில் உச்சமாக தற்போது
நாடாளுமன்றமே கலைக்கப்பட்டிருப்பது உலக நாடுகளின்
மொத்த கவனத்தையும் ஈர்க்கும் நிகழ்வாக அமைந்துள்ளது.

இதனிடையே, சிறீசேனாவின் முடிவை எதிர்த்து
ரணில் விக்ரமசிங்க தரப்பு நீதிமன்றத்தில் முறையிட முடிவு
செய்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால், சனி மற்றும்
ஞாயிற்றுக்கிழமைகளில் நீதிமன்றத்துக்கு விடுமுறை என்பதால்
அதற்கான சாத்தியக் கூறுகள் உடனடியாக இல்லை என
அந்நாட்டு அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவுக்கும்,
அதிபர் சிறீசேனாவுக்கும் அண்மைக் காலமாக கடுமையான
கருத்து மோதல் இருந்து வந்தது.

அதன் விளைவாக, பிரதமர் பதவியில் இருந்து ரணிலை நீக்கி
விட்டு, அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் ராஜபட்சவை
அப்பதவியில் நியமித்தார் சிறீசேனா.

மேலும், நாடாளுமன்றத்தை நவம்பர் 16-ஆம் தேதி வரை முடக்கி
வைக்கவும் அவர் உத்தரவிட்டார்.

இந்த நடவடிக்கை, இலங்கை அரசியல் களத்தில் உச்சகட்ட
குழப்பத்துக்கு வழிவகுத்தது. அதன் தொடர்ச்சியாக
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய
நிர்பந்தம் ராஜபட்சவுக்கு ஏற்பட்டது.

மறுபுறம் ரணில் தரப்பில் அதிபரின் முடிவுக்கு எதிராக போர்க்
கொடி உயர்த்தப்பட்டது. மேலும், தாம் பிரதமராகவே நீடிப்பதாக
ரணில் அறிவித்தார்.

இதில், நிதர்சனம் என்னவெனில், நாடாளுமன்றத்தில்
பெரும்பான்மையை நிரூபிப்பதற்குத் தேவையான
உறுப்பினர்களின் எண்ணிக்கை ரணிலின் கட்சிக்கும் இல்லை;
ராஜபட்ச கட்சிக்கும் இல்லை.


இதனால், உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்கான
குதிரை பேரங்கள் மிகத் தீவிரமாக நடைபெற்றன.
அணி மாறிய எம்.பி.க்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தார்
ராஜபட்ச. தனக்கு ஆதரவளிக்கும் ரணில் கட்சி எம்.பி.க்கள்
அனைவருக்கும் அமைச்சரவையில் இடமளிக்கப்படும்
என ராஜபட்ச உத்தரவாதம் அளித்ததாகவும் தெரிகிறது.

அதன் தொடர்ச்சியாக சிலர் கட்சி தாவி ஆதரவு கொடுத்தனர்.

இருந்தபோதிலும், பெரும்பான்மைக்குப் போதிய பலம்
ராஜபட்சவுக்கு கிடைக்கவில்லை. இதற்கு நடுவே,
நாடாளுமன்றம் நவம்பர் 14-ஆம் தேதி கூட்டப்படும் என
அறிவிக்கப்பட்டது. அன்றைய தினமே ராஜபட்ச மீதான
நம்பிக்கை வாக்கெடுப்பும் நடைபெறும் எனத் தகவல்கள்
வெளியாகின.

அவ்வாறு வாக்கெடுப்பு நடக்கும்பட்சத்தில் ராஜபட்ச
தோல்வியைத் தழுவுவது உறுதி எனக் கூறப்பட்டது. அத்தகைய
நிலை ஏற்பட்டால், அது, சிறீசேனாவுக்கும், ராஜபட்சவுக்கும்
பல்வேறு எதிர் விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

அதைக் கருத்தில் கொண்டே இலங்கை நாடாளுமன்றத்தை
கலைக்க தற்போது சிறீசேனா உத்தரவிட்டுள்ளதாக
அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பதிலாக பொதுத் தேர்தலைச்
சந்திப்பதுதான் சமயோஜித நடவடிக்கையாக இருக்கும் என
சிறீசேனா தரப்பு கருதுவதாகத் தெரிகிறது.

ஏனெனில், அண்மையில் அந்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித்
தேர்தலில் ராஜபட்ச அணியினர் அளப்பரிய வெற்றியைப்
பதிவு செய்தனர். இது, ஆளும் கூட்டணி அரசு மீது மக்கள்
கொண்டிருக்கும் அதிருப்தியின் வெளிப்பாடாகவும்,
அந்நாட்டில் மீண்டும் ராஜபட்ச தலைமையில்
ஆட்சியமைவதற்கான முன்னோட்டமாகவும் பார்க்கப்பட்டது.

இந்தச் சூழலில்தான் அரசியல் அரங்கில் பரம எதிரிகளாக
வலம் வந்த சிறீசேனாவும், ராஜபட்சவும் அண்மைக் காலமாக
கரம் கோத்து செயல்பட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாகவே
அவர்கள் இருவரும் தேர்தலைச் சந்திக்க முடிவு செய்திருப்பதாகத்
தெரிகிறது.

கலைக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக் காலம்
2020 ஆகஸ்ட் வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 5-இல் பொதுத் தேர்தல்


இலங்கையில் அடுத்த ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதி பொதுத்
தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை
நள்ளிரவு வெளியிடப்பட்ட அரசிதழில் இதுதொடர்பாக
குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல்
செய்ய நவம்பர் 19-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை அவகாசம்
அளிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஜனவரி 5-ஆம் தேதி
வாக்குப்பதிவு நடைபெறும். அந்த மாதம் 17-ஆம் தேதி புதிதாக
அமையவுள்ள நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் நடைபெறும்
என்று அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
---------------------------------------
தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Empty Re: இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி

Post by சிவனாசான் Sat Nov 10, 2018 7:31 am

இதெற்கெல்லாம் மிடிவு இராணுவ ஆட்சிதான் வேண்டும். நீதி மன்றம் ஆண்டாலும் இதே கதிதான் .நீதி மன்றம் போராராம் நீதி மன்றம் அவர்கள் என்ன கடவுள்களா !!!!!! விருப்பு வெறுப்பு இன்றி செயல்பட>>>>.எல்லாம் பலம் பலமேதான்............நாட்ல ,.................
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum