Latest topics
» எல்லாம் சில காலம் தான்..........by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘மத்திய அரசுக்கு ‘சீட்பெல்ட்’ போன்றது ரிசர்வ் வங்கி; சுயாட்சியை மதியுங்கள்’: ரகுராம் ராஜன் விளாசல்
3 posters
Page 1 of 1
‘மத்திய அரசுக்கு ‘சீட்பெல்ட்’ போன்றது ரிசர்வ் வங்கி; சுயாட்சியை மதியுங்கள்’: ரகுராம் ராஜன் விளாசல்
மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி என்பது, காரில் சீட் பெல்ட்
இருப்பதைப் போன்றதாகும்,
விபத்துநேரத்தில் உயிர்காக்கும் கருவியாகச் செயல்படும்.
ஆதலால், அதன் சுயாட்சியை மதிக்க வேண்டும் என்று
ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்
விளாசியுள்ளார்.
ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே கடந்த
சில மாதங்களாக உரசல் நிலவி வருகிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன் கருத்துத் தெரிவித்த
ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா,
ரிசர்வ் வங்கியின் சுயாட்சியை மத்தியஅரசு மதிப்பதில்லை,
கட்டுப்பாட்டுடன் நடத்துகிறது என்று பரபரப்பு குற்றச்சாட்டு
வைத்திருந்தார். இதற்கு நிதி அமைச்சர் அருண் ஜேட்லியும்
பதிலடி கொடுத்திருந்தார்.
இந்நிலையில், ரிசர்வ் வங்கிக்கும், ரிசர்வ் வங்கி கவர்னர்
உர்ஜித் படேலுக்கு ஆதரவாகவும் முன்னாள் கவர்னர்
ரகுராம் ராஜன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு
முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் அளித்த பேட்டியில்
கூறியிருப்பதாவது:
ரிசர்வ் வங்கி என்பது காரில் உள்ள சீட் பெல்ட் போன்றது.
ஒரு காரின் டிரைவர் அல்லது, டிரைவராக இருக்கும்
மத்திய அரசு, தனது பாதுகாப்புக்கு சீட்பெல்ட் அணிந்து
பயணிப்பது கட்டாயமாகும்.
ஏனென்றால், சீட் பெல்ட் அணிந்து பயணிக்கும்
விபத்துக்களில் இருந்து நமது உயிரைகாக்கும் கருவியாக
இருக்கும். அதுபோலத்தான் மத்திய அரசை இக்கட்டான
காலகட்டங்களில் காக்கும் கருவியாக ரிசர்வ் வங்கி
இருக்கும்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி கருதியும், தனது அரசின்
சாதனையை உயர்த்திக்கொள்ளவும் சில நேரங்களில்
ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுக்க
முயற்சிக்கும்.
ரிசர்வ் வங்கி சிறிது வளைந்து கொடுத்து செல்ல வேண்டும்
சூழலுக்கு ஏற்பட நெகிழ்ந்து இருக்க வேண்டும் என்றெல்லாம்
அழுத்தங்கள் தரப்படலாம்.
ஆனால், ரிசர்வ் வங்கி தீவிரமாக ஆய்வு செய்து,
நிதிச்சூழலுக்கும், நாட்டின் சூழலுக்கு ஏற்ப முடிவு எடுக்க
வேண்டும். சில நேரங்களில் மத்திய அரசின் நெருக்கடி
நாட்டு நலனுக்குச் சரியில்லாததாக இருந்தால்,
அதை மறுக்கவும், முடியாது என்று கூறவும் ரிசர்வ் வங்கிக்கு
முழு சுயாட்சி அதிகாரமும், பொறுப்பும் உண்டு.
ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான உறவு
என்பது நீண்டகாலமாகவே சிறப்பானதாக இருந்ததில்லை.
அதனால், முடிவுகள் நாட்டின் நலனுக்கும், நிதிச் சூழலுக்கும்
உகந்ததாக இல்லாவிடில் அதற்கு மறுப்பு சொல்வது என்பது
புதிதல்ல.
துணை கவர்னர்களையும், கவர்னரையும் நியமிப்பது
மத்திய அரசுதான். அவ்வாறு நியமித்தபின், அவர்கள்
சொல்லும் அறிவுரைகளை மத்தியஅரசு கேட்க வேண்டும்.
நாட்டின் நிதிப்பாதுகாப்புக்காக நியமித்துள்ள
அவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து அவர்களின்
ஆலோசனைகளை மத்திய அரசு கேட்கலாம்.
இதுவரை இல்லாத வகையில் ரிசர்வ் வங்கிச் சட்டம்
பிரிவு 7-ஐ பயன்படுத்தி, நாட்டின் நலன் கருதி ரிசர்வ் வங்கி
கவர்னருக்கு உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
என்னைப் பொறுத்தவரை இருதரப்பினரும் தங்களின்
கருத்துக்களுக்கும், கொள்கைகளுக்கும் மதிப்பளிப்பது
அவசியமாகும்.
மற்றநாடுகளைக் காட்டிலும் இந்தியா மிகவேகமாக வளர்ந்து
வரும் நாடாக இருந்து வருகிறது. ஆனால், நாட்டில்
வேலைவாய்ப்பின்மை என்பது மிகப்பெரிய பிரச்சினையாக
உருவாகி வருகிறது.
அதைக் களைய மத்திய அரசு முயற்சித்து புதிய
வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
நாட்டின் நிதிப்பற்றாக்குறை மிகவும் கவலை கொள்ளும்
விதத்தில் இருக்கிறது. அதைக் குறைக்கவும், கட்டுக்குள்
வைக்கவும் மத்திய அ ரசு முயற்சித்து வருகிறது.
கடந்த 4 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால்,
நிதிப்பற்றாக்குறையின் நிலை மோசமாகவே இருந்து
வருகிறது.
இவ்வாறு ரகுராம் ராஜன் பேசினார்.
-
------------------------
தி இந்து
Re: ‘மத்திய அரசுக்கு ‘சீட்பெல்ட்’ போன்றது ரிசர்வ் வங்கி; சுயாட்சியை மதியுங்கள்’: ரகுராம் ராஜன் விளாசல்
மத்திய அரசுக்கும் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா இவற்றுக்கு இடையே ஒரு சலசலப்பு இருந்து கொண்டே இருக்கிறது
இது அசாதாரண சூழல் இந்திய நிதி நிலையில்.
இது அசாதாரண சூழல் இந்திய நிதி நிலையில்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ‘மத்திய அரசுக்கு ‘சீட்பெல்ட்’ போன்றது ரிசர்வ் வங்கி; சுயாட்சியை மதியுங்கள்’: ரகுராம் ராஜன் விளாசல்
ஆனால் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களோ நிதி அமைச்சர் முடிவுக்கு rbi கவர்னர் கட்டுப்படவேண்டியது தான் என்று கூறியுள்ளார் ஐயா..
கோபால்ஜி- பண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017
Re: ‘மத்திய அரசுக்கு ‘சீட்பெல்ட்’ போன்றது ரிசர்வ் வங்கி; சுயாட்சியை மதியுங்கள்’: ரகுராம் ராஜன் விளாசல்
நாட்டின் நிதிப்பற்றாக்குறை
மற்றும் வேலை வாய்ப்பின்மையை
ரகுராம் ராஜன் சுட்டிக் காட்டியுள்ளார்
இவற்றில் கவனம் செலுத்த
ஆட்சியாளர்களுக்கு போதிய அவகாசம் இல்லை.
-
ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதில்தான்
முழு கவனமும் இருக்கிறது.
-
குறைகளை சுட்டிக் காட்டுபவர்களுக்கு
நேரிடையான விளக்கம் கொடுக்கும்
கண்ணியமும் இல்லை...
-
இந்தியாவும் ஒரு வல்லரசு என
பெருமைப்பட்டுக் கொள்ளலாம்...!!
-
மற்றும் வேலை வாய்ப்பின்மையை
ரகுராம் ராஜன் சுட்டிக் காட்டியுள்ளார்
இவற்றில் கவனம் செலுத்த
ஆட்சியாளர்களுக்கு போதிய அவகாசம் இல்லை.
-
ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதில்தான்
முழு கவனமும் இருக்கிறது.
-
குறைகளை சுட்டிக் காட்டுபவர்களுக்கு
நேரிடையான விளக்கம் கொடுக்கும்
கண்ணியமும் இல்லை...
-
இந்தியாவும் ஒரு வல்லரசு என
பெருமைப்பட்டுக் கொள்ளலாம்...!!
-
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|