புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாரணம் ஆயிரம் ! Poll_c10வாரணம் ஆயிரம் ! Poll_m10வாரணம் ஆயிரம் ! Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
வாரணம் ஆயிரம் ! Poll_c10வாரணம் ஆயிரம் ! Poll_m10வாரணம் ஆயிரம் ! Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
வாரணம் ஆயிரம் ! Poll_c10வாரணம் ஆயிரம் ! Poll_m10வாரணம் ஆயிரம் ! Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
வாரணம் ஆயிரம் ! Poll_c10வாரணம் ஆயிரம் ! Poll_m10வாரணம் ஆயிரம் ! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
வாரணம் ஆயிரம் ! Poll_c10வாரணம் ஆயிரம் ! Poll_m10வாரணம் ஆயிரம் ! Poll_c10 
4 Posts - 2%
Manimegala
வாரணம் ஆயிரம் ! Poll_c10வாரணம் ஆயிரம் ! Poll_m10வாரணம் ஆயிரம் ! Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
வாரணம் ஆயிரம் ! Poll_c10வாரணம் ஆயிரம் ! Poll_m10வாரணம் ஆயிரம் ! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வாரணம் ஆயிரம் ! Poll_c10வாரணம் ஆயிரம் ! Poll_m10வாரணம் ஆயிரம் ! Poll_c10 
2 Posts - 1%
prajai
வாரணம் ஆயிரம் ! Poll_c10வாரணம் ஆயிரம் ! Poll_m10வாரணம் ஆயிரம் ! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
வாரணம் ஆயிரம் ! Poll_c10வாரணம் ஆயிரம் ! Poll_m10வாரணம் ஆயிரம் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாரணம் ஆயிரம் ! Poll_c10வாரணம் ஆயிரம் ! Poll_m10வாரணம் ஆயிரம் ! Poll_c10 
432 Posts - 48%
heezulia
வாரணம் ஆயிரம் ! Poll_c10வாரணம் ஆயிரம் ! Poll_m10வாரணம் ஆயிரம் ! Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
வாரணம் ஆயிரம் ! Poll_c10வாரணம் ஆயிரம் ! Poll_m10வாரணம் ஆயிரம் ! Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
வாரணம் ஆயிரம் ! Poll_c10வாரணம் ஆயிரம் ! Poll_m10வாரணம் ஆயிரம் ! Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
வாரணம் ஆயிரம் ! Poll_c10வாரணம் ஆயிரம் ! Poll_m10வாரணம் ஆயிரம் ! Poll_c10 
29 Posts - 3%
prajai
வாரணம் ஆயிரம் ! Poll_c10வாரணம் ஆயிரம் ! Poll_m10வாரணம் ஆயிரம் ! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வாரணம் ஆயிரம் ! Poll_c10வாரணம் ஆயிரம் ! Poll_m10வாரணம் ஆயிரம் ! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வாரணம் ஆயிரம் ! Poll_c10வாரணம் ஆயிரம் ! Poll_m10வாரணம் ஆயிரம் ! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
வாரணம் ஆயிரம் ! Poll_c10வாரணம் ஆயிரம் ! Poll_m10வாரணம் ஆயிரம் ! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
வாரணம் ஆயிரம் ! Poll_c10வாரணம் ஆயிரம் ! Poll_m10வாரணம் ஆயிரம் ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாரணம் ஆயிரம் !


   
   
தூயவள்
தூயவள்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 17/10/2018

Postதூயவள் Fri Nov 30, 2018 7:39 am

வணக்கம் !

குறிஞ்சியும், நெய்தலும் கொஞ்சும் தமிழகத்தின் வளமிக்கச் சோற்றுவட்டிலும், மீனவர் ஆளும் ஆழிக்கட்டிலும் இன்று தத்தமது அழகையும்,ஆற்றலையும் இழந்து தவிக்கும் நிலை. ஊருக்குச் சோறிட்ட உழவருக்கு இன்று தமது மாற்றுத்துணிக்கும் கையேந்த வேண்டிய நிலை. அலைகளோடு உறவாடிக் கயல்களோடு கரைசேரும் வலைஞருக்குத் தமது வாழ்வாதாரமாகிய படகுகள் உடைந்த கையறுநிலை. அண்ணன் பிள்ளையைக் காட்டிலும் பாசத்துடன் வளர்த்தத் தென்னம் பிள்ளைகளும், தலைமுதல் கால்வரை பயன்தரும் வாழைத்தோப்புகளும், பாலுக்கும், தோலுக்கும் மேய்த்துவந்த கால்நடைகளும், பறந்தும் திரிந்தும் பார்த்தப் புள்ளினங்களும் -தமது உயிரை நீத்துத் தரையில் சாய்ந்த காட்சிகளைக் கண்ட மூன்றாம் நபரின் உள்ளமும் உருகுமெனில், உணர்வோடு வளர்த்த உரிமையாளர் மனங்கள் என்ன பாடுபடுமென நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா ?

புயல்களும், போராட்டங்களும் நம் மக்களுக்குப் புதிதில்லையாயினும், பொருளாதாரத்தின் உயிர்நாடியைத் தற்காலிகமாகத் தொலைத்துவிட்டு நிற்கும் அவர்களின் இரைஞ்சல்கள் உரியோரின் செவிகளில் விழுந்தும் விழாமலிருந்தால் தான் அவர்களுக்கு அது பேரிடர். நடுவண் அரசும், மாநில அரசும் தத்தமது கடமையைச் செவ்வனே நிறைவேற்றுவதாக உறுதியளிப்பினும், இழப்படைந்த பொதுமக்களின் கூக்குரல்கள் கேட்ட வண்ணமே இருக்கின்றன.

எங்கேயோ ஒருவர்க்குத் துன்பமென்றாலும், விழிநீர்ப் பெருக்கும் பெருந்தன்மையுடைய தமிழ் மக்களாகிய நாம் , இன்று நம் மக்களில் ஒரு பகுதிக்கு வந்த துயரைப் போக்கத் திரளமாட்டோமா என்ன ? யானையின் பெயர் சூட்டப்பட்டப் புயலினால் உருவான சேதங்களைக் களைந்து அப்பகுதி மக்களுக்கு உதவும் வகையில் அவர்களது உடனடித் தேவைகளுக்கும், நீண்டகால வாழ்வாதார மீட்டெடுப்புக்கும் தமிழ் மக்களும், தமிழரோடு உணர்வால் இணைந்திருக்கும் மாற்றுமொழி உறவுகளும் பொருளுதவி வழங்கிவருதலோடு , தத்தமது நேரத்தையும், கவனத்தையும், அறிவாற்றலையும், உடலுழைப்பினையும் வழங்கிவருவது மிகவும் போற்றுதலுக்குரியது. அவர்களுக்கு நாம் நன்றி செலுத்துவதோடு, நம்மாலியன்ற உதவியையும் உடனே செய்வதே நலமாகும். அதை வலியுறுத்தியே இப்பதிவு, வற்புறுத்துவது நோக்கமல்ல ! தங்கள் புரிதலுக்கு நன்றி !

அன்னம் விளைந்த பூமியிலே
ஒன்றும் எஞ்சி இருக்கவில்லை !
ஊருக்குச் சோறிட்ட மக்களுக்குப்
பிறரிடம் கைகள் ஏந்துநிலை !
தண்ணீர் நம்பி விவசாயம்
கண்ணீர்க் கடலில் மூழ்கியதே !
ஆற்றில் நீரைத் திறந்திடவே
மனமற்ற மாந்தர்கள் மறுக்கின்றார் !
இயற்கையனுப்பிய புயலாலோ இன்று
அனைத்தும் சாய்ந்து அழிந்ததுவே !
நூறாண்டாய் நின்ற மரங்கூட
வேரோடு மண்ணில் சாய்ந்தனவே !
மேற்கூரையென்று ஏதோ வொன்று
தலையைக் காக்க இருந்ததுவே !
அதுவும் காற்றுக்கு இரையாக
வீடின்றி வீதிக்கு வந்தாரே !
வாத்துகள் கோழிகள் பறந்தனவேயின்று
அத்தனையும் உயிர் விட்டனவே !
கால்நடை பலவும் இருந்தனவே
பால்வளம் நன்றாய்ப் பொழிந்தனவே !
யானையின் பெயரைத் தாங்கிவந்தப்
புயலால் அவைகள் மாய்ந்தனவே !
கடல்சார் மீனவர்க் கலங்கிடவே
மீன்பிடி படகுகள் உடைந்தனவே !
உடல் சார்ந்துழைப்பவர்த் தவிக்கின்றார்
ஒருவேளைச் சோற்றுக்கு அலைகின்றார் !
ஈரங்காயா நிலமுழுது பசியரக்கனின்
பாரத்தை அவர்த் தணித்தார் !
தீராக் கோபத்தில் இயற்கையன்னைத்
தண்டித்தாலவர் என்ன செய்வார் ?
வயல்வெளியாடி ஏருழுது எந்தப்
புயல் வந்தபோதும் கலங்காது
சேற்றில் நின்றுறவாடி அவர்
சோற்றை நமக்கு ஈந்தாரே !
காற்றாய்க் காலன் சுழன்றதினாலவர்
மாற்றுத் துணியின்றிப் போனாரே !
வேற்றாராய் அவர்ப் போவாரோயில்லைக்
கரங்களுண்டோ அவர்த் துயர்க்களைய ?
நம் மக்கள் துன்புற்றிருக்கையிலே
நாமிங்கு எப்படி இன்புறுவோம் ?
எளியவர்ப் படுந்துயர்த் துடைத்திடவே
உளமாரப் பொருள் கொடுத்திடுவோம் !
சிறுதுளி பெருவெள்ளம் நாமறிவோம் !
புயல்வெள்ள பாதிப்பை உணர்வோமா ?
மறுப்பின்றி நம்மால் இயல்கின்ற
சிறிதொரு உதவியைப் புரிவோமா ?
நன்றி நவில்வோம் இயற்கைக்கு
நமக்கொரு வாய்ப்பைத் தந்ததற்கே !
அறிவினைக் கொண்டு உதவிடுவோம்
உழைப்பை வழங்கி வாழ்வளிப்போம் !
பொன்வைக்கும் இடத்தில் பூவைப்போம்
நன்மைநாடிக் கடமை செய்வோம் !
வாழ்வதென்றால் நாம் எல்லோரும்
சேர்ந்தே வாழ்வோம் என்றுணர்வோம் !
வீழ்வதென்பது நாம் அறியோம்,
உலகிற்கிதை நாம் உணர்த்திடுவோம் !

நன்றி !


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 30, 2018 12:07 pm

Code:

அன்னம் விளைந்த பூமியிலே
ஒன்றும் எஞ்சி இருக்கவில்லை !
ஊருக்குச் சோறிட்ட மக்களுக்குப்
பிறரிடம் கைகள் ஏந்துநிலை !
தண்ணீர் நம்பி விவசாயம்
கண்ணீர்க் கடலில் மூழ்கியதே !
ஆற்றில் நீரைத் திறந்திடவே
மனமற்ற மாந்தர்கள் மறுக்கின்றார் !
இயற்கையனுப்பிய புயலாலோ இன்று
அனைத்தும் சாய்ந்து அழிந்ததுவே !
நூறாண்டாய் நின்ற மரங்கூட
வேரோடு மண்ணில் சாய்ந்தனவே !
மேற்கூரையென்று ஏதோ வொன்று
தலையைக் காக்க இருந்ததுவே !
அதுவும் காற்றுக்கு இரையாக
வீடின்றி வீதிக்கு வந்தாரே !


கஜாவின் கோர தாண்டவம் கொடுமையிலும் கொடுமையே...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 30, 2018 1:49 pm

அருமையான முகவுரை
அதையும் மிஞ்சிடும் கவிதை.
கவிதை நடையை ரசிக்கையில்
அதன் கருத்துக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது .
நடுவில் சிலநாள் இடைவெளி ஏனோ?
கஜா புயல் கொடுமையை நேரிடையாக காண சென்றீரோ?

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
தூயவள்
தூயவள்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 17/10/2018

Postதூயவள் Fri Nov 30, 2018 5:56 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
கஜாவின் கோர தாண்டவம் கொடுமையிலும் கொடுமையே...
மேற்கோள் செய்த பதிவு: 1287595
ஆம், ஐயா ! 'கஜா' பெயருக்கேற்றாற்போல் பல பகுதிகளை ஒரு மிதி மிதித்திருக்கிறது.
T.N.Balasubramanian wrote:அருமையான முகவுரை
அதையும் மிஞ்சிடும் கவிதை.
கவிதை நடையை ரசிக்கையில்
அதன் கருத்துக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது .
நடுவில் சிலநாள் இடைவெளி ஏனோ?
கஜா புயல் கொடுமையை நேரிடையாக காண சென்றீரோ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1287599
என்னை நினைவில் வைத்தமைக்கும், பதிவிற்கு வந்து கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி ஐயா ! என்னால் நேரில் சென்று அம்மக்களுக்கு உதவ இயலவில்லை, இருந்த இடத்திலுள்ளபடியே இறை வேண்டுதலோடு என்னால் இயன்றதைச் செய்கிறேன். நான் பதிவிடுவதைவிடப் பிறர்ப் பதிவுகளைப் படிப்பதற்கே ஆர்வம். வாரணம் ஆயிரம் ! 1571444738

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 30, 2018 8:05 pm

பிறர் பதிவுகளை படித்து,மறுமொழி கருத்தாக இடுவதும் சாலச்சிறந்ததே.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Dec 01, 2018 7:09 am

பிழையில்லாத தமிழ்நடை ; கருத்தாழமிக்க கவிதை ! உங்களிடம் தமிழார்வம் உள்ளது . உங்களுடைய கவிதை மரபுக் கவிதையாக இருப்பின் இன்னும் சிறப்பாக இருக்கும். இந்தக் கவிதையை ஆசிரியப்பாவில் எழுதியிருந்தால் அருமையான இலக்கியமாக அமைந்திருக்கும். யாப்பிலக்கணம் கற்றுக்கொள்ள முயலுங்கள் ! வாழ்த்துக்கள் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 01, 2018 7:18 am

M.Jagadeesan wrote:பிழையில்லாத தமிழ்நடை ; கருத்தாழமிக்க கவிதை ! உங்களிடம் தமிழார்வம் உள்ளது . உங்களுடைய கவிதை மரபுக் கவிதையாக இருப்பின் இன்னும் சிறப்பாக இருக்கும். இந்தக் கவிதையை ஆசிரியப்பாவில் எழுதியிருந்தால் அருமையான இலக்கியமாக அமைந்திருக்கும். யாப்பிலக்கணம் கற்றுக்கொள்ள முயலுங்கள் ! வாழ்த்துக்கள் !

வாரணம் ஆயிரம் ! 3838410834 ஆமோதித்தல் ஆமோதித்தல்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
தூயவள்
தூயவள்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 17/10/2018

Postதூயவள் Sat Dec 01, 2018 10:10 pm

T.N.Balasubramanian wrote:பிறர் பதிவுகளை படித்து,மறுமொழி கருத்தாக இடுவதும் சாலச்சிறந்ததே.
மேற்கோள் செய்த பதிவு: 1287629
தங்கள் கருத்தை ஏற்கிறேன் ஐயா ! வாரணம் ஆயிரம் ! 1571444738
M.Jagadeesan wrote:பிழையில்லாத தமிழ்நடை ; கருத்தாழமிக்க கவிதை ! உங்களிடம் தமிழார்வம் உள்ளது . உங்களுடைய கவிதை மரபுக் கவிதையாக இருப்பின் இன்னும் சிறப்பாக இருக்கும். இந்தக் கவிதையை ஆசிரியப்பாவில் எழுதியிருந்தால் அருமையான இலக்கியமாக அமைந்திருக்கும். யாப்பிலக்கணம் கற்றுக்கொள்ள முயலுங்கள் ! வாழ்த்துக்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1287637
வணக்கம் ஐயா ! தங்களைத் திருக்குறள் ஆசானாகவேக் கருதி மிகவும் மதிக்கிறேன். எனது பதிவைப் படித்து ஊக்கமளிக்கும் பின்னூட்டம் வழங்கியமைக்கு மிகவும் நன்றி ! இலக்கணம் கற்காமல் இலக்கியம் படைப்பது நிகழாது. நான் இலக்கியவாதியல்லள், சராசரி இல்லத்தரசி மட்டுமே ! பள்ளி,கல்லூரியில் தமிழை ஒரு மொழிப்பாடமாக மட்டுமேப் படிக்க முடிந்தது. வேலையும் மொழி சார்ந்த துறையில் அமையாததால், பேச்சுக்கும், புத்தக வாசிப்பிற்கும், அவ்வப்போது எழுதும் மடல்களுக்குமென்றே எனது தமிழ் வழக்கு மிகவும் சுருங்கிவிட்டது. செழுமைமிகு நம் மொழியின் ஆழ்ந்த இலக்கண விதிகள் எதுவும் எனக்குத் தெரியவில்லை என்பதைக் குற்ற உணர்ச்சியோடு ஒப்புக்கொள்கிறேன். எனது அறியாமையை மன்னியுங்கள். தங்களைப் போன்றோரின் அறிவுப் பகிர்வால் என்னைப் போன்றோருக்கு நற்றமிழ்ப் படிக்கக் கிடைக்கின்றது. அதற்கு என் பணிவான நன்றி ! தாங்கள் அறிவுறுத்தியபடியே, யாப்பிலக்கணம் பயில முயல்கிறேன். அதற்கு இவ்வலைத்தளம் மிகவும் உதவும் என்றும் எண்ணுகிறேன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக