ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்வாணன் 10

4 posters

Go down

தமிழ்வாணன் 10 Empty தமிழ்வாணன் 10

Post by ayyasamy ram Fri Nov 09, 2018 7:57 pm

தமிழ்வாணன் 10 Lena
-

பிரபல இதழியலாளரும், துப்பறியும் நாவல்கள் படைத்தவருமான
தமிழ்வாணன் (Tamilvanan) பிறந்த தினம் இன்று
(மே 22). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# சிவகங்கை மாவட்டம் தேவ கோட்டையில் (1921) பிறந்தார்.
இயற்பெயர் ராமநாதன். தமிழ்த்தென்றல் திருவிக தனக்கு
‘தமிழ்வாணன்’ என்ற பெயரைச் சூட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.
என்எஸ்எம்விபி உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.

# படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, திருச்சியில் சில காலம்
வசித்தார். சாக்பீஸ் கம்பெனியில் வேலை செய்தார்.
எழுதுவதில் ஆர்வம் இருந்ததால், வல்லிக்கண்ணன் ஆசிரியராக
இருந்த ‘கிராம ஊழியன்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராக
சேர்ந்தார்.

# சென்னைக்கு 1946-ல் வந்தார். ‘அணில்’ என்ற வார இதழின்
ஆசிரியராகப் பொறுப்பேற்றார். இவரது அறிவாற்றலாலும்,
எழுதும் திறனாலும் அந்த இதழ் பரபரப்பாக விற்பனையானது.

‘அணில் அண்ணா’ என அழைக்கப்பட்டார். பள்ளித் தோழர்
வானதி திருநாவுக்கரசுடன் இணைந்து, குழந்தைகளுக்கான
நூல்களை வெளியிட ‘ஜில் ஜில் பதிப்பகம்’ தொடங்கினார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழ்வாணன் 10 Empty Re: தமிழ்வாணன் 10

Post by ayyasamy ram Fri Nov 09, 2018 7:57 pm


# ஏராளமான நூல்கள், கட்டுரைகள் எழுதினார்.
‘தமிழ் எழுத்தாளர்கள் மிடுக்குடன், கம்பீரமாக இருக்க வேண்டும்’
என்பார். அதை செயல்படுத்தியும் காட்டினார்.

இவரது ஒருபக்க கட்டுரைகள் மிகவும் பிரசித்தம்.
இவரது பேச்சு, உற்சாகம், திட்டமிடல், சுறுசுறுப்பு ஆகியவை
அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கும்.

# குமுதம் ஆசிரியர் எஸ்ஏபி அண்ணாமலை 1947-ல் ‘கல்கண்டு’
வார இதழைத் தொடங்கி அதன் முழுப் பொறுப்பையும்
இவரிடம் ஒப்படைத்தார்.

‘துணிவே துணை’ என்ற தாரக மந்திரத்துடன் வெளிவந்த
அந்த இதழை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்
விரும்பிப் படித்தனர்.

இளைஞர்களின் பொது அறிவை வளர்க்கும் வகையில்
ஏராளமான துணுக்கு செய்திகளை அதில் வெளியிட்டார்.

# கேள்வி-பதில் பகுதியில் மருத்துவம், அரசியல், சினிமா,
அறிவியல் என சகல துறைகள் தொடர்பான கேள்விகளுக்கும்
பதில் அளித்து அனைத்து தரப்பினரையும் கவர்ந்தார்.
அதன் ஆசிரியராக 30 ஆண்டு காலம் பணியாற்றினார்.

# மணிமேகலை பிரசுரத்தை 1955-ல் தொடங்கினார்.
500-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிக் குவித்துள்ளார்.

பிற மொழிக் கலப்பின்றி தூய தமிழில் எழுதுபவர்.
கோணி மூட்டையில் வந்து குவியும் வாசகர்களின்
கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் எழுதுவார்.

வள்ளலாரிடம் மிகுந்த பக்தி கொண்டவர். கைரேகை
பார்ப்பதில் வல்லவர்.

# ‘தமிழ்ப் பற்பொடி’ என்ற பெயரில் பற்பொடி தயாரித்து
விற்பனை செய்தார். தெலுங்கில் இருந்து மொழிமாற்றம்
செய்து ‘பிள்ளைப் பாசம்’, ‘துடிக்கும் துப்பாக்கி’ ஆகிய
2 திரைப்படங்களை தமிழில் வெளியிட்டார்.

‘காதலிக்க வாங்க’ என்ற திரைப்படத்துக்கு கதை, வசனம்
எழுதி, தயாரித்து வெளியிட்டார்.

# தொப்பி, கருப்புக் கண்ணாடி இவரது தனி முத்திரை.
ஒரு அஞ்சல் அட்டையில் முகவரியே எழுதாமல், வெறும்
தொப்பியும் கருப்புக் கண்ணாடியும் மட்டுமே வரைந்து
அனுப்பினால்கூட அது நேராக ‘கல்கண்டு’ பத்திரிகைக்கு
வந்துவிடுமாம்.

# இவரது துப்பறியும் நிபுணர் ‘சங்கர்லால்’ கதாபாத்திரம்
தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.
தன் எழுத்தாற்றலால் அனைத்து தரப்பினரின் அன்பையும்
மரியாதையையும் பெற்ற தமிழ்வாணன், மாரடைப்பால்
56-வது வயதில் (1977) காலமானார்.
-
---------------------------------------
ராஜலட்சுமி சிவலிகம்
தி இந்து

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழ்வாணன் 10 Empty Re: தமிழ்வாணன் 10

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 11, 2018 12:50 pm

தமிழ்வாணன் அவர்கள் புத்தகங்களை
படிக்க ஒரு கூட்டம் எப்போதும் அலைமோதும்.
அவர் இறந்த பின் இது குறைந்தது.
இவரின் துப்பறியும் கதைகள்
எப்போதும் அற்புதம்.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தமிழ்வாணன் 10 Empty Re: தமிழ்வாணன் 10

Post by M.Jagadeesan Sun Nov 11, 2018 2:36 pm

இவர் ஒருமுறை கல்கியின் நாவல்களைத் " தலையணை நூல்கள் " என்று கேலி செய்தார் . ஆனால் கல்கியின் நாவல்களான " பொன்னியின் செல்வன் " , " சிவகாமியின் சபதம் " , காலத்தை வென்று , இன்றளவும் மக்களால் விரும்பிப் படிக்கப்படுகின்றன . தமிழ்வாணனை மக்கள் மறந்துவிட்டார்கள் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தமிழ்வாணன் 10 Empty Re: தமிழ்வாணன் 10

Post by T.N.Balasubramanian Sun Nov 11, 2018 3:28 pm

இவரது துப்பறியும் கதைகளுக்கு மூலம் அயல்நாட்டு ஆர்தர் கனன் டாயில் என்று கூறியதுண்டு. இவருடைய தாரக மந்திரம்."உன்னை ஒருவனும் புகழ்ந்து பேசமாட்டான் .உன்னை நீயே புகழ்ந்து பேசிக்கொண்டு முன்னேறு"
கல்கியின் பொன்னியின் செல்வனை பற்றியோ /சிவகாமியின் சபதம் பற்றியோ இவர் தரக் குறைவாக பேசி இருந்தால் அது தமிழ்வாணனின் அறியாமையை காட்டும்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழ்வாணன் 10 Empty Re: தமிழ்வாணன் 10

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum