ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘மத்திய அரசுக்கு ‘சீட்பெல்ட்’ போன்றது ரிசர்வ் வங்கி; சுயாட்சியை மதியுங்கள்’: ரகுராம் ராஜன் விளாசல்

3 posters

Go down

‘மத்திய அரசுக்கு ‘சீட்பெல்ட்’ போன்றது ரிசர்வ் வங்கி; சுயாட்சியை மதியுங்கள்’: ரகுராம் ராஜன் விளாசல் Empty ‘மத்திய அரசுக்கு ‘சீட்பெல்ட்’ போன்றது ரிசர்வ் வங்கி; சுயாட்சியை மதியுங்கள்’: ரகுராம் ராஜன் விளாசல்

Post by ayyasamy ram Wed Nov 07, 2018 1:33 pm

‘மத்திய அரசுக்கு ‘சீட்பெல்ட்’ போன்றது ரிசர்வ் வங்கி; சுயாட்சியை மதியுங்கள்’: ரகுராம் ராஜன் விளாசல் Raghuram-rajan
மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி என்பது, காரில் சீட் பெல்ட்
இருப்பதைப் போன்றதாகும்,


விபத்துநேரத்தில் உயிர்காக்கும் கருவியாகச் செயல்படும்.
ஆதலால், அதன் சுயாட்சியை மதிக்க வேண்டும் என்று
ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்
விளாசியுள்ளார்.

ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே கடந்த
சில மாதங்களாக உரசல் நிலவி வருகிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன் கருத்துத் தெரிவித்த
ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா,
ரிசர்வ் வங்கியின் சுயாட்சியை மத்தியஅரசு மதிப்பதில்லை,

கட்டுப்பாட்டுடன் நடத்துகிறது என்று பரபரப்பு குற்றச்சாட்டு
வைத்திருந்தார். இதற்கு நிதி அமைச்சர் அருண் ஜேட்லியும்
பதிலடி கொடுத்திருந்தார்.

இந்நிலையில், ரிசர்வ் வங்கிக்கும், ரிசர்வ் வங்கி கவர்னர்
உர்ஜித் படேலுக்கு ஆதரவாகவும் முன்னாள் கவர்னர்
ரகுராம் ராஜன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு
முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் அளித்த பேட்டியில்
கூறியிருப்பதாவது:

ரிசர்வ் வங்கி என்பது காரில் உள்ள சீட் பெல்ட் போன்றது.
ஒரு காரின் டிரைவர் அல்லது, டிரைவராக இருக்கும்
மத்திய அரசு, தனது பாதுகாப்புக்கு சீட்பெல்ட் அணிந்து
பயணிப்பது கட்டாயமாகும்.

ஏனென்றால், சீட் பெல்ட் அணிந்து பயணிக்கும்
விபத்துக்களில் இருந்து நமது உயிரைகாக்கும் கருவியாக
இருக்கும். அதுபோலத்தான் மத்திய அரசை இக்கட்டான
காலகட்டங்களில் காக்கும் கருவியாக ரிசர்வ் வங்கி
இருக்கும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி கருதியும், தனது அரசின்
சாதனையை உயர்த்திக்கொள்ளவும் சில நேரங்களில்
ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுக்க
முயற்சிக்கும்.

ரிசர்வ் வங்கி சிறிது வளைந்து கொடுத்து செல்ல வேண்டும்
சூழலுக்கு ஏற்பட நெகிழ்ந்து இருக்க வேண்டும் என்றெல்லாம்
அழுத்தங்கள் தரப்படலாம்.

ஆனால், ரிசர்வ் வங்கி தீவிரமாக ஆய்வு செய்து,
நிதிச்சூழலுக்கும், நாட்டின் சூழலுக்கு ஏற்ப முடிவு எடுக்க
வேண்டும். சில நேரங்களில் மத்திய அரசின் நெருக்கடி
நாட்டு நலனுக்குச் சரியில்லாததாக இருந்தால்,
அதை மறுக்கவும், முடியாது என்று கூறவும் ரிசர்வ் வங்கிக்கு
முழு சுயாட்சி அதிகாரமும், பொறுப்பும் உண்டு.

ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான உறவு
என்பது நீண்டகாலமாகவே சிறப்பானதாக இருந்ததில்லை.

அதனால், முடிவுகள் நாட்டின் நலனுக்கும், நிதிச் சூழலுக்கும்
உகந்ததாக இல்லாவிடில் அதற்கு மறுப்பு சொல்வது என்பது
புதிதல்ல.

துணை கவர்னர்களையும், கவர்னரையும் நியமிப்பது
மத்திய அரசுதான். அவ்வாறு நியமித்தபின், அவர்கள்
சொல்லும் அறிவுரைகளை மத்தியஅரசு கேட்க வேண்டும்.

நாட்டின் நிதிப்பாதுகாப்புக்காக நியமித்துள்ள
அவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து அவர்களின்
ஆலோசனைகளை மத்திய அரசு கேட்கலாம்.

இதுவரை இல்லாத வகையில் ரிசர்வ் வங்கிச் சட்டம்
பிரிவு 7-ஐ பயன்படுத்தி, நாட்டின் நலன் கருதி ரிசர்வ் வங்கி
கவர்னருக்கு உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.


என்னைப் பொறுத்தவரை இருதரப்பினரும் தங்களின்
கருத்துக்களுக்கும், கொள்கைகளுக்கும் மதிப்பளிப்பது
அவசியமாகும்.

மற்றநாடுகளைக் காட்டிலும் இந்தியா மிகவேகமாக வளர்ந்து
வரும் நாடாக இருந்து வருகிறது. ஆனால், நாட்டில்
வேலைவாய்ப்பின்மை என்பது மிகப்பெரிய பிரச்சினையாக
உருவாகி வருகிறது.

அதைக் களைய மத்திய அரசு முயற்சித்து புதிய
வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

நாட்டின் நிதிப்பற்றாக்குறை மிகவும் கவலை கொள்ளும்
விதத்தில் இருக்கிறது. அதைக் குறைக்கவும், கட்டுக்குள்
வைக்கவும் மத்திய அ ரசு முயற்சித்து வருகிறது.

கடந்த 4 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால்,
நிதிப்பற்றாக்குறையின் நிலை மோசமாகவே இருந்து
வருகிறது.


இவ்வாறு ரகுராம் ராஜன் பேசினார்.
-
------------------------
தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

‘மத்திய அரசுக்கு ‘சீட்பெல்ட்’ போன்றது ரிசர்வ் வங்கி; சுயாட்சியை மதியுங்கள்’: ரகுராம் ராஜன் விளாசல் Empty Re: ‘மத்திய அரசுக்கு ‘சீட்பெல்ட்’ போன்றது ரிசர்வ் வங்கி; சுயாட்சியை மதியுங்கள்’: ரகுராம் ராஜன் விளாசல்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 07, 2018 2:27 pm

மத்திய அரசுக்கும் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா இவற்றுக்கு இடையே ஒரு சலசலப்பு இருந்து கொண்டே இருக்கிறது
இது அசாதாரண சூழல் இந்திய நிதி நிலையில்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

‘மத்திய அரசுக்கு ‘சீட்பெல்ட்’ போன்றது ரிசர்வ் வங்கி; சுயாட்சியை மதியுங்கள்’: ரகுராம் ராஜன் விளாசல் Empty Re: ‘மத்திய அரசுக்கு ‘சீட்பெல்ட்’ போன்றது ரிசர்வ் வங்கி; சுயாட்சியை மதியுங்கள்’: ரகுராம் ராஜன் விளாசல்

Post by கோபால்ஜி Wed Nov 07, 2018 6:25 pm

ஆனால் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களோ நிதி அமைச்சர் முடிவுக்கு rbi கவர்னர் கட்டுப்படவேண்டியது தான் என்று கூறியுள்ளார் ஐயா..
கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Back to top Go down

‘மத்திய அரசுக்கு ‘சீட்பெல்ட்’ போன்றது ரிசர்வ் வங்கி; சுயாட்சியை மதியுங்கள்’: ரகுராம் ராஜன் விளாசல் Empty Re: ‘மத்திய அரசுக்கு ‘சீட்பெல்ட்’ போன்றது ரிசர்வ் வங்கி; சுயாட்சியை மதியுங்கள்’: ரகுராம் ராஜன் விளாசல்

Post by ayyasamy ram Wed Nov 07, 2018 8:07 pm

நாட்டின் நிதிப்பற்றாக்குறை
மற்றும் வேலை வாய்ப்பின்மையை
ரகுராம் ராஜன் சுட்டிக் காட்டியுள்ளார்

இவற்றில் கவனம் செலுத்த
ஆட்சியாளர்களுக்கு போதிய அவகாசம் இல்லை.
-
ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதில்தான்
முழு கவனமும் இருக்கிறது.
-
குறைகளை சுட்டிக் காட்டுபவர்களுக்கு
நேரிடையான விளக்கம் கொடுக்கும்
கண்ணியமும் இல்லை...
-
இந்தியாவும் ஒரு வல்லரசு என
பெருமைப்பட்டுக் கொள்ளலாம்...!!
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

‘மத்திய அரசுக்கு ‘சீட்பெல்ட்’ போன்றது ரிசர்வ் வங்கி; சுயாட்சியை மதியுங்கள்’: ரகுராம் ராஜன் விளாசல் Empty Re: ‘மத்திய அரசுக்கு ‘சீட்பெல்ட்’ போன்றது ரிசர்வ் வங்கி; சுயாட்சியை மதியுங்கள்’: ரகுராம் ராஜன் விளாசல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரிசர்வ் வங்கி கொடுத்ததில் மத்திய அரசுக்கு 86,000 கோடிதான் மிஞ்சுமா?
» ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக தமிழர் ரகுராம் ராஜன் பொறுப்பேற்றார்
» ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனுக்கு இங்கிலாந்து விருது
» ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து ரகுராம் ராஜனை நீக்க வேண்டும்
» பொதுத்துறை வங்கிகளை மூடும் திட்டம் இல்லை மத்திய அரசு, ரிசர்வ் வங்கி விளக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum